2025-ஆம் ஆண்டு ஊழல் கண்ணோட்டக் குறியீடு (CPI) -ரோஷ்னி யாதவ்

 2025-ஆம் ஆண்டு ஊழல் கண்ணோட்டக் குறியீடு (Corruption Perceptions Index (CPI)), உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஊழல் ஒரு தீவிர அச்சுறுத்தலாகவே உள்ளது என்பதை வெளிக் காட்டுகிறது. குறியீட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன? இந்தியா எந்த இடத்தில் உள்ளது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே விளக்கப்பட்டுள்ளது.


தற்போதைய செய்தி :


Transparency International-ன் 2025 ஊழல் கண்ணோட்டக் குறியீடு சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. 80 புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்னர் 12-ஆக இருந்த 80-க்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஐந்து ஆகக் குறைந்துள்ளது. இந்த சூழலில், குறியீட்டின் முக்கிய சிறப்பம்சங்களையும், இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தக் குறியீடு, குறைந்த அளவிலான நிர்வாக ஊழல் உட்பட, உள்நாட்டு பொதுத்துறை ஊழல் பற்றிய கருத்துக்களை ஆராய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இது 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்தி, உணரப்பட்ட பொதுத்துறை ஊழலின் அடிப்படையில் 182 நாடுகளை மதிப்பீடு செய்தது. அங்கு பூஜ்ஜிய மதிப்பெண் மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் (highly corrupt), 100 ஊழல் இல்லாத நிலையாகவும் உள்ளது. குறியீட்டில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாட்டின் நிலையை தரவரிசை வெளிப்படையாக காட்டுகிறது.


2. 2025-ஆம் ஆண்டு ஊழல் உணர்வு குறியீட்டில் டென்மார்க் 89 புள்ளிகளுடன் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பின்லாந்து 88 புள்ளிகளுடனும், சிங்கப்பூர் 84 புள்ளிகளுடனும் உள்ளன.


3. தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய இரண்டு நாடுகளும் 9 மதிப்பெண்களுடன் 181-வது இடத்தில் உள்ளன. வெனிசுலா 10 மதிப்பெண்களுடன் 180-வது இடத்தில் இருந்து, இந்த மூன்று நாடுகளையும் குறியீட்டில் கடைசி இடத்தில் வைத்திருக்கிறது.


4. குறியீட்டு ஒரு தொந்தரவான கீழ்நோக்கிய போக்கை வெளிப்படுத்தியது, உலகளாவிய சராசரி மதிப்பெண் 100 இல் 42 ஆகக் குறைந்தது - இது பத்து ஆண்டுகளில் மிகக் குறைவு. கூடுதலாக, மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான 122 நாடுகள் 2025 CPI இல் 50க்குக் கீழ் மதிப்பெண் பெற்றுள்ளன என்பதை அது மேலும் சுட்டிக்காட்டியது.


5. இருப்பினும், முன்னேற்றத்திற்கான சில அறிகுறிகள் உள்ளன.  2012-ஆம் ஆண்டு முதல் 31 நாடுகள் தங்கள் ஊழல் அளவைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


6. குறிப்பிடத்தக்க வகையில், எஸ்டோனியா (76 மதிப்பெண்களுடன் 12-வது இடத்தில் உள்ளது. பூட்டான் (71 மதிப்பெண்களுடன் 18-வது இடத்தில் உள்ளது. தென் கொரியா 63 மதிப்பெண்களுடன் 31-வது இடத்தில் உள்ளது. மற்ற நாடுகள் நீடித்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் நீண்டகால ஆதாயங்களைக் காட்டியுள்ளனர்.


7. 2025-ஆம் ஆண்டில், ஊழல் உணர்வுகள் குறியீட்டில் இந்தியா உலகளவில் 91-வது இடத்தைப் பிடித்தது. 100-ல் 39 மதிப்பெண்களைப் பெற்றது. இது முந்தைய ஆண்டைவிட சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டதைக் காட்டுகிறது. 2024-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 38-ஆக இருந்தது.




லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா (Lokpal and Lokayuktas Act) சட்டம்


1. ஒன்றிய ஊழல் எதிர்ப்பு குறைதீர்ப்பு அமைப்பான லோக்பால் என்ற யோசனை முதன்முதலில் 1963-ஆம் ஆண்டு ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் வரவு செலவு அறிக்கை ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது முன்வைக்கப்பட்டது. 1968 மற்றும் 2001-ஆம் ஆண்டிற்கு இடையில்  8 முறை நாடாளுமன்றத்தில் குறைதீர்ப்பு மையத்தைக் உருவாக்கும் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை என்று ஊழல் எதிர்ப்பு அமைப்பான இந்தியா Transparency International அமைப்பு 2020-ல் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.


2. இருப்பினும், பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்கள் லோக்பாலுக்கு இணையான லோக் ஆயுக்தாக்களை அமைத்தன. மகாராஷ்டிரா லோக்ஆயுக்தா மற்றும் உபயுக்தா (Upayukta Act) சட்டத்தின் கீழ் 1971-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பில் முதலிடத்தில்  உள்ளது.


 3. 2013-ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா (Lokpal and Lokayuktas Act) சட்டம் ஜனவரி 16, 2014 அன்று அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம், இந்திய தலைமை நீதிபதியாக இருக்கும் அல்லது முன்பு நீதிபதியாக பணியாற்றிய அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அல்லது குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த நபரின் தலைமையில் ஒரு லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது. அதன் மற்ற உறுப்பினர்களில், 8-நபர்களுக்கு மிகாமல், 50% பேர் நீதித்துறை உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆனால், உறுப்பினர்களில் 50%-க்கும் குறையாமல் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களாக இருக்க வேண்டும்.


4. லோக்பால் சட்டம், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுபினர் முதல்  ஒன்றிய அரசின் குழு A, B, C மற்றும் D அதிகாரிகள் வரை பல்வேறு வகையான பொது ஊழியர்களை உள்ளடக்கியது. "பிரதமர் தொடர்பான புகாரில் கூறப்படும் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் சம்பந்தப்பட்ட அல்லது தொடர்புடைய எந்தவொரு விவகாரத்தையும் லோக்பால் விசாரிக்க வேண்டும் அல்லது விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.


5. பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டு சர்வதேச உறவுகள், வெளி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி மற்றும் விண்வெளி தொடர்பானதாக இருந்தால், லோக்பால் சட்டம் விசாரணை நடத்த அனுமதிக்காது. மேலும், முழு லோக்பால் அமர்வு விசாரணையைத் தொடங்குவதை பரிசீலித்து, குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதை அங்கீகரிக்காவிட்டால் பிரதமருக்கு எதிரான புகார்களை விசாரிக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது.


6. லோக்பால் தலைவரும் உறுப்பினர்கள் 5 வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார்கள் அல்லது அவர்கள் 70 வயது அடையும் வரை பதவியில் இருப்பார்கள். எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள். முதல் லோக்பால் தலைவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ்  (Pinaki Chandra Ghose) ஆவார்.


Original article : Corruption Perceptions Index (CPI) 2025 -Roshni Yadav

Share: