ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது: அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த முடியுமா? -தீப்திமான் திவாரி

 இந்தியாவும் வங்கதேசமும் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தத்தைக் (extradition treaty) கொண்டுள்ளன. அதன் விதிகளின் கீழ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்கதேசம் கோரலாம். ஆனால், இது அவர் தனது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. 


வியாழக்கிழமை, அக்டோபர் 17 அன்று, வங்கதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் (International Criminal Tribunal (ICT)) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை ஒன்றை பிறப்பித்தது. சமீபத்திய  மக்களின் போராட்டங்களின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது இறுதியில் அவர் பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு வழிவகுத்தது. 


நாட்டை விட்டு தப்பியோடிய உயர்மட்ட அவாமி தலைவர்கள் (Awami leaders) உட்பட மொத்தம் 46 கைது ஆணைகளை சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் பிறப்பித்தது. இந்த குற்றச்சாட்டுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நடந்த படுகொலைகள், கொலைகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உள்ளடக்கியது. வங்கதேசத்தின் இடைக்கால சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோடை மாதம் நடந்த வன்முறையில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 


77 வயதான ஷேக் ஹசீனா கடைசியாக புதுடெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான தளத்தில் காணப்பட்டார். ஆரம்பத்தில் அவர் இந்தியாவில் சிறிது காலம் தங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பிற நாடுகளில் தஞ்சம் கோருவதற்கான அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. இப்போது ஒரு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஹசினாவை ஒப்படைக்குமாறு டாக்கா கோர முடியுமா?  என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்தியாவும் வங்கதேசமும்  ஒப்படைப்பு ஒப்பந்தத்தைக் (extradition treaty) கொண்டுள்ளனவா?


ஆம், இந்தியாவும் வங்கதேசமும் 2013-ஆம் ஆண்டில் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது தப்பியோடியவர்களை ஒப்படைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக 2016-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்தியர்கள், குறிப்பாக வடகிழக்கில் உள்ள கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசத்தில் மறைந்திருந்ததால் இந்த ஒப்பந்தம் முதலில் உருவாக்கப்பட்டது. இதேபோல், மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற இந்திய மாநிலங்களில் பதுங்கியிருந்த ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)) போன்ற குழுக்களிடமிருந்து வங்கதேசம் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. 


இந்த ஒப்பந்தத்தின் மூலம், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam (ULFA)) கட்சியின் உயர்மட்ட தலைவரான அனுப் சேத்தியாவை 2015-ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக ஒப்படைத்தது. அதன் பின்னர் தப்பியோடிய மேலும் ஒருவரை வங்கதேசம் ஒப்படைத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா ஒரு சில நபர்களை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளது. 


ஒப்பந்தம் என்ன சொல்கிறது?


இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும் வங்கதேசமும் ஒரு  நாட்டில் நீதிமன்றத்தால் ஒப்படைக்கக்கூடிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட, குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட அல்லது தேடப்படும் நபர்களை ஒப்படைக்க வேண்டும்.  ஒப்படைக்கக்கூடிய குற்றத்திற்கு நிதிக் குற்றங்கள் உட்பட குறைந்தபட்சம் ஒரு வருட சிறைத்தண்டனை இருக்க வேண்டும். நாடுகடத்தல் நிகழ, குற்றம் இரு நாடுகளிலும் தண்டனைக்குரியதாக இருக்க வேண்டும். இது இரட்டை குற்றவியல் என்று அறியப்படுகிறது. 


குற்றத்தில் ஈடுபடுதல், உதவுதல், உடந்தையாக இருத்தல், தூண்டுதல் அல்லது உடந்தையாக பங்கேற்கும் செயல்களை  நாடு கடத்தும் இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. 

இந்த விதிகளுக்கு விதிவிலக்குகள் உள்ளனவா? 


ஆம், குற்றம் அரசியல் இயல்புடையதாகக் கருதப்பட்டால் ஒப்படைப்பு கோரிக்கைகளை நிராகரிக்க இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், கொலை, மனிதப் படுகொலை, தாக்குதல், வெடிகுண்டுகளை வைத்திருத்தல், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சொத்துக்களை சேதப்படுத்துதல், கடத்தல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட அரசியல் குற்றங்களாகக் கருத முடியாத குற்றங்களின் நீண்ட பட்டியல் உள்ளது. 


ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க முடியுமா? 


ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் கோரலாம். எவ்வாறாயினும், கொலை, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல் மற்றும் சித்திரவதை போன்ற அவருக்கு எதிரான சில குற்றச்சாட்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் குற்றங்களாக வகைப்படுத்தப்படவில்லை. 


ஆகஸ்ட் 13 அன்று, கடந்த மாதம் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மளிகைக் கடை உரிமையாளரைக் கொலை செய்ததாக ஹசீனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்த நாளே, 2015-ஆம் ஆண்டு ஒரு வழக்கறிஞரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வலுக்கட்டாயமாக காணாமல் போன வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று, மூன்றாவது வழக்கில் கொலை, சித்திரவதை மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகள் ஹசீனா மீது சுமத்தப்பட்டன.


ஒப்பந்தத்தின் 10 (3) பிரிவில் 2016-ஆம் ஆண்டு திருத்தம் நடைபெற்றதால் இந்த நிலைமை சிக்கலானது. இந்த திருத்தத்தின் படி, குற்றத்திற்கான ஆதாரங்களை வழங்க வேண்டிய அவசியத்தை நீக்கியது. இப்போது, ஒப்படைப்பு நடவடிக்கையை தொடர தகுதிவாய்ந்த நீதிமன்றத்திலிருந்து கைது ஆணை மட்டுமே தேவைப்படுகிறது. 





ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டுமா? 


ஹசீனாவை திரும்ப அனுப்புவதற்கு அவசியமில்லை. ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் பிரிவு 7, அந்த  குற்றத்திற்காக அந்த நபரை இந்தியாவில் விசாரிக்க முடியுமானால், அவரை ஒப்படைப்பதை மறுக்க இந்தியாவை அனுமதிக்கிறது. ஆனால், இது ஹசினாவுக்கு பொருந்தாது. பிரிவு 8 மறுப்பதற்கான கூடுதல் காரணங்களை வழங்குகிறது.  அதாவது,  நீதியின் நலன்களில் நல்ல நம்பிக்கையுடன் குற்றம் சாட்டப்படாத வழக்குகள் அல்லது  பொது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் இல்லாத இராணுவக் குற்றங்கள் உட்பட, மறுப்புக்கான பல காரணங்களை பிரிவு 8 பட்டியலிடுகிறது.


ஹசினாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நல்லெண்ணத்துடன் கூறப்படவில்லை என்று வாதிடுவதன் மூலம் இந்தியா அவரை ஒப்படைப்பதை மறுக்க முடியும். இருப்பினும், இது வங்கதேசத்தின்  புதிய அரசாங்கத்துடனான இந்தியாவின் உறவுகளை பாதிக்கும். 


 இந்தியா என்ன செய்ய வேண்டும்? 


வங்கதேசத்தில் இந்தியா அதன் நீண்டகால இராஜதந்திர மற்றும் பொருளாதார நலன்களை ஒரு நீண்டகால நண்பரான ஷேக் ஹசீனாவுடனான அதன் உறவுடன் சமநிலைப்படுத்த வேண்டும். ஹசீனாவை ஒப்படைப்பது இந்தியாவின் முக்கிய நலன்களுக்கு சேவை செய்யாது என்று சிலர் வாதிடுகின்றனர். ஒரு முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing (RAW)) அதிகாரி, ஒப்பந்தத்தின் சட்ட விவரங்கள் இரண்டாம் பட்சமானவை என்றும், வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவுகள் ஹசீனாவுக்கு அப்பால் செல்கின்றன என்றும் குறிப்பிட்டார். 


எந்தவொரு நாடும் அதன் தேசிய நலனுக்கு எதிராக, உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் இல்லாமல் தப்பியோடியவர்களை  நாடு கடத்தல் செய்வதில்லை. இறுதியில், எது நடந்தாலும் அது அரசியல் காரணங்களுக்காகவே இருக்கும்.




Original article:

Share:

காலநிலை மாற்றம் ஏன் ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக இருக்கிறது? -சையத் அதா ஹஸ்னைன்

 கணிக்க முடியாத நிகழ்வுகள், காலநிலை பேரழிவுகள் போன்ற பாதிப்புகளை காப்பீடு குறைக்கும். மனிதப் பாதுகாப்பு தேசியப் பாதுகாப்பிற்கான திறவுகோலைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிராந்தியங்களில் பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட போர்கள் ஏராளமாக உள்ளன. 


பேரிடர் மேலாண்மையில், பேரழிவுகள் ஒரு நாள் அவர்களை நேரடியாக பாதிக்கும் என்பதை மக்களுக்கு புரிய வைப்பது பெரும்பாலும் கடினம். பெரும்பாலான குடிமக்கள் பேரழிவுகள் மற்றவர்களுக்கு மட்டுமே நடக்கும் என்று நினைக்கிறார்கள். ஒரு சக்திவாய்ந்த பூகம்பம் ஒரு நடுத்தர வர்க்க நபரையும் அவரது குடும்பத்தையும் வீடற்றவர்களாக மாற்றக்கூடும். இது அவர்களை அரசாங்க நிவாரண முகாமில் கட்டாயப்படுத்தக்கூடும் என்பதை மிகச் சிலரே உணர்கிறார்கள். பெரிய அளவில், நாடு முழுவதும் பேரழிவுகளின் விளைவை கற்பனை செய்து பாருங்கள். இந்த பேரழிவுகள் 5 டிரில்லியன் டாலர் மற்றும் பின்னர் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் இலக்கை கடுமையாக பாதிக்கும். 


இத்தகைய பொருளாதாரம் பலரின் நிலையை மேம்படுத்தி, வறுமையில் வாடும் மக்களை மேல்நோக்கி நகரச் செய்யும். இருப்பினும், எந்த வீழ்ச்சியும் இல்லை என்றால் மட்டுமே அது நடக்கும். பொருளாதார வீழ்ச்சிக்கு பேரழிவுகள் முக்கிய காரணம். தேசிய பாதுகாப்பு என்பது எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதுடன் தொடர்புடைய ஒன்று என்று கருதுபவர்கள், நமது நிலையை பாதுகாக்கும் திறன் இல்லாமல் எந்த தேசிய பாதுகாப்பும் இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


பேரழிவு ஆபத்து காப்பீடு எங்கே பொருந்தும்? 2016-ஆம் ஆண்டில் புதுதில்லியில் நடந்த பேரிடர் அபாய குறைப்பு (Disaster Risk Reduction (DRR)) குறித்த ஆசிய அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையிலிருந்து இந்த இணைப்பைக் காணலாம். அந்த உரையில், பேரிடர் அபாய குறைப்புக்கான தனது பத்து அம்ச செயல்திட்டத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். இந்த நிகழ்ச்சி நிரலின் இரண்டாவது அம்சம், "இடர் காப்பீடு என்பது சிறிய குடும்பங்களில் தொடங்கி சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரை, பன்னாட்டு நிறுவனங்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்று கூறுகிறது. 


இடர் காப்பீடு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, பேரழிவுகளிலிருந்து உடல் பாதுகாப்பை முன்கூட்டிய எச்சரிக்கைகள், தடுப்பு மற்றும் அனைத்தும் தோல்வியடையும் போது சரியான எதிர்வினைகள் மூலம் உறுதி செய்தல். இரண்டாவதாக, இழப்புகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வழங்குதல். உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் அதே வேளையில், தனிநபர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்குவது அரசுக்கு கடினம். இங்குதான் இடர் காப்பீடு முக்கியமானது. பல நாடுகள் மக்களின், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பை காப்பீடு செய்கின்றன.  இதனால் அவர்கள் யதார்த்தமாக மீண்டும் செயல்பட உறுதியளிக்க முடியும். காப்பீட்டு நிறுவனங்கள் பேரழிவு அபாயத்தை ஆய்வு செய்து செயல்படக்கூடிய வணிக மாதிரிகளைக் கண்டறிந்துள்ளன. 


பேரிடர் தொடர்பான காப்பீடு இறுதியாக இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது ஒரு நேர்மறையான வளர்ச்சியாகும். பேரழிவுகள் நடந்து கொண்டே இருக்கும். காப்பீட்டு நிறுவனங்களுக்கு நியாயமான வணிக வாய்ப்புகளுக்கு இடம் உள்ளது.  அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகையிலிருந்து பயனடையலாம். 


சமீபத்தில், இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) இந்த தலைப்பில் ஒரு பட்டறையை (workshop) நடத்தியது. இதில் முக்கிய காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிதி நிபுணர்கள் அடங்குவர். காப்பீட்டாளர்கள், அரசாங்கம் மற்றும் தனிநபர்களின் இலக்குகளை அடைய காப்பீட்டு கருவிகளாக உருவாக்கக்கூடிய யோசனைகளை இந்த பட்டறை எடுத்துக்காட்டியது. 


இந்த யோசனைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு சோதிக்கப்பட வேண்டும். வட்டி பெறும் அணுகுமுறை ஒரு அளவீட்டு முநை காப்பீடு ஆகும். குறிப்பிட்ட பாதிப்புகளின் அளவுகளின் அடிப்படையில் காப்பீடு வழங்கப்படும் என்பதை இது உறுதி செய்கிறது.  இது தனிப்பட்ட உரிமை கோரல்களை சரிபார்க்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இது பெரும்பாலும் மெதுவான மற்றும் வெறுப்பூட்டும் அதிகாரத்துவத்திற்கு வழிவகுக்கிறது. 


பேரிடர் அபாய காப்பீடு மனித பாதுகாப்பை வலுப்படுத்தும். தேசிய பாதுகாப்பிற்கு, குறிப்பாக பயங்கரவாதம் மற்றும்  போர்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் மனித பாதுகாப்பு முக்கியமானது.  உதாரணமாக, 1991-ஆம் ஆண்டில், வங்கதேசத்தில் ஒரு சூப்பர் சூறாவளியில் (super cyclone) 1,40,000 மக்களை இழந்தது. பலர் காயமடைந்தனர் அல்லது இடம்பெயர்ந்தனர்.  அன்றிலிருந்து மனித பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக உள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் தீவிரவாத குழுக்களால் குறிவைக்கப்படுகிறார்கள். அவர்களின் பாதிப்பு சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பெறும் நாடுகளில் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது. 


இந்த முறை உலகம் முழுவதும் காணப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,16,000 பேர் உயிரிழந்தனர். பல ஹைய்ட்டியர்கள் குடியேற வேண்டியதாயிற்று. ஏனெனில், அவர்களுடைய அரசாங்கம் அவர்களை மறுகட்டமைக்க உதவ முன்வரவில்லை. புலம்பெயர்ந்தோர் நெருக்கடி இன்றும் அமெரிக்காவை பாதிக்கிறது மற்றும் அதன் அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும். ஆப்பிரிக்காவில், சோமாலியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் வறட்சி பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இது நிலையற்ற தன்மை மற்றும் கடனுக்கு வழிவகுக்கிறது. 


பாகிஸ்தானும் இதேபோன்ற ஆபத்தை எதிர்கொள்கிறது. 1981-ஆம் ஆண்டில், சோவியத் படையெடுப்புக்குப் பின்னர் மூன்று மில்லியன் அகதிகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் (United Nations High Commissioner for Refugees (UNHCR)) ஆதரவுடன் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இது முகாம்களில் இருந்த தீவிரவாத தாலிபான் குழுக்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. அவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றி உலக அரசியலை மாற்றினர். இது ஒரு இயற்கை பேரழிவு அல்ல. ஆனால், இதில் ஆப்கான் அகதிகளின் உரிமைகள் சுரண்டப்பட்டன. 


2022-23-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 2.6 மில்லியன் மக்களுக்கும் இதே நிலை நடக்கலாம். பாகிஸ்தான் இப்போது அல்லது எதிர்காலத்தில் இழப்பீடு வழங்கவோ அல்லது இழப்பீட்டிற்கு உறுதியளிக்கவோ முடியாது. இதில் பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் உள்ள முகாம்களில் உருவான தீவிரவாதிகளின் எழுச்சியிலிருந்து, தீவிரவாதம் குறித்த இந்தியாவின் பிரச்சினைகள் தொடங்கின என்பது கவனிக்கத்தக்கது. 


காலநிலை மாற்றங்கள் தொடர்வதால், உலகம் மனித பாதுகாப்பை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பேரிடர் அபாய காப்பீட்டில் கவனம் செலுத்தி அதை உலகளவில் முன்னணிக்கு கொண்டு வருவது மிக முக்கியம். 


சையத் அதா ஹஸ்னைன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority) உறுப்பினர். 




Original article:

Share:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) - குஷ்பு குமாரி

 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23-வது அரசாங்கத் தலைவர்களின் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நிறைவடைந்தது. எஸ்சிஓ (SCO) என்றால் என்ன?, அது இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது?  


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்களின் (Heads of Government (HoG)) 23-வது கூட்டம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, ​​வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமைப்பின் முக்கிய சவால்கள் குறித்து உரையாற்றுவதில் கவனம் செலுத்தினார். இந்த சவால்களில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை அடங்கும். கூட்டத்தில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிக்கு (Belt and Road Initiative (BRI)) இந்தியா தனது எதிர்ப்பை வலுவாக வலியுறுத்தியது. இது ஷாங்காய் ஒத்துழைப்பில் சர்ச்சைக்குரிய இணைப்புத் திட்டத்தை ஆதரிக்காத ஒரே நாடாக இந்தியாவை உருவாக்குகிறது.


முக்கிய எடுத்துக்காட்டுகள்: 


1. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தோற்றம் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய 1996-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட "ஷாங்காய் ஐந்து" (Shanghai Five) இல் உள்ளது. சோவியத் ஒன்றியம் 1991-ஆம் ஆண்டில் 15 சுதந்திர நாடுகளாக கலைக்கப்பட்ட பிறகு, இப்பகுதியில் தீவிரவாத மத குழுக்கள் மற்றும் இன பதட்டங்கள் பற்றி கவலைகள் எழுந்தன.  இந்த சிக்கல்களைத் தீர்க்க, பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒரு குழு நிறுவப்பட்டது.


2. இதன் அடிப்படையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஜூன் 15, 2001 அன்று ஷாங்காயில் ஒரு சர்வதேச அமைப்பாக நிறுவப்பட்டது. மேலும், உஸ்பெகிஸ்தானையும் ஆறாவது உறுப்பினராக சேர்த்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம் ஜூன் 2002-ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உச்சி மாநாட்டில் (St. Petersburg Summit) கையெழுத்திடப்பட்டது மற்றும் செப்டம்பர் 19, 2003 முதல் நடைமுறைக்கு வந்தது. கூடுதலாக, 2006-ல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உலகளாவிய பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் வழிமுறையாக சர்வதேச போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. 


3. இன்று, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் 2017-ஆம் ஆண்டிலும், ஈரான் கடந்த ஆண்டிலும், பெலாரஸ் இந்த ஆண்டிலும் முழு உறுப்பினர்களாக இணைந்தன. ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. 


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் கடந்த ஆண்டு காசியில் (வாரணாசி) இந்தியா நடத்தியது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதல் சுற்றுலா மற்றும் கலாச்சார தலைநகராக வாரணாசி அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பை கஜகஸ்தானிடம் இருந்து சீனா இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது. 


4. மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகியவை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். இந்த பிராந்தியம் இந்தியாவின் விரிவாக்கப்பட்ட அண்டை நாடுகளின் ஒரு பகுதியாகும். மேலும், இந்திய பேரரசர் அசோகரின் காலத்திலிருந்து வலுவான நாகரிக மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் பல மட்டங்களில் இந்த அனைத்து நாடுகளுடனும் இந்தியா தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு தளத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) வழங்குகிறது. 


5. இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் இணைப்புக்கான தேவைகள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றிற்காக இந்தியாவுக்கு மிக முக்கியமான நலன்கள் உள்ளன. இந்தியா அதன் ஆற்றல் தேவைகளில் 85% இறக்குமதி செய்கிறது மற்றும் துர்க்மெனிஸ்தான் உலகின் நான்காவது பெரிய இயற்கை எரிவாயு இருப்புகளைக் கொண்டுள்ளது. கஜகஸ்தான் உலகின் மிகப்பெரிய யுரேனியம் தாது உற்பத்தியாளராக உள்ளது. கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடனும் இந்தியா இராணுவ பயிற்சிகளை நடத்தி வருகிறது. 


6. இந்த அமைப்புக்கு இரண்டு நிரந்தர அமைப்புகள் உள்ளன : சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள செயலகம் மற்றும் தாஷ்கண்டில் உள்ள பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (Regional Anti-Terrorist Structure (RATS)) ஆகும். பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளைத் தயாரிப்பதிலும் நடத்துவதிலும் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு உறுப்பினர்களுக்கு உதவுகிறது. உறுப்பு நாடுகளிலிருந்து வரும் முக்கிய உளவுத்துறை தகவல்களை பகுப்பாய்வு செய்வது மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வது இதன் பணியாக செயல்படுகிறது. 


2023-ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்தியாவின் தலைமையின் கருப்பொருள் ”பாதுகாப்பானது” (SECURE) ஆகும். இது 2018 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் Qingdao உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி வழங்கிய சுருக்கத்திலிருந்து பெறப்பட்டது. இது, S-பாதுகாப்பு (Security), E-பொருளாதார வளர்ச்சி (Economic development), C-இணைப்பு (Connectivity), U-ஒற்றுமை (Unity), R-இறையாண்மைமற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை  (Respect for sovereignty and territorial integrity)  மற்றும் E-சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental protection) ஆகியவை ஆகும்.


பெல்ட் மற்றும் சாலை முயற்சி (Belt and Road Initiative (BRI)) 


1. கடந்த ஆண்டு, சீனாவின் லட்சிய உள்கட்டமைப்பு நிதி திட்டமான பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி (Belt and Road Initiative (BRI)) அதிபர் ஜி ஜின்பிங் முதன்முதலில் கோடிட்டுக் காட்டியதிலிருந்து ஒரு பத்தாண்டுகாலத்தைக் குறித்தது. 


2. அதிபர் ஜி ஜின்பிங் 2013-ஆம் ஆண்டில் கஜகஸ்தானுக்கு பயணம் செய்தபோது பட்டுப்பாதை பொருளாதார 'பெல்ட்' திட்டத்தை அறிவித்தார். ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான தொடர்ச்சியான வர்த்தக மற்றும் உள்கட்டமைப்பு பாதைகளுக்கு புத்துயிர் அளிப்பதே 'பெல்ட்' திட்டமாக இருந்தது. மத்திய ஆசியா வழியாக பொருளாதாரத்திற்கான இணைப்பு இந்த முன்முயற்சியின் முக்கிய அம்சமாக இருந்தது. 


3. அதைத் தொடர்ந்து, அதிபர் ஜி 'சாலை' என்ற கடல் வணிக உள்கட்டமைப்பை அறிவித்தார். இந்த கடல்வழி 'சாலை' சீனாவை, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவுடன் இணைக்கும். தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் முழுவதும் துறைமுகங்கள், பாலங்கள், தொழில் வழித்தடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 


4. சில காலமாக, இந்த முயற்சிகள் ஒன்றாக ஒரு பெல்ட் ஒரு சாலை முயற்சி (One Belt One Road Initiative (OBOR)) என்று குறிப்பிடப்பட்டன. 2015 ஆண்டு முதல் முதல், இது பெரும்பாலும் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி ( Belt and Road Initiative (BRI)) என்று குறிப்பிடப்படுகிறது. 


5. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் (BRI) இந்தியாவின் நிலைப்பாடு 2013 ஆண்டு முதல் பெரும்பாலும் நிலையானது. தொடக்கத்திலிருந்தே, இந்தியா பெல்ட் அண்ட் ரோடு முயற்சியில்  கவலை கொண்டுள்ளது.  இந்த கவலைகள் முக்கியமாக இறையாண்மை தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடையவை. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China-Pakistan Economic Corridor (CPEC)) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan-occupied Kashmir (PoK)) வழியாக செல்கிறது. இந்தியப் பெருங்கடலில் உள்ள திட்டங்களின் புவிசார் அரசியல் விளைவுகள் குறித்தும் இந்தியா கவலை கொண்டுள்ளது.




Original article:

Share:

94 ஆண்டுகளில் இந்தியாவில் பணிபுரியும் எந்த இந்தியரும் அறிவியலுக்கான நோபல் விருதை வென்றதில்லை -அமிதாப் சின்ஹா

 நோபல் பரிசுகளில் வெற்றி பெறாதது பெரும்பாலும் இந்திய அறிவியல் நிலையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மற்ற காரணிகளும் இந்த நிலைக்கு பங்களிக்கின்றன.


இந்தியாவில் பணிபுரியும் போது, ​​இயற்பியல், வேதியியல் அல்லது மருத்துவம் ஆகிய அறிவியல் துறைகளில் ஒரு இந்தியர் நோபல் பரிசு பெற்று 94 ஆண்டுகள் ஆகிறது. 1930-ல் வழங்கப்பட்ட சி.வி. ராமனின் இயற்பியலுக்கான நோபல் பரிசுதான் அத்தகைய ஒரே பெருமைமிக்க விருதாகும். இதில், மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்ற மூன்று விஞ்ஞானிகள் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். ஹர்கோவிந்த் கொரானா 1968-ல் மருத்துவத்தில், சுப்ரமணியன் சந்திரசேகர் 1983-ல் இயற்பியலில், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-ல் வேதியியலில் விருதை வென்றுள்ளனர். இருப்பினும், இந்த விஞ்ஞானிகள் இந்தியாவிற்கு வெளியே தங்கள் பணியைச் செய்தனர். அவர்கள் விருதுகளைப் பெற்றபோது இந்திய குடிமக்கள் அல்ல.


நோபல் பரிசுகளில் வெற்றியின்மை பெரும்பாலும் இந்திய அறிவியல் நிலையின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிற காரணிகளும் இதில் அடங்கும். அது குறித்து இங்கே ஒரு நெருக்கமான பார்வை.


பல சிக்கல்கள் இந்தியாவின் அறிவியல் திறனைக் கட்டுப்படுத்துகின்றன. அடிப்படை ஆராய்ச்சியில் போதிய கவனம் செலுத்தாதது, குறைந்த அளவிலான பொது நிதியுதவி, அதிகப்படியான அதிகாரத்துவம் மற்றும் தனியார் ஆராய்ச்சிக்கான ஊக்கமின்மை ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக, பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி திறன்களில் சரிவு உள்ளது.


சில நிறுவனங்கள் அதிநவீன ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை அதன் மக்கள்தொகைக்கான உலகளாவிய சராசரியை விட ஐந்து மடங்கு குறைவாக உள்ளது. இதன் அர்த்தம் நோபல் வெற்றியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.


அறிவியல் நோபல் பரிசுக்கு இந்தியாவுக்கு வேறு போட்டியாளர்கள் உள்ளனர். பல இந்திய விஞ்ஞானிகள் இந்தப் பரிசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, சிலர் புத்திசாலித்தனமான பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால், இதற்கு நம் விஞ்ஞானிகளை ஒருபோதும் பரிந்துரைக்கப்படவில்லை.


எல்லோரையும் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான நபர்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குழு சாத்தியமான போட்டியாளர்களை பரிந்துரைக்க அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், கடந்தகால நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் பலர் உள்ளனர். எனவே, ஒரு நியமனம் என்பது, பரிந்துரைக்கப்பட்ட விஞ்ஞானி மரியாதைக்குரிய சக ஊழியர்களின் பார்வையில் நோபல்-தகுதியான வேலையைச் செய்துள்ளார் என்றே அர்த்தமாகும்.


பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களின் பெயர்கள் குறைந்தது 50 ஆண்டுகளுக்கு இரகசியமாக வைக்கப்படும். இந்தத் தகவல் அவ்வப்போது தவறாமல் புதுப்பிக்கப்படும். எடுத்துக்காட்டாக, இயற்பியல் மற்றும் வேதியியல் பரிசுகளுக்கான பரிந்துரைகள் 1970 வரை மட்டுமே கிடைக்கின்றன. மருத்துவத்திற்கான பரிந்துரைகள் 1953 வரை மட்டுமே வெளியிடப்பட்டன.


பொது பரிந்துரை பட்டியலில் உள்ள 35 இந்தியர்களில் ஆறு பேர் விஞ்ஞானிகள் ஆவர். மேகநாத் சாஹா, ஹோமி பாபா, சத்யேந்திர நாத் போஸ் ஆகியோர் இயற்பியல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஜி என் ராமச்சந்திரன் மற்றும் டி சேஷாத்ரி ஆகியோர் வேதியியலுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மருத்துவம் அல்லது உடலியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி ஆவார். ஆறு பேரும் வெவ்வேறு பரிந்துரையாளர்களால் பலமுறை பரிந்துரைக்கப்பட்டனர். அந்தக் காலத்தில் இந்தியாவில் வாழ்ந்து பணியாற்றிய ஒரு சில பிரிட்டிஷ் விஞ்ஞானிகளும் நியமனப் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஏமாற்றங்கள் 


இதில் குறிப்பிடத்தக்கது ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆவார். 1895-ல் கம்பியில்லா தகவல்தொடர்புகளை (wireless communication) நிரூபித்த முதல் நபர் இவரே. 1909-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு குக்லீல்மோ மார்கோனி மற்றும் ஃபெர்டினாண்ட் பிரவுன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. போஸ் அவர்கள் இருவருக்கு முன்பும் செய்த அதே பணியை இந்த பரிசு அங்கீகரித்துள்ளது. தாவர உடலியங்கியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போஸ், விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. 


கே எஸ் கிருஷ்ணன் கவனிக்கப்படாத நியமனத்திற்கான வலுவான பரிந்துரை  கொண்ட மற்றொரு விஞ்ஞானி ஆவார். அவர் சி வி ராமனின் ஆய்வகத்தில் மாணவராகவும் நெருங்கிய ஒத்துழைப்பாளராகவும் இருந்தார். ராமன் ஒளிச்சிதறல் விளைவின் (scattering effect) இணை கண்டுபிடிப்பாளராக கிருஷ்ணன் நன்கு அறியப்பட்டவர். இருப்பினும், ராமன் மட்டுமே 1930-ல் இந்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவராவர்.

 

1970-ம் ஆண்டுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பரிந்துரைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், குறைந்தபட்சம் ஒரு இந்திய விஞ்ஞானியாவது இந்த பரிசுக்கு பரிசீலிக்கப்பட்டிருக்கலாம். இது, திட-நிலை வேதியியலில் சிஎன்ஆர் ராவின் (CNR Rao) பணி நீண்ட காலமாக நோபல் பரிசுக்கு தகுதியானதாகக் கருதப்படுகிறது. ஆனால் அவர் இன்னும் அதைப் பெறவில்லை.


நோபல் பரிசுகளில் இருந்து மிகவும் சர்ச்சைக்குரிய அளவில் புறக்கணிக்கப்பட்ட இந்தியர் ECG சுதர்சன் (ECG Sudarshan) ஆவார். அவர் ஒரு முறை அல்ல, இரண்டு முறை பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டும் இவர் கவனிக்கப்படவில்லை. 1979 மற்றும் 2005-ம் ஆண்டில் சுதர்சன் இயற்பியலுக்கான மிக அடிப்படையான பங்களிப்பை வழங்கிய பணியால் நோபல் பரிசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். சுதர்சன் 2018-ல் காலமானார். அவர் 1965-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். மேலும், அவரது பெரும்பாலான பணிகள் அமெரிக்காவில் செய்யப்பட்டன.



நோபல் பரிசுகளில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் 


நோபல் பரிசுகளில் இந்த குறிப்பிடத்தக்க சாதனையைக் கொண்ட ஒரே நாடு இந்தியா அல்ல. சீனா அல்லது இஸ்ரேல் போன்ற அறிவியல் ஆராய்ச்சிக்கு அதிக வளங்களை ஒதுக்கும் நாடுகள், அறிவியலில் நோபல் பரிசுகளின் எண்ணிக்கையை வியக்கத்தக்க வகையில் குறைவாக கொண்டுள்ளன. இயற்பியல், வேதியியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற 653 பேரில், 150-க்கும் மேற்பட்டவர்கள் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 


இது வியக்கத்தக்க வகையில் அதிக விகிதத்தில் உள்ளது. ஆனால், யூதர்களின் தாயகமாகக் கருதப்படும் இஸ்ரேல் வேதியியலுக்காக நான்கு நோபல் பரிசுகளை மட்டுமே வென்றுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு நாட்டின் திறன்களை அளவிடப் பயன்படுத்தப்படும் அனைத்தும் பொதுவான குறிகாட்டிகளிலும் இஸ்ரேல் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது மற்றும் அதன் அறிவியல் வலிமைக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


இதேபோல், ஒரு மில்லியன் மக்களுக்கு சராசரியாக இந்தியாவை விட சீனாவில் நான்கு மடங்கு அதிகமான ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவை விட சீனாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு குறைந்தது மூன்று மடங்கு அதிகம். கூடுதலாக, பல சீனப் பல்கலைக் கழகங்கள் உலகளாவிய அளவில் முதல் 50 இடங்களில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், இதுவரை அறிவியலில் மூன்று நோபல் பரிசு வென்றவர்களை மட்டுமே சீனா உருவாக்கியுள்ளது.


தென் கொரியா, ஆராய்ச்சியில் மற்றொரு வலுவான செயல்திறன், அறிவியலில் எந்த நோபல் பரிசு வென்றவர்களையும் உருவாக்கவில்லை.


அறிவியலுக்கான நோபல் பரிசுகள் முக்கியமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் வெல்லப்படுகின்றன. இந்த விஞ்ஞானிகளில் பலர் சிறந்த அறிவியல் ஆதாரங்களையும் ஆதரவையும் கண்டறிய மற்ற நாடுகளில் இருந்து சென்றனர். இயற்பியல் பரிசை வென்ற 227 பேரில் 13 பேரும், வேதியியல் பரிசை வென்ற 197 பேரில் 15 பேரும், மருத்துவப் பரிசை வென்ற 229 பேரில் 7 பேரும் ஆசியா, ஆப்பிரிக்கா அல்லது தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவார். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியே, ஒன்பது நாடுகளில் மட்டுமே அறிவியலில் நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். இதில், 21 வெற்றியாளர்களுடன் ஜப்பான் அதிகமாக உள்ளது.


பிராந்திய அல்லது இன சார்பு குறித்து அவ்வப்போது புகார்கள் வந்தாலும், அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பு ஒப்பிடமுடியாததாக உள்ளது என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. 


புதிய தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி சூழலை உருவாக்குவதில் சீனா நிறைய முதலீடு செய்து வருகிறது. இதில் சுத்தமான ஆற்றல், குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பகுதிகள் அடங்கும். இதன் விளைவாக, சீனா தனது நிலைமையில் விரைவில் மாற்றங்களைக் காணக்கூடும்.


சீனா, தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளைவிட அறிவியல் திறன்களை மேம்படுத்துவதிலும், ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்வதிலும் இந்தியா பின்தங்கியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கான வலுவான ஆதரவு அமைப்பு இல்லாமல், அறிவியலில் இந்தியா அதிக நோபல் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகள் முக்கியமாக அதன் விஞ்ஞானிகளின் தனிப்பட்ட திறமைகளை நம்பியிருக்கிறது.




Original article:

Share:

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் : இந்தியாவில் வறுமைக்கான விவாதங்களைப் புரிந்துகொள்வது குறித்து… - ரித்விக் பட்கிரி

 இந்தியாவில் வறுமை மதிப்பீடுகள் பற்றிய புள்ளிவிவர விவாதங்கள் கணக்கெடுப்பு தரவுகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 2011-12 மற்றும் 2022-23 ஆண்டுக்கு இடையில் நுகர்வு செலவின கணக்கெடுப்பு (Consumption Expenditure Surveys) இல்லாதது, நாட்டின் வறுமை பற்றிய புரிதலை எவ்வாறு பாதிக்கிறது?


உலக வங்கியின் அறிக்கையின்படி, இந்தியாவில் 1990-ல் 431 மில்லியனாக இருந்த தீவிர வறுமை 2024-ல் கிட்டத்தட்ட 129 மில்லியனாக குறைந்துள்ளது. இருப்பினும், சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் (International Day for the Eradication of Poverty (IDEP) ) 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் எதிர்மறையான அணுகுமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


2024 வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தின் கருப்பொருள் “சமூக மற்றும் நிறுவன துஷ்பிரயோகத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், நீதியான, அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களுக்காக ஒன்றாகச் செயல்படுதல்” (Ending Social and Institutional Maltreatment, Acting Together for Just, Peaceful, and Inclusive Societies) என்பதாகும். இந்தக் கருப்பொருளை நன்கு புரிந்துகொள்ள, கொள்கை வகுப்பாளர்கள் வறுமையை எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.


பல்வேறு நிறுவனங்களின் அறிக்கைகள், வறுமைக்கான காரணங்களை பல்வேறு வழிகளில் ஆய்வு செய்கின்றன. ஒரு நிறுவனத்தின் அறிக்கை வறுமையை ஏழை மக்களே மேற்கொண்ட செயல்களின் விளைவாகக் காண்கிறது. இந்தக் கண்ணோட்டம் பெரும்பாலும் ஏழை மக்களை அவர்களின் நிலைமைக்கு காரணம் என  குற்றம் சாட்டுகிறது. இதனால், அவர்களை "சோம்பேறிகள்", "விவேகமற்றவர்கள்" அல்லது "துணிவான பணியை எடுக்க விரும்பாதவர்கள்" என்று குறிக்கிறது.


வறுமையைப் பற்றிப் படிக்கும் முக்கியப் பொருளாதார வல்லுநரான மார்ட்டின் ராவல்லியன், வறுமைக்கு ஏழை மக்களைக் குறை கூறுவது நீண்ட காலமாக வறுமைக்கு எதிரான பொது செயலற்ற தன்மையை நியாயப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். இந்த எதிர்மறை கருத்துகள் ஏழைகளை சமூக மற்றும் நிறுவன ரீதியாக தவறாக நடத்துவதற்கு பங்களிக்கின்றன. இந்த முறை அநீதியை ஆழமாக்குகிறது மற்றும் அவர்கள் வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.


உலக வங்கி நிர்ணயித்துள்ள சர்வதேச வறுமைக் கோட்டின்படி (international poverty line), ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழும் எந்தவொரு நபரும் தீவிர வறுமையில் உள்ளனர். செப்டம்பர் 2022 இல், உலக வங்கி உலகளாவிய வறுமைக் கோட்டை ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $2.15 ஆக மாற்றியது. 2017-ஆம் ஆண்டில் வாங்கும் திறன் சமநிலையின் (purchasing power parity (PPP)) அடிப்படையில் வறுமைக் கோட்டின் அளவை  $1.90  என மாற்றியது.


சமீபத்திய மதிப்பீடுகளின்படி, உலக மக்கள் தொகையில் 8.5 சதவீதம் பேர் தீவிர வறுமையில் வாழ்கின்றனர். அதாவது, இதன் மதிப்பு சுமார் 682 மில்லியன் மக்களை குறிப்பிடுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், சீனாவும் இந்தியாவும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைப்பைக் கண்டுள்ளன.  கோவிட் -19 தொற்றுநோய் இந்த முன்னேற்றத்தை குறைத்தபோதிலும், 1990 மற்றும் 2022 ஆண்டுக்கு இடையில் சீனா மற்றும் இந்தியாவில் வாழும் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமையிலிருந்து வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 


2022-23 ஆம் ஆண்டிற்கான வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பின்படி (Household Consumption Expenditure Survey), 5 சதவீதத்திற்கும் குறைவான இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த அறிக்கை இந்தியாவில் பற்றாக்குறையை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் வறுமைக் கோடு பற்றிய விவாதங்களைத் தூண்டியது. 


வறுமைக் கோடு என்பது மக்களை ஏழைகள் அல்லது அவர்களின் வருமானம் அல்லது நுகர்வு அளவுகளின் அடிப்படையில் வகைப்படுத்த பயன்படும் ஒரு வரம்பு ஆகும். வறுமைக் கோடு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வருமான அளவைக் குறிக்கிறது, இதில் ஒவ்வொரு நாடும் அவற்றின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும்.


பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களும் "முழுமையான" வறுமையைப் பார்க்கிறார்கள். இது மக்கள் செலவுக்கும் வறுமைக் கோட்டிற்கும் உள்ள இடைவெளியைக் குறிக்கிறது. முழுமையான வறுமை உணவு மற்றும் உடை போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இது ஒரு நிலையான நுகர்வுக்கு தேவையான அடிப்படை வரம்பைப் பயன்படுத்துகிறது. எனவே முழுமையான வறுமையின் மதிப்பு வெவ்வேறு சமூகங்களில் ஒரே மாதிரியாக உள்ளது.


சமூகத்தில் வருமானத்தின் அளவுகள் ஒரே மாதிரியாக உயரும் போது, ​​குறைவான அளவில் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இதன் அடிப்படையில், பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கு இது முக்கியமானது. ஒட்டுமொத்த வருமானம் அதிகரிக்கும் போது, ​​வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைகிறது.


இதற்கு நேர்மாறாக, வறுமைக் கோடு நிர்ணயிக்கப்படவில்லை. இது ஒரு வகையான "சமூக உள்ளடக்கத்தை" குறிக்கிறது. வாழ்க்கைத் தரம் உயரும்போது வாழ்க்கைச் செலவு உயர்கிறது என்பதை இந்த நடவடிக்கை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. எனவே, அனைவரின் வருமானமும் சமமாக அதிகரித்தாலும், அவர்களின் வருமானம் உயரும் வாழ்க்கைத் தரத்திற்குக் கீழே இருந்தால், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது சிலர் இன்னும் ஏழைகளாகக் கருதப்படலாம்.


எடுத்துக்காட்டாக, அனைத்து குடும்பங்களும் வருமானத்தில் 10 சதவிகிதம் அதிகரித்தால், சமுகத்திற்கான வறுமைக் கோடு அப்படியே இருக்கும். வறுமையை மதிப்பிடுவதற்கான இந்தியாவின் முறைகள் காலப்போக்கில் நிறைய மாறிவிட்டன.


1971-ஆம் ஆண்டில், வி என் தண்டேகர் மற்றும் என் ராத் ஆகியோர் கலோரி நுகர்வு (calorie consumption) அடிப்படையில் வறுமைக் கோட்டை வரையறுத்தனர். 1960-61 ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வின் தரவைப் பயன்படுத்தி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2,250 கலோரிகள் என வரையறுத்தனர். கிராமப்புறங்களுக்கு ரூ.15 மற்றும் நகர்ப்புறங்களுக்கு ரூ.22.5 என்ற அளவில் வறுமைக்க்கான நிலையை நிறுவினர்.


1979-ஆம் ஆண்டில், ஒய் கே அலக் பணிக்குழு (Y K Alagh Task Force) புதிய வறுமைக் கோடுகளை அமைத்தது. கிராமப்புறங்களுக்கு 2,400 கலோரிகள் மற்றும் நகர்ப்புறங்களுக்கு 2,100 கலோரிகளின் தேவைகள் அடிப்படையில் அவர்கள் இந்த நிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இந்த முறை 1990-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த அணுகுமுறை நாட்டில் வறுமை நிலைகளை தவறாக சித்தரிப்பதாக பலர் விமர்சித்தனர்.


1989-ஆம் ஆண்டில், திட்டக் குழுவானது லக்டாவாலா நிபுணர் குழுவை (Lakdawala Expert Group) உருவாக்கியது. இந்த குழு வறுமை எவ்வாறு மதிப்பிடப்பட்டது என்பதை மறுபரிசீலனை செய்வதும், தேவைப்பட்டால் வறுமைக் கோட்டை மறுவரையறை செய்வதும் அவர்களின் முக்கிய பணியாக இருந்தது. 1993-ஆம் ஆண்டில், லக்டவாலா குழு மாநிலளவில்-குறிப்பிட்ட வறுமைக் கோடுகளை அறிமுகப்படுத்தியது. பிராந்தியளவில் விலை வேறுபாடுகளுக்காக அவர்கள் இந்த நிலைகளை சரி செய்தனர். இருப்பினும், உண்மையான கலோரிக்கான விதிமுறைகளை வைத்திருக்காததற்காக அவர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டனர்.


லக்டவாலா குழு மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருவதால், வறுமை மதிப்பீட்டிற்கான முறையை மறுஆய்வு செய்ய 2005-ஆல்  ஆண்டில் டெண்டுல்கர் நிபுணர் குழு (Tendulkar Expert Group) அமைக்கப்பட்டது. டெண்டுல்கர் குழு ஐந்து முக்கிய மாற்றங்களை பரிந்துரைத்தது:  


(i) கலோரி நுகர்வு அடிப்படையிலான வறுமைக் கோடுகளிலிருந்து விலகி, குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கான இலக்குகளை நோக்கி மாறுதல்,  


(ii) கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் ஒற்றை வறுமைக் கோட்டு நிலையை உருவாக்குதல்,


(iii) விலை சரிசெய்தல் முறையை மாற்றவும். இந்த மாற்றம் விலைச் சரி செய்தலில் இடம் மற்றும் நேரம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க உதவுதல், 


(iv) வறுமையைக் கணக்கிடும் போது சுகாதாரம் மற்றும் கல்விக்கான தனியார் செலவினங்களைச் சேர்த்தல். 


(v) ஒரே மாதிரியான குறிப்பு காலத்திற்குப் (Uniform Reference Period) பதிலாக ஒரு கலவையான குறிப்பு காலத்தைப் (Mixed Reference Period) பயன்படுத்தவும்.


 இந்தியாவின் வறுமைக் கோடு பற்றிய விவாதங்கள்


2009-ஆம் ஆண்டில், டெண்டுல்கர் குழுவானது, வறுமைக் கோடு குறித்த தனது அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கு மதிப்பிடப்பட்ட வறுமைக் கோடுகளை வழங்கியது. 2004-05 ஆண்டில் அகில இந்திய அளவில் வறுமைக் கோடு கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு மாதம் ரூ.446.68 மற்றும் நகர்ப்புறங்களில் ஒரு நபருக்கு மாதம் ரூ.578.80 ஆக இருந்தது என்பதை கண்டறியப்பட்டது. 


2004-05 ஆண்டில் கிராமப்புற மக்களில் 28.3% பேரும் நகர்ப்புற மக்களில் 25.7% பேரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்ததாக லக்டவாலா குழு தெரிவித்துள்ளது. மாறாக, கிராமப்புறங்களில் 41.8% மக்களும், நகர்ப்புறங்களில் 25.7% மக்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பதாக டெண்டுல்கர் குழு கண்டறிந்துள்ளது.


டெண்டுல்கர் குழு வறுமைக் கோடுகளைப் புதுப்பிக்க ஒரு புதிய வழியையும் பரிந்துரைத்துள்ளது. இந்த முறை விலை மற்றும் நுகர்வு முறைகளில் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்கிறது. இது வறுமைக் கோட்டிற்கு அருகில் உள்ள மக்களின் நுகர்வுத் தன்மையை பயன்படுத்துகிறது. இதன் விளைவாக, 2011-12 ஆம் ஆண்டிற்கான தேசிய வறுமைக் கோடுகள் கிராமப்புறங்களுக்கு ஒரு நபருக்கு மாதம் ரூ.816 மற்றும் நகர்ப்புறங்களுக்கு ரூ.1000 ஆகும்.


டெண்டுல்கர் குழு அறிக்கை, பல விமர்சனங்களை எதிர்கொண்டது. இதன் எதிரொலியாக, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, 2012-ஆம் ஆண்டில், இரங்கராஜன் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கை 2014-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு தனித்தனி வறுமைக் கோடுகளைக் கொண்ட முந்தைய முறையை மீண்டும் நிலைநிறுத்தியது. புதிய அறிக்கையின்படி, மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு கிராமப்புறங்களுக்கு ரூ.972 ஆகவும், நகர்ப்புறங்களுக்கு ரூ.1,407 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 


ஆனால், இரங்கராஜன் குழு அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசியாக அதிகாரபூர்வ வறுமைத் தரவு ஜூலை 2013 ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்தத் தரவு 2011-12 ஆம் ஆண்டிற்கான டெண்டுல்கர் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தரவுகளின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 21.9 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். கூடுதலாக, 2017-18 தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (National Sample Survey) வெளிவந்த அறிக்கை ஆறு ஆண்டுகளில் உண்மையான நுகர்வு 3.7 சதவீதம் சரிவைக் காட்டியது. இருப்பினும், இந்த கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


ஆரம்பத்தில், இந்தியாவில் வறுமை பற்றிய விவாதம் இரண்டு முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது. முதலாவதாக, பொருளாதார வளர்ச்சி வறுமையைக் குறைத்ததா என்று கேள்வி எழுப்புகிறது. இரண்டாவதாக, பொருளாதார வளர்ச்சி வருமானம் மற்றும் நுகர்வு சமத்துவமின்மையை அதிகரித்துள்ளதா என்பது மற்றொரு கேள்வியாக உள்ளது. இந்த விவாதம் பெரும் வறுமை விவாதம்-1.0 (Great Poverty Debate 1.0) என்று அழைக்கப்படுகிறது. இது உலகமயமாக்கல் மற்றும் வறுமை மற்றும் சமத்துவமின்மை மீதான அதன் விளைவுகள் பற்றிய உலகளாவிய விவாதத்தைப் போன்றது.


1990-ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேகமாக வளர்ந்தது. 1993-94 மற்றும் 1999-2000 ஆண்டுக்கு இடையில் குறிப்பிட்டிருந்த வறுமை 36 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.


விவசாய வளர்ச்சி மேம்பட்டுள்ளதா அல்லது நாட்டின் கிராமப்புற ஏழைகளின் நிலைமையை மோசமாக்கியதா என்பது பற்றிய விவாதம் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்த விவாதம் கணக்கெடுப்பு தரவுகளின் வெவ்வேறு விளக்கங்களால் குறிக்கப்படுகிறது.


ஒருபுறம், சில பொருளாதார வல்லுநர்கள் நாட்டின் விவசாய வளர்ச்சி எவ்வாறு அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மைகளை குறைக்க வழிவகுத்தது என்று நம்புகிறார்கள்.  

இதற்கு நேர்மாறாக, மற்ற பொருளாதார வல்லுநர்கள் வளர்ச்சிக்கான செயல்முறையை வறுமையின் ஆதாரமாகக் கருதுகின்றனர். வேகமான விவசாய வளர்ச்சியில் கூட, கிராமப்புற வறுமை குறையவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.


இந்தியாவில் வறுமைக்கான மதிப்பீடுகள் பற்றிய புள்ளி விவரம் பற்றிய விவாதங்களின் கணக்கெடுப்பு தரவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. அங்கஸ் டீடன் (Angus Deaton) என்பவர், நல்ல வருடாந்திர ஆய்வுகள், விரிவானதாக இல்லாவிட்டாலும், இவை புள்ளி விவர பிரச்சனைகளுக்கு எதிரான காப்பீடு ஆகும்."


இருப்பினும், சமீப ஆண்டுகளில் இந்தியாவில் வறுமை குறித்த தரவுகள் குறைவாகவே உள்ளன. 2011-12 மற்றும் 2022-23 ஆண்டுக்கு இடையில் நுகர்வு செலவின ஆய்வுகள் வெளியிடப்படவில்லை. இதன் விளைவாக, வறுமை பற்றிய தற்போதைய விவாதங்கள் இந்த தரவு பற்றாக்குறையால் சூழப்பட்டுள்ளன.




Original article:

Share: