பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான முன்முயற்சி. --குஷாங்கர் டே

பொது விநியோகத் திட்டத்தை (Public Distribution System (PDS)) வலுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டமான சார்த்தக் (Scheme for Assistance in Ration Transport and Handling-Income with Automation (SARTHAK)) திட்டத்தை இன்னும் மேம்படுத்த முடியும்.


SARTHAK (Scheme for Assistance in Ration Transport and Handling-Income with Automation in PDS) : ஒன்றிய அரசின் சார்த்தக்-பி.டி.எஸ் (SARTHAK-PDS) என்பது பொது விநியோகத் திட்டத்தை (நியாய விலை கடை) நவீனமயமாக்கும் ஒரு புதிய திட்டமாகும். இத்திட்டம் நியாய விலை பொருட்கள் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்தல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.


மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் பொது விநியோகத் திட்டத்தில் தானியங்கி முறையுடன் கூடிய நியாய விலைப் பொருட்கள் போக்குவரத்து மற்றும் வருமானம்-கையாள்வதற்கான உதவித் திட்டம் (SARTHAK) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள 81.35 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கும் பொது விநியோகத் திட்டத்தை (Public Distribution System (PDS)) நவீனப்படுத்தவும், பலப்படுத்தவும் இந்தத் திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு, ஒன்றிய அரசு 25,530 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 


சார்த்தக் (SARTHAK) திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு: முதலாவதாக, தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்களுடன் மாநிலங்களுக்கு இடையேயான உணவு தானியங்களின் போக்குவரத்தை எளிதாக்க வேண்டும்.     இது ஒரு பாதுகாப்பான மற்றும் விரைந்து செயல்படக்கூடிய விநியோக முறையை உருவாக்க உதவும். இரண்டாவதாக, 2013-ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (National Food Security Act (NFSA)) நியாயவிலைக் கடை (Fair Price Shop (FPS)) வியாபாரிகளின் லாப வரம்பை அதிகரிக்க வேண்டும்.       மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கண்காணிப்பு அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் நியாய விலை பொருட்கள் விநியோகத்தை முறைப்படுத்தி, பயனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்த வேண்டும்.


மூன்றாவது, பொது விநியோகத் திட்ட (PDS) செயல்பாடுகளைக் கண்காணிக்க மாநிலக் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்தல், மாநில மற்றும் மத்திய கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடை (FPS) விநியோகர்களுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்லப்படுவதைக் மேற்பார்வையிடுதல், நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், இருப்புக்களை நிர்வகித்தல், மற்றும் பயனாளிகளின் புகார்களைத் தீர்த்தல் போன்ற நடவடிக்கைகளை முதன்மையாகக் கொண்டுள்ளன.


நான்காவது, பயனாளிகளைச் சரிபார்ப்பதை மேம்படுத்தவும், போலிப் பதிவுகளை நீக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், மற்றும் பயனாளிகள் நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்களின் நியாய விலை பொருட்களைப் பெறும் வசதியை மேம்படுத்தவும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய பொது விநியோகத் திட்ட தரவுத்தளத்தை உருவாக்குதல்.


குறைபாடுகள் மற்றும் ஆலோசனைகள்


இந்தத் திட்டம் புதிய நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், இதில் சில முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது : (i) பரவலாக்கப்பட்ட/மையப்படுத்தப்பட்ட கொள்முதல் மற்றும் விநியோக முறைகளைக் கொண்டுள்ள மாநிலங்களில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும்? (ii) பொதுவான மற்றும் சிறப்பு தகுதி பெற்ற மாநிலங்களுக்கான நியாய விலைக் கடை வியாபாரிகளின் மாற்றி அமைக்கப்பட்ட லாப வரம்பு என்னவாக இருக்கும், மேலும் இந்த லாப வரம்பை நிர்ணயிப்பது எவ்வாறு முறைப்படுத்தப்படும்? (iii) இத்திட்டம் எவ்வாறு மக்கள் எளிதாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும், மேலும் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) செயல்திறனையும் அதன் நீடித்த தன்மையையும் எவ்வாறு மேம்படுத்தும்?


முதலாவதாக, அரசாங்கம் அடிப்படை விநியோகஸ்தர்களின் லாப வரம்பை நிர்ணயித்துள்ளது; இது பொதுவான மாநிலங்களுக்கும் (ஒரு குவிண்டாலுக்கு ₹90) மற்றும் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கும் (ஒரு குவிண்டாலுக்கு ₹180) இடையே மாறுபடுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட (NFSA) அமலாக்கம் குறித்த தற்போதைய மதிப்பீடு, பொதுவான மாநிலங்களில் நியாயவிலைக் கடைகளை (FPS) பொருளாதாரரீதியாக லாபகரமாக நடத்துவதற்கும், பொது விநியோகத் திட்டத்தை (PDS) வலுப்படுத்துவதில் அவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கும், அடிப்படை விநியோகர்களின் லாப வரம்பு ஒரு குவிண்டாலுக்கு ₹140 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும், பயனாளிகளுக்கு நியாய விலை பொருட்களை விநியோகிப்பதற்கு, விநியோகர்களால் நிர்வகிக்கப்படும் மின்னணு விற்பனைப் புள்ளி (electronic Point of Sale (ePoS)) கருவியில் ஆதார் இணைப்பு மூலமாக கைரேகை அல்லது விழித்திரை சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். இந்த மின்னணு விற்பனைப் புள்ளி (ePoS) கருவிகளின் பராமரிப்புக் கட்டணம் ஒரு குவிண்டாலுக்கு ₹21 முதல் ₹26 வரை இருக்கும் என்கின்றனர்.


இரண்டாவதாக, மையப்படுத்தப்பட்ட கொள்முதல் (Centralised procurement) நடக்கும் மாநிலங்களில், மாநிலத்திற்குள்ளான போக்குவரத்து மற்றும் கையாளுதல் கட்டணங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன. பரவலாக்கப்பட்ட கொள்முதல் (Decentralised procurement) முறையின்கீழ், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களது சொந்த மாநில முகமைகள் மூலமாக விநியோகத்தை நிர்வகிக்கின்றன மற்றும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கையாளுதல் கட்டணத்தை செலுத்துகின்றன. அடிப்படைப் போக்குவரத்து மற்றும் கையாளுதலுக்கான ஒன்றிய அரசின் உதவித்தொகை பொதுவான மாநிலங்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ₹105-ஆகவும், சிறப்பு தகுதி பெற்ற மாநிலங்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ₹143-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



மாநிலம் தழுவிய விநியோகக் கட்டமைப்பு, கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் தற்போது செயல்பட்டுவரும் நியாயவிலைக் கடை (FPS) விநியோகர்களைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, மக்கள் எளிதாக அணுகும் வசதி என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். இது நியாயவிலைக் கடைகளின் இருப்பிடம் மற்றும் அங்கு மக்கள் எளிதாகச் செல்லக்கூடிய வழி, நியாய விலை பொருட்களை வாங்குவதில் உள்ள எளிமை, தங்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கும் செயல்முறைகளின் எளிமை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. எனவே, பொது விநியோகத் திட்டம் (PDS) மூலம் வழங்கப்படும் தானியங்களில் 28 சதவீதம் தகுதியான பயனாளிகளைச் சென்றடைவதில்லை என்பதால், பயனாளிகள் தங்களின் நியாய விலைப் பொருட்கள் பங்கீட்டை எளிதாகப் பெறுவதற்கான சாதகமான சூழலை இத்திட்டம் உருவாக்க வேண்டும்.


நான்காவதாக, ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் தேசிய அளவிலான தானிய விநியோகம் 93-98 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் இருப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகம் ஆகியவற்றை உடனுக்குடன் கண்காணிப்பதன் மூலமும், மாநிலக் கட்டுப்பாட்டு மையங்கள் மூலமும் இதை மேலும் மேம்படுத்தலாம்.


ஐந்தாவதாக, பொது விநியோகத் திட்டத்தைப் (PDS) பாதுகாப்பானதாக மாற்ற, கைரேகை/விழித்திரை சரிபார்ப்புத் தோல்விகள், இருப்பு ஒதுக்கீட்டில் ஏற்படும் தாமதங்கள், வெவ்வேறு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் மற்றும் தகுதியானவர்கள் விடுபட்டுப்போகும் அபாயங்கள் ஆகியவற்றைச் சரிசெய்ய வேண்டும். இதன் மூலம், 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' (One Nation One Ration Card (ONORC)) திட்டத்தின்கீழ் 100 சதவீத நாட்டின் எந்தவொரு நியாய விலை கடையிலும் பொருட்கள் வாங்கும் வசதியெனும் இலக்கை அடைய வேண்டும். பிளாக்செயின் (Blockchain), - இணையவழிப் பொருட்களின் இணைப்பு (IoT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய தொழில்நுட்பங்களால் இந்தச் சிக்கல்களைச் சரிசெய்ய முடியும்.




இந்தத் திட்டம் ஒன்றிய அரசின் நிதி நெருக்கடியை அதிகரிக்கும் என்பதால், இதனை அதன் நோக்கங்களுக்கு ஏற்பவே செயல்படுத்த வேண்டும் : அதாவது, பொது விநியோகத் திட்டத்தின் (PDS) செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


குஷங்கூர் டே, லக்னோவில் உள்ள ஐஐஎம்-ல் (IIM Lucknow) இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

original article:  PDS integration push. -Kushankur Dey

Share:

முக்கிய சுகாதார மற்றும் மக்கள்தொகை குறியீடுகள், இரத்த சோகை தரவுகள்: ஆறாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் முடிவுகளில் விடுபட்டுள்ளவை எவை? - அனோன்னா டட்

 தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (National Family Health Survey-6 (NFHS-6)) தொடர்பான சமீபத்திய அறிக்கை, தூய்மை இந்தியா திட்டம் (Swachch Bharat Abhiyan) மற்றும் இலவச சமையல் எரிவாயு திட்டம் (Ujjwala Yojana) போன்ற ஒன்றிய அரசின் முக்கியத் திட்டங்கள் குறித்த பல தரவுகளைத் தவிர்த்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பின்போது இது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்த போதிலும், இந்தத் தரவுகள் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. 


சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) பல சாதகமான முன்னேற்றங்களைக் காட்டியுள்ளது. மருத்துவக் காப்பீடு அதிகரிப்பு, பெண்கள் இணையம் மற்றும் திறன்பேசி பயன்படுத்துவது அதிகரிப்பு, மற்றும் முக்கியத் தடுப்பூசிகள் போடும் விகிதம் அதிகரிப்பு போன்றவை இதில் அடங்கும். இருப்பினும், இந்த அறிக்கையில் தவிர்க்கப்பட்ட புள்ளிவிவரங்கள்தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.


இருப்பினும், முழுமையான விரிவான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. மக்கள் தொகை அளவிலான புள்ளிவிவரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான குறியீடுகள், குடும்பக் கட்டுப்பாடு, மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம் (சுகாதாரம்) மற்றும் இலவச சமையல் எரிவாயு திட்டம் (சமையல் எரிபொருள்) போன்ற முக்கியத் தரவுகளைத் தவிர்த்துள்ளது. கணக்கெடுப்பின்போது மக்கள் விடை அளித்திருந்தும், இந்தத் தரவுகள் அறிக்கையிலிருந்து விடுபட்டுள்ளன.


விடுபட்ட தரவுகள்


சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) குறித்த அறிக்கையில், முக்கியக் குறியீடுகளின் எண்ணிக்கை முந்தைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5-ல் இருந்த 131-லிருந்து 101-ஆகக் குறைந்துள்ளது. இந்த அறிக்கையில் பல முக்கியக் குறியீடுகள் விடுபட்டிருப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் வட்டாரங்கள் கூறும்போது, இது "தரவுகளை ஒழுங்குபடுத்தும்" (Data harmonisation) ஒரு முயற்சி என்று தெரிவித்துள்ளன.


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் உள்ள பல தரவுப் புள்ளிகள் ஏற்கனவே பிற அரசு நிறுவனங்களின் கணக்கெடுப்புகள் மற்றும் அறிக்கைகள் மூலம் தனியாக வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே, தரவுகளை ஒழுங்குபடுத்தவும், குழப்பங்களைக் குறைக்கவும் இந்த அளவீடுகள் தற்போதைய கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.



இதற்கு உதாரணமாய் அவர்கள் மொத்தக் கருவுறுதல் விகிதத்தைச் (Total Fertility Rate (TFR)) சுட்டிக்காட்டினர். இந்த குறியீடு தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS) அறிக்கையில் தொடர்ந்து நீடித்ததால் குழப்பம் ஏற்பட்டதாகக் கூறினர். "தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு அறிக்கையில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 2 என்றும், மாதிரி பதிவு முறை (Sample Registration System (SRS)) அறிக்கையில் அது 1.9 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், நாட்டின் மக்கள்தொகை நிலையாக இருக்கிறதா அல்லது குறைகிறதா என்ற விவாதங்களும் சந்தேகங்களும் எழுந்தன. மக்கள்தொகையை அடுத்த தலைமுறையினரைக் கொண்டு சரியாக ஈடுகட்டுவதற்கான மாற்று நிலை (Replacement level TFR) அளவீடு 2.1-ஆகக் கருதப்படுகிறது.


மற்ற அரசு கணக்கெடுப்புகள் மற்றும் அறிக்கைகளில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதால், தற்போதைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்-6 (NFHS-6) உண்மைத் தகவல் அறிக்கையில் விடுபட்டுள்ள முக்கியத் தரவுகள் பின்வருமாறு:


முக்கிய புள்ளிவிவரங்கள்: ஒட்டுமொத்த பாலின விகிதம் மற்றும் பிறப்பின் போதான பாலின விகிதம் போன்ற மக்கள்தொகை அளவிலான குறியீடுகள், ஆறாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பிலிருந்து (NFHS-6) நீக்கப்பட்டிருந்தாலும், அவை மாதிரி பதிவு அமைப்பில் (SRS) கிடைக்கின்றன. சமீபத்திய மாதிரி பதிவு அமைப்பின் (SRS) அறிக்கையின்படி, ஆண் குழந்தைகளுக்கான சமூகத்தின் விருப்பத்தைக் காட்டும் குறியீடான 'பிறப்பின் போதான பாலின விகிதம்', ஒவ்வொரு 1,000-ஆண் குழந்தைகளுக்கு 918-பெண் குழந்தைகள் என்ற அளவில் உள்ளது.


பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு பற்றிய தகவல்கள் குடிமக்கள் பதிவு முறை மூலம் (Civil Registration System (CRS)) கிடைக்கின்றன. சமீபத்திய குடிமக்கள் பதிவு முறை (CRS) தரவுகளின்படி, இந்தியாவில் 95% பிறப்புகளும் 92% இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பிறந்து ஒரு மாதத்திற்குள் ஏற்படும் குழந்தை இறப்பு (Neonatal mortality), ஓராண்டிற்குள் ஏற்படும் குழந்தை இறப்பு (Infant mortality) மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (Under-five mortality) போன்ற தரவுகளும் மாதிரி பதிவு அமைப்பின் (SRS) அறிக்கையில் கிடைக்கின்றன. அதேபோல், ஆறாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் (NFHS-6) தொடர்ந்து இடம்பெற்றுள்ள மொத்தக் கருவுறுதல் விகிதமும் (TFR), மாதிரி பதிவு அமைப்பு (SRS) அறிக்கையிலேயே வெளியிடப்படுகிறது.


சுகாதாரம் மற்றும் எரிபொருள்: தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) தரவுப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட, சமையல் எரிவாயுப் பயன்பாடு மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்த தரவுகளை, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office (NSSO)) அறிக்கைகளில் காணலாம். மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதி, திறன்பேசி மற்றும் இணையப் பயன்பாடு போன்ற தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில்-6 (NFHS-6) தொடர்ந்து நீடிக்கும் சில குறியீடுகளும் இந்த தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) ஆய்வுகளில் இடம்பெற்றுள்ளன.


மக்களிடையே தூய்மையான சமையல் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, 1.6 கோடி சமையல் எரிவாயு (Liquefied Petroleum Gas (LPG)) இணைப்புகளை வழங்குவதை அரசாங்கத்தின் இலவச சமையல் எரிவாயு திட்டம் (Ujjwala Yojana) நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேபோல், அனைவரும் கழிப்பறை வசதி பெறுவதை உறுதி செய்வதன் மூலம், நாட்டை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாக மாற்றுவதை தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission) நோக்கமாகக் கொண்டுள்ளது.


சுகாதாரத் திட்டங்கள்: சுகாதாரத் திட்டங்கள் குறித்து விடுபட்ட சில தகவல்களை மற்ற ஆதாரங்களில் இருந்து நாம் பெறமுடியும். உதாரணமாக, ‘HIV’ (Human Immunodeficiency Virus) தொடர்பான தரவுகளை தேசிய ‘HIV’ மதிப்பீட்டு அறிக்கைகளிலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்களை உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) தடுப்பூசி இணையதளத்திலும் பார்க்க முடியும். இருப்பினும், மக்கள் சுகாதார வசதிகளைப் பெறுவதில் உள்ள நன்மைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பான பல கேள்விகளுக்கு எந்தவொரு அரசு கணக்கெடுப்பு அறிக்கைகளிலும் பதில்கள் இல்லை.


உதாரணமாக, மக்கள் எந்த வகையான கருத்தடை முறைகளைப் பயன்படுத்துகிறார்கள், சுகாதாரப் பணியாளர்கள் குடும்பக் கட்டுப்பாடு குறித்து மக்களிடம் ஆலோசிக்கிறார்களா, பெண்களுக்குக் கருத்தடை முறைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றித் தெரிவிக்கப்படுகிறதா அல்லது வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாய்வழி நீரேற்றக் கரைசல் (Oral Rehydration Salts (ORS)) மற்றும் துத்தநாக (Zinc) சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறதா போன்ற தகவல்கள் மற்ற ஆய்வுகளில் கிடைப்பதில்லை. இதுதவிர, ஒவ்வொரு பிரசவத்திற்கும் மக்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்ற தரவும் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரக் கணக்குகள் ஒட்டுமொத்தமாக மக்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செய்யும் மருத்துவச் செலவுகளைக் கணித்தாலும், பிரசவம் தொடர்பான குறிப்பிட்ட செலவு விவரங்களைத் தெளிவாக வழங்குவதில்லை.


புற்றுநோய் பரிசோதனை: மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகிய மூன்று பொதுவான புற்றுநோய்களுக்கான பரிசோதனை குறித்த தரவுகள் இந்த உண்மைத் தகவல் அறிக்கையில் விடுபட்டுள்ளன. இந்த மூன்று புற்றுநோய்கள் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான (Non-Communicable Diseases) பரிசோதனை மற்றும் சிகிச்சையை வழங்குவதற்காக, 2018-ஆம் ஆண்டு முதல் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள்' (Ayushman Arogya Mandirs (AAM)) அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centres (PHCs)) மேம்படுத்தப்பட்டுள்ளன.


இருப்பினும், நிதி ஆயோக் ( National Institution for Transforming India (NITI Aayog)) 2024-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தப் புற்றுநோய் பரிசோதனைகளைப் பயன்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாகச் செயல்பட்டு வரும் மருத்துவ மையங்களில், 10 சதவீதத்திற்கும் குறைவான மையங்கள் மட்டுமே தங்களின் பகுதி மக்களுக்கு ஒரு முறை முழுமையான தொற்றா நோய் (NCD) பரிசோதனையைச் செய்து முடித்துள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS-5) தரவுகளின்படி, வெறும் 0.9% பேருக்கு மட்டுமே மார்பக மற்றும் வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகளும், 1.9% பேருக்கு மட்டுமே கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.





இரத்த சோகையின் சவால்


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) அறிக்கையில் விடுபட்டுள்ள மற்றொரு முக்கியமான தகவல், இரத்த சோகை பாதிப்பு குறித்த மதிப்பீடாகும். விரல் நுனியில் ஒரு துளி ரத்தம் எடுத்து பரிசோதிக்கும் தற்போதைய முறை, இரத்த சோகையின் அளவை உண்மை நிலையைவிட அதிகமாகக் காட்டக்கூடும் என்று நிபுணர்கள் கூறியதால், இந்த அளவீடு இந்த முறை கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை.


நிபுணர்களின் கூற்றுப்படி, நரம்பிலிருந்து (Intravenous (IV)) எடுக்கப்படும் இரத்த மாதிரிகள் மூலம் இரத்த சோகையை இன்னும் துல்லியமாகக் கணக்கிட முடியும். நரம்பு இரத்த மாதிரிகளின் அடிப்படையிலான இரத்த சோகை பாதிப்பு குறித்த தரவுகள், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (National Institute of Nutrition (NIN)) நடத்திவரும் 'உணவுமுறை மற்றும் உயிரியல் குறியீட்டு ஆய்வு' (Diet and Biomarker Survey) மூலம் வழங்கப்படும், இந்த அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இருப்பினும், இதில் உள்ள ஒரு பெரிய சவாலானது, இந்த புதிய தரவுகளை முந்தைய இரத்த சோகை மதிப்பீடுகளுடன் நேரடியாக ஒப்பிட முடியாது. தற்போதைய கணக்கெடுப்பில் பழைய மற்றும் புதிய முறைகள் இரண்டையுமே சேர்த்துப் பயன்படுத்தியிருந்தால் இந்தச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


குறிப்பாக, இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையைக் குறைக்க சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் இரும்புச்சத்து-போலிக் அமில (Iron-folic acid) மாத்திரைகளை வழங்கும் அரசின் 'இரத்த சோகை இல்லாத இந்தியா' (Anaemia Mukt Bharat) திட்டம் செயல்பாட்டில் இருந்தபோதிலும், முந்தைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில்-5 (NFHS-5) இரத்த சோகை பாதிப்பு அதிகரித்திருப்பது தெரியவந்தது. இதன் பின்னரே, இந்த முறை இரத்த சோகை பாதிப்பு தரவுகளை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த கணக்கெடுப்பில், 6-59-மாதக் குழந்தைகளுக்கு இடையேயான இரத்த சோகை 2015-16-ஆம் ஆண்டில் 58.6%-லிருந்து 67.1%-ஆக உயர்ந்திருந்தது. 15-49 வயதுடைய பெண்களிடையே இது 53.1%-லிருந்து 57%-ஆகவும், கர்ப்பிணிப் பெண்களிடையே 50.4%-லிருந்து 52.2%-ஆகவும் அதிகரித்திருந்தது.


இருந்தபோதிலும், தற்போதைய கணக்கெடுப்பில் 100 நாட்களுக்கும் மேலாக மற்றும் 180 நாட்களுக்கும் மேலாக இரும்புச்சத்து-போலிக் அமில மாத்திரைகளைப் பெற்ற தாய்மார்கள் பற்றிய தரவுகள் இன்னும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு குறியீடுகளுமே கணிசமான அதிகரிப்பைக் காட்டுகின்றன. மேலும், கடுமையான இரத்த சோகை உள்ள பெண்களுக்கும், கர்ப்பத்தின் பிந்தைய கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் நரம்பு வழி இரும்புச்சத்து (IV iron) சிகிச்சையை மாநிலங்கள் வழங்கத் தொடங்கியுள்ளன.


முக்கியக் கண்டுபிடிப்புகள்


அந்தக் கணக்கெடுப்பின் பிற முக்கியக் கண்டுபிடிப்புகள் சில பின்வருமாறு :


முதுமையடையும் மக்கள்தொகை: 5 வயது மற்றும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் முறையே 8.2%-லிருந்து 8%-ஆகவும், 26.5%-லிருந்து 25.5%-ஆகவும் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. அதேநேரத்தில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது — ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) தரவுகளுடன் ஒப்பிடும்போது ஆறாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-6) தரவுகளில் முதியவர்களின் விகிதம் 11.8%-லிருந்து 12.9%-ஆக உயர்ந்துள்ளது.


காப்பீட்டு வசதி: அரசின் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) திட்ட விரிவாக்கத்தின் காரணமாக, மருத்துவக் காப்பீடு பெற்றுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த இரு கணக்கெடுப்புகளுக்கு இடைப்பட்ட காலத்தில், காப்பீட்டு வசதி பெற்றவர்களின் எண்ணிக்கை 41%-லிருந்து 60.2%-ஆக உயர்ந்துள்ளது.




இணையப் பயன்பாடு அதிகரிப்பு: 2019-21-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில்-5 (NFHS-5), தங்கள் வாழ்வில் எப்போதாவது இணையத்தைப் பயன்படுத்திய பெண்களின் எண்ணிக்கை 33.3%-ஆக இருந்தது. அது 2023-24-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில்-6 (NFHS-6) 64.3%-ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதேபோல, ஆண்களிடையே இணையப் பயன்பாடு 51.2%-லிருந்து 80.5%-ஆக அதிகரித்துள்ளது.


கருத்தடை: இந்தக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்தமாக கருத்தடை முறைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், நவீன முறைகளான ஆணுறை, மாத்திரைகள், காப்பர்-டி போன்ற உள்வழிக் கருவிகள் (Intrauterine Devices (IUDs)) மற்றும் ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இத்தகைய நவீன கருத்தடை முறைகளின் பயன்பாடு, ஐந்தாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் (NFHS-5) 56.4%-ஆக இருந்தது, தற்போது ஆறாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் (NFHS-6) 52.7%-ஆகக் குறைந்துள்ளது.


இரத்தச் சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தம்: அதிக இரத்தச் சர்க்கரை (சர்க்கரை நோய்) உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; ஆனால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5 (NFHS-5) தரவுகளுடன் ஒப்பிடும்போது, தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) தரவுகளில் 17.8% பெண்களுக்கும், 20.9% ஆண்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது பதிவாகியுள்ளது. முந்தைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில்-5 (NFHS-5) இது பெண்களிடம் 13.5%-ஆகவும், ஆண்களிடம் 15.6%-ஆகவும் இருந்தது.


குறைந்த எடை, உடல் பருமன்: குறைந்த எடை கொண்ட பெரியவர்கள் மற்றும் பருமனான அல்லது அதிக எடை கொண்ட பெரியவர்கள் ஆகிய இருவரின் பரவலும் அதிகரித்துள்ளது. NFHS-5-ல் 18.7% பெண்கள் மற்றும் 16.2% ஆண்கள் என இருந்ததோடு ஒப்பிடுகையில், NFHS-6-ல் BMI 18.5-க்கும் குறைவாக உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 19.7%-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக எடை அல்லது உடல் பருமனைப் பொறுத்தவரை, NFHS-5-ல் 24% பெண்கள் மற்றும் 22.9% ஆண்கள் என இருந்ததோடு ஒப்பிடுகையில், NFHS 6-ல் BMI 25-க்கும் அதிகமாக உள்ள பெண்களின் விகிதம் 30.7%-ஆகவும், ஆண்களின் விகிதம் 27.3% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


குறைந்த எடை மற்றும் உடல் பருமன்: குறைவான உடல் எடை கொண்ட பெரியவர்கள் மற்றும் அதிக உடல் பருமன் கொண்ட பெரியவர்கள் ஆகிய இருதரப்பினரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6-ன்படி (NFHS-6), 19.7% பெரியவர்கள் 18.5-க்கும் குறைவான உடல் நிறை குறியீட்டை (Body Mass Index (BMI)) கொண்டுள்ளனர். இது முந்தைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5-ல் (NFHS-5) இருந்த 18.7% பெண்கள் மற்றும் 16.2% ஆண்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். அதேபோல், அதிக எடை அல்லது உடல் பருமன் (25-க்கும் மேல்) உள்ளவர்களைப் பொறுத்தவரை, தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6)-ல் 30.7% பெண்களும், 27.3% ஆண்களும் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5 (NFHS-5)-ல் இருந்த 24% பெண்கள் மற்றும் 22.9% ஆண்களின் எண்ணிக்கையைவிட கணிசமாக உயர்ந்துள்ளது.


original article:  Key health and population indicators, anaemia data: What went missing from NFHS-6 findings. -Anonna Dutt

Share:

கோடீன் என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence (DRI)) இந்த வாரம் பாட்னாவில் உள்ள ராஜேந்திரநகர் முனைய ரயில் நிலையத்திற்கு வெளியே இருந்து 7,500 கோடீன் கலந்த இருமல் மருந்துப் புட்டிகளைப் பறிமுதல் செய்தது.


மது தடை வெளிப்படையான மது தீங்குகளைக் குறைத்தது, ஆனால் ஓபியாய்டு மாற்றுகளுக்கான ஒரு பாதாளச் சந்தையைத் தூண்டியது; இது காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் போதைப்பொருள் நோய் நீக்க மையங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.


உங்களுக்குத் தெரியுமா?


• 2016-ல் பீகார் மதுவிலக்கை அமல்படுத்தியதிலிருந்து, கோடீன் இருமல் மருந்துகள் மதுபானங்களுக்கு பிரபலமான ஒரு மாற்றாக உருவெடுத்துள்ளன. வன்முறை, சாலை விபத்துகள் மற்றும் சமூகத் தீங்குகளைக் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்தத் தடை, போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்கவில்லை, மாறாகப், புதிய வகையான போதைப் பழக்கங்களை வளர்த்துள்ளது.


• கோடீன் என்பது அபின் செடியில் காணப்படும் மார்பின் என்ற சேர்மத்திலிருந்து பெறப்படும் ஒரு இயற்கையான ஓபியாய்டு ஆகும். இது முக்கியமாக இருமலை குறைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு மருந்துகளில், குறிப்பாக இருமல் மருந்துகளில் காணப்படுகிறது. இது மூளையில் உள்ள இருமலை கட்டுப்படுத்தும் மையத்தை (cough centre) அடக்குவதன் மூலம் செயல்படுகிறது. மேல் சுவாசப்பாதை தொற்றுகள் அல்லது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis) போன்ற, தொடர்ந்து வறட்டு இருமலை ஏற்படுத்தும் நீண்டகால நோய்களுக்கு இந்த மருந்து பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், சாதாரண சளிக்கான முதல்கட்ட சிகிச்சை மருந்தாக இது  பயன்படுத்தப்படுவதில்லை.


• சிகிச்சை அளவுகளில், ஆன்டிஹிஸ்டமைன்கள் போன்ற பொதுவான சிகிச்சைகளுக்குப் பலனளிக்காத கடுமையான, தொடர்ச்சியான இருமலைக் கட்டுப்படுத்த கோடீன் உதவுகிறது. பெரியவர்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட அளவு பொதுவாக ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கும் 10-20 மி.கி., ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 120 மி.கி. வரை ஆகும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதைத் தவிர்க்குமாறு பொதுவாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், இது அவர்களின் உடலில் விரைவாக மார்பினாக மாற்றப்பட்டு, கடுமையான சுவாசச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.


• பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்குள் இருந்தாலும், கோடீன் தூக்கக் கலக்கம், மலச்சிக்கல், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தவறாகப் பயன்படுத்துவது சுவாச அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.  சகிப்புத்தன்மை, போதை மற்றும் பதட்டம், வியர்வை, எரிச்சல் போன்ற விலகல் அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.


• கோடீன் போதையையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, ஆல்கஹால் போன்ற மன அழுத்த மருந்துகளுடன் சேர்த்து உட்கொள்ளும்போது. அளவுக்கு மீறிய பயன்பாடு கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதித்து, மனநலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பீகாரில் உள்ள மருத்துவமனைகள், அதிகமான இளைஞர்கள் இந்த நீண்டகால விளைவுகளால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன.


original article:  What is codeine? -Priya Kumari Shukla

Share:

பிளாசி போர் முதல் அவசரநிலை அறிவிப்பு வரை: ஜூன் மாதத்தின் 5 முக்கிய இந்திய வரலாற்று நிகழ்வுகள். -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி :


கடந்த காலத்தைச் சேர்ந்த முக்கிய ஆளுமைகள், போர்கள் மற்றும் நிகழ்வுகளின் வரலாற்று நினைவுகள், ஒரு தேசத்தின் பயணத்தை வடிவமைப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. சந்தால் கலகம் மற்றும் பிளாசி போர் முதல் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிசூட்டு விழா, மவுண்ட்பேட்டன் திட்டம் மற்றும் அவசரநிலை பிரகடனம் வரை ஜூன் மாதம் பல வரலாற்று நிகழ்வுகள் அதற்கு முக்கிய சாட்சியாக அமைந்துள்ளன.  


ஜூன் 6, 1674 — மராத்தா வரலாறு


ராய்கட் கோட்டையில் முடிசூட்டு (Coronation) விழா


சத்ரபதி சிவாஜி மகாராஜ், ராய்கட் கோட்டையில் மராத்தியப் பேரரசின் முதல் அரசராக அரியணை ஏற்றார். அவருக்கு அதிகாரப்பூர்வ வழங்கப்பட்ட பட்டம் "ஸ்ரீ ராஜா சிவ சத்ரபதி" (Shri Raja Shiva) என்பதாகும். அவர் தனக்கென ஒரு ஆட்சிக்காலத்தைத் தொடங்கினார். இது 'முடிசூட்டு (Coronation) விழா' (Rājyābhiṣheka shaka) என்று அழைக்கப்பட்டது. முகலாய மற்றும் சுல்தான் ஆட்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, மராத்தியர்களுக்கான ஒரு தனித்துவமான இறையாண்மை அடையாளத்தை அவர் உருவாக்கினார்.


1630-சத்ரபதி சிவாஜி பிறந்தார்.


1680-ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி இறந்தபோது, அவரது கட்டுப்பாட்டில் 300-க்கும் மேற்பட்ட கோட்டைகள் இருந்தன.


2025-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) நிறுவனத்தால் உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.


சிவாஜி மகாராஜா பங்கேற்ற முக்கியப் போர்கள்


1659-ஆம் ஆண்டு பிரதாப்கர் போர்:


-மராத்தியர்கள் மற்றும் அடில்ஷாஹி படைகளுக்கு இடையிலான போரில், மராத்தியர்களின் முதல் முக்கியமான வெற்றி இதுவாகும்.


1664-ஆம் ஆண்டு சூரத் போர்:


- 1664-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சத்ரபதி சிவாஜி மகாராஜின் படைகள் முகலாயர்களின் முக்கியத் துறைமுகமான சூரத் நகரின் மீது தாக்குதல் நடத்தின.


1665-ஆம் ஆண்டு புரந்தர் போர்:


- மராட்டியர்களுக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையிலான போர் புரந்தர் உடன்படிக்கைக்கு வழிவகுத்தது.


1679-ஆம் ஆண்டு சங்கமநேர் போர்:


இது சிவாஜி கலந்து கொண்ட கடைசி போர் ஆகும். இந்தப் போர் முகலாய  மற்றும் மராத்தா பேரரசுக்கு இடையே நடைபெற்றது.


முக்கிய அம்சங்கள்:





நிகழ்வுகள் 


தேதி

சிவாஜி மகாராஜாவின் முடிசூட்டு விழா          

   

ஜூன் 6, 1674

பிளாஸ்ஸி போர்   

ஜூன் 23, 1757

சந்தால் கிளர்ச்சி  

ஜூன் 30, 1855

மவுண்ட்பேட்டன் திட்டம்   

ஜூன் 3, 1947

அவசரநிலை அறிவிப்பு  

ஜூன் 25, 1975



 1. 1674-ஆம் ஆண்டு  சத்ரபதி சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழா 


ஜூன் 6, 1674, மராட்டிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதே தேதியில், ராய்கட் கோட்டையில் சிவாஜி மகாராஜாவுக்கு முடிசூட்டப்பட்டது. அவர் மராட்டியப் பேரரசின் முதல் அரசரானார். முடிசூட்டு விழாவிற்குப் பிறகு அவரது அதிகாரப்பூர்வப் பட்டம் 'ஸ்ரீ ராஜா சிவ சத்ரபதி' என்பதாகும். மேலும், சில முற்கால மன்னர்களின் மரபைப் பின்பற்றி, அவர் தனது முடிசூட்டு விழாவை அடிப்படையாகக் கொண்டு “ராஜ்யாபிஷேக காலம்” என்ற புதிய ஆண்டுக் கணக்கை அறிமுகப்படுத்தினார்.


சத்ரபதி சிவாஜி 1630 முதல் 1680-ஆம் ஆண்டு வரை 17-ஆம் நூற்றாண்டில் பல்வேறு தக்காண அரசுகளை ஒன்றிணைத்து ஒரு சுதந்திரமான மராத்திய அரசை உருவாக்கினார். அவர், தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு தக்காண சுல்தான்களுக்குப் பணியாற்றிய ஒரு தளபதியின் மகனாகப் பிறந்தார்.


1650-களில் அவுரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்புகளின்போதுதான் முகலாயர்களுடனான அவரது முதல் நேரடி மோதல் நிகழ்ந்தது. முகலாய அரியணைக்காகப் போரிட அவுரங்கசீப் வடக்கு நோக்கிச் சென்றபோது, ​​சிவாஜியால் பல பகுதிகளைக் கைப்பற்ற முடிந்தது. அவர் இறந்த சமயத்தில், சூரத் முதல் கோவாவிற்கு அருகிலுள்ள பகுதி வரை கொங்கணக் கடற்கரையோரமாக விரிந்து, முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கண்காணிப்பின் கீழ் அமைந்திருந்த ஒரு நிலப்பரப்பில், அவர் 300 கோட்டைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.


மராட்டியர்களின் மலைக்கோட்டைகள் இராணுவ வியூகத்திற்கு இன்றியமையாதவையாக இருந்தன. 2025-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகப் பாரம்பரியக் குழுவின் (World Heritage Committee (WHC)) 47-வது அமர்வில், 'மராட்டியப் போர் நிலப்பரப்புகள்' (Maratha Military Landscapes) யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றன.

போர்கள்

விளக்கம்

பிரதாப்கர் போர் (1659)

மராத்தியர்களுக்கும் ஆதில்ஷாஹி படைகளுக்கும் இடையே நடைபெற்ற போர்.

கோலாப்பூர் போர் (1659)

மராட்டிய மன்னர் சிவாஜிக்கும் ஆதில்ஷாஹி படைகளுக்கும் இடையே நடைபெற்ற போர்.

சூரத் போர் (1664) 

மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கும், முகலாய கேப்டனான இனாயத் கானுக்கும் இடையே போர் நடந்தது.

புரந்தர் போர் (1665)

மராட்டியர்களுக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையே நடந்த போர்.

சால்ஹெர் போர் (1672)

மராத்தா பேரரசுக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையே நடந்த போர்.

சங்கமனேர் போர் (1679)

முகலாயப் பேரரசுக்கும் மராத்தாப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற போர். இது சிவாஜி போரிட்ட கடைசிப் போராகும்.





2. 1757-ஆம் ஆண்டு பிளாசிப் போர்: இந்தியாவில் பிரிட்டிஷ் அரசியல் அதிகாரத்தின் தொடக்கம்


1757-ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, வங்கத்தில் ஹூக்ளி நதிக்கரையில் ஆங்கிலேயர்களுக்கும் வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலாவுக்கும் இடையே நடந்த போர், நவீன இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியத் துணைக்கண்டத்தின் மீது ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்திய தருணமாக பிளாசிப் போர், வரலாற்றுப் நிகழ்வுகள் மற்றும் பண்பாட்டு, இலக்கியப் பிரதிநிதித்துவங்கள் மூலம் நினைவுப்படுத்த்ப்படுகிறது.


1717-ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனி முகலாயப் பேரரசரிடமிருந்து அரச அதிகாரம் பெற்றது. அது, வங்கத்தில் தங்கள் பொருட்களை வரிகள் செலுத்தாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கும், பொருட்களின் போக்குவரத்திற்காக அனுமதிச் சீட்டுகள் அல்லது வரிவிலக்கு வணிக அனுமதிச் சீட்டுகளை (dastaks) வழங்குவதற்கும் அவர்களுக்குச் சுதந்திரத்தை அளித்தது. வழங்கப்பட்ட அரச அதிகாரம், கம்பெனிக்கும் வங்காள நவாப்களுக்கும் இடையே ஒரு தொடர்ச்சியான மோதலுக்குக் காரணமாக அமைந்தது. முர்ஷித் குலி கான் முதல் அலிவர்தி கான் வரையிலான வங்காள நவாபுகள், அரச அதிகாரம் தொடர்பாக ஆங்கிலேயர் வழங்கிய விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


1756-ல், சிராஜ்-உத்-தௌலா தனது தாத்தாவான அலிவர்தி கானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தபோது, ​​முர்ஷித் குலி கானின் காலத்தில் வர்த்தகம் செய்த அதே அடிப்படையில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று கூறினார். இருப்பினும், தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களை வென்றதால் வலிமை பெற்றிருந்த ஆங்கிலேயர்கள், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.


கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் இருந்த தங்கள் கோட்டைகளை இடிக்குமாறு நவாப் இட்ட உத்தரவை கிழக்கிந்திய கம்பெனி ஏற்க மறுத்தபோது, ​​இந்த நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. பிரெஞ்சு கம்பெனி இதேபோன்ற ஒரு உத்தரவுக்கு ஏற்ப, சந்தர்நகூரில் இருந்த தங்கள் கோட்டையை இடித்தது. இந்த உத்தரவை ஏற்காததன் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, சிராஜ்-உத்-தௌலா கல்கத்தாவை நோக்கிப் படையெடுத்துச் சென்று, 1756 ஜூன் 20-அன்று வில்லியம் கோட்டையைக் கைப்பற்றினார்.

ஒரு வருடத்திற்குள், கெரியாவில் இருந்த மராத்தா கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் மெட்ராஸிலிருந்து வந்த, இளம் மற்றும் லட்சியம் மிக்க ராபர்ட் கிளைவின் இராணுவ அதிகாரத்தின்கீழ் கம்பெனி பதிலடி கொடுத்தது. அவர் நவாபை ஆங்கிலேயர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் படி கட்டாயப்படுத்தினார்.



இருப்பினும், ஆங்கிலேயர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் உயர்ந்த இலக்குகளைக் கொண்டிருந்தனர். சிராஜ்-உத்-தௌலா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தங்களுக்கு முழுமையான சலுகைகள் கிடைக்காது என்பதை அவர்கள் விரைவிவாக உணர்ந்தனர். நவாபை வீழ்த்துவதற்கு உதவுவதாக ஒப்புக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக நிதிச் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, அந்நிறுவனம் மிர் ஜாஃபருடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


இது, 1757 ஜூன் 23 அன்று நடைபெற்ற பிளாசிப் போருக்கு வழிவகை செய்தது. இந்தப் போரில், ராபர்ட் கிளைவ் தலைமையில் செயல்பட்ட கம்பெனிப் படைகள், மிர் ஜாஃபர் மற்றும் ராய் துர்லப் ஆகியோரின் ஆதரவைப் பெற்று, சிராஜ்-உத்-தௌலாவின் படைகளைத் தோற்கடித்தன. நவாப் தப்பி ஓடவேண்டிய சூழல் உருவானது. பின்னர், அவர் சிறைபிடிக்கப்பட்டு, மிர் ஜாஃபரின் மகனான மீரனால் கொல்லப்பட்டார்.


பிபின் சந்திராவின் கூற்றுப்படி, பிளாசிப் போர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது வங்கத்தின் மீதும், இறுதியில் ‘இந்தியாவின் அனைத்துப்  பகுதிகளின்’ மீதும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்த வழி வகை செய்தது. அது ஆங்கிலேயரின் செல்வாக்கை உயர்த்தியதுடன், ஒரே அடியில் அவர்களை இந்தியப் பேரரசுக்கான ஒரு முக்கியப் போட்டியாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது.


3. 1855-ஆம் ஆண்டுசந்தால் கலகம் : காலனித்துவச் சுரண்டலுக்கு எதிரான சந்தால் ஹுல்


1855-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி, வருவாய் அதிகாரிகள், ஜமீன்தார்கள் மற்றும் அதிக ஊழல் நிறைந்த வட்டித்தொழில் செய்பவர்களின் அடக்குமுறைக்கு எதிராகக் கிழக்கிந்திய கம்பெனியைக் கிளர்ச்சி செய்வதற்காக, கன்ஹோ முர்மு, சந்த் முர்மு, பைரப் முர்மு மற்றும் சித்தோ முர்மு ஆகிய தங்களின் தலைவர்களால் 10,000-க்கும் மேற்பட்ட சந்தால்கள் அணி திரட்டப்பட்டனர். சந்தால் ஹுல் என்று குறிப்பிடப்படும் பழங்குடியினர் வரலாற்றின் இந்த நிகழ்வு, இன்றைய ஜார்க்கண்டில் உள்ள போக்நாடிஹ் (Bhognadih) கிராமத்தில் நடைபெற்றது.

சந்தால்கள் யார்?


இன்றைய சாந்தால்கள் பர்கானா பகுதியில் உள்ள தும்கா, பாகூர், கோடா, சாஹிப்கஞ்ச், தேவ்கர் மற்றும் ஜம்தாராவின் சில பகுதிகளின் முதற்குடியினராக   இருக்கவில்லை. அவர்கள் 18-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து, தற்போதைய மேற்கு வங்கத்தின் பகுதிகளான பீர்பூம் மற்றும் மன்பூம் பகுதிகளிலிருந்து இந்தப்பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.


பெரும் ஆவி (the great spirit) தங்களைச் சந்தித்து, தங்கள் நிலப்பகுதியிலிருந்து வெளியாட்கள் (dikus) அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அந்தப்பிராந்தியத்தில் சந்தால் ஆட்சியை நிறுவ வேண்டும் என்று தங்களுக்கு அறிவுறுத்தியதாக கன்ஹோ மற்றும் சிதோ ஆகியோர் கூறினர்.


சந்தால் கிளர்ச்சி அல்லது புரட்சி (‘Hul’) என்பதற்கான விதைகள், 1832-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியபோது விதைக்கப்பட்டன. டாமின்-இ-கோ பகுதிராஜ்மஹால் மலையில் உள்ள வனப்பகுதியில், வங்க மாகாணத்தின் பகுதிகளான பீர்பூம், முர்ஷிதாபாத், பகல்பூர், பரபூம், மன்பூம், பலாமு மற்றும் சோட்டாநாக்பூர் ஆகிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த சந்தால்களுக்கு இப்பகுதி ஒதுக்கப்பட்டது.


சந்தால்களுக்கு டாமின்-இ-கோவில் குடியேற்றமும் வேளாண்மையும் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அதைத் தொடர்ந்து நில அபகரிப்பு மற்றும் இரண்டு வகையான பெகாரி (கொத்தடிமைத் தொழில்) போன்ற அடக்குமுறை  அரங்கேறின: பல ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களின் உதவியுடன் நடந்த சுரண்டல் நடைமுறைகளால் சந்தால்கள் பாதிக்கப்பட்டனர்.santhal revolt, upsc

 — முர்மு சகோதரர்கள்  60,000 சந்தால்களைத் திரட்டி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போராடினர். ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்த அவர்கள் நடத்திய கொரில்லாப் போர், இறுதியாக 1856-ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அன்று முழுமையாக ஒடுக்கப்பட்டது. இந்தப் போரில் 15,000-க்கும் மேற்பட்ட சந்தால்கள் கொல்லப்பட்டனர். 10,000 கிராமங்கள் சூறையாடப்பட்டன.

 1855-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி சித்தோவை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். அவரைத் தொடர்ந்து, 1856-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கன்ஹுவும் தூக்கிலிடப்பட்டார். இந்தக்கிளர்ச்சி முடிவுக்கு வந்தபோதிலும், அது ஏற்படுத்திய தாக்கம் தற்போது வரை நிலைத்திருக்கிறது. 1876-ஆம் ஆண்டின் 'சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம்' (Santhal Pargana Tenancy Act (SPT)) மற்றும் 1908-ஆம் ஆண்டின் 'சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம்' (Chhotanagpur Tenancy Act (CNT Act)) ஆகியவை இந்தக் கிளர்ச்சியின் முக்கியக்  காரணமாக உருவாகின.

 4. 1947-ஆம் ஆண்டு மவுண்ட்பேட்டன் திட்டம்: சுதந்திரம் மற்றும் பிரிவினைக்கான பாதை

இந்தியாவின் சுதந்திரப் பாதையானது, அதிக சவால்கள் நிறைந்த பேச்சுவார்த்தைகள், அரசியல் குறுக்கீடுகள் மற்றும் ஆழமடைந்து வந்த இந்து-முஸ்லிம் பிளவு ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அனைத்திற்குமான தீர்வாக மவுண்ட்பேட்டன் திட்டம் அமைந்தது.


1947-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், வேவலுக்குப் பதிலாக லார்ட் மவுண்ட்பேட்டன் வைஸ்ராய் ஆனார். மவுண்ட்பேட்டன் கடைசிச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பேச்சுவார்த்தையும் முடிவடையாததால், பிரிட்டிஷ் இந்தியா விடுவிக்கப்படும். ஆனால், பிரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.


பஞ்சாப் மற்றும் வங்கத்தின் சட்டமன்றங்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் எனத் தனித்தனி குழுக்களாகக் கூடி, மாகாணப் பிரிவினை குறித்து வாக்களிக்க வேண்டும் என்பது மவுண்ட்பேட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த இரண்டு குழுக்களில் ஏதேனும் ஒன்றில், பிரிவினைக்கு ஆதரவாக எளிய பெரும்பான்மை வாக்குகள் பதிவானால், அந்தந்த மாகாணங்கள் பிரிக்கப்படும். பிரிவினை ஏற்படும் பட்சத்தில், இரண்டு தன்னாட்சிப் பிரதேசங்களும் (Dominions), இரண்டு அரசியல் நிர்ணய சபைகளும் நிறுவப்படும். சிந்து மாகாணம் தனது முடிவைத் தானே எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மேலும், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (North-West Frontier Province (NWFP)) மற்றும் வங்காளத்தின் சில்ஹெட் மாவட்டம் ஆகியவற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க, அங்கு பொதுவாக்கெடுப்புகள் நடத்தப்பட இருந்தன.


மவுண்ட்பேட்டன் திட்டம் (மவுண்ட்பேட்டன் திட்டம்), முஸ்லிம் லீக் முன்வைத்த பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை அடிப்படையில் ஏற்றுக்கொண்டதுடன், இந்தியாவின் ஒற்றுமையை முடிந்தவரை பாதுகாக்க முயன்றது. 1947-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி, மவுண்ட்பேட்டன் திட்டத்தின் அடிப்படையில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்தியச் சுதந்திரத்திற்க்கான சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டத்திற்கு 1947-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி அரச ஒப்புதல் கிடைத்தது. இந்தச்சட்டம் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.


5 அவசரநிலை பிரகடனம் (1975): இந்திய ஜனநாயகத்தின் ஒரு திருப்புமுனை


 1975 ஜூன் 25 அன்று, பிரதமரின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, அரசியலமைப்பின் 352(1) பிரிவின் கீழ் அவசரநிலைப் பிரகடனத்தை வெளியிட்டார். இது நவீன இந்திய வரலாற்றில்  முக்கியமான ஒன்றாக அமைந்தது.


‘அவசர நிலை' என்பது ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரையிலான காலப்பகுதியைக் குறிக்கிறது. இக்காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பில் உள்ள சிறப்பு விதிகளைப் (special provisions) பயன்படுத்தி, நாட்டின்மீது விரிவான நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை அமல்படுத்தினார்.


1974 மற்றும் 1975-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நிலவிய பல்வேறு அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலைகள் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தன. இந்த நிகழ்வுகளில் சில: ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம், ராஜ் நாராயண் வழக்கு மீதான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் 1974-ஆம் ஆண்டின் இரயில்வே வேலைநிறுத்தம் ஆகும்.


1977-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி நிலை நீக்கப்பட்டது. ஜனசங், காங்கிரஸ் (ஒ), சோசலிஸ்டுகள் மற்றும் பாரதிய லோக் தல் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து உருவான ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததுடன், மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமரானார்.

 ஜூன்டீந்த் (Juneteenth)


இந்தியாவில் ஜூன் மாதம் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்காக நினைவுகூரப்பட்டாலும், இந்த மாதம் உலகளாவிய வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அத்தகைய ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவில் கொண்டாடப்படும் ஜூன்டீன்த் ஆகும். இது அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததை நினைவுப்படுத்துகிறது.


1. “ஜூன்” மற்றும் “பத்தொன்பதாம் (nineteenth)” ஆகிய சொற்களின் இணைப்பால் உருவான ஜூன்டீன்த், அமெரிக்காவில் அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்தும் மிகப் பழமையான தேசிய நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று அனுசரிக்கப்படும் இது, அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தருணத்தைக் குறிக்கிறது.


2. ஜனவரி 1, 1863 அன்று, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், கிளர்ச்சி செய்த மாநிலங்களுக்குள் இருந்த அனைத்து அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் சுதந்திரம் அளிக்கும் விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார். இருப்பினும், இந்தப் பிரகடனம் உடனடியாக அனைத்து அடிமைப்படுத்தப்பட்டவர்களையும் விடுவிக்கவில்லை. ஏனெனில், கூட்டமைப்புப் பிரதேசங்களான டெக்சாஸ், ஆர்கன்சாஸ், லூசியானா, டென்னசி, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய இடங்களில் இருந்த பல உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.


3. 1865-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி, மாகாணங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த கடைசி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர். மேஜர் ஜெனரல் கார்டன் கிரேஞ்சர் டெக்சாஸின் கால்வெஸ்டனுக்கு வந்து, டெக்சாஸில் அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததாக அறிவித்து, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் சுதந்திரம் அடைந்துவிட்டதாகப் பிரகடனப்படுத்தும் பொது ஆணை எண் 3-ஐப் பிறப்பித்தார். அடிமை விடுதலைப் பிரகடனத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த இந்தத் தேதி, ஜூன்டீன்த் என்று அறியப்பட்டது.


original article:  From Plassey to Emergency: 5 key june events in Indian history. -Khushboo Kumari

Share:

இந்தியாவும் இந்தோனேசியாவும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களைச் (BIT) சீர்திருத்த முயன்றது, இதில் இந்தோனேசியா முன்னோக்கிய பாதையைத் தேர்ந்தெடுத்தது — இந்தியா பின்னடைவைத் தேர்ந்தெடுத்தது. -சுர்ஜித் எஸ் பல்லா

 இந்தோனேசியா சட்டத்தின் ஆட்சி, சீர்திருத்தம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து, முதலீடுகள் வருவதைக் கவனித்தது. இதற்கு மாறாக, இந்தியா ஒரு குறைபாடுள்ள அமைப்புக்கு புதிய ஆவணங்களை உருவாக்கி, அதைச் சீர்திருத்தம் என்று அழைத்தது. மூலதனம் அதற்கேற்ப எதிர்வினையாற்றியுள்ளது.


முந்தைய ஒரு கட்டுரையில் ('பாஜக தேர்தலில் வெல்கிறது, ஆனால் பொருளாதாரத்தை இழக்கிறது,' IE, மே 21), இந்தியாவில் குறைந்து வரும் தனியார் முதலீடு குறித்து நான் கவலையையும் அக்கறையையும் வெளிப்படுத்தியிருந்தேன். இந்தியாவில் தனியார் முதலீட்டின் பங்கில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு ஒரு பத்தாண்டு காலப் பிரச்சினை என்றும், இந்தியாவில் மோசமடைந்து வரும் முதலீட்டுச் சூழலே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன். 2015-ம் ஆண்டின் மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தால் (Model Bilateral Investment Treaty (BIT)) இயற்றப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டிற்கு (direct investment (FDI)) எதிரான கடுமையான விதிகளுக்குப் பிறகு (அல்லது அவற்றால் தூண்டப்பட்டு?) முதலீட்டுச் சூழல் மோசமடைந்துள்ளது என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன். தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த் நாகேஸ்வரன் வழியாக அரசாங்கம் ஆக்கப்பூர்வமாகப் பதிலளித்தது ('நாம் பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும், ஆனால் அவநம்பிக்கை தெளிவுபடுத்தாமல் மறைக்கிறது,' IE, மே 23). இந்தப் பிரச்சினையை நன்கு புரிந்துகொள்வதற்காக, இந்தக் கட்டுரையில் இந்தோனேசியா மற்றும் இந்தியாவின் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை (BITs) நான் ஒப்பிடுகிறேன்.





இந்தோனேசியா: ஒரு வெற்றிக் கதை


2014-ல், இந்தோனேசியா தனது தற்போதைய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, ஒரு புதிய மாதிரியுடன் மீண்டும் தொடங்குவதாக ஒரு துணிச்சலான அறிவிப்பை வெளியிட்டது. வெளிநாட்டு முதலீட்டுச் சட்டத்தை மீறியதாகக் கூறி இந்தோனேசிய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்த சர்ச்சில் மைனிங் மற்றும் நியூமாண்ட் ஆகிய இரண்டு வெளிநாட்டுச் சுரங்க நிறுவனங்களே இதற்குக் காரணமாக அமைந்தன. இந்தோனேசியா இரண்டு வழக்குகளிலும் வெற்றி பெற்றது.


சர்ச்சில் மைனிங் வழக்கு குறிப்பாகப் படிப்பினை அளிக்கிறது. சர்ச்சிலின் உள்ளூர் கூட்டணி நிறுவனமான ரிட்லதாமா குழுமம், சுரங்கச் சலுகைகளை மோசடியாகப் பெறுவதற்காக, உள்ளூர் அரசாங்க அதிகாரிகளின் இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட கையொப்பங்கள் உட்பட ஆவணங்களைப் போலியாகத் தயாரித்திருந்தது என்பதை இந்தோனேசிய அரசாங்கம் நீதிமன்றத்தில் நிரூபித்தது. ரிட்லடாமா குழுமம் அரசியல்ரீதியாக நல்ல செல்வாக்கு பெற்றிருந்தது. ஆனால், இந்தோனேசியாவின் ஊழல் எதிர்ப்பு அமைப்பான ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு (Komisi Pemberantasan Korupsi (KPK)) உண்மையான அதிகாரம் இருந்தது. தேர்தல் பிரச்சார நிதிக்காகச் சுரங்க உரிமங்களைப் பரிமாறிக்கொண்ட பிராந்திய அரசியல்வாதிகளை விசாரிக்க, அது தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் நிதி கண்காணிப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியது. 2016-ம் ஆண்டுக்குள், வளங்கள் மீதான அனுமதிகளைப் போலியாகத் தயாரிப்பதற்காக இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூன்று ஆளுநர்கள் மற்றும் நான்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் மீது ஊழல் ஒழிப்பு ஆணையம் (KPK) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அந்த ஊழல் அதிகாரிகள் சிறைக்குச் சென்றனர். ரிட்லடாமா குழுமம் கலைக்கப்பட்டு, அதன் சுரங்க உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இது அதன் நிர்வாகிகள் மீதான வழக்குத் தொடருவதற்கான கதவை திறம்பட மூடியதுடன், அதே விளைவையும் ஏற்படுத்தியது. பின்னர், அந்த நிறுவனம் இல்லாமல் போனது.




சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடுவதற்கு எதிராக சர்வதேச வணிக சமூகம் இந்தோனேசியாவை எச்சரித்தது. இத்தகைய நடவடிக்கைகள், இந்தோனேசியாவுக்கு மிகவும் தேவைப்படும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்கமிழக்கச் செய்யும் என்று விமர்சகர்கள் வாதிட்டனர். இருப்பினும், அந்த எச்சரிக்கை காலப்போக்கில் தாக்குப்பிடிக்கவில்லை. 2015-க்கு முந்தைய பத்தாண்டுகளில், இந்தோனேசியா ஆண்டுக்கு சராசரியாக 14 பில்லியன் டாலர் உள்வரும் நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) ஈர்த்தது. மேலும், நிகர நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவீதமாக இருந்தது. அதன் புதிய அணுகுமுறைக்குப் பிந்தைய பத்தாண்டுகளில், உள்வரும் நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) ஆண்டுக்கு 20 பில்லியன் டாலராகவும், நிகர FDI மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் உலகளாவிய FDI வரவுகள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறி, 2004-ல் 0.65 டிரில்லியன் டாலரிலிருந்து இன்று 1.6 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


அதன்பிறகு இந்தோனேசியா இரண்டு புதிய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில் (Bilateral Investment Treaties (BIT)) மட்டுமே கையெழுத்திட்டுள்ளது. அவற்றில் ஒன்று சிங்கப்பூருடன் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தம் நாட்டின் புதிய தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இது 12 மாதங்கள் மட்டுமேயான ஒரு தணிவுக்காலத்தை வழங்குகிறது. ஒரு தகராறு தீர்க்கப்படாமல் இருந்தால், அது மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பரிந்துரைக்கப்படும். ஒவ்வொரு தரப்பும் ஒரு நீதிபதியைத் தேர்ந்தெடுக்கும். மூன்றாவது மற்றும் தலைமை நீதிபதி, இரு தரப்பினராலும் கூட்டாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் இரு நாடுகளிலும் எதற்கும் குடிமகனாக இருக்கக்கூடாது. இம்முறை எளிமையானது, நடுநிலையானது மற்றும் விரைவானது.


இந்தியா: சுயமாக ஏற்படுத்திக்கொண்ட துயரங்களின் கதை


இந்தியா இந்தோனேசியாவைக் கவனித்து, தவறான பாடங்களைக் கற்றுக்கொண்டது. இந்தோனேசியாவைப் போலவே, ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான ஒயிட் இண்டஸ்ட்ரீஸுடனான ஒரு தகராறின் காரணமாக, இந்தியாவும் 2016-ல் தனது ஏற்கனவே இருந்த இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை (BITs) ரத்து செய்தது. இருப்பினும், இந்திய வழக்கில் ஒரு முக்கியமான திருப்பம் இருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட உள்நாட்டுத் தரப்பு ஒரு தனியார் நிறுவனம் அல்ல, மாறாக இந்திய அரசாங்கத்திற்கே சொந்தமான கோல் இந்தியா என்ற நிறுவனம் ஆகும். ஒயிட் இண்டஸ்ட்ரீஸ் வெறும் 2.2 மில்லியன் டாலர் தொகையை நடுவர் மன்றத் தீர்ப்பாக வென்றிருந்தது. இருப்பினும், கல்கத்தா மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் ஏற்பட்ட பெரும் தேக்கநிலைகள் மற்றும் நடைமுறை முட்டுக்கட்டைகள் காரணமாக, ஒரு பத்தாண்டுகாலம் கடந்தும் எந்த முடிவும், எந்தத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை. 2011-ல், ஒயிட் இண்டஸ்ட்ரீஸ் இந்திய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுத்து, அதில் வெற்றி பெற்றது. மேலும், அசல் தொகையுடன் கூடுதலாக வட்டியையும் சட்டச் செலவுகளையும் செலுத்துமாறு கோல் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்தப் பின்னடைவுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியா 2015-ல் ஒரு புதிய மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை (BIT) அறிமுகப்படுத்தியது. இது எந்தவொரு அரசாங்கத்தாலும் நிறைவேற்றப்பட்ட மிகவும் கட்டுப்பாடான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தமாகும். இது முதலீட்டை ஊக்குவிப்பதைவிட, அரசைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியது. இந்தோனேசியாவின் 12 மாத கால அவகாசத் தேவைக்கு மாறாக, இந்திய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIT) 60 மாதங்களைக் கோரியது. எந்தவொரு சர்வதேச நடுவர் மன்ற விசாரணையும் தொடங்குவதற்கு முன்பு, இந்திய நீதிமன்றங்களில் 60 மாதங்கள் தேவைப்பட்டன. இது ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு பின்னோக்கிய படியாகும்.


ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 2015-ம் ஆண்டின் மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தக் கொள்கையை இந்தியா இறுதியாகத் திருத்தும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். அந்தத் திருத்தம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இது கட்டாய நீதிமன்ற சமரசக் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைப்பதுதான் அரசாங்கத்தின் சலுகையாகத் தெரிகிறது. அதேநேரத்தில், சர்ச்சைகளை இந்திய நீதிமன்றங்கள் மூலமாகவும், ஒருவேளை இந்திய நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் மூலமாகவும் தொடர்ந்து வழிநடத்துகிறது.


2014-ல், இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் புதிய அரசாங்கங்கள் அமைந்தன. இரண்டுமே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில் சீர்திருத்தம் செய்ய விரும்பின. இந்தோனேசியா ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. இந்தியா மிகவும் கட்டுப்பாடான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. இதன் விளைவாக, இந்தோனேசியா சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் முதலீட்டையும் பெற்றது. இதற்கு மாறாக, இந்தியா விமர்சனங்களை எதிர்கொண்டதுடன், முதலீட்டாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதையும் கண்டது.


தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், இந்தியாவின் தரப்பில் இரண்டு வாதங்களை முன்வைத்துள்ளார். ஒன்று, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் (BITs) அந்நிய நேரடி முதலீட்டு வரவுகளில் "பலவீனமான அல்லது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை" என்பது. மற்றொன்று, 2025-26-ஆம் ஆண்டில் இந்தியா உள்வரும் அந்நிய நேரடி முதலீட்டில் ஒரு வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 


இந்த இரண்டு வாதங்களும் கவனமாக ஆராயப்பட வேண்டியவை. 2025–26 நிதியாண்டில், மொத்த உள்நாட்டிற்கு வரும் அந்நிய நேரடி முதலீடு (FDI) $94.5 பில்லியன் என்ற பெயரளவு சாதனையை எட்டியது. ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் இலாபங்கள் மற்றும் மூலதனத்தைக் கழித்த பிறகு இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அந்தக் கணக்கீட்டின்படி, 2025-26 ஆம் ஆண்டில் நிகர உள்நாட்டிற்கு வரும் அந்நிய நேரடி முதலீடு (FDI) $41 பில்லியனாக மட்டுமே இருந்தது. இது 2008-09 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட $41.7 பில்லியனை விட சற்றுக் குறைவாகும். அதே நேரத்தில், இந்திய நிறுவனங்கள் 2025-26 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 33.3 பில்லியன் டாலரை வெளிநோக்கிய அந்நிய நேரடி முதலீடாக (outward FDI) வெளிநாடுகளில் முதலீடு செய்தன. இந்தப் பணம், இல்லையெனில் இந்தியாவிற்குள்ளேயே முதலீடு செய்யப்பட்டிருக்கலாம். நிகர அந்நிய நேரடி முதலீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) பங்காகக் கணக்கிடும்போது, ​​நிலைமை இன்னும் பலவீனமாகிறது. 2025-26-ஆம் ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.77%-ஆக இருந்தது. இது இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றில் இரண்டாவது மிகக் குறைந்த அளவாகும். 2004-05-ஆம் ஆண்டில் மட்டுமே இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.73% என்ற குறைந்த அளவைக் கொண்டிருந்தது.



இந்தோனேசியா சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தவும், தனது அமைப்பைச் சீரமைக்கவும் முடிவு செய்தது. அதன் விளைவாக, அந்நாட்டிற்குள் முதலீடுகள் குவிந்தன. இதற்கு மாறாக, இந்தியா தனது அமைப்பில் பல குறைபாடுகளைத் தக்க வைத்துக் கொண்டது. அது புதிய ஆவண நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, அதை ஒரு சீர்திருத்தமாக முன்வைத்தது. மூலதனம் அதற்கேற்ப பதிலளித்துள்ளது. 2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு நடுவர் மன்றத் தீர்ப்பைக்கூட உடனடியாக நிறைவேற்றுவோம் என்று ஒரு நாடு உலகை நம்ப வைக்க முடியாதபோது, ​​சிக்கல்கள் எழுகின்றன. அத்தகைய ஒரு தீர்ப்பை அமல்படுத்துவது பத்தாண்டு கால நீதிமன்றப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றால், முதலீட்டாளர்கள் அதைக் கவனத்தில் கொள்கிறார்கள். அந்தச் சூழலில், அந்நிய நேரடி முதலீட்டுப் பதிவேட்டில் உள்ள புள்ளிவிவரங்கள் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவை அந்நாட்டின் நம்பகத்தன்மை மற்றும் முதலீட்டுச் சூழல் குறித்த ஒரு தீர்ப்பாகும்.


பல்லா, இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ குடும்ப வருமானக் கணக்கெடுப்பிற்கான தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் தலைவர் ஆவார்.


original article:  India and Indonesia both set out to reform BITs. Indonesia chose the forward path — India chose regression -Surjit S Bhalla

Share: