தலைமை நீதிபதி சந்திரசூட்டின் 7 முக்கிய தீர்ப்புகள் -ரோஷ்னி யாதவ்

 இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அவரது பதவிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட சில முக்கியமான தீர்ப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் இறுதி நாட்கள் இந்த வாரம் என்பதால், இவர் மே 2016-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்திற்கு தலைமைப் பொறுப்பேற்று முக்கியப் பங்காற்றியபோது, ஏற்பட்ட சில முக்கியமான தீர்ப்புகள் மற்றும் முன்னேற்றங்களைப் பற்றி சிந்திப்போம். 


தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை அங்கீகரிப்பது, ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்குவது மற்றும் தேர்தல் பத்திரத் திட்டத்தைத் தடுப்பது முதல், அவரது புலமையையும், நீதித்துறையும் கலந்த தீர்ப்புகள், அவர் ஓய்வுபெற்ற நவம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு, நீதிமன்றத்தின் எதிர்கால தீர்ப்புகள் மற்றும் சட்டத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை எதிர்நோக்கியுள்ளோம்.


  1. நீதிபதி கே.எஸ். புட்டசாமி vs இந்திய ஒன்றியம் (தனியுரிமைக்கான உரிமை வழக்கு-Right to Privacy Case)


ஆகஸ்ட், 2017-ம் ஆண்டில், நீதிபதி கே. புட்டசாமி vs இந்திய ஒன்றியம் (K. Puttaswamy vs Union of India) வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்தது. இதில், "தனிமனித  உரிமையானது, பிரிவு 21-ன் கீழ் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் முக்கியமான பகுதியாக பாதுகாக்கப்படுகிறது. மற்றும் அரசியலமைப்பின் பகுதி III ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும்.


இந்த தீர்ப்பில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அமர்வில் மற்ற அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஏப்ரல் 28, 1976-ம் ஆண்டு, ADM ஜபல்பூர் vs ஷிவ்காந்த் சுக்லா (ADM Jabalpur vs Shivkant Shukla) வழக்கில் அவசரகாலத் தீர்ப்பை வெளிப்படையாக நிராகரித்தார். நீதிபதி சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி. சந்திரசூட், வாழ்வதற்கான அடிப்படை உரிமை அரசியலமைப்பின் கொடை என்றும், இது அவசரநிலையின் போது இடைநீக்கம் செய்யப்படலாம் என்றும் தீர்ப்பளித்த அமர்வில் பெரும்பான்மையானவர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  1. ஷபின் ஜஹான் vs இந்திய ஒன்றியம் (ஹாதியா வழக்கு-Hadiya case)


புகழ்பெற்ற ஹாதியா வழக்கில், உச்சநீதிமன்றம், “தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்யும் உரிமையானது அரசியலமைப்பின் பிரிவு 21 (உயிர் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை) உடன் ஒருங்கிணைந்ததாகும்” என்று கூறியது. மேலும், கேரள முஸ்லிம் மதம் மாறிய பெண் ஹதியா மற்றும் ஷெபின் ஜஹான் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர்நீதிமன்றத்தின் 2017 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்தது.


இந்த வழக்கில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரின் இரண்டு விரிவான ஒருங்கிணைந்த தீர்ப்புகளை வழங்கியது.


ஒருவர் தனக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது, திருமணத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ, ஒவ்வொரு தனிநபரையும் சார்ந்தது. திருமணம் என்பது தனிப்பட்ட விஷயம், அதை மீறக்கூடாது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் தனிநபரின் உரிமை மத நம்பிக்கைகளால் பாதிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும், பரப்பவும் உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதேபோல், மதம் மற்றும் திருமணத் தேர்வுகள் தனிப்பட்ட முடிவுகளாகும். அங்கு தனிமனித சுதந்திரம் மிக முக்கியமானது. ஒரு நபரின் இணையைத் தேர்ந்தெடுப்பதை மாநிலமோ அல்லது சட்டமோ கட்டுப்படுத்த முடியாது அல்லது அத்தகைய முடிவுகளை தேர்ந்தெடுப்பதைக் கட்டுப்படுத்த முடியாது. நீதிபதி சந்திரசூட் கூறியது போல் இந்த தேர்வுகள் அரசியலமைப்பின் கீழ் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மைய கருத்தாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.


  1. டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு vs இந்திய ஒன்றியம்


இந்த வழக்கில், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும், ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட துணைநிலை கவர்னருக்கும் (Lieutenant Governor (LG)) இடையிலான ஒட்டுமொத்த சர்ச்சையின் முக்கிய பகுதியாக சேவைகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய கேள்வி இருந்தது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. சேவை நிர்வாகத்தில் அதிகாரத்துவத்தை சட்டமன்றம் கட்டுப்படுத்துகிறது என்று அமர்வு தீர்ப்பளித்தது. இருப்பினும், தேசிய தலைநகர் பிரதேசத்தின் (National Capital Territory (NCT)) சட்டமன்ற அதிகாரங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு இது பொருந்தாது. டெல்லி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்று பகுதிகள் உள்ளன. அவை பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் ஆகியவை ஆகும்.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதாவது, “தேசிய தலைநகர் டெல்லியின் அரசாங்கத்தின் (National Capital Territory of Delhi (GNCTD)) பிரிவு 41 மீதான சட்டமியற்றும் மற்றும் நிர்வாக அதிகாரம் பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் தொடர்பான சேவைகளுக்கு நீட்டிக்கப்படாது. எவ்வாறாயினும், பிராந்தியத்தின் அன்றாட நிர்வாகத்தின் அடிப்படையில் NCTD-ன் கொள்கைகள் மற்றும் பார்வையை செயல்படுத்துவதற்குப் பொருத்தமான இந்திய ஆட்சிப் பணி (IAS) அல்லது கூட்டுப் பணியாளர் சேவைகள் (joint cadre services) போன்ற சேவைகள் மீதான சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரம் டெல்லிக்கு இருக்கும்.


  1. இந்திய ஒன்றியத்தில் நவ்தேஜ் ஜோஹர்


ஜூன் 2016-ம் ஆண்டில், சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் நவ்தேஜ் சிங் ஜோஹர் மேலும் நான்கு பேருடன் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். ஐந்து பேரும் LGBTQI சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 377-ஐ சவால் செய்தனர். (நாஸ் அறக்கட்டளை வழக்கு ஒரு பொது நல வழக்காகும்)


ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில், ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் அளவிற்கு இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 377-ஐ ரத்து செய்தது. 'நவ்தேஜ்' தீர்ப்பின் அடிப்படையில் LGBTQ சமூகம் சமமான குடிமக்கள் என்று கூறியது மற்றும் பாலியல் நோக்குநிலை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் சட்டத்தில் பாகுபாடு இருக்க முடியாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


டி.ஒய்.சந்திரசூட், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப் நாரிமன், ஏ.எம்.கான்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோருடன் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் ஒரு பகுதியாக இருந்தார்.


  1. சொத்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பிறர் vs மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் பிறர்


இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்பின் 39 (பி) பிரிவில் மறுபங்கீடு செய்வதற்கு அனைத்து தனியார் சொத்துக்களையும் "சமூகத்திற்கு சொந்தமான வளங்களாக" கருத முடியாது என்று தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பில், இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் பெரும்பான்மை தீர்ப்புக்காக எழுதினார். இவருடன் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிண்டல், சதீஷ் சந்திர சர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், நீதிபதி பி.வி. நாகரத்னா ஒருமித்த கருத்தை எழுதினர். நீதிபதி சுதன்ஷு துலியா இதற்கு மறுப்பு தெரிவித்தார்.


  1. தேர்தல் பத்திர வழக்கு (Electoral Bonds Case)


பிப்ரவரி 2024-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியல் நிதியுதவிக்கான ஒன்றிய அரசின் தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பில், வருமான வரிச் சட்டம் (Income Tax Act) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of Peoples Act) 29C பிரிவுகளில் திருத்தங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிமன்றம் அறிவித்தது. பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India (SBI)) "தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றும், இதுவரை பத்திரங்களை பணமாக்கியவர்களின் அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.


  1. எம் சித்திக் (D) Thr Lrs vs மஹந்த் சுரேஷ் தாஸ் & பிறர் 


இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஒருமனதாக தீர்ப்பளித்தது. இதில், சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்படும் எனவும், இதை அறக்கட்டளைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், முஸ்லிம்களின் பெயரில் "பங்கு” (equity), மசூதி கட்டுவதற்கு அந்த இடத்திற்கு அருகில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அல்லது “அயோத்தியில் பொருத்தமான முக்கிய இடத்தில்” ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.


தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.நசீர் ஆகியோருடன் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பு இடம்பெற்றது. இந்த தீர்ப்பின் மூலம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோஹி அகாரா பிரிவினர், ராம்லல்லா விராஜ்மான் தெய்வம் மற்றும் உ.பி. சன்னி மத்திய வக்பு வாரியம் இடையே மும்முனையாகப் பிரித்து வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் செப்டம்பர் 30, 2010 தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.




Original article:

Share:

அனைத்து தனியார் சொத்துக்களும் மறுபகிர்வுக்கான 'சமூகப் பொருள் வளம்' அல்ல : உச்சநீதிமன்ற தீர்ப்பைப் புரிந்துகொள்ளுதல் -அபூர்வா விஸ்வநாத்

 முக்கியமான உச்சநீதிமன்ற தீர்ப்பு, சொத்து, சொத்து வைத்திருக்கும் உரிமை மற்றும் சமூகத்துடனான உறவை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதில் தாக்கங்களைக் கொண்டுள்ளது.  


உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு, நவம்பர் 5-ம் தேதி  செவ்வாய் கிழமையன்று தீர்ப்பளித்ததாவது, அரசியலமைப்பின் 39 (பி)-ல் கூறப்பட்டுள்ளபடி, "சமூகத்தின் பொருள் வளங்கள்" (material resources of the community) என்று கூறி, தனியாருக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசாங்கம் எடுத்து மறுபங்கீடு செய்ய முடியாது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.வி.நாகரத்னா, சுதான்ஷு துலியா, ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிண்டால், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 


முதலாவதாக, ட்டப்பிரிவு 31C, சொத்துரிமை தொடர்பான முக்கிய அரசியலமைப்பு விதி, அடுத்தடுத்த திருத்தங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம்  திருத்தங்களைத் தடை செய்த போதிலும் இந்த சட்டப்பிரிவு நடைமுறையில் இன்னும் உள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும்.


இரண்டாவதாக, அரசியலமைப்பின் 39C பிரிவின் விளக்கம் 


சொத்து, சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் உரிமை, சமூகத்துடனான இதன் உறவு ஆகியவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதற்கான தாக்கங்களை இந்த முக்கியமான தீர்ப்பு கொண்டுள்ளது. 


நீதிபதி சந்திரசூட் தனக்கும் மற்ற ஏழு நீதிபதிகளுக்கும் ஒரு தீர்ப்பு எழுதினார். நீதியரசர் நாகரத்னா இணக்கமான கருத்தை எழுதினார். நீதிபதி துலியா இதற்கு உடன்படவில்லை மற்றும் மாறுபட்ட கருத்தை எழுதியுள்ளார்.


சட்டப்பிரிவு 31C இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா? 


சட்டப்பிரிவு 31C முதலில் "சமூகத்திற்கு சொந்தமான வளங்கள்" (material resources of the community) பொது நன்மைக்கு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இயற்றப்பட்ட சட்டங்களைப் பாதுகாப்பதற்காக சட்டப்பிரிவு 39(b) மற்றும் சட்டப்பிரிவு 39(c)-ல் கூறப்பட்டுள்ளபடி வளங்கள் மற்றும் உற்பத்திக்கான  வழிகள் "பொது தீங்கு" (common detriment) விளைவிப்பதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது.


எவ்வாறாயினும், அவசரநிலைக்கு முந்தைய காலத்தில், வங்கி தேசியமயமாக்கல் வழக்கு போன்ற அரசாங்கத்தின் சோசலிச கொள்கைகளை நீதிமன்றம் தாக்கியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அரசியலமைப்பு (இருபத்தி ஐந்தாவது) திருத்தச் சட்டம், 1971 மூலம் பிரிவு 31 சி திருத்தப்பட்டது. சட்டப்பிரிவு 39-ன் உட்பிரிவுகள் (பி) அல்லது (சி) இல் உள்ள கொள்கைகளைப் பாதுகாக்க அரசின் கொள்கையை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு சட்டமும் இல்லை என்று திருத்தம் கூறியது. மேலும், விதிகள் 14, 19 அல்லது 31-ன் கீழ் ஏதேனும் உரிமைகளுடன் சட்டம் முரண்பட்டாலும் அல்லது குறைக்கப்பட்டாலும் கூட இது பொருந்தும். மேலும், இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கும் எந்தவொரு சட்டமும் அவ்வாறு செய்யத் தவறியதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.


இந்தத் திருத்தம், 1973-ம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 13 நீதிபதிகள் 7-6 பெரும்பான்மையுடன் தீர்ப்பளித்தனர். அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு "அடிப்படை கட்டமைப்பு" (basic structure) உள்ளது. அதை, அரசியலமைப்பு திருத்தம் மூலம் கூட மாற்ற முடியாது என்று அவர்கள் முடிவு செய்தனர்.


1976-ம் ஆண்டில், நாடாளுமன்றம் அரசியலமைப்பு (நாற்பத்தி இரண்டாவது) திருத்தச் சட்டத்தை இயற்றியது. இந்த திருத்தம் பிரிவு 31C-ன் கீழ் "அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி-IV-ல் கூறப்பட்டுள்ள அனைத்து அல்லது எந்தக் கொள்கைகளுக்கும்" பாதுகாப்பை விரிவுபடுத்தியது. இதன் விளைவாக, ஒவ்வொரு நெறிமுறைக் கோட்பாடு கொள்கையும் (பிரிவு 36-51) அரசியலமைப்பின் பிரிவுகள் 14 மற்றும் 19-ன் கீழ் உள்ள சவால்களிலிருந்து விடுபடுகிறது. 


உச்ச நீதிமன்றம் 1980-ம் ஆண்டில் ”மினர்வா மில்ஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா” (Minerva Mills vs Union of India) என்ற தீர்ப்பில் இந்த விதியை ரத்து செய்தது.


2024-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள கேள்வி என்னவென்றால், 1978-1980ஆம் ஆண்டுக்கு இடையில், உச்ச நீதிமன்றம் 31 சி பிரிவை ஒட்டுமொத்தமாக இரத்து செய்ததா அல்லது கேசவானந்த பாரதிக்கு பிந்தைய நிலையை மீட்டெடுத்ததா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.  இங்கு பிரிவுகள் 39 (பி) மற்றும் (சி) பாதுகாக்கப்பட்டன. கேசவானந்தாவுக்குப் பிந்தைய பதவி மீண்டும் நிலைநாட்டப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


அரசியலமைப்பின் பிரிவு 39(b) இன் விளக்கம் பற்றி


இரண்டாவது கேள்வியாக, தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியுமா என்பது நீதிமன்றத்தின் முன் உள்ள கேள்வியாகும். அரசியலமைப்பின் பிரிவு 39(பி) இல் கூறப்பட்டுள்ளபடி, சொத்துக்கள் "சமூகத்திற்கு சொந்தமான வளங்களாக" (material resources of the community) கருதப்பட்டால் இது சாத்தியமாகும்.


"அரசின்  வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்" (Directive Principles of State Policy(DPSP)) என்ற தலைப்பில் அரசியலமைப்பின் பகுதி IV இன் கீழ் வரும் பிரிவு 39(b) "சமூகத்திற்கு சொந்தமான வளங்களின் உரிமை மற்றும் கட்டுப்பாடு பொது நன்மைக்கு துணைபுரியும் வகையில் சிறப்பாக விநியோகிக்கப்படுவதை" பாதுகாப்பதற்கான கொள்கையை உருவாக்குவதற்கான கடமையை அரசின் மீது வைக்கிறது. அரசின்  வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாட்டு (DPSP) சட்டங்களை இயற்றுவதற்கான வழிகாட்டும் கொள்கைகளாக இருக்க வேண்டும். ஆனால், எந்த நீதிமன்றத்திலும் நேரடியாக செயல்படுத்த முடியாது. 


1977-ம் ஆண்டு முதல், உச்ச நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் சட்டப்பிரிவு 39(பி)-ன் விளக்கத்தை எடுத்துரைத்துள்ளது. குறிப்பாக, கர்நாடக அரசு vs ஸ்ரீ ரங்கநாத ரெட்டி-1977 (State of Karnataka vs Shri Ranganatha Reddy) வழக்கு ஆகும். இந்த வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 4: 3 என்ற பெரும்பான்மையில், தனியாருக்குச் சொந்தமான வளங்கள் "சமூகத்திற்கு சொந்தமான வளங்களின்" வரம்பிற்குள் வராது என்று கூறியது. இருப்பினும், நீதிபதி கிருஷ்ண ஐயரின் கருத்துதான் அடுத்தடுத்த ஆண்டுகளில் செல்வாக்கு பெற்றது.


சஞ்சீவ் கோக் உற்பத்தி நிறுவனத்துக்கு vs பாரத் கோக்கிங் நிலக்கரி-1983 (Sanjeev Coke Manufacturing Company vs Bharat Coking Coal) என்ற வழக்கில் 39(b) பிரிவு பின்னர் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் உறுதி செய்யப்பட்டது. நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அவற்றின் கோக் உள்கட்டமைப்பு ஆலைகளை தேசியமயமாக்கும் ஒன்றிய சட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்தது. "செல்வத்தை தனியார் சொத்திலிருந்து பொது சொத்தாக மாற்றுவதை” இந்த விதி உள்ளடக்கியது என்று நீதிமன்றம் கூறியது. ஏற்கனவே, பொது சொத்தாக இருப்பதை கட்டுப்படுத்தப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. 


நீதிபதி கிருஷ்ண ஐயரின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் இப்போது திறம்பட எதிர்த்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விவரம் எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், ஒரு தனிநபருக்கு சொந்தமான ஒவ்வொரு சொத்தும் சமூகத்திற்கு சொந்தமான வளங்களாக" (material resources of the community) இருக்க முடியாது என்ற கருத்தை பெரும்பான்மையான பார்வைகள் கொண்டுள்ளன. 




Original article:

Share:

ஜார்கண்ட் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக நூற்றாண்டுகளாக எப்படிப் போராடி வந்தனர்? -நிகிதா மோஹ்தா

 ஜார்க்கண்ட் மாநிலத்தின் வரலாறு எப்போதும் அதன் பழங்குடி சமூகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உண்மையில், தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு வழிவகுத்த இயக்கம் 1767-ம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு பழங்குடி கிளர்ச்சியுடன் தொடங்குகிறது. 


ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code (UCC)) அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில், பழங்குடி சமூகங்கள் இதன் விதிகளில் இருந்து விலக்கப்படும் என்றும், அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பேணப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினரின் நலனுக்கான இந்த அர்ப்பணிப்பு புதியதல்ல. இது, மாநிலத்தின் பழங்குடி மக்களின் தேவைகள் மற்றும் நலன்கள் தேர்தல் அறிக்கைகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. இது மாநிலத்தில் இந்த சமூகத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக-அரசியல் நிலப்பரப்பில் பழங்குடியினர் முக்கிய பங்கு வகித்துள்ளனர் மற்றும் அவர்களின் போராட்டங்கள் பல வரலாற்று நிகழ்வுகளைத்  தூண்டியுள்ளன. 


ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பகுதி கிழக்கு இந்தியாவில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமியில் அமைந்துள்ளது. 1765-ம் ஆண்டில், வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா போன்ற பிராந்தியங்களுக்கு முகலாயர்கள் திவானி உரிமைகளை வழங்கிய பின்னர், ஆங்கிலேயர்கள் பீகாரின் ஒரு பகுதியான ஜார்க்கண்ட் மீது வருவாய் ஈட்ட அனுமதியைப் பெற்றனர். 


பல ஆண்டுகளாக, சோட்டா நாக்பூர் பீடபூமியில் முண்டா, சந்தால், ஓரான், ஹோ மற்றும் பிர்ஹோர் போன்ற பல்வேறு பழங்குடியினரின் தாயகமாக உள்ளது. லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் சமூக மானுடவியல் பேராசிரியரான நதீம் ஹஸ்னைன், தனது ”பழங்குடியினர் இந்தியா” (Tribal India) என்ற புத்தகத்தில், இந்த பழங்குடியினரைச் சேர்ந்த தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த எண்ணிக்கை அனைத்து பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கும், தேசிய சராசரியான 44.7 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. இவர்கள், சாகுபடியை நம்பியிருப்பது அவர்களுக்கு நிலத்தை ஒரு முக்கிய சொத்தாக ஆக்குகிறது.


18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்தியபோது, அவர்கள் வணிக விவசாயம் மற்றும் சுரங்கத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நிர்வாக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தினர். இதனால், பல பழங்குடியினரை தங்கள் பூர்விக நிலங்களிலிருந்து இடம்பெயரச் செய்தது. இந்த வளச் சுரண்டலுக்கு எதிர்வினையாக, பழங்குடியினத் தலைவர்கள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இயக்கங்களையும், கிளர்ச்சிகளையும் நடத்தினர். 


மறைந்த அறிஞர்களான ராம் தயாள் முண்டா மற்றும் பிஷேஷ்வர் பிரசாத் கேசரி ஆகியோர் 2003-ம் ஆண்டு எழுதிய 'ஜார்க்கண்ட் இயக்கத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள்' (Recent Developments In The Jharkhand Movement) என்ற கட்டுரையில், 1769-93 ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டம் ”வெளிப்படையான கிளர்ச்சியின் காலம்” (period of open revolt) என்று குறிப்பிடுகின்றனர்.


தால் கிளர்ச்சி முதல் முண்டா கிளர்ச்சி வரை 


ஜார்க்கண்டில் ஆங்கிலேய ஆட்சியின் போது நடந்த முதல் பழங்குடியினர் கிளர்ச்சி 1767-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியான தல்பூமின் முன்னாள் மன்னர் ஜகந்நாத் தால் தலைமையில் நடந்த ‘தால் கிளர்ச்சி (Dhal Revolt)’ ஆகும். உள்ளூர் மக்களை ஒடுக்கப்பட்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தூண்டப்பட்ட இந்த கிளர்ச்சி 10 ஆண்டுகள் நீடித்தது. நடந்து கொண்டிருந்த கிளர்ச்சியின் அமைதியின்மைக்கு பதிலளிக்கும் விதமாக, ஆங்கிலேயர்கள் 1777-ம் ஆண்டில் ஜகந்நாத் தாலை தால்பமின் ஆட்சியாளராக மீண்டும் நியமித்தனர். 


இருப்பினும், இது ஒரு ஆரம்பம்தான். அதைத் தொடர்ந்து பல கிளர்ச்சிகள் நடந்தன. அவற்றில், இரண்டு குறிப்பிடத்தக்க கிளர்ச்சிகள் முண்டா கிளர்ச்சி மற்றும் தானா பகத் இயக்கம் என்று ஹஸ்னைன் கூறுகிறார். "பீகார்-ஜார்க்கண்ட் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட பழங்குடி இயக்கங்களில், பிர்சா இயக்கம் மிகவும் பரவலானது மற்றும் நன்கு அறியப்பட்டதாகும். தானா பகத் இயக்கத்திற்குப் பிறகு, நீண்டகால சமூக-அரசியல் தாக்கங்களின் பன்முக முக்கியத்துவம் காரணமாக மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது" என்று ஹஸ்னைன் குறிப்பிடுகிறார். 


1899 முதல் 1900-ம் ஆண்டு வரை நீடித்த முண்டா கிளர்ச்சி, ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்களின் கீழ் பாரம்பரியமாக விவசாயிகளாக இருந்த முண்டாக்கள் எதிர்கொண்ட சுரண்டலுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க பதிலாக கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த கிளர்ச்சிக்கு பிர்சா முண்டா தலைமை தாங்கினார். அவர் தெய்வீக உத்வேகம் கொண்ட ஒரு இளம் மற்றும் துடிப்பான தலைவர் ஆவார். இந்த இயக்கம் கொரில்லா போர் மற்றும் காலனித்துவ சொத்துக்கள் மற்றும் அதிகாரிகள் மீது நேரடி தாக்குதல்களை நடத்தியது.


இந்த இயக்கம் ஜார்க்கண்டில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பரவலான ஒன்றாகும். அது தெளிவான நோக்கங்களைக் கொண்டிருந்தது. இது, ஆங்கிலேய  அரசாங்கத்தை தூக்கியெறிவது, பிராந்தியத்திலிருந்து வெளிநாட்டினரை வெளியேற்றுவது மற்றும் ஒரு சுதந்திரமாக முண்டா அரசை நிறுவுவது, கந்துவட்டிக்காரர்கள், நில உரிமையாளர்கள், அறக்கட்டளைகள் மற்றும் பிற ஒடுக்குமுறையாளர்களை குறிவைத்து தைரியமாக போராட்டத்தில் இணையுமாறு  பிர்சா தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார். ஆரம்பத்தில் ராஞ்சியில் ஆங்கிலேய கம்பெனி இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பிர்சா விரைவில் விடுவிக்கப்பட்டு தனது படைகளை அணிதிரட்ட மீண்டும் திரும்பினார். 


டிசம்பர் 25, 1897 அன்று, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மூலதனமாகக் கொண்டு, பிர்சா உள்ளூர் கிறிஸ்தவ மக்களை குறிவைத்து ஒரு திடீர் தாக்குதலைத் திட்டமிட்டார். இதன் விளைவாக, வன்முறை ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியை அடக்கி, பிர்சா மற்றும் அவரது கூட்டாளி கயா முண்டாவை கைது செய்தனர். இறுதியில், போதுமான மருத்துவ வசதி இல்லாததால் 1900-ம் ஆண்டில் பிர்சா சிறையில் மரணத்திற்கு வழிவகுத்தது. 


கிளர்ச்சியின் அடக்குமுறை இருந்தபோதிலும், முண்டா கிளர்ச்சி நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, முண்டா மக்களால் பிர்சா ஒரு வீரனாகவும் தியாகியாகவும் நினைவுகூரப்படுகிறார்.


தானா பகத் இயக்கம் 1914-ம் ஆண்டில் தொடங்கியது. இது, பிர்சா இயக்கத்துடன் இணைந்து உருவானது. ஒரான் பழங்குடியினரின் தலைவரான ஜத்ரா பகத் என்பவரால் இந்த இயக்கம் நிறுவப்பட்டது. பகத் பாரம்பரிய நடைமுறைகளுக்கு திரும்ப அழைப்பு விடுத்தார். அவர் காலனித்துவ ஆட்சி மற்றும் மேற்கத்திய நாடுகளின் தாக்கங்களை நிராகரித்தார். பகத் விவசாய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, ‘வாடகை தராத’ பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதில், கட்டாய அல்லது குறைந்த ஊதிய வேலைகளை மறுக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்தினார். 


தானா பகத்கள் புரட்சிகர இந்து காங்கிரஸ் தொழிலாளர்களுடன் கூட்டணி வைத்தனர். அவர்கள் சத்தியாகிரகம், ஒத்துழையாமை மற்றும் கீழ்ப்படியாமை இயக்கங்களில் தீவிரமாகப் பங்குகொண்டனர். வன்முறையற்ற இந்திய தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் காங்கிரஸ் தொழிலாளர்களுடன் இணைந்து மதுபானக் கடைகளைத் தாக்கவும், உள்கட்டமைப்புகளை அழிக்கவும், காவல் நிலையங்கள் மற்றும் காலனித்துவ அரசாங்க அலுவலகங்களைத் தாக்கவும் முயன்றனர். இந்த இயக்கம் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அகிம்சை மற்றும் கூட்டு நடவடிக்கை போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தியது, பின்னர் அவை பரந்த சுதந்திரப் போராட்டத்தில் இணைக்கப்பட்டன.


இந்த இரண்டு இயக்கங்களின் மரபு ஜார்க்கண்டின் பழங்குடி சமூகங்களுக்குள் தொடர்ந்து எதிரொலிக்கிறது. இது, அவர்களின் கலாச்சார மற்றும் அரசியல் முயற்சிகளை இன்றுவரை வடிவமைக்கிறது. 


ஒரு புதிய மாநிலம் உருவாகிறது 


ராம் தயாள் முண்டா மற்றும் பிஷேஷ்வர் பிரசாத் கேசரி ஆகியோர் 1986-ம் ஆண்டு முதல் (அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டபோது, அதைத் தொடர்ந்து 1987-ல் ஜார்க்கண்ட் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டபோது) "மறுசீரமைப்புக் காலம்" (Period of Reconstruction) பற்றி குறிப்பிடுகின்றனர். இது இறுதியில் ஜார்க்கண்ட் இயக்கத்திற்கும், 2000-ம் ஆண்டில் ஒரு தனி மாநிலத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. 


இந்த அரசியல்-புவியியல் பிரதேசத்திற்கான உரிமைகோரலின் அடிப்படை அதன் கலாச்சார தொடர்ச்சி, இயற்கையின் சீரான தன்மை மற்றும் அதன் பொருளாதார வாழ்க்கையின் கட்டமைப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த இயக்கம் யதார்த்தமான நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் கூட ஒப்புக் கொண்டுள்ளது என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர். 


ஜார்கண்ட் இயக்கத்தை ஆராய்வது ஜார்கண்டி கலாச்சாரம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வாறு மெதுவாக சிதைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த செயல்முறை ஆங்கிலேயர்களின் வருகையுடன் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிறகும் இன்றுவரை தொடர்கிறது.


ஜார்க்கண்ட் இயக்கத்தின் உணர்வை 1767-ம் ஆண்டில் ஜகந்நாத தால் கிளர்ச்சியில் காணலாம். இன்று, மாநிலத்தில் வசிப்பவர்கள், குறிப்பாக பழங்குடி சமூகங்கள், நிலத் தகராறுகள், குறைந்த கல்வியறிவு விகிதங்கள் மற்றும் தொடர்ச்சியான வறுமை மற்றும் வேலையின்மை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். விரைவான தொழில்துறை வளர்ச்சி மற்றும் மின் திட்டங்களுக்கு மத்தியில், பொருளாதார சுரண்டல் அவர்களின் கூட்டு அடையாளத்தின் மைய அம்சமாக உள்ளது.




Original article:

Share:

அதிபர் ஜோ பைடன் ஆட்சியின் கீழ் இந்திய-அமெரிக்க உறவுகள் -ரோஷினி யாதவ்

 அமெரிக்கா தனது 47-வது அதிபரை தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ள நிலையில், பைடன் தலைமையின் கீழ் இந்தியா-அமெரிக்க உறவுகளில் பத்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து பார்ப்போம். 


அமெரிக்கா தனது 47-வது அதிபரை தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், பைடனின் பதவிக் காலத்தில் இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பு எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை திரும்பிப் பார்க்க இது ஒரு சரியான நேரம். 


1. முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான அமெரிக்க-இந்தியா முன்னெடுப்பு (Initiative on critical and emerging technologies (iCET)):   


பைடனின் பதவிக்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஜனவரி 2023ஆம்  ஆண்டில் தொடங்கப்பட்ட iCET ஆகும். அமெரிக்காவுடன் ஆழமான தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்தியா நீண்டகாலமாக விரும்புகிறது. iCET இதை உயர் மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.  இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிலிருந்து தொழில்துறை கூட்டாண்மையை உருவாக்குவது வரை கவனத்தை விரிவுபடுத்தியுள்ளது. குறைமின்கடத்தி (semiconductor) உற்பத்தி மற்றும் ஜெட் என்ஜின் உற்பத்தி போன்ற துறைகளில் இந்தியாவின் திறன்களை அதிகரிப்பதே இதன் குறிக்கோள். 


 2. பாதுகாப்பு ஏற்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Security of Supply Arrangement (SOSA)):  


   இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு ஏற்பாடு (சோசா) மற்றும் தொடர்பு அதிகாரிகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்த காலகட்டத்தில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திய தொடர்ச்சியான இராணுவ உடன்படிக்கைகளில் இவை சமீபத்தியவையாகும். SOSA-ன் கீழ், இரு நாடுகளும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை ஆதரவை வழங்கும். விநியோகச் சங்கிலி இடையூறுகளைத் தீர்க்க இது உதவும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை (Department of Defense (DoD)) தெரிவித்துள்ளது. இந்தியா அமெரிக்காவின் 18வது SOSA நாடாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் முக்கிய கமாண்டுகளில் அதிகாரிகளை நியமிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். முதல் இந்திய தொடர்பு அதிகாரி புளோரிடாவில் உள்ள அமெரிக்க சிறப்பு நடவடிக்கை கட்டளையில் நியமிக்கப்படுவார். 


 3. வளமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு (Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF)):   


   செப்டம்பர் 22 அன்று, அமெரிக்கா தலைமையிலான 14 உறுப்பினர்களைக் கொண்டIPEF-ல் இந்தியா சேர்ந்து, தூய்மையான மற்றும் நியாயமான பொருளாதாரத்திற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இவை சுத்தமான எரிசக்தி மற்றும் காலநிலைக்கு உகந்த தொழில்நுட்பங்களை உருவாக்கவும் பரப்பவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதையும், உறுப்பு நாடுகளிடையே வரி வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதையும் அவை நோக்கமாகக் கொண்டுள்ளன. 


4. சிந்து-எக்ஸ் (INDUS-X):   


   இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு முடுக்கம் சுற்றுச்சூழல் அமைப்பு (INDUS-X) ஜூன் 21, 2023-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் உள்ளனர். இது பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் கூட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் தனியார் பாதுகாப்புத் துறையை அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைக்க உதவும். 


5. இந்தியா-அமெரிக்க தூய்மையான எரிசக்தி நிகழ்ச்சி நிரல் 2030 கூட்டாண்மை:   


   ஏப்ரல் 2021-ஆம் ஆண்டில், பிரதமர் மோடியும் அதிபர் பைடனும் இந்த கூட்டாண்மையைத் தொடங்கினர். 2030-ஆம் ஆண்டுக்குள் 2005 அளவுகளில் 50 முதல் 52 சதவீதம் வரை உமிழ்வைக் குறைப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.  இது முன்னாள் அதிபர் ஒபாமா 2015-ஆம் ஆண்டில் நிர்ணயித்த இலக்கை விட இரு மடங்காகும். செப்டம்பர் 2021-ஆம் ஆண்டில், அமெரிக்க காலநிலை தூதர் ஜான் கெர்ரி, மோடி முன்பு அறிவித்த 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய அமெரிக்கா உதவும் என்று கூறினார். 


6. கனிம பாதுகாப்பு கூட்டாண்மை:   


   ஜூன் 2023-ஆம் ஆண்டில், 14 நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான கனிம பாதுகாப்பு கூட்டாண்மையில் (Mineral Security Partnership (MSP)) இந்தியா இணைந்தது.  இந்த கூட்டாண்மை முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளில் முதலீட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. ஏனெனில், அதன் வளர்ச்சித் திட்டம் மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணு உற்பத்தியை நம்பியுள்ளது. ஏனெனில், அவற்றுக்கு முக்கியமான தாதுக்கள் தேவை. 


7. கனிம பாதுகாப்பு நிதி அமைப்பு (MSFN) :   


   செப்டம்பர் 23 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அறிவிக்கப்பட்ட அமெரிக்கா தலைமையிலான MSFN-ல் இந்தியா சேர்ந்தது. 14 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய இந்த முயற்சி, முக்கியமான கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. கனிம பாதுகாப்பு நிதி அமைப்பு (MSFN), கனிம பாதுகாப்பு கூட்டாண்மை (MSP) உருவாக்குகிறது. 


 8. மேம்பட்ட தொலைத்தொடர்பு:  


   திறந்த ரான் அமைப்புகளை (RAN systems) உருவாக்குவதற்கும் மேம்பட்ட தொலைத் தொடர்புகளை ஆராய்ச்சி செய்வதற்கும் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு பணிக்குழுக்களைத் தொடங்கின. இந்தியாவின் பாரத் 6ஜி மற்றும் அமெரிக்காவின் நெக்ஸ்ட் ஜி கூட்டணி ஆகியவை இந்த முயற்சியை வழிநடத்துகின்றன. செலவுகளைக் குறைப்பது, பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் தொலைத் தொடர்பு அமைப்புகளை வலுப்படுத்துவதே இதன் குறிக்கோள். 


9. குறைமின்கடத்தி உற்பத்தி  ஒப்பந்தம்:   


   செப்டம்பர் 2024-ல், இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு குறைமின்கடத்தி (Semiconductor) உற்பத்தி ஆலையை அமைக்க ஒப்புக்கொண்டன. இது தேசிய பாதுகாப்பு, அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு மற்றும் பசுமை ஆற்றல் பயன்பாடுகளுக்கான சில்லுகளை (chips) உருவாக்கும். செப்டம்பர் 9, 2024 அன்று, குறைக்கடத்தி விநியோகச் சங்கிலி வாய்ப்புகளை ஆராய இந்தியாவுடன் அமெரிக்கா ஒரு புதிய கூட்டாண்மையை அறிவித்தது. இந்தியாவின் குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பு, ஒழுங்குமுறை கட்டமைப்பு, பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தேவைகள் பற்றிய விரிவான மதிப்பாய்வு இதில் அடங்கும். ஏவுகணைகள் முதல் தொலைபேசிகள் வரை அனைத்திற்கும் குறைக்கடத்திகள் அவசியம் என்பதால், இந்த கூட்டாண்மை மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. 

10. இருதரப்பு சைபர் ஈடுபாடு:  


   செப்டம்பரில், இந்தியாவும் அமெரிக்காவும் புதிய துறைகளில் ஒத்துழைப்புக்கு உறுதியளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டன. அச்சுறுத்தல் தகவல்களைப் பகிர்தல், இணைய பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆற்றல் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவை இதில் அடங்கும். இந்தத் துறையில் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்த நவம்பர் 2024 இணைய ஈடுபாட்டை இரு நாடுகளும் எதிர்நோக்கியுள்ளன. 


இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அடிப்படை ஒப்பந்தங்கள்:   


1. ஜிசோமியா (GSOMIA) :  


   2002-ஆம் ஆண்டில், இந்தியாவும் அமெரிக்காவும் இராணுவ தகவல் பகிர்வு பொது பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (General Security of Military Information Agreement (GSOMIA)) கையெழுத்திட்டன. இது இராணுவ தகவல்களைப் பகிர அனுமதிக்கிறது. 2016-ஆம் ஆண்டு மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கு இடையில், இரு நாடுகளும் மேலும் நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. 


2. லெமோவா (LEMOA):   


   லாஜிஸ்டிக்ஸ் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement (LEMOA)) 2016-ஆம் ஆண்டில் கையெழுத்தானது. இது இரு இராணுவங்களுக்கும் இடையே தளவாட ஆதரவு வழங்குவதற்கான விதிகளை அமைக்கிறது. 


 3. காம்காசா (COMCASA):  


   2018-ஆம் ஆண்டில், இந்தியாவும் அமெரிக்காவும் தகவல் தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (Communications Compatibility and Security Agreement (COMCASA)) கையெழுத்திட்டன. இது நாடுகளுக்கு இடையே பாதுகாப்பான இராணுவ தொடர்பை அனுமதிக்கிறது. இது மேம்பட்ட அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுக்கான அணுகலை இந்தியாவுக்கு வழங்குகிறது மற்றும் இந்தியா தனது அமெரிக்காவின் பூர்வீக தளங்களை திறம்பட பயன்படுத்த உதவுகிறது. 


4. பெக்கா(BECA):   


   அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Basic Exchange and Cooperation Agreement (BECA)) 2020-ஆம் ஆண்டில், கையெழுத்தானது. இது வரைபடங்கள், விளக்கப்படங்கள் மற்றும் பிற தரவு உள்ளிட்ட இராணுவ தகவல்களை இந்தியாவும் அமெரிக்காவும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. 


5. தொழில்துறை பாதுகாப்பு ஒப்பந்தம் (ISA):   


   2019-ஆம் ஆண்டில் டிசம்பரில் கையெழுத்திடப்பட்ட தொழில்துறை பாதுகாப்பு ஒப்பந்தம் (Industrial Security Agreement (ISA)), இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தொழில்களுக்கு இடையே ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. 




Original article:

Share:

சவூதி-இந்தியா தொழிலாளர் ஒத்துழைப்பின் எதிர்காலம் -அப்துல்லாஹ் நாசர் அபுத்னைன்

 தொழிலாளர்களின் தரத்தை மேம்படுத்தவும், சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளர்களின் வாய்ப்புகளை மேம்படுத்தவும் தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 


சவூதி அரேபியாவும் இந்தியாவும் பல ஆண்டுகால பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளின் அடிப்படையில் நிலையான மற்றும் சிறப்பான உறவைக் கொண்டுள்ளன. இராஜதந்திர உறவுகள் 1947-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. வலுவான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் இந்த கூட்டாண்மை வளர்ந்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் பயனளித்துள்ளது. 


இரு நாடுகளின் உறவு நெருக்கமாகவும் நன்மை பயப்பதாகவும் உள்ளது. இந்திய தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியா ஒரு சிறந்த இடமாக உள்ளது. சவுதி அரேபியாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துகிறது. 


இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பு 


பல ஆண்டுகளாக, சவுதி அரேபியாவின் தொழிலாளர் தொகுப்பில் இந்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்கள் பல்வேறு துறைகளுக்கு திறன்கள், அர்ப்பணிப்பு மற்றும் மீள்தன்மையை ஏற்படுத்தி வருகிறார்கள். கட்டுமானம் மற்றும் சுகாதாரம் முதல் கல்வி மற்றும் பொறியியல் வரை, இந்திய தொழிலாளர்கள் சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்பை உருவாக்கவும்,  அதன் சமூகக் கட்டமைப்பை மேம்படுத்தவும் உதவியுள்ளனர். 


இரு நாடுகளும் தகவல் தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பங்களில் தங்கள் பலத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. இது ஒத்துழைப்புக்கான பெரிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.  இந்தியா உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளைக் கொண்டுள்ளது மற்றும் அதன் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கு பெயர் பெற்றது.  விஷன் 2030 (Vision 2030) இலக்குகளை நோக்கி சவுதி அரேபியா செயல்படுவதால், பல வெளிநாட்டவர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில், சவுதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த தொழில்களை வளர்க்க உதவலாம். 


சவுதி மற்றும் இந்திய தலைவர்களுக்கு இடையிலான சமீபத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் உறவுக்கு முக்கியமானவை. இந்த விவாதங்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க சவுதி முதலீடுகளுக்கு வழி வகுத்துள்ளன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது காட்டுகிறது. 


தொழிலாளர் சந்தையை மாற்றியமைத்தல் 

இந்தியாவுடனான சவுதி அரேபியாவின் ஒத்துழைப்பு  நாட்டின் தொழிலாளர் சந்தையை மாற்ற உதவியது. 2021-ஆம் ஆண்டில் தொழிலாளர் சீர்திருத்த முயற்சி (Labor Reform Initiative (LRI)) ஒரு பெரிய படியாக இருந்தது. இது சுதந்திரமான நகர்வை ஊக்குவித்தது. ஒப்பந்த உறவுகளை மேம்படுத்தியது மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை வலுப்படுத்தியது. சவுதி அரேபியா வெளிநாட்டு தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது. இந்த முயற்சிகளில் சிறந்த ஊதிய பாதுகாப்பு, மேம்பட்ட வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சுகாதார காப்பீடு ஆகியவை அடங்கும்.  இது இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில் வெற்றி பெறுவதை உறுதி செய்கிறது. 


இந்திய தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்த, சவுதி அரேபியாவுடன் திறன் சரிபார்ப்பு திட்டத்தில் (Skills Verification Program) இந்தியா கையெழுத்திட்டுள்ளது.  இந்த திட்டம் இந்திய தொழிலாளர்களின் தகுதிகள் மற்றும் திறன்களை சான்றளிக்கிறது.  அவர்கள் சவுதி வேலை சந்தையின் தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. இந்த முயற்சிகள் தொழிலாளர்களின் தரத்தை மேம்படுத்துவதோடு, சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை மேம்படுத்துகின்றன. 


பிற முயற்சிகள் 

 

சவூதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு தொழிலாளர் ஒத்துழைப்புக்கு அப்பாற்பட்டது. இரு நாடுகளும் கலாச்சார பரிமாற்றத் திட்டங்கள், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கூட்டாண்மைகள் மற்றும் கல்வி, தொழில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த முயற்சிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்தியுள்ளன மற்றும் மிகவும் ஒருங்கிணைந்த கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன. 


டிசம்பர் 2023-ஆம் ஆண்டில், ரியாத்தில் நடந்த உலகளாவிய தொழிலாளர் சந்தை மாநாட்டின் (Global Labor Market Conference (GLMC)) போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சவுதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (Saudi Arabia’s Ministry of Human Resources and Social Development) மற்றும் இந்தியாவின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் ( National Skill Development Corporation (NSDC)) ஆகியவை திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் மேம்பாடு குறித்த அறிவு மற்றும் அனுபவத்தை பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டன. 


முன்னோக்கிப் பார்க்கும்போது, சவுதி அரேபியாவின் தொழிலாளர் சந்தையில் இந்திய தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை உறுதி செய்ய இந்த முயற்சிகளைத் தொடர்வது முக்கியம். 


இந்த வலுவான இருதரப்பு உறவு, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட இலக்குகளின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது. இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், இரு நாடுகளும் அதிக பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைய முடியும், அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். 


அப்துல்லா நாசர் அபுத்னைன் சவுதி அரேபியாவின் தொழிலாளர் துறை துணை அமைச்சர்.




Original article:

Share: