நிதிக்குழுக்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேவைகள். -எம்.ஏ. உம்மன்

 நிதி ஆணையத்தின் பல ஆய்வுகள் இருந்தபோதிலும், இந்தியாவின் நிதி வரைபடத்தில் உள்ளூர் நிதிகள் குறித்த தெளிவான கூற்று இன்னும் இல்லை.


73-வது மற்றும் 74-வது அரசியலமைப்பு திருத்தங்களுக்குப் பிறகு நிதி ஆணையம் 16-வது நிதி ஆணையமாகும். இது இந்தியாவின் முந்தைய இரண்டு-நிலை கூட்டாட்சி அமைப்பில் மூன்றாவது நிலை அரசாங்கத்தைச் சேர்த்தவுடன், இதன் அமைப்பு மற்றும் பொது நிதியும் பல-நிலையாக மாறியது.  இந்தத் திருத்தங்களின் முக்கிய குறிக்கோள் இந்திய ஜனநாயகத்தை வலுவாகவும், பங்கேற்புடனும், உள்ளடக்கியதாகவும் மாற்றுவதாகும். நிதி ஆணையத்தின் பிரிவு 280, 280(bb) மற்றும் (c) ஆகியவற்றைச் சேர்க்க திருத்தப்பட்டது. இந்த உட்பிரிவுகள், மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிப்பதற்கான வழிகளை நிதி ஆணையங்கள் பரிந்துரைக்க வேண்டும். இந்த அதிகரிப்பு பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளை ஆதரிப்பதற்காகவே உள்ளது. பரிந்துரைகள் மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.


3.2 மில்லியன் பிரதிநிதிகளைக் கொண்ட கிட்டத்தட்ட 2.7 லட்சம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் (Panchayati Raj Institutions(PRI)) பகுப்பாய்வு பகுதி, கொள்கை பரிந்துரைகள் மற்றும் மானிய உதவி ஒதுக்கீடு ஆகியவற்றில் நியாயமான ஒப்பந்தத்தைப் பெறவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை (Rural Local Bodies (RLB)) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULB)) "உள்ளூர் அமைப்புகள்" என்று தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசியலமைப்புச் சட்டம் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளை மட்டுமே சுய-அரசு நிறுவனங்களாக தெளிவாக அங்கீகரிக்கிறது. இந்தக் குழுவால், 2026–31 ஆம் ஆண்டிற்கான ₹7.91 லட்சம் கோடி மானியத்தின் உண்மையான கிராமப்புற-நகர்ப்புற பங்கு 55:45 ஆக மாறுகிறது.

முன்னதாக, 15வது நிதி ஆணையத்தின்கீழ், கிராமப்புற-நகர்ப்புற விகிதம் 66:34 ஆக இருந்தது. இதன் பொருள் கிராமப்புற பங்கு 11 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மானியங்கள் இரண்டும் 80:20 விகிதத்தில் அடிப்படை மற்றும் செயல்திறன் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (RLB) செயல்திறன் பகுதிகளிலிருந்து ₹43,524 கோடியையும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULB) செயல்திறன் பகுதிகளிலிருந்து ₹29,016 கோடியையும் கழித்தால், மொத்த ஒன்றிய உள்ளூர் மானியத்தின் அளவு ₹7.18 லட்சம் கோடியாகக் குறைகிறது. மாநிலங்களின் 50 சதவீத பொருந்தக்கூடிய பங்களிப்பின் நிபந்தனை வரவேற்கத்தக்கது அல்ல. ஏனெனில், மானியம் 'விருது' என்று அழைக்கப்படுகிறது.


இந்த மானியத்தைப் பெறுவதற்கான முன் நிபந்தனையாக ஒடிசாவில் பயன்படுத்தப்படும் மாதிரியை ஒரு மாற்றக் கொள்கையை உருவாக்குவதற்கு உட்பட்டு, "ஒரு லட்சத்திற்கும் குறையாத மக்கள்தொகை கொண்ட புறநகர் கிராமங்கள் அருகிலுள்ள பெரிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் (ULB) இணைப்பதற்கான" ஒரு முறை 'நகரமயமாக்கல் ஊக்க மானியம்' மூலம் விரைவான நகரமயமாக்கலுக்கான ஊக்கத்தொகை மேற்கொள்ளப்படுகிறது.


குறைந்தது நான்கு கேள்விகளுக்கு சில பதில்கள் தேவை :


ஒன்று, முக்கியமான உள்கட்டமைப்பு திட்டச் செலவுகள் மாநிலங்களின் 40 சதவீத பொருந்தக்கூடிய பங்களிப்பில் ஏன் தொடர்ந்து விடப்படுகின்றன?


இரண்டு, முடிவெடுக்கும் போது இடத்திலேயே நகரமயமாக்கல் யோசனை மற்றும் உள்ளூர் பகுதிகளை மேம்படுத்துவதற்கான விருப்பம் ஏன் விவாதிக்கப்படவில்லை? விவசாயத் துறையில் 46 சதவீத பணியாளர்களைக் கொண்ட முறைசாரா துறையை விரிவுபடுத்தும் வேலையின்மையின் மிகப்பெரிய தொகுப்பை ஆணையம் நிச்சயமாக அறிந்திருக்கிறது. வளர்ந்துவரும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பில்லை.


மூன்றாவதாக, 83 நகரங்களுடன் சேர்ந்து, அனைத்து சர்வதேச மாசுபாட்டு விதிமுறைகளையும் கடந்து செல்லும் இந்தியாவின் சுற்றுச்சூழல் பிரச்சினையை ஆணையம் ஏன் முழுமையாக ஒதுக்கி வைத்துள்ளது. குடிசைகள் மற்றும் வறுமை போன்ற பிரச்சினைகளை வரையறுக்கப்பட்ட வழியில்கூட நிவர்த்தி செய்வதும் முக்கியமல்லவா?


நான்கு, ஆணையத்தின் நகரமயமாக்கல் பொருளாதார வளர்ச்சி உத்திக்காக, பிரிவுகள் 243ZD மற்றும் 243ZE (குறிப்பாக மாவட்ட திட்டமிடல் குழு மற்றும் பெருநகர அரசியல் திட்டமிடல் குழுக்கள்) ஆகியவற்றை ஆணையம் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?


இன்னும் ஒரு புதிர்


பஞ்சாயத்து நிதிகள் பற்றிய "விரிவான மதிப்பாய்வு" உட்பட ஆணையத்தால் வழங்கப்பட்ட ஏழு ஆய்வுகள் இருந்தபோதிலும், உள்ளூர் நிதியின் பகுப்பாய்வு பலவீனமாகவே உள்ளது. இந்தியாவின் நிதி கூட்டாட்சி அமைப்பில் உள்ளூர் அரசாங்கங்களின் சரியான நிலை இன்னும் ஒரு புதிராகவே உள்ளது என்பதை கடந்த காலத்தின் பல்வேறு ஒன்றிய நிதிக்குழு மற்றும் மாநில நிதிக்குழுக்களைப் பற்றி அது உயர்வாகப் பேசவில்லை. இது 2019-20 முதல் 2023-24 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் (RLBs) மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) ஆகியவற்றின் சொந்த மூல வருவாயை (Own Source Revenue (OSR)) காட்டுகிறது. 2023-24 ஆம் ஆண்டில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த OSR ₹1.18 லட்சம் கோடி ஆகும். இதில், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (PRI) 14.7% மட்டுமே பங்களிக்கின்றன. இந்தப் பங்கு மிகக் குறைவு.


2019-20 ஆம் ஆண்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தனிநபர் வருமானம் ₹146.6 ஆகும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இது ₹1,404 ஆகும். இதன் பொருள் நகர்ப்புற அமைப்புகள் கிராமப்புற அமைப்புகளைவிட ஒரு நபருக்கு சுமார் 9.5 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றன. 2023-24 காலகட்டத்தில், இந்த கிராமப்புற-நகர்ப்புற இடைவெளி 10.8 மடங்கு அதிகமாக அதிகரிக்கிறது. இதனால், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பலவீனமான செயல்திறனை இன்னும் வலுவாக ஆய்வு செய்திருக்க வேண்டும்.


உள்ளாட்சி அமைப்புகள் வருவாய்க்காக மத்திய மற்றும் மாநில அரசுகளை பெரிதும் நம்பியுள்ளன என்ற கூற்று (பத்தி 10.63) முந்தைய பத்தியில் (10.62) உள்ள அறிக்கையுடன் முழுமையாக பொருந்தவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து வகையான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் (ULBs) மொத்த நகராட்சி வருவாயில் சொந்த மூல வருவாய் (OSR) 51% ஆகும் என்று அந்த முந்தைய பத்தி கூறுகிறது. இது பங்கு அளவைப் பொறுத்து மாறுபடும் என்றும் அது கூறுகிறது. 40 லட்சத்திற்கு மேல் மக்கள்தொகைக் கொண்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இது சுமார் 61% ஆகும். 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்டவர்களுக்கு இது சுமார் 32% ஆகும். பல நகராட்சி நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகள் தங்கள் செலவினங்களில் பெரும் பகுதியை தாங்களாகவே நிதியளிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. பொருளாதார ஆய்வு 2017–18 ஆய்வுப் பற்றி கூறிப்பிடுவதாவது, இந்தியாவின் நகர்ப்புற உள்ளூர் அரசாங்கங்கள் உலகத் தரத்திற்கு நெருக்கமாக உள்ளன என்று அது கூறுகிறது. இதுவரை இந்தியாவில் உள்ள கிராமப்புற உள்ளூர் அரசாங்கங்களை விட அவை நிதிரீதியாக அதிகாரம் பெற்றுள்ளன என்றும் அது கூறுகிறது. இருப்பினும், பஞ்சாயத்துகளின் நிதி குறித்து தனித்தனி மற்றும் கவனமாக ஆய்வு தேவை. அரசியலமைப்பு 73வது திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதை நிவர்த்தி செய்தது. இந்தத் திருத்தம் பஞ்சாயத்துகளின் பிரச்சினைகளைக் கையாள்வதற்காகவே வடிவமைக்கப்பட்டது.


2017–18 பொருளாதார ஆய்வறிக்கை மற்றொரு கவலையையும் சுட்டிக்காட்டியது. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் (PRI) வரி திறனில் சுமார் 90% இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று அது கூறியது. இது ஒரு தீவிரமான பிரச்சினை மற்றும் புறக்கணிக்கப்படக்கூடாது. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. இந்த குறைந்த அளவிலான வருவாய் முயற்சி ஒரு தேர்வா, அல்லது தப்பிக்க கடினமாக இருக்கும் ஒரு பொறியா? மேலும், ஆணையத்தால் வரி மற்றும் வரி அல்லாத வருவாய்களை ஒன்றாக இணைப்பது சரியானதல்ல. ஏனெனில், குறிப்பிட்ட சேவைகளுக்கு ஈடாக பயனர் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் இது பொருத்தமானதல்ல. எனவே எந்த வரிகள் வசூலிக்கப்படுகின்றன என்பதை தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். எந்த விகிதத்தில் சொந்த மூல வருவாயில் (OSR) வரி அல்லாத வருவாய்கள் பங்களிக்கின்றன என்பதை அறிந்து கொள்வது நிச்சயமாக முக்கியம்.


உள்ளூர் மானியங்களை வழங்குவதில் அதிகப்படியான பிணைப்புகள் மற்றும் நிபந்தனைகளை விதிப்பது உள்ளூர் அரசாங்கங்களின் சுயாட்சியில் குறைக்கக்கூடும். இருப்பினும் உள்ளூர் அரசாங்கங்கள் செய்து வரும் மெதுவான முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சில நிபந்தனைகள் தவிர்க்க முடியாதவை. நிதிக்குழு-15-ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கியல் மற்றும் தணிக்கை தொடர்பான தகுதி நிபந்தனைகளின் தொடர்ச்சி, இன்னும் செயல்பாட்டில் இருந்தாலும், தவிர்க்க முடியாதது.

மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ளூர் அரசாங்கங்கள் அதிநவீன முகவர்களாக மாறி வருவதாக எந்த மத்திய நிதி ஆணையமும் சுட்டிக்காட்டவில்லை. உள்ளூர் பட்டியலை அறிமுகப்படுத்தவும், இந்திய நிதிக் கூட்டாட்சி அமைப்பின் பல்வேறு அடுக்குகளின் வருவாய் மற்றும் செலவினப் பொறுப்புகளை ஒதுக்குவதில் கூடுதல் பகுத்தறிவைக் கொண்டுவரவும் 7-வது அட்டவணையைத் திருத்த வேண்டிய நேரம் இது.


எழுத்தாளர் திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கௌரவ உறுப்பினர் ஆவார்.


Original article : Finance panels, and needs of local bodies. -MA Oommen

Share:

நேரு, திபெத் பிரச்சினை, மற்றும் ஆரம்பகால இந்தியா-சீன உறவுகள் தொடர்பானவை பற்றி . . . -குல்தீப் சிங்

 பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் சமீபத்தில் இந்த விஷயத்தில் சில கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கள் கவனமாக ஆராயப்பட வேண்டும்.


வெள்ளிக்கிழமை டேராடூனில் பாரத் இமயமலை சர்வதேச உத்திக்கான மன்ச் (Bharat Himalayan International Strategic Manch) சிந்தனைக் குழுவைத் தொடங்கி வைத்து, பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், "எல்லைப்புறம், எல்லைகள் மற்றும் உண்மையான கட்டுப்பாடுக் கோடு : நடுத்தரப் பிரிவு" (Frontiers, Borders and LAC: The Middle Sector) என்ற தலைப்பில் இருந்தது.


அவர் உரையாற்றிய பல்வேறு பிரச்சினைகளில், இரண்டு அறிக்கைகள் பரவலான கவனத்தைப் பெற்றன. முதலாவதாக, ஜவஹர்லால் நேரு 1954-ல் திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தார். இரண்டாவதாக, சீனப் பிரதமர் ஜோவ் என்லாய் உடன் பஞ்சசீல ஒப்பந்தத்தில் நேரு கையெழுத்திட்டபோது, ​​சீனாவுடனான எல்லைப் பிரச்சினை ஒரு முறையான ஒப்பந்தத்தின் மூலம் தீர்க்கப்பட்டதாக இந்தியா நம்புவதாக அவர் கூறினார். இருப்பினும், சீனாவின் நிலைப்பாடு வேறுபட்டது. இந்த ஒப்பந்தம் வர்த்தகம் பற்றியது மட்டுமே என்றும் எல்லைப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டைக் காட்டவில்லை என்றும் சீனா கூறியது.


இந்த இரண்டு அறிக்கைகளையும் உன்னிப்பாக ஆராய வேண்டும்.


1949-ம் ஆண்டு நிறுவப்பட்ட பிறகு, சீன மக்கள் குடியரசு (People's Republic of China(PRC)), "அவமானகரமான நூற்றாண்டில்" அதன் மீது சுமத்தப்பட்ட "சமமற்ற ஒப்பந்தங்கள்" என அனைத்து முந்தைய வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் விரைவாக கைவிட்டு, மெக்மஹோன் கோடு (McMahon Line) உட்பட அனைத்து எல்லைகளையும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தக் கோரியது. இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருந்தது.


அக்டோபர் 1950-ல், சீனா திபெத்தைத் தாக்கி 1951-ல் அது திபெத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. திபெத்தின் மீதான சீனாவின் படையெடுப்பை இந்தியா எதிர்த்தது. இருப்பினும், செப்டம்பர் 16, 1952 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சகம் லாசாவில் உள்ள இந்திய தூதரகத்தை சீனாவில் உள்ள இந்திய தூதரகத்திற்குக் கீழ்ப்பட்ட ஒரு தூதரகத்தால் மாற்றுவதாக அறிவித்தது. சீனப் பிரதமர் சோவ் என்லாய் கோரிய இந்த தரமிறக்குதல், திபெத் மீதான சீன இறையாண்மையை இந்தியா மறைமுகமாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது.


ஏப்ரல் 29, 1954 அன்று, திபெத் பிராந்தியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் தொடர்பு குறித்த பஞ்சீல் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சீனாவும் கையெழுத்திட்டன. இது இந்தியாவிற்கும் "சீனாவின் திபெத் பிராந்தியத்திற்கும்" இடையிலான பரிவர்த்தனைகளை வெளிப்படுத்திய போதிலும், ஜூன் 23, 2003 அன்று பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கும் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவுக்கும் இடையே கையெழுத்தான "உறவுகள் மற்றும் விரிவான ஒத்துழைப்புக்கான கொள்கைகள் குறித்த பிரகடனம்" என்ற கூட்டு அறிவிப்பில் மட்டுமே திபெத் தன்னாட்சிப் பகுதியை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா முறையாகவும் வெளிப்படையாகவும் அங்கீகரித்தது.


எல்லையில் சீனாவின் கடுமையான நிலைப்பாடு இரண்டு முக்கிய உலகளாவிய நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்டது.


ஒன்று கொரியப் போர். மற்றொன்று திபெத்தில் மத்திய புலனாய்வு நிறுவனத்தின் (Central Intelligence Agency(CIA)) இரகசிய நடவடிக்கைகள்.


ஜூலை 13, 1950 அன்று, ஜவஹர்லால் நேரு அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமனையும் சோவியத் ஒன்றியத்தின் ஜோசப் ஸ்டாலினையும் எச்சரித்தார். அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளை (United Nations Command (UNC)) இராணுவ வீரர்கள் 38-வது இணையைத் தாண்டினால், சீனா தலையிடக்கூடும் என்றும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல் டிவடையும் என்று அவர் நம்பினார். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளை (UNC) இராணுவ வீரர்கள் 38-வது இணையைக் கடந்து யாலு நதியை (கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை) நோக்கி நகர்ந்த பிறகு, சீனா 1950 அக்டோபர் மாத இறுதியில், திபெத் படையெடுப்பிற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, அதன் "முதல் தாக்குதலுடன்" கொரியப் போரில் மிகப்பெரிய அளவில் நுழைந்தது. ஐ.நா தலைமையிலான போர் நிறுத்தம் மூலம் சண்டை முடிவுக்கு வந்தது.


இது, இரண்டு கம்யூனிச அதிகாரத்துவ நாடுகளான சீனா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையேயான நெருங்கிய உறவுகளுடன், சீனாவிற்கு எதிராக ஒரு புதிய முன்னணியைத் திறப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்த வழிவகுத்தது. அந்த நேரத்தில், திபெத் படையெடுப்பிற்குப் பிறகு அமைதியின்மையை எதிர்கொண்டது. மேலும் 1951 முதல், இந்த நிலையற்ற சூழ்நிலையைப் பயன்படுத்த அமெரிக்கா முயற்சிக்கத் தொடங்கியது. இது 14வது தலாய் லாமாவை (லாமோ தோண்டப்) இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல ஊக்குவித்தது.


இப்போது, மத்திய புலனாய்வு நிறுவனத்தின் இரகசிய நடவடிக்கைகள் பற்றி பார்ப்போம். செப்டம்பர் 1952-ல், தலாய் லாமாவின் ஆறு சகோதரர்களில் ஒருவரான கியாலோ தோண்டப் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். ஜனவரி 1953-ல், அமெரிக்க அதிபர் டுவைட் ஐசனோவர் கம்யூனிசத்திற்கு எதிராக அமெரிக்க இரகசிய நடவடிக்கைகளை மறுசீரமைத்தார். டிசம்பர் 1954-ல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் உத்தரவு (5412/2) மூலம் "திபெத் திட்டத்தின்" இரகசிய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக இரகசிய "5412 குழுவை" நிறுவினார். தலாய் லாமாவின் மூத்த சகோதரர் துப்டன் ஜிக்மே நோர்பு வாஷிங்டனில் தொடர்பில் இருந்தபோதும், கியாலோ தோண்டப் கொல்கத்தாவில் உள்ள மத்திய புலனாய்வு நிறுவன அலுவலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தியபோதும், அமெரிக்க இரகசிய நடவடிக்கைகள் தொடங்கியது.


1959-ம் ஆண்டு, தலாய் லாமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் வழங்கப்பட்டது. இந்தியா திபெத்தியர்களை வரவேற்று அவர்களுக்கு அடைக்கலம் அளித்ததால் அவமானப்பட்ட மாவோ சேதுங், திபெத்தை சீர்குலைக்க அமெரிக்காவுடன் இந்தியா ரகசியமாக இணைந்து செயல்படுவதாக சந்தேகித்தார். வரலாற்றுரீதியாக, திபெத்தில் பரவியது இந்திய கலாச்சார மற்றும் மத செல்வாக்குதான் என்பதாலும், 1950-க்கு முன்பு, திபெத்திய வர்த்தகத்தின் பெரும்பகுதி இந்தியாவுடன் இருந்ததாலும் இந்த சந்தேகம் வலுப்படுத்தப்பட்டது. இன்றும்கூட, சீனத் தலைவர்கள் வெளிநாடுகளில் திபெத்திய இயக்கத்தை தங்கள் மிகப்பெரிய இன சவாலாகக் கருதுகின்றனர்.


முன்னாள் சிஐஏ அதிகாரி புரூஸ் ரீடல், தனது ஜே.எஃப்.கேயின் Forgotten Crisis: Tibet, the CIA and the Sino-Indian War என்ற புத்தகத்தில், திபெத் நடவடிக்கைகளுக்கு சிறிது காலம் தலைமை தாங்கிய முன்னாள் மத்திய புலனாய்வு நிறுவன செயல்பாட்டாளரான ஜான் கென்னத் க்னாஸ், தனது Orphans of the Cold War என்ற புத்தகத்தில் மற்றும் கியாலோ தோண்டப் மற்றும் எட்கர் தர்ஸ்டன் ஆகியோர் தங்கள் புத்தகமான கலிம்போங்கின் தொகுப்பான தயாரிப்பாளரில் (Noodle Maker of Kalimpong) மாவோவைப் பொறுத்தவரை, மாஸ்கோ மற்றும் வாஷிங்டனுடனான தனது போட்டிக்கு இந்தியா ஒரு மாற்றாக இருந்தது என்று கோடிட்டுக் காட்டினர்.


எழுத்தாளர், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் முதன்மை இயக்குநராக இருந்தார்.


Original article : Nehru, the Tibet question, and looking back at early India-China ties. -Kuldip Singh

Share:

பாராமதி விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய கருப்புப் பெட்டிகள் (black boxes) எவ்வாறு உதவக்கூடும்?

 மஹாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் நான்கு பேர் மரணமடைந்த விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளை மறுகட்டமைக்க பதிவுகளிலிருந்து வரும் தரவுகள் (data from the recorders) உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஜனவரி 28 அன்று அப்போதைய மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் நான்கு பேரை ஏற்றிச் சென்ற லியர்ஜெட்-45 (Learjet-45) விமானம் விபத்துக்குள்ளான சில வாரங்களுக்குப் பிறகு, விமானப் பதிவுகள் அல்லது "கருப்புப் பெட்டிகள்" இரண்டும் தீயில் சேதமடைந்ததாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (Aircraft Accident Investigation Bureau (AAIB)) செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தெரிவித்துள்ளது. ஒரு பதிவுகளிலிருந்து தரவு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டாலும், மீதமுள்ளவற்றுக்கு நிறுவனம் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளது.


"விபத்தின்போது இரண்டு பதிவுகளிலும் நீண்டநேரம் மிக அதிக வெப்பத்திற்கு ஆளாகியிருந்ததாக பணியகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அவை தீயில் சேதமடைந்தன. மின்னணு விமான தரவுப் பதிவுகள் (DFDR) L3-தகவல்தொடர்பால் உருவாக்கப்பட்டது. அதன் தரவு, விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விமான பதிவாளர் ஆய்வகத்தில் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹனிவெல் (Honeywell) தயாரித்த காக்பிட் குரல் பதிவு (Cockpit Voice Recorder (CVR)) விரிவான தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. தரவு மீட்டெடுப்பதற்கான சிறப்பு ஆதரவிற்காக உபகரணங்கள் தயாரிக்கப்பட்ட நாட்டின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியிடமிருந்தும் பணியகம் உதவி கோரப்பட்டுள்ளது," என்று விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) தெரிவித்துள்ளது.


ஹனிவெல் விமானப் பதிவானது முதன்மையாக அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (National Transportation Safety Board (NTSB)) அதிகாரப்பூர்வ விசாரணை மற்றும் ஒழுங்குமுறை காரணங்களுக்காக அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியாக செயல்படுகிறது.


விபத்து நடந்த இடத்திலிருந்து வந்த ஆரம்ப தகவல்கள், அந்தப் பகுதியில் குறைந்தநிலையில் நிலைமைகள் விபத்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன. பதிவிப் பெட்டிகளின் தரவு, விபத்துக்கு முன்பு என்ன நடந்தது என்பதை மீண்டும் கட்டமைக்க புலனாய்வாளர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருப்புப் பெட்டிகள் (black boxes) என்றால் என்ன?


விமானத்தின் கருப்புப் பெட்டி (black box) அல்லது விமானப் பறக்கும் தரவு பதிவாக்கி (flight recorder), 1930களிலிருந்தே ஏதோ ஒரு வடிவத்தில் இருந்து வருகிறது. அப்போது பிரெஞ்சு பொறியாளர் பிரான்சுவா ஹுசெனோ (François Hussenot) ஒரு தரவுப் பதிவாக்கியை உருவாக்கினார். அதில் சென்சார்கள் கொண்டு சுமார் 10 அளவுருக்களை ஒளியியல் முறையில் புகைப்படப் பிலிமில் திட்டி பதிவு செய்யும் வசதி இருந்தது. அந்தப் பிலிம் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க, எந்த ஒளியும் உள்ளே செல்லாமல் தடுக்கும் வகையில் கட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இதனாலேயே வெளிப்புற உலோக உறை எப்போதும் ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும் கூட, விரைவாக அடையாளம் காணவும் மீட்கவும் உதவும் வகையில் அந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு “கருப்புப் பெட்டி” என்ற பெயர் வந்தது. அன்று முதல் இந்தப் பெயர் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.


நவீன கண்டுபிடிப்பு பொதுவாக ஆஸ்திரேலிய நிபுணரான டேவிட் ரொனால்ட் டி மே வாரனை சேரும். ஒரு வர்த்தக கண்காட்சியில் ஒரு சிறிய பதிவாக்கியை பார்த்த பிறகு அவருக்கு இந்த யோசனை வந்தது. பின்னர், 1953-ல் ஒரு ஆரம்பகால வணிக ஜெட் விமானத்தின் நடுவானில் ஏற்பட்ட வெடிப்பை அவர் ஆய்வு செய்தார். தனது பகுப்பாய்வின்போது, ​​விமானத் தரவு மற்றும் காக்பிட் ஒலிகளைப் பதிவு செய்வது புலனாய்வாளர்கள் விபத்துக்களைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை அவர் உணர்ந்தார்.


முதலில், பல விமானிகள் இந்த யோசனையை எதிர்த்தனர். ஏனெனில், அவர்களின் பணியின் கண்காணிப்பை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் அஞ்சினர். இந்த எதிர்ப்பு இருந்தபோதிலும், வாரன் 1956-ல் இதற்காக ஒரு வேலை செய்யும் முன்மாதிரியை உருவாக்கினார். அவர் அதை வானூர்தி ஆராய்ச்சி ஆய்வகம்-விமான நினைவக அலகு (ARL-Flight Memory Unit) என்று அழைத்தார். இது நான்கு மணிநேர காக்பிட் குரல் மற்றும் விமான கருவி தரவை சேமிக்க முடியும்.




விமான விபத்துகளைப் புரிந்துகொள்ள கருப்புப் பெட்டிகள் எவ்வாறு உதவுகின்றன?


இன்றைய பெரும்பாலான விமானங்களில் காக்பிட் குரல் பதிவாக்கி (CVR) மற்றும் விமானத் தரவுப் பதிவாக்கி (FDR) ஆகிய இரண்டு கருப்புப் பெட்டிகள் கட்டாயமாக பொருத்தப்பட்டுள்ளன. காக்பிட் குரல் பதிவாளர் (CVR) விமானிகளுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் இயந்திர சத்தங்கள் உட்பட, காக்பிட்டில் ரேடியோ பரிமாற்றங்கள் மற்றும் பிற ஒலிகளைப் பதிவு செய்கிறது. மறுபுறம், விமானத் தரவுப் பதிவாளர் (FDR), உயரம், வான் வேகம், செங்குத்து முடுக்கம், தன்னியக்க நிலை போன்ற விமானம் தொடர்பான ஏராளமான தொழில்நுட்ப விவரங்களைப் பதிவு செய்கிறது.


விமானத் தரவுப் பதிவாளர் (FDR) தரவு, காணொளி உருவகப்படுத்துதலை உருவாக்குவதன் மூலம் விமானத்தை மறுகட்டமைக்க புலனாய்வாளர்களுக்கு உதவுகிறது. இது விமானத்தின் உயரம், சக்தி அமைப்புகள், கருவி அளவீடுகள் மற்றும் பிற விமான அம்சங்களைப் பார்க்க அவர்களுக்கு உதவுகிறது.


விபத்துக்குப் பிறகு கருப்புப் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்ய பொதுவாக 10-15 நாட்கள் ஆகும்.


கருப்புப் பெட்டிகள் விபத்துகளை எவ்வாறு தாங்கும்?


எஃகு அல்லது டைட்டானியம் போன்ற வலுவான பொருளால் ஆன ஒரு அலகிற்குள் பதிவுகள் சேமிக்கப்படுகின்றன. மேலும், அவை கடுமையான வெப்பம், குளிர் மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இந்த பெட்டிகள் விமானத்தின் வால்முனை அருகே பொருத்தப்பட்டுள்ளன. இது பொதுவாக விபத்தில் இருந்து மிகக் குறைந்த சேதத்தைப் பெறுகிறது.


இந்த பதிவுகள் 30 நாட்களுக்கு அல்ட்ராசவுண்ட் சிக்னல்களை அனுப்பக்கூடிய ஒரு பீக்கனுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது விமானங்கள் நீர்நிலைகளில் மோதும்போது பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமான நிகழ்வு போல சில சந்தர்ப்பங்களில், சில பதிவுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.


Original article : How the black boxes may help reconstruct events leading to Baramati air crash?

Share:

கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய  அம்சங்கள்:


தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு, "திட்டத்தின் ராஜதந்திர முக்கியத்துவம்" மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்  2023-ஆம் ஆண்டு உத்தரவின்படி, திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதியை மறுபரிசீலனை செய்யும் பணியில் உயர் அதிகாரம் கொண்ட குழு (high-powered committee (HPC)) கையாண்ட பிரச்சினைகள் குறித்தும் குறிப்பிட்டது.


இந்த மெகா திட்டம் 166 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 130 சதுர கி.மீ வன நிலத்தைத் திருப்பி, ஏறக்குறைய ஒரு மில்லியன் மரங்களை வெட்டி ஒரு பரிமாற்ற துறைமுகம், ஒருங்கிணைந்த நகரம், குடிமை மற்றும் இராணுவ விமான நிலையம் மற்றும் 450-MVA எரிவாயு மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை கட்டமைக்கிறது.


2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்கு உள்ளான மூதாதையர் நிலத்தை இழப்பது குறித்து நிக்கோபாரிய சமூகத்தினர் கவலை தெரிவித்த போதிலும், சுற்றுச்சூழல் சேதம் குறித்த அச்சங்கள் இருந்தபோதிலும், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.


திட்டத்தின் மறுக்க முடியாத ராஜதந்திர முக்கியத்துவத்தையும், தீவு கடலோர ஒழுங்குமுறை மண்டல (Island Coastal Regulation Zone (ICRZ)) நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் தீர்ப்பாயம் ஒப்புக்கொண்டது. தீர்ப்பாயம் இந்தப் பிரச்சினையை "சமச்சீர் அணுகுமுறை" (balanced approach) தேவைப்படும் ஒன்றாக வடிவமைத்தது.


          அதன் உத்தரவில், தேசிய பசுமை தீர்ப்பாயம், பவளப்பாறைகளைப் பாதுகாத்தல், திட்ட அனுமதிக்கு வரையறுக்கப்பட்ட அடிப்படைத் தரவை நம்பியிருத்தல் மற்றும் திட்ட பாகங்கள் தடைசெய்யப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் வருகிறதா என்பது போன்ற மூன்று முக்கிய கவலைகளை எடுத்துரைத்தது.  2022-ஆம் ஆண்டு திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதியில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் - அதன் தாக்கங்களைக் குறைப்பதற்காக - பூர்த்தி செய்யப்பட்டதா இல்லையா என்பதையும் தேசிய பசுமை தீர்ப்பாயம் மதிப்பீடு செய்தது.


திட்டம், தீவு கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளுக்குள் (ICRZ) வருகிறதா என்ற பிரச்சினையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்னாள் சுற்றுச்சூழல் செயலாளர் லீனா நந்தன் தலைமையிலான உயர் அதிகாரக் குழுவின் அறிக்கையை நம்பி, அதன் எந்தப் பகுதியும் தடைசெய்யப்பட்ட பகுதியில் வரவில்லை என்று முடிவு செய்தது.


தோல் முதுகு கடல் ஆமை, நிக்கோபார் மெகாபோட், உப்பு நீர் முதலைகள், நண்டு, நிக்கோபார் மக்காக் மற்றும் கிரேட் நிக்கோபார் தீவின் பிற உள்ளூர் பறவை இனங்களைப் பாதுகாப்பதற்காக குறிப்பிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக பசுமை நீதிமன்றம் பதிவு செய்தது.


இந்திய விலங்கியல் ஆய்வு (Zoological Survey of India) மையத்தால் கடந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்களை தீர்ப்பாயம் கணக்கில் எடுத்துக்கொண்டது. மேலும், திட்டப் பகுதிக்குள் எந்த பவளப்பாறையும் வரவில்லை என்றும், தற்போதுள்ள சிதறிய பவளப்பாறைகள் இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் பரிந்துரைகளின்படி இடமாற்றம் செய்யப்படும் என்றும் முடிவு செய்தது.


உங்களுக்குத் தெரியுமா?


 கிரேட் நிக்கோபார் தீவு (Great Nicobar Island (GNI)) உள்கட்டமைப்பு திட்டம் நிதி ஆயோக்கால் உருவாக்கப்பட்டு 2021-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் சர்வதேச கொள்கலன் பரிமாற்ற முனையம் (international container transshipment terminal,), ஒரு நகரம் மற்றும் பகுதி மேம்பாடு, 450 MVA எரிவாயு மற்றும் சூரிய சக்தி சார்ந்த மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரட்டை பயன்பாட்டு, பொதுமக்கள் மற்றும் இராணுவ விமான நிலையம் போன்றவை திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டம் 166 சதுர கி.மீ பரப்பளவில் விரிவடையும்.


இந்தத் திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகத்தால் (Andaman and Nicobar Islands Integrated Development Corporation (ANIIDCO)) செயல்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் கடல்சார் தொலைநோக்கு கொள்கை 2030-ஆம் ஆண்டுடன் ஒத்துப்போகிறது. அமிர்த கால் தொலைநோக்கு பார்வை 2047-ன் கீழ் உள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாக உள்ளது.


910 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட கிரேட் நிக்கோபார் தீவு, 850 சதுர கி.மீ பரப்பளவில் பழங்குடியினர்க்கு வாழ்விடமாக உள்ளது. இதில் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி சமூகங்கள் உள்ளன: ஷோம்பென் இனத்தவர்கள் வேட்டைக்காரர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர்களாக (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நிக்கோபாரீஸ் (Nicobarese) இனத்தவர்கள் தோட்டக்கலை, பன்றி வளர்ப்பு, வேட்டையாடுதல் மற்றும் உணவு தேடுதல் மூலம் வாழ்ந்து வருகிறார்கள். ஓரிரு கிராமங்கள் இடம்பெயர்ந்தாலும், எந்த பழங்குடியினரின் வாழ்விடங்களும் பாதிக்கப்படாது என்று அரசாங்கம் கூறுகிறது.


Original article : What is the Great Nicobar Island Project? -Khushboo Kumari

Share:

புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டம் உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்ட சவாலை எதிர்கொள்வது ஏன்? -வினீத் பல்லா

 மூன்று மனுக்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் (Right to Information Acts (RTI)) திருத்தம் செய்வதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், புலனாய்வு பத்திரிகையின் (nvestigative journalism) மீது புதிய சட்டத்தின் தாக்கம் மற்றும் அதைச் செயல்படுத்தும் சட்டப்பூர்வ அமைப்பின் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.


2023-ஆம் ஆண்டு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் ( Digital Personal Data Protection Act (DPDP)) அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூன்று தனித்தனி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர்களின் டிஜிட்டல் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டாலும், அதன் விதிகள் அடிப்படை தகவல் அறியும் உரிமையை (RTI) பலவினப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், புலனாய்வு பத்திரிகையை முடக்குகின்றன மற்றும் மாநில கண்காணிப்பு அதிகாரங்களை விரிவுபடுத்துகின்றன என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றுவதில் முக்கியப் பங்கு வகித்த  குடிமை சமூக வலையமைப்பான தேசிய மக்கள் தகவல் உரிமை பிரச்சாரம் (National Campaign for Peoples’ Right to Information (NCPRI)), வெளிப்படைத்தன்மையாக செய்யப்படும் வழக்கறிஞர் வெங்கடேஷ் நாயக் மற்றும் புலனாய்வு பத்திரிகையாளர்கள் குழுவான நிருபர்களின் கூட்டு அறக்கட்டளை ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


திங்கட்கிழமை இந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்,  ஒன்றிய அரசுக்கு அறிவிப்பாணையை (notice) அனுப்பி, மார்ச் மாதம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் முன் விசாரணைக்கு பட்டியலிட்டது. இருப்பினும், உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.


தனியுரிமை (Privacy) vs வெளிப்படைத்தன்மை (transparency)


மூன்று மனுதாரர்களும் எழுப்பிய ஒரு முக்கிய வாதம், 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் (DPDP) சட்டத்தின் பிரிவு 44(3), பொது அதிகாரிகள் வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(j)-ஐ மாற்றுகிறது.


இந்தத் திருத்தத்திற்குமுன், எந்தவொரு பொதுப் பணி அல்லது பொது நலனுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டால் அல்லது அதைப் பகிர்வது நியாயமற்ற முறையில் ஒருவரின் தனியுரிமையை பாதிக்கும் என்றால் மட்டுமே, பொது அதிகாரிகள் சட்டத்தின்கீழ் தனிப்பட்ட தகவல்களைப் பகிர மறுப்பு தெரிவிக்க முடியும். திருத்தப்படாத பிரிவு 8(1)(j) பொதுநல விதிவிலக்கையும் கொண்டிருந்தது.  இது பொது தகவல் அதிகாரிக்கு (public information officer (PIO)) “பொதுநலனுக்கு அதிகமாக உதவும் தகவல்களைப் பகிரலாம்” என்று திருப்தி அடைந்தால் தனிப்பட்ட தகவல்களைக் வெளியிட அனுமதிக்கிறது.


மாற்றாகக் கொண்டுவரப்பட்ட பிரிவு 8(1)(j) இப்போது "தனிப்பட்ட தகவல்களுடன் தொடர்புடைய தகவல்களுக்கு" விலக்கு அளிக்கிறது. பொது நலனை தனியுரிமைக்கான உரிமையுடன் சமநிலைப்படுத்தும் பொது தகவல் அதிகாரிகளின் சட்டப்பூர்வ அதிகாரத்தை இந்தத் திருத்தம் அழிக்கிறது என்று NCPRI மனு கூறுகிறது.



மனுக்களில் பட்டியலிடப்பட்டுள்ள சட்டத்திற்கு என்ன ஆட்சேபனைகள் உள்ளன? நாங்கள் விளக்குகிறோம்.


ஊழல் விசாரணைகள் பெரும்பாலும் சொத்து குறித்த தகவல்கள், ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளைக் கொண்ட கோப்பு குறிப்புகள் போன்ற பதிவுகளைச் சார்ந்துள்ளது என்று Reporters’ Collective குறிப்பிடுகிறது. பொது நலன் சார்ந்த இந்த அம்சத்தை நீக்குவதன் மூலம், பொது நடவடிக்கைகளுடன் குறிப்பிடத்தக்க தொடர்பு இருந்தாலும், "தனிப்பட்ட" (personal) என்று கருதப்படும் தகவல்களை பொது அதிகாரிகள் மறைக்க புதிய சட்டம் இப்போது அனுமதிக்கிறது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். இது "கவனமாக அளவீடு செய்யப்பட்ட தனியுரிமை விலக்கை ஒரு முழுமையான தடையாக" மாற்றுகிறது. இதன் மூலம் சட்டம் ஊழல் செய்த அதிகாரிகளைப் பாதுகாக்கிறது என்று NCPRI மனு வாதிடுகிறது. இது பங்கேற்பு ஜனநாயகத்திற்கு (participatory democracy) ஒரு கடுமையான அடியாகவும், திறந்த மற்றும் வெளிப்படையான நிர்வாகக் கொள்கைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் நாயக்கின் மனு விவரிக்கிறது.


இந்த மூன்று மனுக்களும், அடிப்படை உரிமைகள் (fundamental rights) மீதான எந்தவொரு கட்டுப்பாடும் "விகிதாசார சோதனையை" (proportionality test) பூர்த்தி செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் உச்சநீதிமன்றத்தின் 2017-ஆம் ஆண்டு புட்டசாமி தீர்ப்பை சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு அரசு தனது சட்டம் ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பதையும், அந்த நோக்கத்தை அடைய மிகக் குறைந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட வழியைப் (least restrictive measure) பயன்படுத்துகிறது என்பதையும், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சரியான பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த   வேண்டும்.


அடிப்படை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கட்டுப்படுத்துவதில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் (Digital Personal Data Protection Act (DPDP)) சட்டம் தோல்வியடைகிறது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் "பொது நலன் மீறல்" என்பதை தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கான "முழுமையான தடையாக" மாற்றுவதன் மூலம், அரசு கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றத் தவறிவிட்டது என்று NCPRI வாதிடுகிறது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் "வெளிப்படையாக தன்னிச்சையானது" (manifestly arbitrary) என்றும், அது பொது நலனைப் ஆரயாமல், முற்றிலும் தெளிவற்ற ஒரு தகவல்களை உருவாக்குகிறது என்று NCPRI மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பத்திரிகை மீதான தாக்கம்


டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act (DPDP)) பத்திரிகை சுதந்திரத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பதை நிருபர்களின் கூட்டு மனு எடுத்துக்காட்டுகிறது. மோசடித் திட்டங்களை விசாரிப்பது அல்லது அரசாங்க பயனாளிகள் குறித்து அறிக்கை அளிப்பது போன்ற தனிநபர்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள்மீது "தரவு நம்பகத்தன்மையாளர்கள்" (data fiduciaries) என்று முத்திரை குத்தப்படலாம். சட்டத்தின்கீழ் இந்த வகைப்பாடு, விசாரிக்கப்படும் நபர்களுக்கு அறிவிப்பு வழங்குதல் மற்றும் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுதல் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.


இந்தத் தேவை புலனாய்வு பத்திரிகைக்கு சாத்தியமற்றது மற்றும் எதிர்மறையானது (counter-productive) என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தரவு தொடர்புடைய நபர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், சட்டத்தின் பிரிவு 12, தரவு நம்பிக்கைக்குரியவரால் அவர்களின் தரவு அழிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மனுவில், ஒரு செய்தி அறிக்கை அல்லது கட்டுரை வெளியிடப்பட்ட பிறகு அதைச் சரிபார்க்க இயலாது என்ற வாதம் முன் வைக்கபட்டது.


இந்தச் சட்டத்தின் அதிக அபராதங்கள், ரூ.250 கோடி வரை, மிதமான விளைவை (chilling effect) ஏற்படுத்தும் என்று மனு எச்சரிக்கிறது. இதுபோன்ற கட்டுப்படியாகாத அபராதங்களின் அச்சுறுத்தல், தனிப்பட்ட தரவுகள் சம்பந்தப்பட்ட பொதுநலன் சார்ந்த விவகாரங்களைப் பற்றி செய்தி வெளியிடுவதிலிருந்து பத்திரிகையாளர்களைத் தடுக்கும் என்று வாதம் முன் வைக்கபட்டது.




மாநில அதிகாரம் மற்றும் கண்காணிப்பு


நாயக் மற்றும் நிருபர்களின் கூட்டு சவால் போன்ற மனுதாரர்களும் DPDP சட்டத்தின் பிரிவு 36-ஐ சவால் செய்கின்றனர். இது எந்தவொரு தரவு நம்பிக்கையாளரிடமிருந்தும் தகவல்களைக் கேட்பதற்கு ஒன்றிய  அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.


இந்த விதி நடைமுறை பாதுகாப்புகள் இல்லாமல் "நியாயமற்ற டிஜிட்டல் தேடல்களை" எளிதாக்குகிறது என்றும், இது "தெளிவற்ற, பரந்த மற்றும் தன்னிச்சையானது" என்றும், அரசாங்கம் தனிநபரின் ஒப்புதல் இல்லாமல் மற்றும் தன்னிச்சையாக அங்கீகாரம் இல்லாமல் தனிப்பட்ட தரவைப் பெற அனுமதிக்கிறது என்று நிருபர்கள் கூட்டு மனு தனது வாதத்தை முன் வைக்கிறது. பத்திரிகை நோக்கங்களுக்காக விலக்கு இல்லாமல், பிரிவு 36 ஊடக நிறுவனங்கள் பெயர் குறிப்பிடாத ஆதாரங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் தரவை ஒப்படைக்க கட்டாயப்படுத்தக்கூடும் என்றும், இதன் மூலம் தகவல் அளிப்பவர்களைத் தடுக்கும் என்று  நிருபர்கள் கூட்டு மனு கூறுகிறது.


DPDP சட்டத்தின் பிரிவு 36-ன் கீழ் ஒன்றிய அரசின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு அல்லது மறு ஆய்வு செய்ய வாய்ப்பு  எதுவும் இல்லை" என்று நாயக் வாதிடுகிறார். இது, "தனியார் தரவுகளின்மீது ஒன்றிய அரசின் தன்னிச்சையான மற்றும் அதிகப்படியான துஷ்பிரயோகத்திற்கு இந்த விதி வழிவகுக்கிறது. இது கொள்கை முடிவுகள் மற்றும் தேர்தல் தேர்வுகளை பாதிக்கலாம்" என்று நாயக் எச்சரிக்கிறார்.


தரவு பாதுகாப்பு வாரியத்தின் சுதந்திரம் (Independence of Data Protection Board)


சட்டத்தை அமல்படுத்துவதற்கும் அபராதம் விதிப்பதற்கும் பணிக்கப்பட்ட அமைப்பான இந்திய தரவு பாதுகாப்பு வாரியத்திற்கு சுதந்திரம் வழங்காது என்று  நாயக் மற்றும் நிருபர்கள் கூட்டு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.


சட்டத்தை செயல்படுத்துவதற்கான புதிதாக அறிவிக்கப்பட்ட விதிகளின்கீழ், வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழு முழுவதுமாக அரசாங்க செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்டுள்ளது.


நியமனச் செயல்பாட்டில் "முழுமையான நிர்வாக ஆதிக்கம்", வாரியம் அரை-நீதித்துறை (quasi-judicial) செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் அதிகாரங்களைப் பிரிப்பதற்கான கோட்பாட்டை மீறுவதாக நாயக்கின் மனு வாதிடுகிறது. அரசு மிகப்பெரிய தரவு சேகரிப்பாளராக இருப்பதால், நிர்வாகத்தால் மட்டுமே நியமிக்கப்பட்ட ஒரு குழு நிர்வாகக் கட்டுப்பாடு குறித்த கவலைகளை எழுப்புகிறது. அதன் சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்றத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று கூறி, நிருபர்களின் கூட்டு மனு தனது வாதத்தை முன் வைக்கிறது.


Original article : Why the new Digital Personal Data Protection Act faces a constitutional challenge in the Supreme Court?. -Vineet Bhalla

Share:

2025-ஆம் ஆண்டு ஊழல் கண்ணோட்டக் குறியீடு (CPI) -ரோஷ்னி யாதவ்

 2025-ஆம் ஆண்டு ஊழல் கண்ணோட்டக் குறியீடு (Corruption Perceptions Index (CPI)), உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஊழல் ஒரு தீவிர அச்சுறுத்தலாகவே உள்ளது என்பதை வெளிக் காட்டுகிறது. குறியீட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன? இந்தியா எந்த இடத்தில் உள்ளது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே விளக்கப்பட்டுள்ளது.


தற்போதைய செய்தி :


Transparency International-ன் 2025 ஊழல் கண்ணோட்டக் குறியீடு சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. 80 புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்னர் 12-ஆக இருந்த 80-க்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஐந்து ஆகக் குறைந்துள்ளது. இந்த சூழலில், குறியீட்டின் முக்கிய சிறப்பம்சங்களையும், இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தக் குறியீடு, குறைந்த அளவிலான நிர்வாக ஊழல் உட்பட, உள்நாட்டு பொதுத்துறை ஊழல் பற்றிய கருத்துக்களை ஆராய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இது 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்தி, உணரப்பட்ட பொதுத்துறை ஊழலின் அடிப்படையில் 182 நாடுகளை மதிப்பீடு செய்தது. அங்கு பூஜ்ஜிய மதிப்பெண் மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் (highly corrupt), 100 ஊழல் இல்லாத நிலையாகவும் உள்ளது. குறியீட்டில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாட்டின் நிலையை தரவரிசை வெளிப்படையாக காட்டுகிறது.


2. 2025-ஆம் ஆண்டு ஊழல் உணர்வு குறியீட்டில் டென்மார்க் 89 புள்ளிகளுடன் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பின்லாந்து 88 புள்ளிகளுடனும், சிங்கப்பூர் 84 புள்ளிகளுடனும் உள்ளன.


3. தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய இரண்டு நாடுகளும் 9 மதிப்பெண்களுடன் 181-வது இடத்தில் உள்ளன. வெனிசுலா 10 மதிப்பெண்களுடன் 180-வது இடத்தில் இருந்து, இந்த மூன்று நாடுகளையும் குறியீட்டில் கடைசி இடத்தில் வைத்திருக்கிறது.


4. குறியீட்டு ஒரு தொந்தரவான கீழ்நோக்கிய போக்கை வெளிப்படுத்தியது, உலகளாவிய சராசரி மதிப்பெண் 100 இல் 42 ஆகக் குறைந்தது - இது பத்து ஆண்டுகளில் மிகக் குறைவு. கூடுதலாக, மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான 122 நாடுகள் 2025 CPI இல் 50க்குக் கீழ் மதிப்பெண் பெற்றுள்ளன என்பதை அது மேலும் சுட்டிக்காட்டியது.


5. இருப்பினும், முன்னேற்றத்திற்கான சில அறிகுறிகள் உள்ளன.  2012-ஆம் ஆண்டு முதல் 31 நாடுகள் தங்கள் ஊழல் அளவைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


6. குறிப்பிடத்தக்க வகையில், எஸ்டோனியா (76 மதிப்பெண்களுடன் 12-வது இடத்தில் உள்ளது. பூட்டான் (71 மதிப்பெண்களுடன் 18-வது இடத்தில் உள்ளது. தென் கொரியா 63 மதிப்பெண்களுடன் 31-வது இடத்தில் உள்ளது. மற்ற நாடுகள் நீடித்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் நீண்டகால ஆதாயங்களைக் காட்டியுள்ளனர்.


7. 2025-ஆம் ஆண்டில், ஊழல் உணர்வுகள் குறியீட்டில் இந்தியா உலகளவில் 91-வது இடத்தைப் பிடித்தது. 100-ல் 39 மதிப்பெண்களைப் பெற்றது. இது முந்தைய ஆண்டைவிட சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டதைக் காட்டுகிறது. 2024-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 38-ஆக இருந்தது.




லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா (Lokpal and Lokayuktas Act) சட்டம்


1. ஒன்றிய ஊழல் எதிர்ப்பு குறைதீர்ப்பு அமைப்பான லோக்பால் என்ற யோசனை முதன்முதலில் 1963-ஆம் ஆண்டு ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் வரவு செலவு அறிக்கை ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது முன்வைக்கப்பட்டது. 1968 மற்றும் 2001-ஆம் ஆண்டிற்கு இடையில்  8 முறை நாடாளுமன்றத்தில் குறைதீர்ப்பு மையத்தைக் உருவாக்கும் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை என்று ஊழல் எதிர்ப்பு அமைப்பான இந்தியா Transparency International அமைப்பு 2020-ல் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.


2. இருப்பினும், பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்கள் லோக்பாலுக்கு இணையான லோக் ஆயுக்தாக்களை அமைத்தன. மகாராஷ்டிரா லோக்ஆயுக்தா மற்றும் உபயுக்தா (Upayukta Act) சட்டத்தின் கீழ் 1971-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பில் முதலிடத்தில்  உள்ளது.


 3. 2013-ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா (Lokpal and Lokayuktas Act) சட்டம் ஜனவரி 16, 2014 அன்று அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம், இந்திய தலைமை நீதிபதியாக இருக்கும் அல்லது முன்பு நீதிபதியாக பணியாற்றிய அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அல்லது குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த நபரின் தலைமையில் ஒரு லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது. அதன் மற்ற உறுப்பினர்களில், 8-நபர்களுக்கு மிகாமல், 50% பேர் நீதித்துறை உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆனால், உறுப்பினர்களில் 50%-க்கும் குறையாமல் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களாக இருக்க வேண்டும்.


4. லோக்பால் சட்டம், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுபினர் முதல்  ஒன்றிய அரசின் குழு A, B, C மற்றும் D அதிகாரிகள் வரை பல்வேறு வகையான பொது ஊழியர்களை உள்ளடக்கியது. "பிரதமர் தொடர்பான புகாரில் கூறப்படும் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் சம்பந்தப்பட்ட அல்லது தொடர்புடைய எந்தவொரு விவகாரத்தையும் லோக்பால் விசாரிக்க வேண்டும் அல்லது விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.


5. பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டு சர்வதேச உறவுகள், வெளி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி மற்றும் விண்வெளி தொடர்பானதாக இருந்தால், லோக்பால் சட்டம் விசாரணை நடத்த அனுமதிக்காது. மேலும், முழு லோக்பால் அமர்வு விசாரணையைத் தொடங்குவதை பரிசீலித்து, குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதை அங்கீகரிக்காவிட்டால் பிரதமருக்கு எதிரான புகார்களை விசாரிக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது.


6. லோக்பால் தலைவரும் உறுப்பினர்கள் 5 வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார்கள் அல்லது அவர்கள் 70 வயது அடையும் வரை பதவியில் இருப்பார்கள். எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள். முதல் லோக்பால் தலைவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ்  (Pinaki Chandra Ghose) ஆவார்.


Original article : Corruption Perceptions Index (CPI) 2025 -Roshni Yadav

Share:

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. -சந்திரசேகர் கே.

 வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே வேளையில், வரி வசூலிக்கும் முறையும் அதிகத் திறனுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நேரடி வரி முறை கணிசமாக விரிவடைந்துள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளதுடன், நிர்வாகத்திலும் சீரான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வளர்ச்சியானது பரவலாகவும் நிலையானதாகவும் இருப்பதை வருமான வரித்துறையின் தரவுகள் காட்டுகின்றன. இது ஏதோ தற்காலிகமாக வரி  செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது மட்டும் அல்ல, மாறாக நாட்டின் முறையான பொருளாதார அமைப்பில் மக்கள் ஆழமாகப் பங்கேற்பதையே குறிப்பதாகத் தெரிவிக்கின்றனர். 


மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year (AY)) 2013-14-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரை, வருமான வரி தாக்கல் செய்தவர்கள் அல்லது வருமான வரி மூலத்தில் பிடிக்கப்பட்டவர்கள் (tax deducted at source (TDS)) உட்பட ஒட்டுமொத்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.26 கோடியிலிருந்து 12.13 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 


வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருப்பது, கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 7.89 சதவீதம் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்திற்கு (compound annual growth rate (CAGR)) சமமாக உள்ளது.  இது ஒரு நிலையான வளர்ச்சியைக் குறிக்கிறது. நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number (PAN)) பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவின் நேரடி வரி முறையில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான கட்டமைப்பு மாற்றங்களில் இதுவும் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 


தரவுகளை விரிவாகப் பார்க்கும்போது, இந்த வளர்ச்சியில் தனிநபர் வரி செலுத்துவோரே முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்பது தெரிகிறது. விளக்கப்படம் 1-ல் காட்டியுள்ளபடி, தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மதிப்பீட்டு ஆண்டு (AY) 2013-14-ஆம் ஆண்டில் 4.96 கோடியாக இருந்தது, இது 2024-25-ஆம் ஆண்டில் 11.61 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சுமார் 8 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் (CAGR) குறிக்கிறது.


விளக்கப்படம் 1 இடது அச்சில் உள்ள தனிப்பட்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கையையும் (பார்களாகக் குறிப்பிடப்படுகிறது) வலது அச்சில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியையும் (ஒரு கோடாகக் குறிப்பிடப்படுகிறது) காட்டுகிறது.


கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு, வளர்ச்சி சீராக இருந்தது; பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வளர்ச்சி காணப்பட்டது. ஆனால், 2020-21-ஆம் நிதியாண்டில் தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 9 சதவீதம் குறைந்தது. இது பெருந்தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பையே காட்டுகிறது.


இதனைத் தொடர்ந்து ஒரு வலுவான மீட்சி ஏற்பட்டது; சமீபத்திய மதிப்பீட்டு ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. இது தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதில் புதிய வேகத்தைக் காட்டுகிறது.


வரி செலுத்தும் முறையில் தனிநபர்களே (Individuals) பெரும் பங்கு வகித்தாலும், வளர்ச்சி என்பது அவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிறுவனங்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் (Hindu Undivided Families (HUF)), நபர்களின் கூட்டமைப்பு, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற வகை வரி செலுத்துவோரின் பொதுவான வளர்ச்சிப் போக்கை விளக்கப்படம்-2 (Chart 2) காட்டுகிறது.


விளக்கப்படம் 2-ல் (Chart 2), தனிநபர் அல்லாத வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை இடதுபுற அச்சிலும், ஆண்டுக்காண்டு வளர்ச்சி விகிதம் வலதுபுற அச்சிலும் காட்டப்பட்டுள்ளது.















தனிநபர் அல்லாத வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, மதிப்பீட்டு ஆண்டு 2013-14-ஆம் ஆண்டில் சுமார் 0.29 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்குச் சராசரியாக 5 சதவீத வளர்ச்சியைப் பெற்று, 2024-25-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 0.48 கோடியாக உயர்ந்துள்ளது.


தனிநபர் வரி செலுத்துபவர்களைவிட இந்த பிரிவினரின் வளர்ச்சி மெதுவாக இருந்தாலும், மிகவும் நிலையானதாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, இவர்களின் ஆண்டு வளர்ச்சி பெரும்பாலும் 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருந்தது. ஆனால், பெருந்தொற்று காரணமாக 2020-21 மதிப்பீட்டு ஆண்டில் இந்த வளர்ச்சி 1 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது என்கின்றனர். அதன் பிறகு வந்த ஆண்டுகளில் இது படிப்படியாக மீண்டும் முன்னேற்றம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

தனிநபர்களைப் போலன்றி, தனிநபர் அல்லாத வரி செலுத்துவோரின் (நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள்) பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி மிதமானதாகவே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இவர்களின் வளர்ச்சி சுமார் 5 சதவீதம் என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. வணிகங்கள் மற்றும் அமைப்புகளிடையே முறைப்படுத்துதல் தொடர்வதையே இது காட்டுகிறது, ஆனால் இது தனிநபர்களிடம் காணப்படும் வேகத்தை விடக்குறைவான மற்றும் சீரான வேகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


வரி வசூலிப்புச் செலவு


வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், வரி நிர்வாகம் மிகவும் திறமையானதாக மாறியுள்ளது. விளக்கப்படம் 3-ல் காட்டியுள்ளபடி, நேரடி வரிகளை வசூலிப்பதற்கான செலவு, நிதி ஆண்டு 2000-01-ஆம் ஆண்டில் 1.36 சதவீதமாக இருந்தது, அது 2024-25-ஆம் நிதி ஆண்டில் 0.41 சதவீதமாக குறைந்துள்ளது.


2024-25-ஆம் நிதியாண்டிற்கான இந்த புள்ளிவிவரம் தற்காலிகமானது மற்றும் பின்னர் மாற்றியமைக்கப்படலாம். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மற்றும் மொத்த வரி வசூல் கணிசமாக அதிகரித்த போதிலும், இந்த தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


விளக்கப்படம் 3, நேரடி வரிகளை வசூலிப்பதற்கான செலவை (சதவீதத்தில் %) காட்டுகிறது.


2020–21-நிதியாண்டில் செலவு விகிதம் (cost ratio) அதிகரித்தது ஒரு தற்காலிகமான நிகழ்வுதான் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். இது முக்கியமாகப் பெருந்தொற்று ஏற்படுத்திய இடையூறுகளால் ஏற்பட்டதே தவிர, நிறுவனத்தின் கட்டமைப்புக் குறைபாடு அல்ல என்றும் அதன் பிறகு, இந்த விகிதம் தரவுகளில் உள்ளதிலேயே மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது நிர்வாகத் திறனில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் தெளிவுபடுத்துகின்றனர். 


இந்த மாற்றங்களை சில நிறுவன ரீதியான மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் விளக்க முடியும் என்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில், வரி நிர்வாகமானது டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்தல் (Digital filing), முன்-நிரப்பப்பட்ட படிவங்கள் (Pre-filled returns), முகமற்ற மதிப்பீடு (Faceless assessments) மற்றும் பரவலான மூன்றாம் தரப்பு தகவல் அறிக்கையிடல் (Third-party reporting) ஆகியவற்றையே அதிகம் சார்ந்துள்ளது.


இந்த நடவடிக்கைகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ள சிரமங்களைக் குறைத்துள்ளன. மேலும், கூடுதல் நிர்வாக ஆதாரங்கள் தேவைப்படாமலேயே அதிகப்படியான வரி செலுத்துவோரை கையாள இந்த அமைப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.


இந்தியாவின் வரி செலுத்துவோர் எண்ணிக்கை எந்தளவிற்கு நிலையாக உயர்ந்துள்ளது என்பதைத் தீர்மானிக்க, வெறும் மேலோட்டமான புள்ளிவிவரங்களை மட்டும் நம்பியிருக்காமல், தனிப்பட்ட வரி செலுத்துவோரின் தரவுகள், ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி மற்றும் நீண்டகால கூட்டு வளர்ச்சி விகிதம் (CAGR) போன்றவற்றை இந்த ஆய்வு பயன்படுத்துகிறது.


ஒட்டுமொத்தமாக, வரி செலுத்துவோர் எண்ணிக்கை, வளர்ச்சி விகிதங்கள், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித (CAGR) போக்குகள் மற்றும் வரி வசூல் செலவுகள் ஆகியவை இந்தியாவின் நேரடி வரி முறை வலுவடைந்துள்ளதைக் காட்டுகின்றன. நிர்வாகத் திறன் மேம்படும் அதே வேளையில், பரவலான வரி செலுத்துவோரிடமிருந்து வருவாய் வசூலிக்கப்படுகிறது. இது நிலையான பொது நிதிக்கு ஆதரவளிப்பதோடு, வரி விதிப்பை முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டு வருகிறது. இந்த மாற்றம் நாட்டின் வருவாய் நிலைத்தன்மை, நேர்மை மற்றும் நீண்ட கால நிதித் திட்டமிடலில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது.


வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தரவுகளைப் பயன்படுத்தி, வளர்ச்சி விகிதங்கள் ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படுகின்றன.


சுருக்கப்படாத மதிப்புகளைக் கொண்டு, மதிப்பீட்டு ஆண்டு (AY) 2013-14 முதல் 2024-25 வரையிலான காலத்திற்கு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமானது (CAGR) கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மதிப்பீட்டு ஆண்டு (AY) 2024-25 மற்றும் நிதி ஆண்டு (FY) 2024-25 ஆகியவற்றிற்கான புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை ஆகும். 


எழுத்தாளர், இந்திய புள்ளிவிவரப் பணியில் (Indian Statistical Service) பணிபுரிகிறார்.


Original article : India’s taxpayer base more than doubled in the last decade -Chandrasekar K.

Share: