நீர் பாதுகாப்பு திட்டங்களுக்கான செலவினத்தை புதிய MGNREGA திருத்தம் எவ்வாறு வலியுறுத்துகிறது? -ஹரிகிஷன் ஷர்மா

 நிலத்தடி நீர் எடுப்பின் நிலையை அடிப்படையாகக் கொண்டு - ‘அதிக சுரண்டப்பட்ட’ (Over-exploited), ‘முக்கியமான’ (Critical), ‘அரை-முக்கியமான’ (Semi-critical) மற்றும் ‘பாதுகாப்பான’ (Safe) - தொகுதி மட்டத்தில் குறைந்தபட்ச செலவினத்தை விதிமுறைகள் குறிப்பிட்டுள்ளன.


கிராமப்புற தொகுதிகள் அல்லது துணைப்பிரிவுகளில் நீர் பாதுகாப்பு மற்றும் அறுவடை பணிகளுக்கு குறைந்தபட்ச தொகை செலவிடப்படும் வகையில், 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MG-NREGA)) முதலாவது அட்டவணையை ஒன்றிய அரசு திருத்தியுள்ளது. ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Rural Development (MoRD)) செப்டம்பர் 23 அன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.


இப்போது இந்த மாற்றத்தைத் தூண்டியது எது, எந்த மாநிலங்கள் இதனால் பயனடைய வாய்ப்புள்ளது? 


MGNREGA-வின் அட்டவணை-I என்றால் என்ன?


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட  விதிமுறைகளின்படி, ஒவ்வொரு மாநில அரசும் ஊரக பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு தேவையின் அடிப்படையில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.


திட்டத்தின் குறைந்தபட்ச அம்சங்கள் சட்டத்தின் அட்டவணை-I-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், வேலை வழங்குவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனுமதிக்கப்பட்ட பொதுப் பணிகளின் பட்டியலும் இதில் உள்ளது. சட்டத்தில் எந்த திருத்தமும் செய்ய நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும் அதே வேளையில், அரசாங்கம் ஒரு அறிவிப்பு மூலம் அட்டவணையில் மாற்றங்களைச் செய்யலாம். இன்றுவரை, அட்டவணை சுமார் 24 முறை திருத்தப்பட்டுள்ளது.


சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் என்ன?


பத்தி 4-ன் கீழ் உள்ள துணைப்பத்தி (2)-க்குப் பிறகு புதிய விதிப்பிரிவை சேர்க்க ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. துணைப்பத்தி (2) பணிகளின் முன்னுரிமை வரிசை (order of priority of works) ஒவ்வோர் கிராம பஞ்சாயத்தாலும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இது உள்ளூர் பகுதியின் சாத்தியக்கூறுகள், தேவைகள் மற்றும் வளங்களை கருத்தில் கொண்டு செய்யப்பட வேண்டும். கிராம சபைகள் என்பது கிராமப்புறத்தில் உள்ள அனைத்து பெரியவர்களையும் உள்ளடக்கிய ஒரு உள்ளூர் சபை ஆகும்.


மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் குறைந்தபட்சம் 60 சதவீதம் செலவின் அடிப்படையில் நிலம், நீர் மற்றும் மரங்களின் வளர்ச்சி மூலம் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட உற்பத்தி சொத்துக்களை உருவாக்குவதற்கு இருக்க வேண்டும் என்பதை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (District Programme Coordinator) உறுதி செய்ய வேண்டும் என்று ஜூலை 2024ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance (NDA) அரசாங்கத்தால் சேர்க்கப்பட்ட விதிமுறை கூறுகிறது.


நீர் தொடர்பான பணிகளுக்கு செலவிடப்பட வேண்டிய பணத்தின் விகிதத்தை ஒன்றிய அரசு இப்போது குறிப்பிட்டுள்ளது. தற்போதுள்ள, விதிமுறை மாவட்ட அளவில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளின் சொத்துக்களுக்கு செலவிடுவதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், புதிய விதிமுறைகள் நிலத்தடி நீர் பிரித்தெடுக்கும் நிலையின் அடிப்படையில் தொகுதி அளவில் குறைந்தபட்ச செலவினத்தை குறிப்பிட்டுள்ளன அவை அதிக சுரண்டப்பட்ட, முக்கியமான, அரை-முக்கியமான மற்றும் பாதுகாப்பானது போன்ற காரணிகளாகும்.


புதிய விதிமுறைகளின்படி, ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தால் (Central Ground Water Board (CGWB)) "அதிக சுரண்டப்பட்ட" மற்றும் "முக்கியமான" என்று வகைப்படுத்தப்பட்ட கிராமப்புற பகுதிகளில், குறைந்தபட்சம் 65 சதவீத MGNREGS பணிகள் (செலவின் அடிப்படையில்) நீர் பாதுகாப்பு, நீர் சேகரிப்பு மற்றும் பிற நீர் தொடர்பான பணிகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டும். அரை-முக்கியமான மற்றும் பாதுகாப்பான தொகுதிகளுக்கு, குறைந்தபட்ச விகிதம் முறையே 40 சதவீதம் மற்றும் 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


"மேலும், ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தால் (CGWB) கிடைக்கக்கூடிய சுழற்சி நிலையான நிலத்தடி நீர்வள மதிப்பீட்டு அறிக்கையில் 'அதிகப்படியான சுரண்டல்', 'முக்கியமான', 'அரை-முக்கியமான' மற்றும் 'பாதுகாப்பான' என வகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அலகுகள் (தொகுதிகள்) தலையீட்டிற்கான முன்னுரிமைப் பகுதிகளாகக் கருதப்படும்" என்று விதிமுறை கூறுகிறது.


தொகுதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?


ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒன்றிய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீர் பயன்பாட்டின் அடிப்படையில் பகுதிகளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கிறது. 'அதிகமாக சுரண்டப்படும்' (Over-exploited) பகுதிகளில், இயற்கையாகவே மாற்றக்கூடியதைவிட அதிகமான நிலத்தடி நீர் வெளியேற்றப்படுகிறது, பிரித்தெடுத்தல் 100% விட அதிகமாகும்.


90-100% நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் பகுதிகள் 'முக்கியமானவை' (critical) என்று அழைக்கப்படுகின்றன. 70-90% பயன்படுத்தும் பகுதிகள் 'அரை-முக்கியமானவை' (semi-critical) என்று அழைக்கப்படுகின்றன. 70% அல்லது அதற்கும் குறைவாகப் பயன்படுத்தும் பகுதிகள் 'பாதுகாப்பானவை' (safe) என்று அழைக்கப்படுகின்றன.


அமைச்சகம் ஏன் இந்த முடிவை எடுத்தது?


பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தனது ‘எதிர்பார்ப்புகளை’ வெளிப்படுத்தியதை அடுத்து, அமைச்சகம் இந்த முடிவை எடுத்ததாக ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MG-NREGA)) கீழ் நீருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் செலவிட வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தனது எதிர்பார்ப்பை தெரிவித்தார். எனவே, இன்று, ஊரக தேவைகளுக்கு அமைச்சகம் நீர் பாதுகாப்புக்கான புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது. நீர் தொடர்பான பணிகளுக்கான குறைந்தபட்ச செலவினம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று சவுஹான் வியாழக்கிழமை ஒரு நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.


2025-26 நிதியாண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 86,000 கோடி ஆகும். இந்த தொகையில் எவ்வளவு நீர் தொடர்பான பணிகளுக்கு கிடைக்கும் என்பது தெளிவாக இல்லை. இருப்பினும், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். படேல், புதிய விதிமுறைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் நீர் தொடர்பான பணிகளுக்கு ரூ.35,000 கோடி கிடைக்கும் என்று தெரிவித்தார்.


எந்த மாநிலங்கள் அதிகம் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது?


ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தின் (Central Ground Water Board (CGWB)) இந்திய சுழற்சி நிலையான நிலத்தடி நீர் வளங்கள் குறித்த தேசிய தொகுப்பு, 2024-ன் படி, நாட்டில் உள்ள மொத்த 6,746 தொகுதிகளில், 751 (11.13%) 'அதிகப்படியான சுரண்டல்' ஏற்பட்டுள்ளது என்றும், 206 தொகுதிகள் (3.05%) 'முக்கியமானவை' என்றும், 711 தொகுதிகள் (10.54%) 'அரை-முக்கியமானவை' என்றும், 4,951 தொகுதிகள் (73.39%) 'பாதுகாப்பானவை' என்றும் 2024ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டது. மீதமுள்ள 127 தொகுதிகள் உப்புத்தன்மை (salinity) கொண்டவை என மதிப்பிடப்பட்டன.


புதிய விதிமுறைகளின்படி, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'அதிகமாக சுரண்டப்பட்ட' பகுதிகளில் எவ்வளவு பணம் செலவிடப்படலாம் என்பதற்கான வரம்புகளை நிர்ணயிக்கின்றன. பெரும்பாலானவை ராஜஸ்தான் (214), பஞ்சாப் (115), தமிழ்நாடு (106), ஹரியானா (88) மற்றும் உத்தரபிரதேசம் (59) ஆகிய மாநிலங்களில் உள்ளன. இந்த மாநிலங்களிலும் பல 'முக்கியமான' தொகுதிகள் உள்ளன. இதன் காரணமாக, புதிய விதிகளின் கீழ் நீர் திட்டங்களுக்கு அவர்களுக்கு அதிக நிதி கிடைக்கும்.

                    

Original article:

Share:

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சோனம் வாங்சுக்: தேசிய பாதுகாப்புச் சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை. -தீப்திமான் திவாரி

 முன்பு பிரிவினைவாதிகள், குண்டர்கள் மற்றும் தீவிர போதகர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Security Act (NSA), பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது. 

லடாக்கிற்கு மாநில அங்கீகாரம் மற்றும் 6-வது அட்டவணையின் கீழ் (Sixth Schedule) பாதுகாப்புகளைக் கோரும் இயக்கத்தின் முன்னணியில் இருக்கும் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், கடந்த வெள்ளிக்கிழமை அன்று லேயில் உள்ள காவல்துறையினரால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். சோனம் வாங்சுக் ஜோத்பூரில் உள்ள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.


புதன்கிழமை லேயில் வெடித்த வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியதற்கு அவர் மீது ஒன்றிய அரசு முன்னதாக குற்றம் சாட்டியிருந்தது. அந்த வன்முறையில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நான்கு நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் காயமடைந்தனர்.

குற்றங்களைத் தடுக்க மக்களைத் தடுத்து வைக்க அனுமதிக்கும் இந்தியாவின் கடுமையான சட்டங்களில் ஒன்றின்மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவது பற்றிய கவனத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. முன்பு பிரிவினைவாதிகள், குண்டர்கள் மற்றும் தீவிர போதகர்களுக்கு (radical preachers) எதிராகப் பயன்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம், பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது. 


இந்தியாவில் தடுப்புக்காவல் சட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. காலனித்துவ காலம் முதல் போர்களின்போது எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, நாடாளுமன்றத்தால் 1950ஆம் ஆண்டின் தடுப்புக்காவல் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act (MISA)) இயற்றப்பட்டது. இது அவசரநிலையின்போது தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்காக பெயர் பெற்றது. MISA சட்டம் 1978ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.


1980ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Security Act), ‘இந்தியாவின் பாதுகாப்பு, வெளிநாட்டு அதிகாரங்களுடனான உறவுகள், பொது ஒழுங்கு அல்லது அத்தியாவசிய பொருட்கள் வழங்கலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு விரோதமான முறையில் செயல்படுவதைத் தடுக்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தனிநபர்களைத் கைது செய்ய அதிகாரம் அளிக்கிறது. அதிகாரம் வழங்கப்படும்போது மாவட்ட ஆட்சியர்கள் (District Magistrates) மற்றும் காவல்துறை ஆணையர்களும் (Police Commissioners) இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தலாம். குற்றவியல் சட்டத்தின்கீழ் கைது செய்வது போலல்லாமல், தேசிய பாதுகாப்புச் சட்டம் தடுப்புக்காவல் என்பது தண்டனைக்குரியது அல்ல. அது ஒரு தடுப்பு நடவடிக்கையாகும் - இது ஒரு தனிநபர் தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்பவரைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அரசாங்கத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்களை வழங்குவதும், சில நடைமுறைப் பாதுகாப்புகளை உருவாக்குவதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கமாகும்.


தேசிய பாதுகாப்புச் சட்டம் எதை உள்ளடக்குகிறது?


தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு கைது வாரண்ட் போல் செயல்படுத்தப்படலாம். ஒருமுறை தடுப்பு காவலில், ஒரு நபரை குறிப்பிட்ட இடங்களில் வைத்திருக்கலாம். மாநிலங்கள் முழுவதும் அந்த நபரை நகர்த்தலாம். மேலும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படுத்தலாம்.


தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதற்கான காரணத்தை ஐந்து நாட்களுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். அதிகபட்சம் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கட்டாயப்படுத்துகிறது. மேலும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவருக்கு அரசாங்கத்திற்கு மனுத் தெரிவிக்கும் உரிமை உண்டு என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனைக் குழு (Advisory Board) 3 வாரங்களுக்குள் வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது. போதுமான காரணம் இல்லை என்று அந்தக் குழு கண்டறிந்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரை விடுவிக்க வேண்டும். தடுப்புக் காவல் பொதுவாக 12 மாதங்களுக்குமேல் இருக்கக்கூடாது. இருப்பினும், தடுப்புக் காவல் முன்னதாகவே ரத்து செய்யப்படலாம்.


இருப்பினும், கடுமையான வரம்புகள் உள்ளன. ஆலோசனைக் குழுவின் முன் தடுத்து வைக்கப்பட்டவருக்கு சட்ட பிரதிநிதித்துவ உரிமை இல்லை. மேலும், அரசாங்கம் ‘மக்களின் நலனுக்காக’ (public interest) உண்மைகளை மறைக்கலாம். இந்த விதிகள் அதிகாரிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நிறைய சுதந்திரத்தை அளிக்கின்றன.


வாங்சுக்கின் விருப்பங்கள்


சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, வாங்சுக் அரசாங்கத்திற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை தாக்கல் செய்வதன் மூலம் தடுப்புக்காவல் உத்தரவை சவால் செய்யலாம் அல்லது மூன்று வாரங்களுக்குள் ஆலோசனைக் குழுவின் மறுஆய்வுக்காக காத்திருக்கலாம். ஆலோசனைக் குழு போதுமான காரணத்தைக் கண்டறியவில்லை என்றால், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.


இதற்கு மாற்றாக, அவர் தனது தடுப்புக்காவலின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தை (அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 226/32-ஐ) பயன்படுத்தி அணுகலாம். எந்தவொரு கட்டத்திலும் தடுப்புக்காவல் தேவையற்றது என்று அரசாங்கமே முடிவு செய்தால், அவர் தடுப்புக்காவலை  ரத்து கோரி மனுதாக்கல் செய்யலாம்.


இருப்பினும், இந்த தீர்வுகள் நடைமுறைக்கு வரும் வரை, தேசிய பாதுகாப்புச் சட்டம் அதிகாரிகளுக்கு முறையான குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யாமல் அல்லது திறந்த நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் அவரை தடுப்புக்காவலில் வைத்திருக்க அனுமதிக்கிறது.


தேசிய பாதுகாப்புச் சட்டம் முன்பு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?


இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்ட புதிய முக்கியமான வழக்கு வாங்சுக் ஆகும். சமீபத்திய ஆண்டுகளில், பல முக்கிய வழக்குகளில் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2023-ல், 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பின் தலைவரான தீவிர சீக்கிய போதகர் அம்ரித்பால் சிங் (Amritpal Singh), தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அசாமின் திப்ருகர் சிறைக்கு மாற்றப்பட்டார்.


2017ஆம் ஆண்டில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவணன் மீது உத்தரபிரதேசத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தை விசாரணைக்கு வந்த பிறகு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, செப்டம்பர் 2018-ல் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், 2020ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட (Citizenship Amendment Act (CAA)) எதிர்ப்பு போராட்டங்களின்போது, ​​உத்தரபிரதேசத்தில் பல போராட்டக்காரர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


குடிமை உரிமை குழுக்கள் மற்றும் நீதிமன்றங்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளன.


2020ஆம் ஆண்டில், குழந்தைகள் மருத்துவர் டாக்டர் கஃபீல் கான் ஒரு தூண்டுதல் பேச்சு என்று குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றம் தடுப்பு காவலுக்கான காரணங்களைக் கேள்வி எழுப்பி அவரை விடுவிக்க உத்தரவிட்டபிறகு அவரது வழக்கு பரவலான கவனத்தைப் பெற்றது.


மத்தியப் பிரதேசத்தில், ‘லவ் ஜிஹாத்’ வழக்குகளில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உத்தரப் பிரதேசத்தில், இது வகுப்புவாத வன்முறை சம்பவங்களின் போது இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


தேசிய பாதுகாப்புச் சட்டம் பசுவதை அல்லது பழக்கமான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவும் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ‘தேசிய பாதுகாப்பு’ (national security) அச்சுறுத்தல் என்ற வரையறையை நீட்டிக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


2012-ஆம் ஆண்டில், மண்ணெண்ணெய் கறுப்புச் சந்தை (black-marketing kerosene) வணிகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரின் தேசிய பாதுகாப்புச் சட்டக் காவலை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. காரணங்கள் நியாயமற்றவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஒன்றாக, இந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழும் ஒரு வடிவத்தை எடுத்துக்காட்டுகின்றன: அரசாங்கங்கள் இந்தச் சட்டத்தை பாதுகாப்புக்குத் தேவையான கருவி என்று பாதுகாக்கின்றன. அதே, வேளையில் விமர்சகர்கள் இந்த சட்டம் மிகவும் கடுமையானதாகவும் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் கருதுகின்றனர்.



Original article:

Share:

உயிர்க்கோளக் காப்பகம் என்றால் என்ன? உயிர்க்கோள காப்பகத்தின் 3 மண்டலங்கள் யாவை? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


- ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) 21 நாடுகளில் 26 புதிய உயிர்க்கோள இயற்கைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். உயிர்க்கோள இருப்புக்களின் உலகளாவிய வலையமைப்பு (World Network of Biosphere Reserves (WNBR)) இப்போது 142 நாடுகளில் 785 தளங்களை உள்ளடக்கியது. மேலும், 2018-ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ஒரு மில்லியன் சதுர கி.மீ இயற்கை பகுதிகள் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன - இது பொலிவியாவின் அளவிற்கு சமமானது என்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


- பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (Man and the Biosphere (MAB)) சர்வதேச ஒருங்கிணைப்பு கவுன்சிலின் 37-வது அமர்வின் போது, ​​இந்தியாவின் குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் யுனெஸ்கோவின் உயிர்க்கோள இருப்புக்களின் உலகளாவிய வலையமைப்பில் (WNBR) சேர்க்கப்பட்டது என்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் X-பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


- டிரான்ஸ்-இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம், ஸ்பிதி வனவிலங்குப் பிரிவு மற்றும் பாரலாச்சா கணவாய், பரத்பூர் மற்றும் சர்ச்சு உள்ளிட்ட லாஹௌல் வனப் பிரிவின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இது 3,300 முதல் 6,600 மீ உயரம் கொண்டது.


- இது பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, கிப்பர் வனவிலங்கு சரணாலயம், சந்திரதால் ஈரநிலம் மற்றும் சர்ச்சு சமவெளிகளை ஒருங்கிணைக்கிறது. காற்று வீசும் பீடபூமிகள், பனிப்பாறை பள்ளத்தாக்குகள், ஆல்பைன் ஏரிகள் மற்றும் உயரமான பாலைவன பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இது WNBR-ல் மிகவும் குளிரான மற்றும் வறண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.


- குளிர் பாலைவனம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது - கோர் (2,665 சதுர கிமீ), தாங்கல் (3,977 சதுர கிமீ) மற்றும் மாற்றம் (1,128 சதுர கிமீ) ஆகும்- இந்த அமைப்பு இயற்கையைப் பாதுகாக்கவும், வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவும், உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்தவும் உதவுகிறது. சூழலியல் ரீதியாக, இது 655 மூலிகைகள், 41 புதர்கள் மற்றும் 17 மர இனங்கள், சோவா ரிக்பா/அம்ச்சி அமைப்புக்கு முக்கியமான 14 உள்ளூர் மற்றும் 47 மருத்துவ தாவரங்கள் உட்பட பல வகைகள் இடம்பெற்றிருக்கும். வனவிலங்குகளில் 17 பாலூட்டிகள் மற்றும் 119 பறவை இனங்கள் அடங்கும். பனிச்சிறுத்தை முதன்மை இனமாக உள்ளது. ஸ்பிதி பள்ளத்தாக்கில் 800-க்கும் மேற்பட்ட நீல செம்மறி ஆடுகள் உயிர் வாழ்கின்றன. இவை பனிச்சிறுத்தைகளுக்கு போதுமான உணவை வழங்குகின்றன. விலங்கினங்களில் (fauna) இமயமலை ஐபெக்ஸ் மற்றும் இமயமலை ஓநாய் ஆகியவை அடங்கும்.


7,770 சதுர கிமீ பரப்பளவு லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் பரவியுள்ளது. வனவிலங்குகளில் முதன்மையான இனமாக பனிச்சிறுத்தை உள்ளது.


- அங்குள்ள சிறிய கிராமங்களில் 12,000 பேர் வசிக்கின்றனர். அவர்கள் யாக் மற்றும் ஆடுகளை மேய்த்தல், பார்லி, பட்டாணி விவசாயம் செய்தல் மற்றும் திபெத்திய மூலிகை மருத்துவத்தைப் பயன்படுத்துதல் போன்ற பாரம்பரிய நடவடிக்கைகளைப் பயிற்சி செய்கிறார்கள். அவர்களின் அறிவு மென்மையான மலை சூழலைப் பாதுகாக்க உதவும் புத்த துறவிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடமிருந்து வருகிறது என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.


- இது இந்தியாவின் முதல் உயரமான குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் ஆகும். சுற்றுலா மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மலைப் பகுதிகளைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது என்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) தெரிவித்துள்ளது.


- வளர்ச்சியை வரவேற்று, வனவிலங்கு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (Principal Chief Conservator of Forests (Wild Life)) மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைமை வனவிலங்கு பாதுகாவலர் அமிதாப் கவுதம், இந்த பதவி சர்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை அதிகரிக்கும், பொறுப்பான சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் மற்றும் இமயமலையில் காலநிலை மீள்தன்மை (resilience) முயற்சிகளை வலுப்படுத்தும் என்றார். 


உங்களுக்குத் தெரியுமா?


- மனிதன் மற்றும் உயிர்க்கோள (Man and the Biosphere (MAB)) திட்டம் என்பது பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் முதன்மை முயற்சியாகும். இது மக்களின் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


— மனிதன் மற்றும் உயிர்க்கோள திட்டம் என்பது மக்களுக்கும் அவர்களின் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான அறிவியல் அடித்தளத்தை உருவாக்க முயலும் அரசுகளுக்கிடையேயான அறிவியல் முயற்சியாகும்.


— மனிதன் மற்றும் உயிர்க்கோள திட்டம் 1975ஆம் ஆண்டில் உயிர்க்கோள இருப்புக்கள் என்ற கருத்தை உருவாக்கியது. இது சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் அதில் உள்ள மரபணு வளங்களைக் கையாள்கிறது. உயிர்க்கோள இருப்புக்களின் குறிப்பிடத்தக்க அம்சம் உள்ளூர் சமூகங்களை அதில் சேர்ப்பதாகும்.


- உயிர்க்கோள இருப்புக்களின் உலக வலையமைப்பு என்பது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் மனிதன் மற்றும் உயிர்க்கோளம் திட்டத்தால் பராமரிக்கப்படும் விதிவிலக்கான இடங்களின் ஆற்றல்மிக்க மற்றும் பங்கேற்பு வலையமைப்பாகும்.



Original article:

Share:

அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம், 2010 (CLNDA) மற்றும் அணுசக்தி சட்டம் 1962 பற்றி . . . -ரோஷ்னி யாதவ்

 

CLNDA :  Civil Liability for Nuclear Damage Act (CLNDA) - அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம்


Atomic Energy Act : அணுசக்தி சட்டம்


முக்கிய அம்சங்கள் :


வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்க அமெரிக்காவில் இந்திய வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் குழுவை வழிநடத்தும் கோயல் அவர்கள், சிறிய மட்டு உலை (small modular reactor (SMR)) கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் ஆர்வத்தை எடுத்துரைத்தார். இதில், இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறினார். மேலும், இந்தியாவில் "தீர்க்கப்பட வேண்டிய" (needed to be resolved) சில சட்டப் பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.


இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பொறுப்புரீதியில் கவலைகளை (liability concerns) நிவர்த்தி செய்வது இதில் அடங்கும். இருப்பினும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எளிதல்ல.


கோயல் நியூயார்க்கில் பேசியது போல், இந்தியாவில் சட்டமன்றப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் அணுசக்தித் துறையை நிர்வகிக்கும் இரண்டு முக்கிய சட்டங்களுக்கு பல திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை உலகளாவிய சட்டத் தரங்களுடன் இணைப்பதே இதன் முக்கியக் குறிக்கோளாகும்.


இது, முதலீட்டாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் (Indo-US nuclear deal) கையெழுத்திடப்பட்டு ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் சிவில் அணுசக்தித் துறையை (civil nuclear sector) படிப்படியாக திறப்பதற்கும் இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


முதல் திருத்தம் இந்தியாவின் அணுசக்தி பொறுப்புச் சட்டமான அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம், 2010 (CLNDA)-ல் உள்ள விதிகளை தளர்த்துவதில் கவனம் செலுத்துகிறது. இது அணு விபத்தால் ஏற்படும் நாடுகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு செயல்முறையை உருவாக்க முயன்றது. மேலும், இதற்கான பொறுப்புகளை ஒதுக்கீடு செய்தல் மற்றும் இழப்பீட்டுக்கான நடைமுறைகளைக் குறிப்பிடுகிறது. இந்தச் சட்டம், செயல்படுத்துபவரின் உதவிக்கான உரிமை (right of recourse of the operator) என்ற விதியின் மூலம் விநியோகர்களுக்கு செயல்படுத்துபவரின் பொறுப்பை வழிப்படுத்துகிறது என்ற அடிப்படையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் (US-based Westinghouse Electric) மற்றும் பிரெஞ்சு அணுசக்தி நிறுவனமான ஃப்ராமடோம் (French nuclear company Framatome) போன்ற வெளிநாட்டு கருவிகள் விற்பனையாளர்களால் இது ஒரு தடையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டத்திற்காக (CLNDA) சுமார் 11 சட்ட திருத்தங்களின் தொகுப்பு இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு முக்கியமானவை. ஒன்று, CLNDA-ன் பிரிவு 17 (b) ஒரு குறிப்பிட்ட விதியை நீர்த்துப்போகச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு திருத்தமாகும். இது உலகம் முழுவதும் இயற்றப்பட்ட அணுசக்தி பொறுப்புச் சட்டங்களுடன் முரண்படுவதாகக் காணப்படுகிறது.


இரண்டாவது பெரிய திருத்தம் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் அணுமின் நிலையங்களை (nuclear power plant) இயக்க அனுமதிக்கும் நோக்கம் கொண்டது. மேலும், வரவிருக்கும் அணு மின் திட்டங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் சிறுபான்மை பங்குகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் அமைக்கலாம். 


இதுவரை, அணுசக்தி இந்தியாவின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட துறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு, அதன் வணிகத் திறனை மேம்படுத்த உதவும் ஒரு சீர்திருத்த உந்துதலாக சட்டத் திருத்தங்களின் தொகுப்பு பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் DC உடனான ஒரு பரந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக இதைத் தொகுக்க இந்தியா ஆர்வமாக உள்ளது. இது இறுதியில் தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் வர்த்தக உடன்படிக்கையுடன் முடிவடையும்.


இரண்டாவது முக்கிய சட்டமான அணுசக்தி சட்டம் 1962-ல் திருத்தங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன, இதன் மூலம் தனியார் நிறுவனங்கள், ஒருவேளை வெளிநாட்டு நிறுவனங்கள்கூட அணுசக்தி உற்பத்தியில் ஆபரேட்டர்களாக நுழைய முடியும். இது தற்போது, இந்திய அணுசக்திக் கழகம் (Nuclear Power Corporation of India(NPCIL)) அல்லது NTPC Ltd போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. 


அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டத்தில் (CLNDA) உள்ள திருத்தங்கள், உலகளாவிய பொறுப்பு ஆட்சியை நிறுவ முயன்ற அணுசக்தி சேதத்திற்கான துணை இழப்பீடு (Compensation for Nuclear Damage (CSC)) 1997 உடன்படிக்கையின் விதிகளுக்கு ஏற்ப இந்தியாவின் அணுசக்தி பொறுப்பு சட்ட கட்டமைப்பை திறம்பட கொண்டு வரும். 


CSC-ன் கீழ், 1963 வியன்னா மாநாடு அல்லது 1960 பாரிஸ் மாநாட்டில் ஒரு உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு தானாகவே CSC-ல் ஒரு உறுப்பினராக மாறலாம். அதே சமயம், இந்த இரண்டு மாநாடுகளிலும் ஒரு உறுப்பினராக இல்லாத ஒரு நாடு அணுசக்தி பொறுப்பு தொடர்பான அதன் தேசிய சட்டம் CSC மற்றும் அதன் பிற்சேர்க்கையின் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்றால் CSC-ன் ஒரு உறுப்பினராக மாறும்.


இந்தியா, வியன்னா அல்லது பாரிஸ் மாநாடுகளில் ஒரு உறுப்பினராக இல்லாமல், அதன் தேசிய சட்டமான CLND சட்டத்தின் அடிப்படையில் அக்டோபர் 29, 2010 அன்று CSC-ல் கையெழுத்திட்டது மற்றும் பிப்ரவரி 4, 2016 அன்று ஒப்புதல் அளித்தது. அதன் மூலம், CSC-க்கு 'நாட்டின் உறுப்பினர்' (State Party) என்ற தரநிலையானது. CLND சட்டத்தில் இப்போது முன்மொழியப்பட்ட மாற்றங்கள் CSC விதிகளுடன் மேலும் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.


உங்களுக்குத் தெரியுமா?:


சிறிய மட்டு உலைகள் (SMR) ஒரு யூனிட்டுக்கு 30-300 MWe மின் உற்பத்தியை வழங்கும் சிறிய உலைகளாகும். அவை அடிப்படை சுமை மின்சாரத்தை (base load power) உற்பத்தி செய்வதற்கு மட்டுமல்லாமல், பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களால் வழங்கப்படும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளுடன் ஒப்பிடும்போது அதிக கார்பன்-நடுநிலை விருப்பமாகவும் பயனுள்ளதாக இருக்கும்.


சிறிய மட்டு உலைகள், அவற்றின் அமைப்புகளும் கூறுகளும் கட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சாலை சூழலில் தயாரிக்கப்பட்டு, பின்னர் நேரடியாக நிறுவப்படும் திட்டத் தளத்திற்குக் கொண்டு செல்லப்படும் வகையில் கருத்தாக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறை கட்டுமான நேரத்தை மேம்படுத்துகிறது மற்றும் திட்ட செலவுகளைக் குறைக்கிறது. இது பாரம்பரிய பெரிய உலைகளுக்கு முக்கிய பிரச்சினைகளாகும்.


அவை அவசர திட்டமிடல் மண்டலத்தின் குறைக்கப்பட்ட அளவு (தளத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பகுதிகள்) மற்றும் செயலற்ற பாதுகாப்பு அமைப்பு போன்ற சாத்தியமான வரிசைப்படுத்தல் நன்மைகளைக் கொண்டுள்ளன. அவை, பெரிய அணு உலை அடிப்படையிலான திட்டங்களைவிட ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவை.



Original article:

Share:

ஏன் நகர்ப்புற வளர்ச்சியானது, உள்ளடக்கியதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும்? -ரித்விகா பத்கிரி

 தாராளமயமாக்கலுக்குப் பிறகு, பொருளாதார சீர்திருத்தங்கள் பெரும்பாலும் முறையான துறையில் மேற்கொள்ளப்பட்டன. நகர்ப்புற மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்திய, முறைசாரா துறை ஓரங்கட்டப்பட்டது. நகரங்கள் சீரற்ற முறையில் விரிவடைந்ததால், முறைசாரா தொழிலாளர்களின்  அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், அடிக்கடி இடம்பெயர்வு மற்றும் அதிக பாதிப்பு எதிர்கொள்கின்றன. இந்த நிலைமை 'வறுமை முரண்பாடு' (poverty paradox) என்று அழைக்கப்படுகிறது. 


ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், இந்திய நகரங்கள் வெள்ளத்தால் தத்தளிக்கும் செய்திகள் வழக்கமாகி வருகின்றன. இத்தகைய அறிக்கைகள் நகர்ப்புற உள்கட்டமைப்பு, குறிப்பாக அவற்றின் வடிகால் அமைப்புகளை மோசமாக பிரதிபலிக்கின்றன. சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற நகர்ப்புற உள்கட்டமைப்பின் மற்ற அம்சங்களைப் பற்றியும் கவலைகள் உள்ளன. 


இந்தியாவின் நகர்ப்புற மக்களில் ஏறக்குறைய பாதிப் பேர் குடிசைப்பகுதிகளில் வாழ்கிறார்கள் (lives in slums) என்று தரவு வெளிப்படுத்துகிறது. அவை, பெரும்பாலும் பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதிகள் அல்லது நீடித்த வீட்டுவசதி கிடைக்காதவை ஆகும். எனவே, நகர்ப்புற வறுமை (Urban poverty) என்பது வருமானத்தை இழப்பது மட்டுமல்ல, பாதுகாப்பான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை சேவைகளை இழப்பதும் ஆகும்.


இந்தியாவில் நகர்ப்புற வறுமை மற்றும் சமத்துவமின்மை


இந்தியாவில் நகர்ப்புற வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகிய இரண்டும் குறைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த எண்ணிக்கைக்கான தரவுகளை ஒரு தெளிவாக ஆராய வேண்டும். உதாரணமாக, 1955 மற்றும் 1975-க்கு இடையில், கினி குணகத்தால் அளவிடப்பட்ட நகர்ப்புற சமத்துவமின்மை 0.392-லிருந்து 0.416-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில், கிராமப்புற வருமான கினி 0.341-லிருந்து 0.388 ஆக உயர்ந்தது.


1995 காலகட்டத்தில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வருமான சமத்துவமின்மை குறைந்தது. கிராமப்புற கினி 0.376 ஆகவும், நகர்ப்புற கினி 0.390 ஆகவும் கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் குறைந்த சரிவாக உள்ளது. 1990களின் முற்பகுதியில் தாராளமயமாக்கலுக்குப் பிறகு, நகர்ப்புற கினி குணகம் 2005-ல் 0.455 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், கிராமப்புறங்களில் சமத்துவமின்மையின் இதேபோன்ற உயர்வைக் குறிக்கிறது. 2023-ம் ஆண்டில், கிராமப்புற கினி குணகம் 0.405 ஆகவும், நகர்ப்புற கினி குணகம் 2020-ல் 0.532 ஆகவும் உயர்ந்த பின்னர் 0.382 ஆகக் கடுமையாகக் குறைந்தது.


இரண்டு முக்கியமான நிலைமைகளை இங்கே கவனிக்க வேண்டும். முதலாவதாக, 1990களின் தொடக்கத்தில் இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு நகர்ப்புற சமத்துவமின்மை கடுமையாக உயர்ந்தது. மேலும், பொருளாதார சீர்திருத்தங்கள் வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வளர்ச்சியை தூண்டியது. மேலும், வறுமையைக் குறைக்க 1993-94ல் 36 சதவீதத்தில் இருந்து 1999-2000ல் 26.1 சதவீதமாக குறைந்துள்ளது. 


இருப்பினும், இந்த சீர்திருத்தங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தின் முறையான துறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. நகர்ப்புற மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்திய நகர்ப்புற முறைசாரா துறை, இந்த சீர்திருத்தங்களால் பயனடைய முடியவில்லை. சீரற்ற நகர்ப்புற வளர்ச்சி தொடர்ந்து நீடித்ததால், முறைசாரா தொழிலாளர்கள் இடப்பெயர்ச்சி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டனர்.


இரண்டாவதாக, 2005 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நகரமயமாக்கலில் மிகப்பெரிய வளர்ச்சியானது, கிராமப்புற-நகர்ப்புற இடம்பெயர்வு அதிகரிப்பு மற்றும் குடிசைப்பகுதிகள் (slums) மற்றும் குடிசைவாசிகளின் (slum dwellers) எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை காணப்பட்டன. கட்டுமானத் துறை செழித்து, பெரும்பாலான வேளாண் அல்லாத வேலைகளை உருவாக்கியது. இருப்பினும், அத்தகைய வேலைகள் நிலையற்றவை, குறைந்த ஊதியம் மற்றும் நிச்சயமற்றவையாகும்.


இதனால், தனியார் முதலீடு, வங்கி, டிஜிட்டல் மயமாக்கல் போன்றவற்றின் மூலம் சமூகத்தின் சில பிரிவினருக்கு சிறந்த வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. தெருவோர வியாபாரிகள் போன்ற முறைசாரா தொழிலாளர்களும் இடப்பெயர்ச்சிக்கு ஆளாக நேரிடும்.


நகரங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி கிடைக்காது. இதனால் இவர்களை வறுமைக்கு ஆளாக்குகிறது. உதாரணமாக, பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் முறைசாரா துறையில் வேலை தேடுகிறார்கள். அவர்கள் முறைசாரா குடியிருப்புகளிலும் வசிக்கிறார்கள்.


நேஹா தீட்சித்தின் ”தி மெனி லைவ்ஸ் ஆஃப் சையதா எக்ஸ்” (The Many Lives of Syeda X) என்ற புத்தமானது, முறைசாரா புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதிப்புகளைக் காட்டுகிறது. இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் ஆபத்தான பல ஒற்றைப்படை வேலைகளுக்குள் (many odd jobs) தள்ளப்படுகிறார்கள். இத்தகைய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏழைகளாகவோ அல்லது விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 


இதை 'வறுமை முரண்பாடு' (poverty paradox) என்ற கருத்தைப் பயன்படுத்தி இதை விளக்கலாம். வறுமை முரண்பாடு என்பது நாடுகள் பொருளாதார வளர்ச்சியை அனுபவிக்கும் சூழ்நிலையை விவரிக்கிறது, ஆனால் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியா மற்றும் சீனா போன்ற நடுத்தர வருமான நாடுகளில் இது பொதுவானது. இந்த நாடுகளில், தனிநபர் வருமானம் அதிகரிப்பது ஏழை மக்களுக்கு வறுமையை தானாகவே நீக்குவதில்லை.


நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொலிவுறு நகரங்கள்


எனவே, நகர்ப்புற வளர்ச்சி என்பது உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும். 2019 மற்றும் 2023-க்கு இடையில் நாடு முழுவதும் 100 பொலிவுறு நகரங்களை உருவாக்கும் இலக்குடன் பொலிவுறு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission) 2015-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மார்ச் 2025-ல் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது. 


பொலிவுறு நகரம் என்பது (smart city) நகர்ப்புறம் அல்லது அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தரவு சார்ந்த தீர்வுகள் மற்றும் திறமையான வள மேலாண்மை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இது "புத்திசாலி நகரம்" (intelligent city), "மின்னணு நகரம்" (digital city) அல்லது "அறிவு நகரம்" (knowledge city) என்றும் குறிப்பிடப்படுகிறது.


பொலிவுறு நகரங்கள் நிலையானதாகக் கருதப்படுகின்றன மற்றும் நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்கின்றன. அவை, வணிக வாய்ப்புகளை வழங்குகின்றன மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கின்றன.


ஒரு பொலிவுறு நகரம் (smart city) டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் சமூக நீதியை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐக்கிய நாடுகளின் சபையின், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நுழைவாயிலாக பொலிவுறு நகரங்கள் காணப்படுகின்றன. அவை,


  • நீடித்த மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்.


  • நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புகளை உள்ளடக்கிய, பாதுகாப்பான, மீள்தன்மை மற்றும் நிலையானதாக மாற்றுதல்.


  • நிலையான வளர்ச்சிக்காக அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களை ஊக்குவித்தல். 


பொலிவுறு நகர திட்டம் (Smart Cities Mission) தற்போதுள்ள நகரங்களை புதுப்பித்து, வீடு, சுத்தமான தண்ணீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகளை வழங்க முயல்கிறது.  


பொலிவுறு நகரங்களின் யோசனை உள்ளடக்கியதாக இருந்தாலும், நகர்புற நெடுஞ்சாலைகள் அல்லது மேம்பாலங்கள் போன்ற கனரக உள்கட்டமைப்பை உருவாக்குவது எப்போதும் வறுமையைக் குறைக்காது. எடுத்துக்காட்டாக, சீனாவில் உள்ள இரண்டு மாகாணங்களை ஒப்பிட்டுப் பார்த்த ஒரு ஆய்வில், ஏழை மற்றும் தொலைதூர மக்களுக்கான அணுகக்கூடிய சாலைகளை உருவாக்கிய மாகாணம் அதிக வறுமைக் குறைப்பை அடைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட சாலை வலையமைப்புகள் மற்றும் பேருந்து வழித்தடங்கள் ஏழை மக்கள் நகர்ப்புறங்களுடன் சிறப்பாக இணைவதற்கு உதவியது. அவர்கள் வேலைகளை ஆராய்வதற்கும், இடம்பெயர்வதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும் உதவியது. 


மறுபுறம், நெடுஞ்சாலைகள் மற்றும் தனிவழிச்சாலைகளை அமைப்பதில் அதிக முதலீடு செய்த மாகாணம் வறுமையைக் குறைப்பதில் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்த மாகாணம் பெரிய ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுலாவில் கவனம் செலுத்தியது. ஆனால், சமூகம் சார்ந்த சுற்றுலாவை புறக்கணித்தது. நகர்ப்புற நெடுஞ்சாலைகள் மற்றும் தனிவழிப்பாதைகள் மாகாணத்தின் தலைநகரை மற்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் அதே வேளையில், அவை மக்கள் தொகையில் ஏழைப் பிரிவினரை ஒதுக்கிவிட்டன. மாகாணம் பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. ஆனால் வறுமை ஒழிப்பு இல்லாமல் இருந்தது.


நிலையான நகர்ப்புற வளர்ச்சியை நோக்கி 


இந்தியா தனது பொலிவுறு நகர திட்டத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால், இந்தத் திட்டம் விரும்பிய பலனைத் தரவில்லை. அதாவது, 100 நகரங்களில் 18 நகரங்கள் மட்டுமே அனைத்து திட்டங்களையும் முடித்துள்ளன. இருப்பினும், அனைத்து 100 நகரங்களிலும், தரவுகளின்படி, முழுமையாக செயல்படும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. அவை நிகழ்நேர பொலிவுறு முடிவுகளை எடுப்பதில் நகர அதிகாரிகளுக்கு உதவுகின்றன. பொது இடங்களைக் கண்காணிக்கவும் குற்றங்களைக் குறைக்கவும் இந்த நகரங்களில் 84,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. நீர்க் குழாய்கள் நீர் கசிவைக் குறைப்பதற்காக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து, சிறந்த வகுப்பறைகள் மற்றும் மின்-சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் (e-health centres and clinics) ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன. 


இந்திய அரசாங்கம் நகர்ப்புற மக்களை இலக்காகக் கொண்டு பல கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், அடல் மறுசீரமைப்பு மற்றும் நகர்ப்புற உருமாற்றத்திற்கான பணி (Atal Mission for Rejuvenation and Urban Transformation(AMRUT)), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்புறம் (Pradhan Mantri Awas Yojana – Urban (PMAY-U)), மற்றும் தேசிய நகர்ப்புற கற்றல் தளம் (National Urban Learning Platform) ஆகியவை அடங்கும். இந்த முயற்சிகள் வீட்டுவசதி, நீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் முறையான வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்தக் கொள்கைகளின் உண்மையான தாக்கம் மற்றும் பொலிவுறு நகர திட்டம் (Smart Cities Mission) உடனான அவற்றின் ஒருங்கிணைப்பு தெளிவாக இல்லை. 


டிஜிட்டல் மயமாக்கல், தகவல் தொழில்நுட்பம், தனியார் முதலீடு, வங்கி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் தனிவழிகள் ஆகியவை பெரும்பாலும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டின் முக்கிய திட்டமாக அறியப்படுகிறது. இருப்பினும், சமூகத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பைப் புரிந்துகொள்வது கொள்கை வகுப்பாளர்களுக்கும் முக்கியமானது. ஏழைகளுக்கு சிறந்த வேலைகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அணுகக்கூடிய சாலைகள், மலிவு விலை சுகாதாரம் மற்றும் கல்வி, மற்றும் உள்ளடக்கிய போக்குவரத்து ஆகியவை நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு சமமாக அவசியம். கூடுதலாக, இந்த திட்டங்களில் நகரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நகர்ப்புறங்கள் பற்றிய துல்லியமான தரவு மற்றும் ஆய்வுகள் முக்கியமானதாக இருக்கும்.



Original article:

Share:

ஐநா பொதுச் சபை வாரத்தில், இந்தியா உலகளாவிய தெற்கு நாடுகளுடன் மறு ஒருங்கிணைப்பை குறிப்பால் உணர்த்துகிறது. -சுஹாசினி ஹைதர்

 அமெரிக்காவுடனான பிரச்சனைகள், இஸ்ரேலை விமர்சிப்பதில் மாற்றம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ஐ.நா பொதுச் சபை (UN General Assembly (UNGA)) கூட்டங்கள் போன்றவை வளரும் நாடுகளில் இந்தியாவின் கவனத்தைக் காட்டுகின்றன.


ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது உயர்மட்ட கூட்ட வாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பரபரப்பான அறிக்கைகளின் போது, ​​உலகளாவிய தெற்குடனான தனது ஈடுபாட்டை இந்தியா மிகவும் தெளிவாகத் தெரிவித்தது. அதில், காசா மீதான இஸ்ரேலின் போர், அமெரிக்கா தலைமையிலான கடுமையான வர்த்தக நிலை மற்றும் ஐ.நா. சீர்திருத்தம் இல்லாதது குறித்து அறிக்கைகளில் கடுமையான விமர்சனங்களை எடுத்துரைத்தார்.


வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனான, சந்திப்பு சுமார் 30 முறை நேரடியான இருதரப்பு சந்திப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை வளரும் நாடுகளுடன் இருந்தன. அதே சமயம், இந்தியா நடத்திய அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய அனைத்து பலதரப்பு சந்திப்புகளும் உலகளாவிய தெற்கின் பிரச்சினைகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் அல்லாத குழுக்களை மையமாகக் கொண்டிருந்தன.


BRICS :  Brazil, Russia, India, China, South Africa, Egypt, Ethiopia, Iran, UAE and Indonesia.


IBSA :  India-Brazil-South Africa (IBSA)


India-CELAC : Community of Latin American and Caribbean States


India-SICA : India and Central American Integration System (India-SICA)


FIPIC : Forum for India–Pacific Islands Cooperation (FIPIC)


பலதரப்பு கூட்டங்களில், BRICS, IBSA (இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா), இந்தியா-CELAC (தென் அமெரிக்க நாடுகள்), இந்தியா-SICA (மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பு) மற்றும் FIPIC (பசிபிக் தீவு நாடுகளுடன்) பல நாடுகள் அடங்கும். அவற்றில் L-69 (உலகளாவிய தெற்கிலிருந்து வளரும் நாடுகள்), C-10 (ஆப்பிரிக்க ஒன்றிய பிரதிநிதிகள்) மற்றும் "உலகளாவிய தெற்கின் உயர் மட்ட ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள்" (High-Level Like-Minded countries of the Global South) ஆகியவையும் அடங்கும்.





மருந்து வரிவிதிப்புகள்


உலகளாவிய தெற்கில் இந்தியாவின் கவனமானது, இந்த வாரம் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர். அதாவது வாரத்தின் தொடக்கத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார். ஆனால், அமெரிக்காவின் அறிக்கை மற்றும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த குறைவும் இல்லை என்பது தெளிவாகிறது. இந்தச் சந்திப்புக்கு ஒரு நாள் கழித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனில் சீனாவுடன் இணைந்து இந்தியாவை "போரின் முதன்மையாக நிதியளிப்பவர்கள்" (primary funders of the war) என்று அழைத்தார். மேலும், அவர் இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக மீண்டும் கூறினார். இந்தியப் பொருட்களுக்கு 50% வரிவிதிப்பு, மற்றும் விசா மற்றும் குடியேற்ற வாசிகள் குறைப்புக்கள் இந்திய தொழில் வல்லுநர்களைப் பாதிக்கும். கூடுதலாக, அமெரிக்க நிர்வாகம் மருந்துத் தொழில்கள் மீதான புதிய வரிவிதிப்புகளையும் இந்த வாரம் குறைத்தது. வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லுட்னிக், அமெரிக்கா தனது சந்தைகளைத் திறப்பதை உறுதிசெய்யவும், அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தக நடவடிக்கைகளைக் குறைக்கவும் "இந்தியாவை சரிசெய்யும்" என்று கூறினார். இது, இந்திய மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் இன்னும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தப் (FTA) பேச்சுவார்த்தைகளில் கடினமான பாதையை எதிர்கொண்டுள்ளனர்.


இதற்கிடையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் மற்றும் அவரது ஜப்பானிய பிரதிநிதியை மற்ற குழு கூட்டங்களின் நிகழ்வில் சந்தித்தார். இருப்பினும், குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டம் எதுவும் இல்லை. இந்த ஆண்டு இந்தியா நடத்தவிருக்கும் குவாட் உச்சிமாநாட்டிற்கான தேதியை இன்னும் ஒப்புக் கொள்ள முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. தெற்காசிய அண்டை நாடுகளுடனான வலுவான ஈடுபாட்டுடன் வாஷிங்டன் இந்தியாவிலும் அமைதியின்மையை உருவாக்கியது. வங்காளதேசம், இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களை நியூயார்க்கில் அமெரிக்கத் தூதுவராக நியமித்துள்ள செர்ஜியோ கோர் சந்தித்தபோதும், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோருடன் அதிபர் டிரம்ப் 80 நிமிட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதற்கு நேர்மாறாக, பொது விவாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்ட நிலையில், அமைச்சர் ஜெய்சங்கர் அந்த வாரத்தில் இலங்கை மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சரை மட்டுமே சந்தித்தார்.


காசாவின் நிலைமை


ஐ.நா பொதுச் சபை (UNGA) வாரத்தில், ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காசா மீதான இஸ்ரேல் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டால் சுட்டிக்காட்டப்பட்டது. இதுவரை மற்ற உலகளாவிய தெற்கு நாடுகளில் இருந்து வெளியேறி, போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களில் இருந்து விலகிய இந்தியா, அதற்கு பதிலாக UNGA-வின் போது இஸ்ரேலை கடுமையாக விமர்சிக்கும் பல அறிக்கைகளை ஆதரிப்பதைக் காண முடிந்தது. BRICS வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (IBSA) முத்தரப்பு ஆணையத்தின் அறிக்கைகள் இதில் அடங்கும். இதில் “அமைச்சர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தின் நிலைமை குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்தினர் மற்றும் காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்தன. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாடுகளின் குடிமக்களுக்கு முன்னோடியில்லாத வகையில் கவலையை ஏற்படுத்தியது. இந்த நிலைப்பாடுகள் இந்தியா ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்ட முந்தைய நிலைப்பாடுகளைவிட மிகவும் கடினமானவை. இந்தப் பிரச்சினையில் உலகளாவிய தெற்கின் நிலைப்பாட்டிற்கு இந்தியா நெருக்கமாகச் செல்வதை அவை காட்டுகின்றன. இருப்பினும், இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் ஐ.நா. உரையின்போது எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்த 80 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் இந்தியா சேரவில்லை.


பொது விவாதத்தில் இந்தியாவின் அறிக்கையின்போது "குறிப்பாக கடுமையான" "உலகளாவிய தெற்கின் இக்கட்டான நிலையை" கையாள்வதில் இந்தியாவின் அர்ப்பணிப்பைக் குறிப்பிட்டு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் எதிர்கொண்ட பல சிக்கல்களைப் பட்டியலிட்டார். உக்ரைன் மற்றும் காஸாவில் உள்ள மோதல்கள், ஆற்றல் மற்றும் உணவுப் பாதுகாப்பு, "சந்தை அல்லாத வர்த்தக நடைமுறைகள்", சந்தை அணுகல் மற்றும் விலை நிச்சயமற்ற நிலை ஆகியவை இதில் அடங்கும்.


"வளங்கள் நெருக்கடியில் இருந்த நாடுகள் உயிர்வாழப் போராடின. பின்னர், அவர்கள் தார்மீக ரீதியில் உரைகளை மட்டுமே கேட்டனர்," என்று அவர் கூறினார். உலகளாவிய தெற்கிற்கு போதுமானதைச் செய்யாததற்காக உலகளாவிய வல்லரசுகள் மீதான கடுமையான விமர்சனம் இது.


இந்தியாவின் நிரந்தரத் தூதுக்குழு (India’s Permanent Mission (PMI)), அதன் வலைத்தளத்தில் 48 அம்ச “முன்னுரிமைக் கட்டுரையை” வெளியிட்டது. அதில், முந்தைய அமர்வில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்தில் முன்னேற்றம் இல்லாதது குறித்து PMI ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. உலகளாவிய தெற்கின் முன்னணி குரலாக இந்தியாவின் பங்கையும் இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டியது. காலநிலை நிதி, மேம்பாட்டு நிதி மற்றும் பிற முக்கிய பகுதிகளின் முக்கியத்துவத்தை அது வலியுறுத்தியது. நிலத்தால் சூழப்பட்ட வளரும் நாடுகள் (Landlocked Developing Countries (LLDCs)), குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் (Least Developed Countries (LDCs)) மற்றும் சிறிய தீவு வளரும் நாடுகள் (Small Island Developing States (SIDs)) ஆகியவற்றுடன் வலுவான ஒருங்கிணைப்புக்கும் இது அழைப்பு விடுத்தது.



Original article:

Share: