தூய எரிசக்தி மாற்றத்திற்கான செலவுகளை அளவிடுதல். -ராகேஷ் மோகன் மற்றும் ஜனக் ராஜ்

 பசுமை உற்பத்தி மற்றும் மின்கலம் (Battery) விலையில் ஏற்பட்ட பெரும் சரிவு காரணமாக, ஜி20-ல் உள்ள வளரும் நாடுகள் அதிக மூலதனத்தை நம்பி இருக்க வேண்டியதில்லை.


காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெரும்பாலும், ஆற்றல் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதிலிருந்து மாறுவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றன. இதன் விளைவாக, பெரும்பாலான காலநிலை நிதி மதிப்பீடுகள் (climate-finance assessments) இத்தகைய மாற்றத்திற்கான செலவுகளை ஆய்வு செய்து, தூய்மையான மின் உற்பத்தி மூலங்களைப் பயன்படுத்த பெரிய முதலீடுகள் தேவை என்று தீர்மானித்துள்ளன.


ஆனால், ஒரு புதிய ஆய்வுக் கட்டுரையில், G20 அமைப்பில் உள்ள வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரங்களுக்கு (EMEs - emerging-market economies) எரிசக்தித் துறையைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது ஒப்பீட்டளவில் கட்டுபடியாகக்கூடியது என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த ஒன்பது வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில் (அர்ஜென்டினா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் துருக்கி) உள்ள மின்சாரம், சாலைப் போக்குவரத்து, சிமென்ட் மற்றும் எஃகு (steel) துறைகளில் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க 2022 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான காலநிலை நிதித் தேவைகள் ஒரு ஆய்வின் மூலம் அளவிடப்படுகிறது. இந்த நான்கு துறைகளும் ஒட்டுமொத்த உமிழ்வுகளில் சுமார் பாதி அளவையே கொண்டுள்ளன.


தொடக்கத்தில், தூய்மையான எரிசக்தி மாற்றம் நிலையான வேகத்தில் முன்னேறி வந்தது. இந்த ஒன்பது வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களிலும்  (EMEs - emerging-market economies) கார்பன்-டை-ஆக்ஸைட் உமிழ்வில் மின் உற்பத்தித் துறை சுமார் 27 சதவீதம் ஆகும். இந்த நாடுகள் உலகளாவிய மின் உற்பத்தித் துறை உமிழ்வில் ஒட்டுமொத்தமாக 44 சதவீதத்தைக் கொண்டுள்ளன. அதிகரித்து வரும் எரிசக்தி தேவை மற்றும் காலநிலை இலக்குகளைப் பூர்த்தி செய்ய, இந்த நாடுகள் மின் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்துவதிலும், அவற்றைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலங்கள் மூலம் மாற்றுவதிலும் கவனம் செலுத்தியுள்ளன.


2023 மற்றும் 2030-ஆம் ஆண்டுக்கு இடையில், அவற்றின் மொத்த நிறுவப்பட்ட திறனில் தூய்மையான எரிசக்தியின் பங்கு 54 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அவற்றின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இரு மடங்காக, அதாவது,  2,150 ஜிகாவாட்டிலிருந்து (gigawatts) 4,220 ஜிகாவாட்டாக (gigawatts) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தக் காலகட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அங்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு முறையே 45 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாகவும் 25 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாகவும் உயரும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதன் பங்கு 55 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் (இந்தோனேசியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தவிர) ஏழு நாடுகளில், 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த நிறுவப்பட்ட மின் திறனில் பாதிக்கும் மேலானவை புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து பெறப்படும் என்கின்றனர். 


சமீபத்திய ஆண்டுகளில் விரைவான தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் பசுமை உற்பத்தியில் சீனாவின் பெரிய அளவிலான முயற்சி ஆகியவை சூரிய மற்றும் காற்றாலைப் பண்ணைகளை நிறுவுவதற்கான செலவைக் கணிசமாகக் குறைத்ததால் இது சாத்தியமானது. உலக அளவில், 2010 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் நிறுவப்பட்ட சூரிய PV (Photovoltaic) மற்றும் நிலப்பரப்பு காற்றாலைகளின் செலவு முறையே 83 சதவீதம் மற்றும் 42 சதவீதம் குறைந்துள்ளது.


கூடுதலாக, புதுமை மற்றும் குறைந்த மூலப்பொருட்களின் விலையால் உந்தப்பட்டு, மின்கலங்களின் (Battery) விலையும் குறைந்துள்ளது. 2010 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கு இடையில் சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். நீரேற்று சேமிப்பு நீர்மின் திட்டங்களும் இப்போது மிகவும் மலிவாக உள்ளன என்றும் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில், இதற்குச்  சாதகமான நிலப்பரப்பு நிலைமைகள், குறைந்த உழைப்பு மற்றும் பொருள் செலவுகள், மற்றும் ஒப்பீட்டளவில் சீராக்கப்பட்ட ஒழுங்குமுறை மற்றும் அனுமதி செயல்முறைகள் ஆகியவை காரணமாகக் கருதப்படுகிறது. 


புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைந்து வருவதால், G20-ன் வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு மின் உற்பத்திக்கு 2024 மற்றும் 2030-ஆம் ஆண்டுக்கு இடையில் காலநிலை நிதியாக $121 பில்லியன் மட்டுமே தேவைப்படும் என்கின்றனர். இது வழக்கமான வணிகச் சூழ்நிலையில் தேவையான முதலீட்டிற்கு அதிகமானது என்றும் கூறுகின்றனர். குறிப்பிட்ட மதிப்பீடுகளின்படி, புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் நிலையங்களுக்கான மூலதனச் செலவு இந்தக் காலகட்டத்தில் $156 பில்லியன் குறையும் என்றும் அதே சமயம் தூய்மையான மின்சாரத்திற்கான செலவு $277 பில்லியன் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


குறிப்பாக, புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் மூலதனச் செலவினத்தில் இந்தியாவும் சீனாவும் முறையே $43 பில்லியன் மற்றும் $52 பில்லியன் சேமிக்கும். ஆனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அத்தகைய செலவினங்களை முறையே $90 பில்லியன் மற்றும் $102 பில்லியன் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


சேமிப்புக்கான செலவுகள்


புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான சேமிப்புச் செலவுகள் (மின்கலம் மற்றும் உந்தப்பட்ட சேமிப்பு இரண்டும்) இந்த வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களுக்குக் கூடுதலாக $28 பில்லியன் மூலதனச் செலவை ஏற்படுத்தும். இதனால் 2024-30-ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த காலநிலை நிதித் தேவை $149 பில்லியனாக, அதாவது ஆண்டுக்கு $21 பில்லியனாக அதிகரிக்கும் என்கின்றனர். சீனாவைத் தவிர்த்து, மீதமுள்ள எட்டு வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களுக்கு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாறுவதற்கு ஒட்டுமொத்தமாக (சேமிப்புச் செலவுகள் உட்பட) $94 பில்லியன், அதாவது, ஆண்டுக்கு $13 பில்லியன் காலநிலை நிதி தேவைப்படும் என்று கணக்கிடப்படுகிறது.


இந்த மதிப்பீடுகள், மின்சாரக் கட்டமைப்புகளைத் தூய்மையான எரிசக்தி மூலங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கான கூடுதல் செலவுகளைக் கணக்கில் கொள்ளவில்லை. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களின் பெரிய அளவிலான வளர்ச்சியும், எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக ஆற்றல் தேவையை அதிகரிக்கக்கூடும் என்கின்றனர். 


வளர்ந்துவரும் ஒன்பது நாடுகளின் சந்தை பொருளாதாரங்களில் (EMEs), மின் துறையைத் தொடர்ந்து கார்பன் அற்றதாக்க அதிகபட்ச காலநிலை நிதி – மொத்த மதிப்பீட்டில் 38 சதவீதம் அல்லது $57 பில்லியன், இந்தியாவுக்குத் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதேநேரத்தில், சீனாவுக்கு இதைவிடச் சற்றுக் குறைவாக, சுமார் $55 பில்லியன் தேவைப்படும் என்கின்றனர். ஏனெனில், நிறுவப்பட்ட கொள்ளளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு அதிகரிப்பு சீனாவைவிட இந்தியாவில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலநிலை நிதியின் சதவீதமானது தென் ஆப்பிரிக்காவில் 0.25 சதவீதத்துடன் அதிகபட்சமாக இருக்கும், அதைத் தொடர்ந்து இந்தியா (0.13 சதவீதம்) மற்றும் மெக்சிகோ (0.09 சதவீதம்) இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 


பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எரிசக்தி மாற்றத்திற்கு நிதியளிக்க அதிக மூலதனம் தேவைப்படும் என்ற ஒருமித்த கருத்து எழுந்தது. ஆனால், இடைப்பட்ட ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை வியத்தகு முறையில் குறைந்துள்ளது. ஆய்வு மேற்கொள்ளபட்ட ஒன்பது வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களில் சாலைப் போக்குவரத்து, சிமென்ட் மற்றும் எஃகு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், மின் துறையானது, சேமிப்புச் செலவுகள் மற்றும் குறைந்த புதுப்பிக்கத்தக்கச் சுமை காரணிகளைக் கணக்கில் கொண்டபிறகும்கூட, எதிர்காலத்தில் மிகக் குறைந்த அளவு காலநிலை நிதி தேவைப்படும்  என்கின்றனர். இப்போது, வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களில் ஆற்றல் அமைப்பைக் கார்பன் அற்றதாக்குவது மிகவும் மலிவானதாகிவிட்டதால், அவ்வாறு செய்யாமல் இருக்க எந்த காரணமும் இல்லை என்று ஆய்வின் மூலம் தெரிவிக்கின்றனர்.


மோகன், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் கெளரவத் தலைவர் மற்றும் சிறந்த ஆய்வாளர்,.  ராஜ், மூத்த ஆய்வாளராக உள்ளார்.



Original article:

Share:

மலபார் கடற்படைப் பயிற்சி 2025. -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி:


இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் தங்களுக்குள் குழுப்பணி மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக வடக்கு பசிபிக் பகுதியில் திங்கள்கிழமை வருடாந்திர மலபார் கடற்படைப் பயிற்சி தொடங்கியுள்ளது. இந்த சூழலில், மலபார் கடற்படைப் பயிற்சி மற்றும் குவாட் (QUAD) பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. மலபார் கடற்படைப் பயிற்சி என்பது 1992-ல் தொடங்கப்பட்ட ஒரு பலதரப்பு போர்நடத்தல் கடற்படைப் பயிற்சியாகும் (war-gaming naval exercise). இது இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்புப் பயிற்சியாகத் தொடங்கியது. இந்தப் பயிற்சியின் மேலும் இரண்டு பதிப்புகள் 1995 மற்றும் 1996-ல் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், இந்தியாவின் அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு 2002 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.


2. 2002 முதல், இந்தப் பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் முதன்முதலில் 2007-ல் பங்கேற்றன. ஜப்பான் 2015-ல் கடற்படைப் பயிற்சியில் நிரந்தர உறுப்பினராக இணைந்தது. மேலும், மலபார் கடற்படைப் பயிற்சி  முத்தரப்புப் பயிற்சியாக மாறியது.


3. 2020ஆம் ஆண்டில், பத்தாண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக, இந்தப் பயிற்சியில் நான்கு (Quad) உறுப்பினர்களும் பங்கேற்றனர். மலபார் கடற்படைப் பயிற்சிகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக பங்கேற்றது.


4. இந்த ஆண்டு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக சில பதட்டங்கள் இருந்தபோதிலும், வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள குவாமில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.


குவாட் (QUAD)


1. நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quadrilateral Security Dialogue (Quad)) என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முறைசாரா ராஜதந்திர உரையாடலாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாகவும், திறந்ததாகவும், வளமாகவும் வைத்திருப்பது நான்கு நாடுகளுக்கும் பொதுவான குறிக்கோளாகும்.


2. குறிப்பாக, டிசம்பர் 2004-ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகியவை பேரிடர் நிவாரண முயற்சிகளில் ஒத்துழைக்க ஒரு முறைசாரா கூட்டணியை உருவாக்கின. 2007-ஆம் ஆண்டில், அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, இந்த கூட்டணியை நாற்கர பாதுகாப்பு உரையாடல் அல்லது Quad என முறைப்படுத்தினார்.


3. இருப்பினும், உறுப்பினர்களிடையே ஒற்றுமையின்மை மற்றும் குவாட் என்பது சீன எதிர்ப்பு கூட்டணி என்பதைத் தவிர வேறில்லை என்ற குற்றச்சாட்டுகளால் இக்குழு தடைபட்டது. இதனால், கடல்சார் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட குவாடின் ஆரம்பகால பதிப்பு இறுதியில் மறைந்துவிட்டது. 2017ஆம் ஆண்டில், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கால், நான்கு நாடுகளும் குவாடை மீண்டும் புதுப்பித்து அதன் இலக்குகளை விரிவுபடுத்தின.


4. குவாட் ஒரு பொதுவான பலதரப்பு அமைப்பைப் போல கட்டமைக்கப்படவில்லை. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐக்கிய நாடுகள் போன்ற ஒரு செயலகம் மற்றும் நிரந்தர முடிவெடுக்கும் அமைப்பாக குவாட் உருவாக்கப்படவில்லை. கூடுதலாக, வட ஆட்ட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பை (North Atlantic Treaty Organization (NATO)) போல் இல்லாமல், குவாட் கூட்டுப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை உள்ளடக்குவதில்லை. அதற்கு, பதிலாக ஒற்றுமை மற்றும் இராஜதந்திர ஒற்றுமையின் வெளிப்பாடாக கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தத் தேர்வு செய்கிறது.


5. 2020-ஆம் ஆண்டில், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற மலபார் கடற்படைப் பயிற்சிகள், முதன்முறையாக ஆஸ்திரேலியாவையும் சேர்த்தன. இது 2017-க்குப் பிறகு முதல் அதிகாரப்பூர்வ QUAD சந்திப்பு மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான்கு நாடுகளுக்கு இடையேயான முதல் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.


6. மார்ச் 2021 -ல், QUAD தலைவர்கள் மெய்நிகர் சந்திப்பு செய்து, பின்னர் 'The Spirit of the Quad' என்ற தலைப்பில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். இது குழுவின் அணுகுமுறை மற்றும் நோக்கங்களை கோடிட்டுக் காட்டியது.


 குவாடின் சமீபத்திய முக்கிய முயற்சிகள்                  

                 

1. குவாட் புற்றுநோய் தடுப்பு முயற்சி : இந்தோ-பசிபிக் பகுதியில் புற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற பொது மற்றும் தனியார் வளங்களைப் பயன்படுத்துவதற்காக குவாட் இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது. முதலில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் (cervical cancer) கவனம் செலுத்துகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு $7.5 மில்லியன் மதிப்புள்ள மனித பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus (HPV)) சோதனை கருவிகள், கண்டறிதல் கருவிகள் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்கும்.


2. குவாட் முக்கியமான தனிமங்கள் முன்முயற்சி : வாஷிங்டனில் நடந்த இரண்டாவது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, முக்கியமான தனிமங்களுக்கான மாறுபட்ட மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தனிமங்களுக்கு ஒரு நாட்டைச் சார்ந்திருப்பது பொருளாதார அழுத்தம், விலை மாற்றங்கள் மற்றும் விநியோக சிக்கல்கள் மூலம் தொழில்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இது பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் பாதிக்கும் என்றும் கூட்டு அறிக்கை கூறியது.



Original article:

Share:

அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு POSH சட்டப் பாதுகாப்பு தேவை. உச்ச நீதிமன்றம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். -ரோஹினி நாராயணன் & சம்ராட் பாஸ்ரிச்சா

 'பணியிடம்' என்ற வரையறையிலிருந்து அரசியல் கட்சிகளை விலக்குவதன் மூலம், நீதித்துறை பெண்களின் அரசியல் பங்கேற்பு ஏற்கனவே முறையான தடைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கான பாதுகாப்புகளைக் குறைத்துவிட்டது.


பீகார் சட்டமன்றத் தேர்தல்களில், 2,357 ஆண்களுக்கு எதிராக 258 பெண்கள் போட்டியிடுகிறார்கள். இந்த எண்ணிக்கைகள் ஒரு கதையைச் சொல்கின்றன. ஜனநாயகம் பிரதிநிதித்துவத்தில் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், பெண்கள் இந்திய அரசியலில் ஒரு சிறு பகுதியாகவே இருக்கிறார்கள் என்பதே அது. பஞ்சாயத்துகள் முதல் கட்சி அலுவலகங்கள் வரை, அவர்களின் பங்கேற்பு பெரும்பாலும் அடையாளப் பிரதிநிதித்துவத்தின் வடிவத்தை எடுக்கிறது. பலர் சுதந்திரமான மற்றும் செயல்திறனுள்ள அரசியல் செயல்பாட்டாளர்களாக இல்லாமல் ஆண் உறவினர்களுக்கு மாற்றாக நிறுத்தப்படுகிறார்கள்.


இந்தப் பின்னணியில், யோகமாயா எம்ஜி vs கேரளா மாநிலம் மற்றும் பிறர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கவலையை ஏற்படுத்துகிறது. செப்டம்பர் மாதம், அரசியல் கட்சிகளை பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (Prevention of Sexual Harassment at Workplace (POSH) Act) 2013-ன் கீழ் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பை நாங்கள் மாற்ற மாட்டோம் என்றும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இந்த வார்த்தைகளுடன், பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கையாள அரசியல் கட்சிகளுக்கு உள் குழுக்கள் இருக்க வேண்டுமா என்ற முக்கியமான பிரச்சினையை ஆராய வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த முடிவு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பணியிடத்தையும் நிர்வகிக்கும் ஒரு கட்டமைப்பிலிருந்து அரசியல் கட்சிகளை  தனிமைப்படுத்தியது.


1997-ல், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாகா குழு வழிகாட்டுதல்களை (Vishaka guidelines) வகுத்தது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கவும் நிவர்த்தி செய்யவும் வழிமுறைகளை கட்டாயமாக்கியது. நாடாளுமன்றம் 2013-ல் பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் (Prevention of Sexual Harassment at Workplace (POSH) Act) சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தக் கொள்கைகளை சட்டமாக மாற்றியது. இருப்பினும், யோகமாயா வழக்கில், கேரள உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள் சட்டத்தின் கீழ் "பணியிடங்களாக" கருதப்படுவதில்லை என்றும், உள் புகார் குழுக்களை அமைக்க சட்டப்பூர்வமாக கட்டாயமில்லை என்றும் தீர்ப்பளித்தது.


அரசியல் கட்சியில் சேருவது தன்னார்வமானது மற்றும் சம்பளம் இல்லாதது என்றும், எனவே வேலைவாய்ப்புக்கு சமமானது அல்ல என்றும் கூறப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது அச்சுறுத்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் போன்ற "பல சிக்கல்களை உருவாக்கக்கூடும்" என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், இத்தகைய பகுத்தறிவு, வெளிப்படையாக எச்சரிக்கையாக இருந்தாலும், சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது. இது சட்டப்பூர்வ வாசகத்தையும் சமூக உண்மைகளையும் புறக்கணிக்கிறது. சமூகத்தில் அரசியல் ஈடுபாடு பெரும்பாலும் நீடித்த, கட்டமைக்கப்பட்ட உழைப்பைக் குறிக்கிறது.


POSH சட்டத்தின் பிரிவு 2(f) ஒரு "பணியாளர்" என்பவர் தன்னார்வமாக வேலை செய்யும், ஊதியம் பெறும் அல்லது ஊதியம் பெறாத எவராகவும் இருக்கலாம் என்றும், "பணியிடத்தில்" வேலைக்காகச் செல்லும் எந்த இடமும் அடங்கும் என்றும் கூறுகிறது. சட்டமியற்றும் நோக்கம் தெளிவானதாகவும் எளிமையாகவும் இருந்தது; இருப்பினும், நீதிமன்றம் தனது தீர்ப்பை சட்டத்தின் அடிப்படையில் வழங்கத் தவறியது.


நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் அரசியல் கட்சிகளில் ஆராய்ச்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பிரச்சாரப் பணியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். சம்பளச் சீட்டு இல்லாததால் அவர்களின் பாதிப்பு அழிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பை மறுப்பது உண்மையான பிரச்சினையைவிட தொழில்நுட்ப விவகாரங்களில் கவனம் செலுத்துகிறது. பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் நெகிழ்வான பணி சூழ்நிலைகளை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், யோகமாயா வழக்கு நவீன பணியிடங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கான ஒரு சட்டத்தை கட்டுப்படுத்துகிறது.


பிரிவு 14 — தவறான நடவடிக்கைகளுக்கு எதிரான உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு (inbuilt protection against abuse)


தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த நீதிமன்றத்தின் அச்சமும் அதே அளவுக்கு தவறானது. பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் ஏற்கனவே பிரிவு 14-ன் கீழ் பாதுகாப்புகளை வழங்குகிறது. முறையான விசாரணைக்குப் பிறகு தவறான அல்லது தீங்கிழைக்கும் புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கிறது. பாதுகாப்புக்கும் பொறுப்புணர்வுக்கும் இடையிலான சமநிலை சட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அச்சத்தின் அடிப்படையில் முழு அமைப்பையும் விலக்குவது அவற்றின் இயல்பான கட்டமைப்பைப் பலவீனப்படுத்துகிறது.


வரலாற்றுரீதியாக, ஆழமான அடுக்குகளைக் கொண்ட படிநிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போதெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் உள்ளது. நீதிமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகள் POSH சட்டத்தின்கீழ் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் விதிவிலக்கான பலவீனத்தை உரிமை கோர முடியாது. தவறான செயல்கள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம்; நடைமுறை வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


அரசியல் கட்சிகளுக்குள் உள்நிலை புகார் குழுக்கான (Internal Complaints Committee (ICC)) வழக்கு


ஒவ்வொரு குடிமகனும் தலைமைத்துவத்தை எட்டமுடியும் என்ற ஜனநாயக வாக்குறுதி பகுதியளவு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. 18வது மக்களவையில் பெண்கள் 13.6 சதவீதமும், மாநிலங்களவையில் சிறிதளவு அதிகமான பங்களிப்பாராக மட்டுமே உள்ளனர். 2029-ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வரவிருக்கும் ஒரு முன்னோக்கிய நடவடிக்கையாகும். ஆனால், அது போதுமானதாக இருக்காது. பிரதிநிதித்துவம் என்பது பெண்கள் அவையில் 33% இடங்களை வைத்திருப்பது மட்டுமல்ல. இது பெண்கள் பங்கேற்கவும், முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும், தலைமைத்துவத்தில் தீவிரமாக இருக்கவும் கட்சிகளுக்குள் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் வாய்ப்புகளையும் வழங்குவதன் மூலம் தொடங்குகிறது.


சரியான பாதுகாப்பு மற்றும் ஆதரவான சூழ்நிலைகள் இல்லாமல், பெண்கள் அரசியலில் பங்கேற்க போராடுகிறார்கள். இது நமது அரசியல் விவாதங்களை பலவீனப்படுத்துகிறது. முறையான ஆதரவு இல்லாமல், அவர்கள் பெரும்பாலும் அமைதியாக துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் அல்லது அமைதியாக வெளியேறுகிறார்கள். புகார்கள் எழுப்பப்படும்போது, ​​அவை தொடர்புகள் மற்றும் அதிகாரத்தால் பாதிக்கப்படும் தெளிவற்ற வழிகளில் கையாளப்படுகின்றன.


உள்நிலை பொறுப்புத்தன்மை (Internal accountability) அரசியல் அமைப்புகளுக்கு புதியது அல்ல. தொழிலாளர் மற்றும் பழமைவாத கட்சிகள் விரிவான நடத்தை விதிகளையும் தன்னிச்சையான ஒழுங்குமுறை வழிமுறைகளையும்  வைத்திருக்கின்றன. கனடாவில், பிரச்சாரங்களின்போது துன்புறுத்தல் புகார்களைக் கையாள லிபரல் கட்சிக்கு ஒரு அதிகாரப்பூர்வமான தனி அலுவலகம் (Ombudsman’s) அலுவலகம் உள்ளது. அரசியல் கட்சிகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இயங்க முடியும் என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. நீதிமன்றங்கள் வரம்புகளை நிர்ணயித்திருந்தால், அவற்றை சரிசெய்ய சட்டங்களும் அமைப்புகளும் மாற்றப்பட வேண்டும்.




சிந்தனைக்கான தேவை


விசாகா வழிகாட்டுதல்கள் பணியிடத்தில், மரியாதை மற்றும் சமத்துவம் சுதந்திரத்திற்கு அவசியம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் விளக்கமும், அதை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றத்தின் மறுப்பும், அந்தக் கொள்கையின் வரம்பைக் குறைக்கின்றன. விசாகா வழிகாட்டுதல்களைவிட பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் (Prevention of Sexual Harassment at Workplace (POSH) Act) சட்டத்தை மிகவும் கட்டுப்படுத்தி விளக்குவது சட்டப்பூர்வ அர்த்தமுள்ளதாக இருக்காது.


உரிமைகளைப் பறிப்பது அனுமதிக்கப்படாது என்று நீதிமன்றம் மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. இருந்தபோதிலும், யோகமாயா வழக்கில், பாதுகாப்புகள் அமைதியாக பலவீனப்படுத்தப்பட்டன. இது பரபரப்பான நீதிமன்றம், நேரமின்மை அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக நடந்தாலும் பரவாயில்லை.- நீதிமன்றம் அதைப் புறக்கணிக்க முடியாது.


எழுத்தாளர்கள் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.



Original article:

Share:

இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டம், மாசுபாடு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை மீண்டும் வெளிக் கொண்டுவருகிறது. -கண்ணன் கே

 இந்தியா போன்ற நாட்டில், நகர்ப்புற மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் பயனுள்ள பொதுப் போக்குவரத்து வலையமைப்பு இனி விருப்பத்தேர்வாக இருக்க முடியாது. ஆனால், அரசாங்கம் பொதுப் போக்குவரத்தை எவ்வாறு வலுப்படுத்துகிறது மற்றும் ஊக்குவிக்கிறது? சுத்தமான மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்பை (sustainable transit system) அளவிடுவதில் என்ன சவால்கள் உள்ளன மற்றும் அவற்றை எவ்வாறு தீர்க்கலாம்?


நமது நாட்டின் தலைநகரில் மோசமடைந்துவரும் காற்றின் தரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தினர். இது நகரத்தின் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு புதுப்பிக்கப்பட்ட கவனத்தை ஈர்த்தது. போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன உமிழ்வு உள்ளிட்ட பல காரணிகளால் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரிக்கிறது வருகிறது.


இந்தியா போன்ற நாட்டில், நகர்ப்புற மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் பயனுள்ள பொதுப் போக்குவரத்து வலையமைப்பு இனி விருப்பத்தேர்வாக இருக்க முடியாது. இந்த அவசரம் உலக பொதுப் போக்குவரத்து நாளின் கருப்பொருளான "சமூகங்களை இணைத்தல், உமிழ்வுகளை குறைத்தல்" (Connecting Communities, Reducing Emissions) என்ற கருப்பொருளில் எதிரொலிக்கிறது. இது தனியார் வாகனங்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க, கூட்டு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.


சர்வதேச பொதுப் போக்குவரத்து சங்கத்தின் (International Association of Public Transport (UITP)) தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 அன்று உலக பொதுப் போக்குவரத்து தினம் கொண்டாடப்படுகிறது. உலக பொதுப் போக்குவரத்து தினம், அனைவருக்கும் நிலையான, திறமையான மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்புகளின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த நாளில், இந்தியாவின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு, அதனை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கவும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், நகர்ப்புற மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான பரந்த தாக்கங்கள் ஆகியவற்றை ஆராய்வது முக்கியமானதாக இருக்கும்.


விரைவான நகரமயமாக்கல் மற்றும் அதன் தாக்கம்


இந்தியா உலகில் வேகமாக நகரமயமாகி வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் (சுமார் 60 கோடி பேர்) 2036-க்குள் நகரங்கள் மற்றும் நகரப்புறங்களில் வாழ்வார்கள் என்று உலகவங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இத்தகைய விரைவான நகரமயமாக்கல் உள்கட்டமைப்பு, நீர்வளங்கள் மற்றும் காற்றின் தரம் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ஒரு முக்கிய கவலையாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த நகர்ப்புற மாற்றத்தை திறம்பட கையாள்வது 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை அடைவதற்கு முக்கியமானதாக இருக்கும்.


பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நிலையான வளர்ச்சி இலக்கு (Sustainable Development Goal) 11-ஐ அடைவதற்கும் வலுவான பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவது முக்கியம். குறிப்பாக இலக்கு 11.2, அனைவருக்கும் பாதுகாப்பான, குறைவான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் நிலைத்த போக்குவரத்து அமைப்பின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது.


எனவே, பொதுப் போக்குவரத்தை ஒரு சேவையாக மட்டும் கருதாமல், நகர்ப்புற மாற்றத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சாத்தியமாக்கும் கொள்கைக் கருவியாகப் பார்க்க வேண்டும்.


பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் முக்கியத்துவம்


நன்கு திட்டமிடப்பட்ட, அணுகக்கூடிய மற்றும் குறைவான நகர்ப்புற பொதுப் போக்குவரத்து வலையமைப்பை நிறுவுவது பல சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைக் கொண்டுள்ளது:


சமூக-பொருளாதார நன்மைகள்: முதலாவதாக, பொதுப் போக்குவரத்து, குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வேலை வாய்ப்பு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை குறைவானதாகவும், எளிதாகவும் அணுக உதவுவதன் மூலம் சமத்துவமின்மையைக் குறைக்க உதவுகிறது.


இரண்டாவதாக, இது தனியார் வாகனங்களின் மீதான சார்புநிலையை குறைக்க உதவுகிறது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, எரிபொருள், நேரம், காற்று மற்றும் ஒலி மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் சுகாதாரச் செலவுகளில் கணிசமான சேமிப்பிற்கு வழிவகுக்கிறது.


மூன்றாவதாக, இது பொதுப் போக்குவரத்து மையங்களைச் சுற்றி வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்புகளை ஒன்றிணைப்பதை ஆதரிக்கும் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுக் கொள்கையை (Transit-Oriented Development (TOD)) எளிதாக்குகிறது.


சுற்றுச்சூழல் நன்மைகள்: தனியார் வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஒவ்வொரு நபரால் உற்பத்தி செய்யும் பசுமை இல்ல வாயுக்களின் (greenhouse gas) வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், பொதுப் போக்குவரத்தை நம்பியிருப்பது காற்றின் தரத்தை மேம்படுத்தும் துகள் பொருள் (PM 2.5) மற்றும் புகைமூட்டத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.


பொதுப் போக்குவரத்து, வரையறுக்கப்பட்ட நகர்ப்புற இடத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. விரிவான வாகன நிறுத்துமிடங்களுக்கான தேவையைக் குறைக்கிறது மற்றும் சாலை விரிவாக்கத்தையும் குறைக்கிறது. அவசரகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு வலுவான போக்குவரத்து அமைப்பை விரைவாக மாற்றியமைக்க முடியும். எடுத்துக்காட்டாக, மாசுக் கட்டுப்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக கூடுதல் பயணங்களைச் சேர்க்க டெல்லி மெட்ரோவின் சமீபத்திய முடிவு, பொதுப் போக்குவரத்து எவ்வாறு ஒரு பயனுள்ள எதிர்வினை வழிமுறையாகச் செயல்பட முடியும் என்பதைக் காட்டுகிறது.


இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள முயற்சிகளை மீண்டும் வெளிக்கொண்டு வருகிறது.


நகர்ப்புற பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் முயற்சிகள்


பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசாங்கம் பல முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் பின்வருவன அடங்கும்:


ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)): 2005-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், முதல் நகர்ப்புற நவீனமயமாக்கலுக்கான (urban modernisation) பெரிய அளவிலான தேசிய முயற்சியாகும். இந்தத்திட்டத்தில் தூய்மையான நகர்ப்புற போக்குவரத்து ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. இது நகரங்கள் முழுவதும் 15,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு நிதி வழங்கியது. அவற்றில் கணிசமான பகுதி அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவால் (Compressed Natural Gas-powered) இயக்கப்படும் பேருந்துகளாகவும், ஹைப்ரிட்-மின்சார மற்றும் முழு மின்சார பேருந்துகளாகவும் இருந்தன.


தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கை (National Urban Transport Policy (NUTP)): 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் பில்லியன் கணக்கான மணிநேரங்களை இழப்பதன் பிரச்சினையில் கவனம் செலுத்துகிறது மற்றும் வாகனத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு மாறுவதையும், பொதுப் போக்குவரத்திற்கும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற வாகனம் அல்லாத போக்குவரத்திற்கும் (Non-Motorised Transport (NMT)) முன்னுரிமை அளிப்பதையும் ஆதரிக்கிறது. இந்தத் திட்டம் 'பாதுகாப்பான, மலிவு, விரைவான, வசதியான, நம்பகமான மற்றும் நிலையான  நகர்ப்புற பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


FAME I மற்றும் II (மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்தல்): இந்தத் திட்டங்கள், டீசல் பேருந்துகளை மின்சார பேருந்துகளால் மாற்றுவதற்கு ஊக்கத்தொகை வழங்குவதன்மூலம் பொதுப் போக்குவரத்தின் கார்பன் நீக்கத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம் நகர்ப்புற உமிழ்வு மற்றும் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய உதவுகிறன. இந்தத் திட்டங்கள் மின்னேற்ற உள்கட்டமைப்பை (charging infrastructure) அளவிடுவதன் மூலம் பொது போக்குவரத்து இயக்குநர்களுக்கான செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்க உதவின.


பொலிவுறு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission): 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நகர்ப்புற பொதுப் போக்குவரத்தை ஆதரிக்கிறது. இதில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (Intelligent Transport Management Systems (ITMS)) மற்றும் 'ஒரே நாடு, ஒரே அட்டை' அமைப்பு ஆகியவை அடங்கும். இது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை (National Common Mobility Card (NCMC)) எனப்படும் ஒற்றை அட்டை மூலம் பேருந்துகள், ரயில்கள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்திற்கு பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது.


மீதமுள்ள சவால்கள் என்ன?


இருப்பினும், இந்தியாவில் தூய்மையான பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்துவது தனித்துவமான சவால்களுடன் வருகிறது. முதலாவதாக, மெட்ரோ வலையமைப்புகள் மற்றும் விரிவான பேருந்துக் குழுக்கள் போன்ற பெரிய அளவிலான பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க மூலதன முதலீடு தேவைப்படுகிறது.


மேலும், பல மாநில சாலை போக்குவரத்து கழகங்கள் (State Road Transport Undertakings (SRTUs)) தொடர்ச்சியாக நஷ்டத்தைச் சந்தித்து வருவதாலும், அவற்றின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடுகளை நம்பியிருப்பதாலும், இத்தகைய திட்டங்களின் நிதி நிலைத்தன்மை நிச்சயமற்றதாகவே உள்ளன.

இரண்டாவதாக, மெட்ரோ நிர்வாகம், மாநகராட்சிகள் மற்றும் சாலை போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், தொடர்ச்சியின்மை மற்றும் கடைசி-மைல் இணைப்பு இடைவெளிகள் ஏற்படுகின்றன.


இறுதியாக, கொள்கைகளில் உள்கட்டமைப்பு சார்பு தெளிவாக உள்ளது. இவை பெரும்பாலும் மேம்பாலங்கள், உயர்த்தப்பட்ட வழித்தடங்கள் மற்றும் சாலை-அகலப்படுத்தும் திட்டங்கள் மூலம் தனியார் வாகனங்களை இடமளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளன. இது பெரும்பாலும் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள், பேருந்துகளுக்கான சிறப்புப் பாதைகள் உள்கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது திறமையான பொதுப் போக்குவரத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது.


இதன் விளைவாக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பது காற்று மாசுபாட்டின் மோசமடைந்து வரும் பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தலைநகருக்குள் BS-III மற்றும் BS-IV வாகனங்கள் நுழைவதற்கான சமீபத்திய கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை இது அவசியமாக்கியுள்ளது.


முன்னோக்கிச் செல்லும் வழி


மலிவான, அணுகக்கூடிய மற்றும் நன்கு இணைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்த கொள்கை தலையீடுகள் தேவைப்படும். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தில் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) கற்பனை செய்யப்பட்டபடி அனைத்து முக்கிய நகரங்களிலும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையங்களை (Unified Metropolitan Transport Authorities (UMTAs) அமைப்பது, அனைத்து நகர போக்குவரத்தையும் ஒன்றிணைத்து, பல்வேறு வகையான போக்குவரத்தில் சிறந்த திட்டமிடலை உறுதி செய்யும்.


குறிப்பாக, வாகனம் அல்லாத போக்குவரத்திற்கும் (Non-Motorised Transport (NMT)) முறைகள் வழியாக முதல் மற்றும் கடைசி-மைல் இணைப்பில் உள்ள இடைவெளிகளை நீக்குவதில் கவனம் செலுத்தும் கொள்கைகள் தடையற்ற பயண அனுபவத்தை உறுதிப்படுத்த உதவும். மேலும், நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த, சிங்கப்பூர், மிலன் மற்றும் ஸ்டாக்ஹோம் போன்ற உலகத்தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து வலையமைப்புகளைக் கொண்ட நகரங்களில் காணப்படுவது போல் வரி அல்லது நெரிசல் வரிகளின் (congestion taxes) வகைகளை விதித்தல் போன்ற புதுமையான பொறிமுறைகள் பொதுப் போக்குவரத்து வளர்ச்சிக்கு நேரடியாக நிதியளிக்க கருத்தில் கொள்ளப்படலாம்.


மேலும், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) கருவிகளின் பயன்பாடு மாறும் வழித்தட திட்டமிடல் மற்றும் நிகழ்நேர வாகனக் கண்காணிப்பை செயல்படுத்த முடியும். இது பொதுப் போக்குவரத்தை மிகவும் திறமையாகவும் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் மாற்ற உதவும்.


குறைவான விலையில் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் நுட்பத்தை தாண்டி, நடத்தை மாற்றங்களைக் கொண்டுவர நீடித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மிகவும் முக்கியமானவை. பொதுப் போக்குவரத்து மற்றும் வாகனம் அல்லாத போக்குவரத்து முறைகளுக்கு மாறுவதால் கிடைக்கும் பொருளாதார, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்து குடிமக்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.


உதாரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க்கில் இலவச பேருந்து பயணச்சீட்டுகளுக்காக பிரச்சாரம் செய்தார். இது வாக்காளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. பணக்கார நாடுகளில்கூட குறைவான விலையில் பொதுப் போக்குவரத்து தேவைப்படுவதை இது காட்டுகிறது.


இந்தியாவின் வேகமாக வளரும் நகர்ப்புற மக்கள் தொகை மற்றும் மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டுடன், நன்கு திட்டமிடப்பட்ட, திறமையான பொது போக்குவரத்து வலையமைப்பு இனி விருப்பத்தேர்வாக இல்லை. அது மாறாக ஏதேனும் வெற்றிகரமான இந்திய நகரத்திற்கு பேச்சுவார்த்தைக்குட்படாத முன்நிபந்தனையாகவும், இந்தியாவின் நிலையான, சமநீதியான மற்றும் திறமையான நகரமயமாக்கலுக்கான முன்னேற்றத்தின் முக்கிய தீர்மானகரமாகவும் இருக்கும்.



Original article:

Share:

இந்து முறைப்படி நடந்த பட்டியல் பழங்குடியினத் தம்பதியரின் திருமணத்தை, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் டெல்லி உயர் நீதிமன்றம் அங்கீகரித்தது. -அமால் ஷேக்

 உயர் நீதிமன்றமும் குடும்ப நீதிமன்றமும் ஒட்டுமொத்தமாக லம்பாடா (Lambada) சமூகம் “இந்துமயமாகிவிட்டதா” என்பதைக் குறித்து ஆலோசிக்கவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்தத் திருமணம் இந்து சடங்குகளின்படி நடத்தப்பட்டதா என்பதற்குத் தங்கள் தீர்ப்புகளின் வரம்பைக் குறைத்துக் கொண்டன.


இந்தியாவில் உள்ள பட்டியல் பழங்குடி (Scheduled Tribe) சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையேயான திருமணம், இந்து சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி நடத்தப்பட்டால், அது 1955-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் (Hindu Marriage Act (HMA)) வரம்பிற்கு உட்பட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நவம்பர் 4-ஆம் தேதி தீர்ப்பளித்தது.


"புனித நெருப்பை வணங்குதல், மாங்கல்யம் மற்றும் மெட்டி அணிதல், மற்றும் சப்தபதி (ஏழு அடிகள்) ஆகிய அத்தியாவசிய இந்து சடங்குகளை நடத்தியது, இந்தத் திருமணம் இந்து சடங்குகளின் அனைத்து அடையாளங்களையும் தாங்கி நிற்கிறது என்பதைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது" என்று நீதிபதிகள் அனில் க்ஷேதர்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருந்தது.


  இந்து திருமணச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட குடும்ப நீதிமன்றத்தின் விவாகரத்து ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் மூலம் இந்த வழக்கு எழுந்தது. பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த தம்பதியினர், அவர்களின் பழங்குடி வழக்கச் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்குப் இந்து திருமணச் சட்டம் பொருந்தாது என்றும் கணவர் தரப்பில் இருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இந்தக் கணவனும் மனைவியும் உண்மையில் இந்து வழக்கங்களின்படி திருமணம் செய்து கொண்டனர் என்ற குடும்ப நீதிமன்றத்தின் கருத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


பழங்குடியினரை நிர்வகிக்கும் சட்டங்கள் யாவை?


இந்து, பௌத்த, சமண மற்றும் சீக்கியர்களுக்கான தனிப்பட்ட சட்டங்கள் இந்து வாரிசு சட்டம், 1956 மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டங்களில் குறியிடப்பட்டுள்ளன. ஆனால் சட்டத்தின் பிரிவு 2(2), “இந்த சட்டத்தில் எதுவும் எந்த அட்டவணை இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் பொருந்தாது…மத்திய அரசு, அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் அறிவித்தால் தவிர” ஒரு தெளிவான விதிவிலக்கை உருவாக்குகிறது. லம்பாடா (பஞ்சாரா) சமூகத்திற்கு இதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.


இதன் பொருள் என்னவென்றால், இந்தப் பழங்குடிச் சமூகத்தின் உறுப்பினர்கள் அவர்களின் சொந்த பழக்கவழக்கங்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். அவை, உள்ளூர் சார்ந்தவை மற்றும் குறியிடப்படாதவை. இருப்பினும், இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 3-ஆனது "வழக்கம்" என்பதை, "நீண்ட காலமாகத் தொடர்ந்து மற்றும் ஒரே சீராகக் கடைப்பிடிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட உள்ளூர் பகுதி, பழங்குடி, சமூகம், குழு அல்லது குடும்பத்தில் இந்துக்களிடையே சட்டத்தின் சக்தியைப் பெற்றுள்ள" ஒன்றாக அங்கீகரிக்கிறது. வழக்கம் நிரூபிக்கப்பட வேண்டும், அது ஊகிக்கப்பட முடியாது என்பதால், தெளிவான சான்றுகளால் வழக்கம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.


இந்த வழக்கில் சான்றுகளை நிரூபிக்க வேண்டியதன் சுமை முக்கியமானது.


இந்த வழக்கின் முக்கியப் பிரச்சினை, இந்து திருமணச் சட்டத்தின்கீழ் மனைவியால் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து மனுவின் நிலைத்தன்மையைச் சுற்றி வந்தாலும், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் திருமணம் இந்து திருமணச் சட்டத்தின்கீழ் முறைப்படி நடத்தப்பட்டதா என்பதை நீதிமன்றம் ஆலோசிக்க வேண்டியிருந்தது.


இந்துமுறைத்  திருமணமாக எப்படிக் கருதப்படுகிறது?


ஒரு இந்து திருமணம் "ஏதாவது ஒரு தரப்பினரின் வழக்கமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி" நடத்தப்படலாம் என்பதை இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு-7 அங்கீகரிக்கிறது. அத்தகைய சடங்குகளில் "சப்தபதி" அல்லது புனித நெருப்பைச் சுற்றி ஏழு அடிகள் எடுத்து வைப்பது ஆகியவை அடங்கும். ஏழாவது அடி எடுத்து வைக்கப்பட்டவுடன் திருமணம் நிறைவுபெறுகிறது.


"இச்சட்டம் சப்தபதிக்குச் சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்குகிறது, ஆனால் இது ஒவ்வொரு இந்து திருமணத்தின் செல்லுபடியாகும் தன்மைக்கும் கட்டாயமாக்கவில்லை" என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 7-ன் நோக்கம் "இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இந்து சமூகங்களிடையே கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது, மதிப்பது மற்றும் பாதுகாப்பதாகும்" என்று கூறப்பட்டுள்ளது. 


"அத்தகைய பழக்கவழக்கங்கள் பழமையானவை, உறுதியானவை, தொடர்ச்சியானவை மற்றும் சீரான முறையில் கடைபிடிக்கப்படும் பட்சத்தில் ஒரு திருமணத்தின் அத்தகைய செல்லுபடியாகும் தன்மை, சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சடங்குகளைப் பொறுத்தது” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


நீதிமன்றங்கள் குறிப்பட்டவை என்ன?


குடும்ப நீதிமன்றத்தின் கருத்துக்களை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இரு நீதிமன்றங்களும் ஒட்டுமொத்தமாக லம்பாடா (Lambada) சமூகம் "இந்துமாயமாகிவிட்டதா" (Hinduised) என்பதைப் பற்றி விவாதிக்கவில்லை. மாறாக,  குறிப்பிட்ட அந்தத் திருமணம் இந்து சடங்குகளின்படி நடத்தப்பட்டதா இல்லையா என்பதற்குத் தங்கள் தீர்ப்புகளின் வரம்பைக் குறைத்துக்கொண்டன.


நீதிமன்றங்கள் தங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களையே பெரிதும் நம்பியிருந்தன. கணவர் தனது திருமணப் படங்கள் திருமணத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டவை என்று வாதிட்டாலும், புகைப்படங்களை ஆராய்ந்த நீதிமன்றம் அந்தக் கூற்றை ஆதரிக்கும்படியாக எந்த ஆதாரமும் நீதிமன்றத்திற்குக் கிடைக்கவில்லை என்றும் "நிகழ்தகவுகளின் பெரும்பான்மையை" (preponderance of probabilities) அடிப்படையாகக் கொண்டு, புகைப்படங்கள் உண்மையான திருமண சடங்குகளைப் பிரதிபலிக்கின்றன என்றும் நீதிமன்றங்கள் குறிப்பிட்டன.


மனுதாரர்கள் இந்து மதத்திற்கு மாறவில்லை என்ற மேல்முறையீட்டாளரின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் மேல்முறையீட்டாளர் லம்பாடா சமூகத்தின் பழக்கவழக்கங்களின்படி திருமணம் நடத்தப்பட்டதாக பிரமாணப் பத்திரத்திலோ அல்லது குறுக்கு விசாரணையிலோ கணிசமாகக் காட்டவில்லை அல்லது நிராகரிக்கவில்லை என்பது தெளிவாகிறது என்று உயர்நீதிமன்ற அமர்வு கூறியது.


இந்து திருமணச் சட்டத்தின் (பிரிவு 2(2)-ன் கீழ் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரை விலக்குவது அவர்களின் வழக்கமான சட்டங்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே என்றும் அவர்கள் தாங்களாகவே இந்து நடைமுறைகளைப் பின்பற்றும்போது குறியிடப்பட்ட சட்டப் பாதுகாப்புகளை அணுகுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது அல்ல என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 


மேலும், அந்தத் தம்பதியினர் கல்வி கற்றவர்கள், பாரம்பரிய பழங்குடி குடியிருப்புகளுக்கு வெளியே வசித்தவர்கள், மற்றும் சமூகரீதியாக ஒருங்கிணைந்தவர்களாகத் தோன்றியவர்கள் என்றும் அமர்வு குறிப்பிட்டது. இந்தக் காரணிகள் அவர்களின் திருமணம் இந்து சடங்குகளின்படி நடத்தப்பட்டது என்ற முடிவை ஆதரிக்கும் வகையில் இருந்தன என்றும் குறிப்பிட்டது.




உச்சநீதிமன்றத்தின் முன்மாதிரி தீர்ப்பு 


இரண்டு நீதிமன்றங்களும், லபீஷ்வர் மஞ்சி எதிர். பிரான் மஞ்சி (2000) வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டின. தாங்களாகவே முன்வந்து இந்து மதச்சடங்குகளைப் பின்பற்றும் பட்டியல் பழங்குடியினரைச்  சேர்ந்தவர்கள் இந்து சட்டத்தின் வரம்பிற்குள் வருவார்கள் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அந்த வழக்கு, ஒரு ‘சந்தால்’ இனத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணத்திலிருந்து எழுந்தது.  இறந்து போன அந்த ஆணின் மனைவிக்கு வழங்கிய சொத்துக்களை எதிர்த்து, சந்தால் பழங்குடிச் சட்டத்தின்படி, பெண்கள் சொத்துரிமை பெற முடியாது என்று இறந்த ஆணின் உறவினர்  ஒருவர் வாதிட்டார். 


அதற்குப் பிறகு, விசாரணை நீதிமன்றமும் முதல் மேல்முறையீட்டு நீதிமன்றமும், அக்குடும்பம் ஏற்கெனவே "சிரார்த்தம்" மற்றும் "பிண்டம்" போன்ற சடங்குகளைச் செய்தல், இந்துப் பெயர்களைப் பயன்படுத்துதல் மற்றும் கைம்பெண் கடைமைகளைக் கடைப்பிடித்தல் போன்ற இந்து நடைமுறைகளை ஏற்றுக்கொண்டதைக் கண்டறிந்தன. “இந்த வழக்கில் எழும் கேள்வி என்னவென்றால், சந்தால் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட தரப்பினர் இன்னும் தங்கள் வழக்கமான மரபுகளைத் தொடர்கிறார்களா அல்லது இந்து மயமாக்கப்பட்ட பிறகு இந்துக்களால் பின்பற்றப்படும் வழக்கங்களுக்கு மாற்றிக்கொண்டார்களா…. இந்து வாரிசு சட்டத்தின் பிரிவு 2-இன் உட்பிரிவு 2 இந்தத் தரப்பினரை அந்தச் சட்டத்தின் பொருந்துதலில் இருந்து விலக்குவதாகக் கருத முடியாது.” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


பிரிவு 14-ன் கீழ் அந்தக் கைம்பெண் முழுமையான உரிமையாளராவார் என்றும், அவரது சொத்துரிமை செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



Original article:

Share:

பணப் பரிமாற்றத் திட்டங்கள் சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் எவ்வாறு உதவுகின்றன? -ரோஷ்னி யாதவ்

 முக்கியக் குறிப்புகள்:


—"பணம் மற்றும் பொருள்" பரிமாற்றங்களுக்குப் பல நேர்மறையான விளைவுகள் உள்ளன. இலவச உணவுத் திட்டம் பல குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க உதவியது என்பதையும், நேரடித் தலையீடுகள் பலனளிக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வேளாண் தொழிலாளர்ளுக்கு நேரடியாகப் பணம் மூலமாகவோ அல்லது மானியங்கள் மூலமாகவோ வழங்கப்படும் உதவிகளுக்கும் இது பொருந்தும்.


— மூன்று பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒன்று, இத்தகைய பரிமாற்றங்கள் நேரடிப் பொருளாதார மற்றும் சமூகப் பலனை வழங்குகின்றனவா; இரண்டு, அவை நிதிச் சமன்பாட்டைப் பாதிக்கின்றனவா; மற்றும் மூன்று, அரசின் பங்களிப்பு பற்றிய சித்தாந்தம்.


— இந்தப் பணப் பரிமாற்றத் திட்டங்கள் கிட்டத்தட்ட 10 கோடி (100 மில்லியன்) பெண்களை உள்ளடக்கியுள்ளன. இது அவர்களைத் தங்கள் கணவர்களைக் குறைவாகச் சார்ந்திருக்கச் செய்து அதிகாரமளித்துள்ளது. இது அவர்கள் பணத்தை அர்த்தமுள்ளதாகச் செலவிட உதவுகிறது. மேலும், இது குறைந்த வருமானம் கொண்ட குழுக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.”


— “இலவசப் பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் மூலம்  பெண்களுக்கென்று பாதுகாப்பான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுவதால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்களை அணுகுவது எளிதாகிறது. மடிக்கணினிகள், மிதிவண்டிகள் அல்லது தையல் இயந்திரங்களை விநியோகிக்கும் திட்டங்கள் சிறந்த கல்வி அல்லது வேலைவாய்ப்புக்கான வழிகளை வழங்குவதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு உதவுகின்றன. எனவே, 'பணம் மற்றும் பொருள்' பரிமாற்றங்கள், அவை சரியாக வழிநடத்தப்பட்டால் இந்தத் திட்டங்கள் சரியானவையே.”


— "அரசாங்கங்கள் இத்தகைய வழிகளில் அதிகமாகச் செலவழித்து, உள்கட்டமைப்பு போன்றவற்றுக்குக் குறைவாகச் செலவழிக்கும்போது, இந்த செயல்முறையைத் தக்கவைக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. இங்கே, நிதிப் பொறுப்பு மற்றும் வரவுசெலவுத் திட்ட மேலாண்மைச் சட்டம், நிதி ஒழுக்கத்தை உறுதி செய்கிறது. ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதற்கான விதிகள் உள்ளன. பணம் பரிமாற்றம் செய்யப்பட்டாலும் அது செலவு மற்றும் வளர்ச்சிக்கான செலவீனங்கள் என்பதைக் கருத்தில் கொண்டால், இத்தகைய நிபந்தனையற்ற பண அல்லது பொருள் பரிமாற்றங்கள், ஒரு உள்கட்டமைப்புத் திட்டத்தை விடச் சிறந்ததா என்பதே இங்குப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது."


— "இது நம்மை அரசின் பங்கிற்கு இட்டுச் செல்கிறது. அதன் பங்கு நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதாகும். மேலும், இலவச உணவுத் திட்டம் ஒட்டுமொத்த சமூகத்திற்கு எவ்வாறு பயனளித்ததோ, அதுபோலவே பணம் வழங்குவதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நேரடி வழியாகவே கருதப்படுகிறது. மாநிலங்களும் மூலதனச் செலவினங்களுக்காக (capex) நிதிகளை ஒதுக்கி வருகின்றன. ஆனால், சில சமயங்களில், நிதி இலக்குகளை அடைய இவை குறைக்கப்பட்டுள்ளன. இது, சமூகத்தில் குறைந்த சலுகை பெற்றவர்களை வறுமை நிலைக்கு மேலே வைத்திருப்பதற்கான செலவாகக் கருதப்படுகிறது."


— “நிபந்தனையற்ற பணப் பரிமாற்றங்களை உள்ளடக்கிய திட்டங்கள் பொது நன்மைக்குப் பங்களிக்கின்றன. இருப்பினும், நீண்டகாலத்திற்கு, அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை." 


உங்களுக்குத் தெரியுமா?


— அகராதியில் ‘இலவசம்’ (freebie) என்ற சொல், எந்தச் செலவும் இன்றி வழங்கப்படும் அல்லது விநியோகிக்கப்படும் ஒரு பொருள் அல்லது சேவையைக் குறிக்கிறது. ஜூன் மாதம் 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், 'இலவசங்கள்' என்ற சொல்லுக்கு எந்தச் செலவும் இல்லாமல் வழங்கப்படும் ஒரு பொது நலத் திட்டமென்கிற  வரையறையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


— இலவசங்களை, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது அல்லது தகுதிவாய்ந்த பொருட்களிலிருந்தும், பரந்த மற்றும் நீடித்த நன்மைகளைத் தரும் பிற அரசுச் செலவினங்களிலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது. இருப்பினும்கூட, பெரும்பாலும் 'தகுதிவாய்ந்த' பொருட்கள் என்று குறிப்பிடப்படும் நலத்திட்டப் பொருட்களுக்கும், இலவசங்கள் அல்லது 'தகுதியற்ற' தயாரிப்புகளுக்கும் இடையில் வேறுபாடு காண்பது ஒரு குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.


— இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்கப்படும் உணவு, கல்வி, தங்குமிடம் மற்றும் மருத்துவம், சுகாதாரம் போன்ற தகுதிவாய்ந்த பொருட்களின் முக்கியத்துவத்தை அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவை மனித மேம்பாட்டைத் துரிதப்படுத்துவதிலும், அதன்மூலம் தேசியப் பொருளாதார முன்னேற்றத்தை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.



Original article:

Share: