இந்தியாவின் வருமான வரிச் சட்டத்தை சீர்திருத்துவது எப்படி? - சுரஞ்சலி டாண்டன்

 வருமான வரி (Income Tax Act) சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில் உள்ள சர்ச்சைக்குரிய பிரிவுகளை கவனமாக மறுவடிவமைத்து, வரி கட்டமைப்பை எளிதாக்க வேண்டும்.


1958-ஆம் ஆண்டில், இந்திய சட்ட ஆணையம் (Law Commission of India) வருமானவரிச் சட்டம் 1922-யை எளிமைப்படுத்த ஏற்பாடு செய்தது. வரிக் கட்டமைப்பை எளிமையாக்காமல், சட்டத்தின் உண்மையான எளிமைப்படுத்தல் இருக்க முடியாது என்று நிபுணர்கள் ஒப்புக்கொண்டனர். பல ஆண்டுகளாக,  நடைமுறையில் உள்ள வருமான வரி சீர்திருத்தத்திற்கான இலக்குகள் எளிமை மற்றும் உறுதியான முறைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில், வரிக் கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2009-ஆம் ஆண்டில் நேரடி வரிகள் (Direct Tax) உட்பட முந்தைய வரிக் குழுக்களின் பரிந்துரைகளுக்கு அனுமதியளித்தது. பெருநிறுவன வரி-விகிதங்கள் (corporate tax-rates) முன்னதாகவே குறைக்கப்பட்டு, புதிய வரிமுறையின் கீழ் ஊக்கத்தொகைகள் படிப்படியாக அகற்றப்படுகின்றன. பெருநிறுவன வரி செலுத்துவோரில் 58 சதவீதம் பேர் புதிய வரி விதிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 2017-18ல் 29.49 சதவீதமாக இருந்த வரி விகிதத்தை 2021-22ல் 23.26 சதவீதமாகக் குறைத்துள்ளனர். இந்த அமைப்பை மேலும் சீரமைக்கவும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும், வெளிநாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன வரி விகிதம் தற்போது 35 சதவீதமாக குறைக்கப்பட்டு, ஏஞ்சல் வரி  (angel tax) ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதேபோல், தனிநபர் வருமான வரி அடுக்குகள் (personal income-tax slabs) இப்போது குறைவாக உள்ளதால் அதிக வரி செலுத்துவோரைக் இதில் கொண்டு வந்துள்ளது. 2019-20 ஆண்டு  மற்றும் 2022-23 ஆண்டுக்கு இடையில், வரி செலுத்துவோர் எண்ணிக்கை 89.8ல் இருந்து 93.7 மில்லியனாக அதிகரித்துள்ளது. தற்போதைய பட்ஜெட், 12 லட்சத்துக்கும் குறைவான வருமானங்களுக்கான வரி விகிதத்தை மேலும் குறைத்துள்ளது. இது தனிநபர் வருமானத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தையும், வருமானத்தில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வருமானத்தில் 51 சதவீதத்தையும் பாதிக்கும். முன்மொழியப்பட்ட நேரடி வரி மாற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்பு ரூ.29,000 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டாலும், நடப்பு விலக்குகளால் இழந்த வருவாயை விட இந்தத் தொகை குறைவாகும்.


வரி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும், நேரடி வரி மற்றும் உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியா தனது வரித் திறனை இன்னும் அடையவில்லை. இந்தியா 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய இலக்கை அமைத்துள்ள நிலையில், வளர்ச்சி மற்றும் சமத்துவத்திற்கு இடையே சமநிலையை உறுதிப்படுத்த வரிக் கொள்கை அடுத்து என்ன செய்ய முடியும்? என்பது கேள்வியாக உள்ளது.


மூலதன ஆதாய வரி (capital gains tax) முறையை சீர்திருத்துவது ஒரு முக்கியமான ஒன்று. கோவிட்-19க்குப் பிறகு பல நாடுகள் செயலற்ற வருமானங்களுக்கு (passive incomes) எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என்பதை மாற்ற பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. மூலதனச் சந்தைகளின் உலகளாவிய உயர்வு இந்த சீர்திருத்தங்களில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நிஃப்டி 50, 26.8 சதவீத லாபத்தை வழங்கியதன் மூலம் இந்தியாவும் இந்த ஏற்றத்தைக் கண்டுள்ளது. இந்தியாவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கால வர்த்தகத்தின் அதிகரிப்பை அறிந்துள்ளனர். நிதிநிலை அறிக்கை மூலதன ஆதாய வரி (capital gains tax) மற்றும் எதிர்கால விருப்பங்கள் மீதான அதிக பத்திர பரிவர்த்தனை வரியை அதிகரிக்க முன்மொழிந்தது.


2022-23ம் ஆண்டிற்கான மதிப்பீட்டில், நீண்டகால மற்றும் குறுகியகால மூலதன ஆதாயங்கள் வரிக் கணக்குகளில் பதிவான மொத்த வருவாயில் 11 சதவீதம் ஆகும். 2022-23ம் ஆண்டிற்கான நீண்டகால மூலதன ஆதாய வருமானத்தில் சுமார் 60 சதவீதம் ரூ. 500 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. மேலும், 40 சதவீதத்துக்கும் அதிகமான வருவாய்கள் பெருநிறுவனங்களால் பதிவாகியுள்ளன. எனவே, நீண்ட கால ஆதாயங்களுக்கான அதிக விலக்கு வரம்பு ரூ.1.25 லட்சம் ரூபாயானது, குறைந்த வருமான வரி செலுத்துவோருக்கு முதன்மையாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதிக வரி விகிதங்கள் மற்றும் குறியீட்டு நீக்கம் (indexation), போன்றவை அரசாங்கம் இனி முதலீடுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது.


வருமான வரிச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், அதில் உள்ள முக்கிய சர்ச்சைகளைத் தடுப்பதும் மற்றும் தீர்ப்பதும் ஆகும். விவாட் சே விஸ்வாஸ் திட்டம் (Vivad Se Vishwas scheme) நீண்டகால சர்ச்சைகளை தீர்க்க ஒரு வழியை வழங்குகிறது. மறுமதிப்பீட்டு காலத்தை (period of reassessment) குறைப்பது போன்றவை வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரி

துறைக்கு இடையேயான மோதல்களைத் தடுக்கும் வழிகளாகும்.


வருமான வரி (Income Tax) சட்டத்தை  மறுபரிசீலனை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில் உள்ள குறைபாடுகளைத் தீர்க்க, சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவுகளை கவனமாக மறுவடிவமைக்க வேண்டும். கடந்த காலத்தில் எளிமையாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் இந்த பணிகள் கூறப்பட்ட நோக்கங்களை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.



Original article:

Share:

மோடி ஆட்சியின் பொருளாதாரக் கொள்கையில் கூறப்படாத மாற்றம் -பிரவீன் சக்ரவர்த்தி

 பிரதமர் நரேந்திர மோடி அரசு, தனியார் நிறுவனங்களுக்கான புதிய வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (employment linked internship (ELI)) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதை அரசு ஒத்துக்கொள்கிறது. பிரச்சனை என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (gross domestic product (GDP)) வளர்ச்சி அதிக வேலை வேலைவாய்ப்புகளுக்கு  வழிவகுக்கவில்லை.


நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் பட்ஜெட்டுக்கு பிந்தைய பேட்டியில் “குறைந்த தானியங்கி இயந்திரம் அதிக உழைப்பையும்” பயன்படுத்துவதற்கு தொழில்துறையை அரசு  மேம்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் புதிய பட்ஜெட் அறிவிப்பு குறித்து அவர் பேசினார். இந்த அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை  திட்டத்தின்கீழ், நிறுவனங்கள் தாங்கள் பணியமர்த்தப்படும் ஒவ்வொரு புதிய பணியாளருக்கும் நிதி ஊக்கத்தொகை வழங்குகின்றன.  பல உரையாசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளனர். நிதி ஊக்குவிப்பு காரணமாக நிறுவனங்கள் அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தும் என்ற அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பகுப்பாய்வு குறுகியப் பார்வை கொண்டது. பொருளாதாரச் சிந்தனையில் ஒரு அடிப்படை மாற்றத்தை இழக்க செய்கிறது. நிதிச் செயலாளரின் அறிக்கை மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையில் பெரும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த புதிய நடவடிக்கைகள் பல விஷயங்களை ஒப்புக்கொள்கிறது. முதலில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைத் பின்தொடர்வதில் தவறான நம்பிக்கை இருந்தது. இரண்டாவதாக, மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையே ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. அரசு தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். 


சிறப்பாக செயல்படாத முயற்சிகள்


பத்தாண்டு காலமாக, பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் பாரம்பரியமான வாஷிங்டன் கருத்தொற்றுமையின் ட்ரிக்கிள்-டவுன் வளர்ச்சி (Washington Consensus’ trickle-down development model) மாதிரியைப் பின்பற்றியது. இந்த மாதிரி பொருட்கள் மற்றும் சேவைகளின் திறமையான உற்பத்தியை வலியுறுத்தியது. இது தானாக வேலைகள், வருமானங்கள் மற்றும் மக்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நிறுவனங்கள் உற்பத்தி செய்யும்போது, ​​மொத்த உள்நாட்டு உற்பத்தி வளரும், மற்றும் வேலைவாய்ப்பு உருவாகும். 2014-ல் தொடங்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' (Make in India) முயற்சி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நிறுவனங்கள் பல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்ற நம்பிக்கையுடன் உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


2019-ஆம் ஆண்டு  ஒன்றிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அவர்கள் பெருநிறுவன வரி விகிதங்களை கணிசமாகக் குறைக்க இருப்பதாக அரசு அறிவித்தது. நிறுவனங்கள் அதிக முதலீடு செய்து அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. 2020-ஆம் ஆண்டில், அரசாங்கம் ஒரு புதிய உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (production linked incentive (PLI)) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் நிறுவனங்களுக்கு ₹2 லட்சம் கோடி நிதி ஊக்கத்தொகையை வழங்கியது. உற்பத்தி இலக்குகளை அடைவதன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மீண்டும், அதிக உற்பத்தி மற்றும் அதிக வேலைகளை உருவாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதே இலக்காக இருந்தது. இருப்பினும், இந்த முயற்சிகள் எதிர்பார்த்த அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. நிறுவனங்கள் முதலீடு செய்யாமல் வரிக் குறைப்புகளை மட்டும் செய்தன அல்லது மக்களை வேலைக்கு அமர்த்துவதைவிட உபகரணங்களில் அதிக முதலீடு செய்தன. சுருக்கமாக, நிறுவனங்களுக்கான உற்பத்தி ஊக்கத்தொகைகள் மற்றும் வரிக் குறைப்புக்கள் மக்களுக்கு போதுமான வேலைகள் அல்லது வருமானத்தை அதிகரிக்க வழிவகுக்கவில்லை.


வேலைவாய்ப்புக்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (employment linked internship (ELI)) திட்டம் முந்தைய திட்டங்களின் தோல்வியை ஏற்று அதன் அணுகுமுறையை மாற்றியது. செல்வந்தர்களுக்கான ஆதாய (trickle-down)  முறைகளை நம்புவதற்குப் பதிலாக ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்களுக்கு இது நேரடி ஊக்கத்தை வழங்குகிறது. உற்பத்திச் சலுகைகள் உற்பத்திச் செலவைக் குறைக்கின்றன மற்றும் நிறுவனங்களை அதிக உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. இதேபோல், வேலைவாய்ப்பு ஊக்கத்தொகைகள் தொழிலாளர் செலவைக் குறைக்கின்றன மற்றும் அதிக நபர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்கின்றன.


வேலைவாய்ப்புக்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தை,  உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்துடன் இணைத்து பார்க்க வேண்டும். PLI என்பது உற்பத்தியை அதிகரிக்க ஒரு புனலின் மேற்பகுதியில் மேலும் சேர்ப்பது போன்றது. ELI என்பது வேலைகளை அதிகரிக்க புனலின் அடிப்பகுதியில் அதிகம் சேகரிப்பது போன்றது. அதிக வேலை வாய்ப்புகளையும் வருமானத்தையும் உருவாக்குவதே இந்த திட்டங்களின் இறுதி இலக்கு.


இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்


வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (employment linked internship (ELI)) திட்டம் மட்டும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உருவாக்காது. ஆனால், அது அவர்களின் முடிவுகளை பாதிக்கலாம். உபகரணங்களை வாங்குவதைவிட ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்களை இது ஊக்குவிக்கிறது. பல வணிக  நிறுவனங்கள் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஆட்களை தேர்வு செய்தல், அது ஒட்டுமொத்த வாய்ப்பு உருவகத்தை கணிசமாக அதிகரிக்கும்.

 

தொழில்நுட்பம் மற்றும் செயல்திறனில் கவனம் செலுத்தும் சில பொருளாதார வல்லுநர்கள், வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை  திட்டம்  ஒரு தவறான திட்டம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது இந்திய நிறுவனங்களை குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களின் கவலைகள் சில அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், உழைப்பை விட மூலதனத்தையும், வேலைகளை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் ஆதரிக்கும், தற்போதைய மாதிரி ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலையானது அல்ல.


வேலைகள் பற்றாக்குறை மற்றும் யோசனைகள் பற்றாக்குறை


வேலை பற்றாக்குறையானது கர்நாடகாவில் உள்ள அனைத்து வேலைகளையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்குவது போன்ற தீவிர திட்டங்களுக்கு வழிவகுக்கிறது. உண்மையான தீர்வுகளை ஆராயாமல் வெறுமனே இத்தகைய திட்டங்களை விமர்சிப்பது பயனுள்ளதாக இருக்காது. இந்தியாவில் வேலை பற்றாக்குறை மற்றும் அதை நிவர்த்தி செய்வதற்கான புதிய யோசனைகள் பற்றாக்குறை ஆகிய இரண்டும் உள்ளது. பொருளாதார வல்லுநர்கள் அடிக்கடி சீர்திருத்தங்களை பரிந்துரைக்கின்றனர். அவர்கள் பொதுவாக வேலைகளை உருவாக்குவதற்கு உழைப்பு, கல்வி, திறன்கள் மற்றும் வணிக சீர்திருத்தங்களை பரிந்துரைக்கின்றனர். 


வேலைவாய்ப்புக்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (employment linked internship (ELI)) திட்டம் அதிக வேலைகளை உருவாக்காது. ஆனால், இது மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு மற்றும் இந்தியாவில் வேலையின்மை வளர்ச்சியின் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு புதிய அணுகுமுறையாகும். இது செல்வந்தர்களுக்கான ஆதாய (trickle-down)   பொருளாதாரத்திலிருந்து கீழிருந்து-மேல் (bottom-up solutions) தீர்வுகளுக்கு மாறுவதைக் குறிக்கிறது.


பிரவீன் சக்ரவர்த்தி, அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸின் தலைவராக உள்ளார்.



Original article:

Share:

சீன - இந்திய சந்தை உறவுகளுக்கான (Dragon-Elephant tango) ஐந்து வழிகாட்டுதல்கள் -எக்ஸ்.யூ ஃபைஹாங்

 'ஐந்து பரஸ்பரங்கள்' உருவாக்கம் சீனா-இந்தியா உறவுகளை மீண்டும் நிலையான மற்றும் நல்ல பாதைக்கு கொண்டு வர உதவும்.


'ஐந்து பரஸ்பரம்' வழிகாட்டுதல்கள்


சீனாவும் இந்தியாவும் நெருங்கிய அண்டை நாடுகள். பழங்காலம் முதல் ஒருவரிடமிருந்து ஒருவர் நிறைய கற்றுக்கொண்டோம். தற்போது, நல்ல மற்றும் துயரமான செய்திகளையும்  பகிர்ந்துக் கொள்கிறோம். இன்று புத்துணர்ச்சிக்கான பொதுவான காரணத்தைக் கொண்டுள்ளோம். சீனா-இந்தியா உறவுகள் இருதரப்பு உறவுகளில் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சீனா-இந்தியா உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும் சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று போட்டியாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ இல்லை. மாறாக ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளில் சமமானவர்கள் என்ற ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர். இது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கான தெளிவான பாதையை வழங்குகிறது. அதை எவ்வாறு திறம்பட செயல்படுத்துவது என்பதை  கவனத்தில் கொள்ள  வேண்டும். சீன வெளியுறவு அமைச்சர் (Foreign Minister) வாங் யீ (Wang Yi ) சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இரண்டு முறை சந்தித்து, சீனாவும் இந்தியாவும் பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிதல், பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர தங்குமிடம் மற்றும் பரஸ்பர சாதனை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேற்கூறிய ஒருமித்த கருத்தை செயல்படுத்துவதற்கு "ஐந்து பரஸ்பரம்" (Five Mutuals) ஒரு குறிப்பிடத்தக்க வழிகாட்டுதலை வழங்குகிறது. இவை இரண்டு பெரிய அண்டை நாடுகளும் நன்றாகப் பழகுவதற்கு வழிகாட்டும் கொள்கைகளாகவும் இருக்கும். ஐந்து பரஸ்பரங்கள் (Five Mutuals) சீனா-இந்திய உறவுகளை மீண்டும் ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வருவதற்கு உகந்ததாக உள்ளது. 


முன்பு, மகாராஷ்டிராவுக்குச் சென்று, ஒரு பாரம்பரிய இந்திய திருமணத்தில் கலந்துகொண்டு, உள்ளூர் நாட்டுப்புற உடைகளை அணிந்து மசாலா டீயை சுவைத்தது, இரண்டு பழங்கால நாகரிகங்களாக, சீனாவும் இந்தியாவும் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள், கலாச்சார மரபுகள் மற்றும் வளர்ச்சிப் பாதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவத்தைக் இரு நாடுகளும் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த வேறுபாடுகள் வரலாற்றில் ஒருவரையொருவர் ஈர்ப்பதிலும் ஊக்குவிப்பதிலும் இருந்து நம்மைத் தடுக்கவில்லை. புதிய சகாப்தத்தில், ஒருவரையொருவர் திறந்த மனதுடன் பார்ப்பது, ஒருவருக்கொருவர் வளர்ச்சி பாதை, சமூக அமைப்பு மற்றும் உலக அரங்கில் பங்கு ஆகியவற்றுக்கு இணங்க,  இரு நாடுகளின், பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்பைக் கூட்டாக ஊக்குவிப்பது இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. 


பரஸ்பர புரிதல்தான் சீனா-இந்தியா உறவுகளின் வளர்ச்சியின் அடிப்படை. இரண்டு மக்களும் தேசிய சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான போராட்டங்களில் ஒருவருக்கொருவர் இணையானவர்கள். இந்தியாவின் தேசிய மறுமலர்ச்சிக்கான வெளிப்பாட்டை சீனா புரிந்துகொள்கிறது, மேலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கிறது. இரு நாடுகளும் பெரிய வளரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 1.4 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் நல்ல வாழ்க்கை வாழ இது எவ்வளவு பெரிய காரணம் என்பதையும், அதற்கு எவ்வளவு முயற்சி தேவை என்பதையும் சீனாவை விட வேறு எந்த நாடும் புரிந்து கொள்ளவில்லை. இதற்கிடையில், இந்திய மக்களுடன் உரையாடியபோது, ​​இரு நாடுகளுக்கு  இடையேயான பரிமாற்றங்களும் புரிதலும் போதுமானதாக இல்லை என்பது தெரிகிறது. இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்காக அரசியல் மற்றும் பொது அடித்தளத்தை பலப்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளில் அனைத்து மட்டங்களிலும் உரையாடல் மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல், இரு நாட்டு மக்களிடையே அதிக பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல், பரஸ்பர புரிதல் மற்றும் அரசியல் நம்பிக்கையை மேலும் ஊக்குவிக்கும்.


பரஸ்பர நம்பிக்கையே சீனா-இந்தியா உறவுகளின் வளர்ச்சிக்கு முக்கியமாகும். சர்வதேச நிலைமை முன்பை விட மிகவும் நிலையற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் உள்ளது. இரு நாடுகளும் வளர்ந்து வரும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருப்பதால், சீனாவும் இந்தியாவும் ஒன்றாக வளர்வதற்கு நாடுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அதிகமான மக்கள் உணர்ந்துள்ளனர்.  இருதரப்பு உறவுகளை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அதற்கு, ஒருவருக்கொருவர் சரியான நியாமான கருத்தை உருவாக்க வேண்டும். ஒருவருக்கொருவர்  நிலையான நோக்கங்களை ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும் மற்றும் சரியான பார்வையில் இணைய வேண்டும்.  சீனாவும் - இந்தியாவும் போட்டியாளர்களாக இருப்பதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் நட்பு நாடுகளாகவும், அச்சுறுத்தல்கள் இல்லாமலும் இருந்தால் இரு நாடுகளுக்கு இடையே உள்ள  சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்க்கலாம். இதை நல்ல நட்பு மற்றும் நம்பிக்கையுடன் இரு நாடுகளின் பரிமாற்றங்களை செயல்படுத்தினால் இரு நாடுகளின் வளர்ச்சியை  இமயமலையால் கூட தடுக்க முடியாது. சீன மக்கள் என்றென்றும் இந்திய மக்களின் நல்ல நண்பர்களாக இருக்கவும், நல்லிணக்கத்துடன் வாழவும், பொதுவான வளர்ச்சியைப் பின்பற்றவும் தயாராக உள்ளனர்.


இரு நாடுகளின் விரிவான உறவு


பரஸ்பர புரிதல்கள் சீனா - இந்தியா உறவுகளின் வளர்ச்சியை உறுதி செய்கிறது. சீனாவும் இந்தியாவும் எப்போதும் நெருக்கமாக இருக்கும் அண்டை நாடுகளாகவே தொடர்ந்து இருக்கும். சில நேரங்களில் ஏற்படும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகள்  ஏற்படுவது இயற்கை. வேறுபாடுகளைப் பற்றிய சரியான கருத்தை உருவாக்கி அவற்றை சரியான முறையில் கையாள்வதே முக்கியமானது. பண்டைய நாகரிகங்களின் அரசியல் ஞானத்தை இரு நாடுகளும் பெற்றிருப்பதால், இரு நாடுகளின் நலன்கள் மற்றும் விவாதத்திற்கு இடமளிக்காமல், அவற்றை உரையாடல் மூலம் ஏற்படும் வேறுபாடுகளை சரியாகக் கையாள்வதற்கும், நல்ல தீர்வை உருவாக்க வேண்டும். இதற்கிடையில், இரு நாடுகளின் உறவு எல்லா வகையிலும் நல்ல நிலையில் உள்ளது. மேலும், இரு நாடுகளின்  ஒத்துழைப்பை எந்த ஒரு சிறு சம்பவத்தாலும் சீர்குலைக்க முடியாது.


பரஸ்பர புரிதல்கள் என்பது சீனா-இந்தியா உறவுகளின் வளர்ச்சியில் இன்றியமையாதது. முக்கியமான வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளான, சீனாவும் இந்தியாவும் தேசிய வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியின் முக்கியமான கட்டத்தில் உள்ளன. மேலும், பரந்த பொது நலன்களையும் ஒத்துழைப்பிற்கான இடத்தையும் இரு நாடுகளும் அனுபவிக்கின்றன. சமீபத்தில் முடிவடைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China) 20வது மத்தியக் குழுவின் மூன்றாவது முழு அமர்வு, விரிவான மற்றும் ஆழமான சீர்திருத்தத்தின் புதிய பயணத்தைத் தொடங்கியது. சீனா அனைத்து முனைகளிலும் சீன நவீனமயமாக்கலை முன்னெடுத்து வருகிறது. இது உலகிற்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். இந்தியாவும் “விக்சித் பாரத் 2047” (Viksit Bharat 2047) என்ற பார்வையைக் கொண்டுள்ளது. இந்தியா தேசிய வளர்ச்சியில் புதிய சாதனைகளை நிகழ்த்துவதையும், சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் கண்டு சீனா மகிழ்ச்சி அடைகிறது. ஒருவருக்கொருவர் வெற்றி பெறவும், பொதுவான வளர்ச்சி மற்றும் புத்துயிர் பெறவும், உலகளாவிய தெற்காசியாவின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் மனித குலத்திற்கு  ஒரு நல்ல வலுவான சமூகத்தை உருவாக்க, இந்தியாவுடன் சீனா இணைந்து பணியாற்ற விரும்புகிறது.


அமைதியான வாழ்விற்கான கோட்பாடுகள்


"ஐந்து பரஸ்பரங்கள்" (Five Mutuals) அமைதியான வாழ்விற்கான ஐந்து கோட்பாடுகளை முன்னெடுத்து, மேலும் அதை மேம்படுத்துகிறது. மேலும் இந்தியத் தலைவரால் முன்மொழியப்பட்ட "பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன்களை" இவை எதிரொலிக்கிறது. இரு தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்த, இரு தரப்பினருக்கும் இவை பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும். இந்தியா-சீனா உறவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது சாதரணம். இரண்டு பெரிய பண்டைய நாகரிகங்களாக, இருதரப்பும் இருப்பதால் இருதரப்பு உறவுகளை சரியான திசையில் வழிநடத்தி, கூட்டாக ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க முடியும். ஜூன் 2024ல், பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தின் திறப்பு விழாவில், 1,400 ஆண்டுகளுக்கு முன்பு, துறவி சுவான்சாங் படித்த அதன் பழங்கால இடிபாடுகளைப் பார்வையிட்ட போது, இரு நாடுகளும் நெருங்கிய வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டிருந்ததை காணலாம். 21-ஆம் நூற்றாண்டில், இருதரப்பு உறவுகளை நாம் சிறப்பாக வளர்த்துக் கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.


இரு நாடுகளும் ஒரே குரலில் பேசினால், உலகம் முழுவதும் கேட்கும் என்று அதிபர் ஜி ஜின்பிங் கூறினார். இந்தியாவும் சீனாவும் ஒரே உயிர் கொண்ட இரண்டு உடல்கள் என்று பிரதமர் மோடி கூறினார். "டிராகன்-யானை டேங்கோ" (Dragon-Elephant Tango) என்பது இரு தரப்புக்கும் ஒரே சரியான தேர்வு.


இரு நாடுகளின் தலைமையின் கீழ், சீனாவும் இந்தியாவும் தங்கள் உறவை நல்ல முறையில் நிர்வகிக்க முடியும் மற்றும் அமைதியான வாழ்வு மற்றும் கூட்டு வளர்ச்சிக்கான பாதையை உருவாக்க முடியும்.



Original article:

Share: