ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி


ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற உயர் அதிகாரிகள் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் மூன்றாவது நாளாக கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. இதற்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகளை வீசியுள்ளது. அதே, நேரத்தில் உலகம் முழுவதும் கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் பயணம் பெரும் இடையூறுகளை எதிர் கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. ஆபரேஷன் 'லயன்ஸ் ரோர்': பிப்ரவரி 28 சனிக்கிழமை இஸ்ரேல், தெஹ்ரான் மீது பகல்நேர வான்வழித் தாக்குதல் நடத்தியது. முக்கியமான இராணுவ இடங்களைத் தாக்கியது. ஈரானின் முக்கிய நகரங்களான இஸ்ஃபஹான், கோம், கராஜ், கெர்மன்ஷா, லோரெஸ்தான் மற்றும் தப்ரிஸ் போன்றவை கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. அவற்றுடன் கெனாரக்கில் உள்ள தெற்கு கடற்படைத் தளங்களும் அடங்கும். ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தின் முக்கிய மையமான இஸ்ஃபஹான் கடுமையான சேதத்தை சந்தித்தது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், அதை "சிங்கத்தின் கர்ஜனை" (Lion’s Roar) என்று அழைத்ததாகவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.


2. "காவிய சீற்ற நடவடிக்கை": அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப், Truth Social தளத்தின் மூலம் ஈரான் மீதான தாக்குதல்களில் வாஷிங்டனின் தாக்குதலை உறுதிப்படுத்தினார். இந்த நடவடிக்கைகளை "ஈரானில் பெரிய போர் நடவடிக்கைகள்" என்று விவரித்தார் மற்றும் அமெரிக்கா ஈரானை அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்காது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். அமெரிக்காவால் "காவிய சீற்றம் நடவடிக்கை" (Operation Epic Fury) என்று குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதல்கள், பல ஆண்டுகளாக தெஹ்ரானுடனான நேரடி மோதலைக் குறிக்கின்றன.


3. 'உண்மையான வாக்குறுதி 4' நடவடிக்கை: சனிக்கிழமையன்று ஈரான் மற்றும் அதன் தலைமைக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய பிறகு, இஸ்லாமிய ஆட்சி டெல் அவிவ் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு எதிராக ‘உண்மையான வாக்குறுதி 4-ஐத் தொடங்கியது. வாஷிங்டனின் பிராந்திய நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் மீது இஸ்லாமியக் குடியரசு எதிர்த்தாக்குதல்களைத் தொடங்கியது. இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளன.


4. ஹார்முஸ் ஜலசந்தி: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்துவரும் மோதல், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஓட்டத்தை கடுமையாக பாதித்துள்ளது. சனிக்கிழமை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (Iran’s Islamic Revolutionary Guards Corps (IRGC)) ஜலசந்தி மூடப்பட்டதாக கப்பல்களுக்கு செய்திகளை அனுப்பியது.


இந்த ஜலசந்தி ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ளது, வடக்கில் பாரசீக வளைகுடாவையும் தெற்கில் ஓமன் வளைகுடாவையும் அதனை தாண்டி அரபிக் கடலையும் இணைக்கிறது. மிகக் குறுகிய இடத்தில், இந்த ஜலசந்தி 21 மைல்கள் (33 கிமீ) அகலம் கொண்டது. கப்பல் பாதை ஒவ்வொரு வழியிலும்  இரண்டு மைல்கள் (3 கிமீ) அகலம் மட்டுமே கொண்டது. இது உலகின் 20-25% எண்ணெயுக்கான முக்கியமான பாதையாகவும், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Liquefied Natural Gas (LNG)) ஏற்றுமதிக்கான முக்கிய பாதையாகவும் உள்ளது.

Knowledge Nugget | US-Israel war on Iran: 10 must-know tidbits for UPSC Exam

5. தொடக்கக் கோட்பாடு: இஸ்ரேலின் தொடக்கக் கோட்பாடு இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே குறிப்பிடத்தக்க மோதலுக்கு - இராஜதந்திரரீதியாகவும் ஒரு  முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. எதிரியிடம் அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவு ஆயுதங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மட்டுமே இருந்தாலும், இஸ்ரேல் தடுப்புத் தாக்குதல்களை நடத்த முடியும் என்று தொடக்கக் கோட்பாடு கூறுகிறது.


6. வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடம்: ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (International North South Transport Corridor (INSTC)) மற்றும் சபாஹர் துறைமுகம் போன்ற இந்தியாவின் பிராந்திய இணைப்பு உத்தி ஆபத்தில் உள்ளது.


சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (International North South Transport Corridor (INSTC)): ரஷ்யா, இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளால் தொடங்கப்பட்ட சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம், இந்தியப் பெருங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை ஈரான் வழியாக காஸ்பியன் கடலுடனும், பின்னர் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வழியாக வடக்கு ஐரோப்பாவை இணைக்கும் பலவழித்தடங்களை கொண்ட  ஒரு போக்குவரத்துத் திட்டமாகும். இந்த வழித்தடம் பயண நேரத்தை 25 நாட்களாகக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சூயஸ் கால்வாய் வழியாகச் செல்வதை செல்வதற்கு பதிலாக 20 நாட்களை மிச்சப்படுத்தும். மேலும், கப்பல் செலவுகளை 30% குறைக்கும்.


மும்பையிலிருந்து ஈரானின் பந்தர் அப்பாஸுக்கு கடல் வழியாகவும், பின்னர் சாலை வழியாக காஸ்பியன் கடலில் உள்ள பந்தர்-இ-அன்சாலிக்கு பொருட்களை கொண்டு செல்லவும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம்  அமைக்கப்பட்டது. கப்பல்கள் அவற்றை ரஷ்யாவின் அஸ்ட்ராகானுக்கு கொண்டு செல்லும், இறுதியாக, அவை ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்படும்.


Knowledge Nugget: US-Israel war on Iran

7. சபாஹர் துறைமுகம்: சபாஹர் என்பது ஈரானின் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு ஆழ்கடல் நீர் துறைமுகமாகும். இது இந்தியாவிற்கு அருகில் உள்ள ஈரானிய துறைமுகமாகும். மேலும், முழுமையான கடல் பகுதியில் இது அமைந்துள்ளது. பெரிய சரக்குக் கப்பல்களுக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான அணுகலை வழங்குகிறது. சபாஹர் இந்தியாவிற்கு ராஜதந்திரரீதியாக  முக்கியத்துவம் வாய்ந்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடனான வர்த்தகத்திற்கு இந்தியா தரைவழி அணுகலை அனுமதிக்காத பாகிஸ்தானைத் தவிர்த்து, இந்தியாவிற்கு மாற்றுப் பாதையை சபாஹர் துறைமுகம் வழங்குகிறது. 


8. எதிர்ப்பு அச்சு: இது ஈரானிய ஆதரவு குழுக்களின் கூட்டமைப்பாகும். ஹெஸ்பொல்லா, ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (Palestinian Islamic Jihad (PIJ)) மற்றும் ஹவுத்திகள் ஆகியவை கூட்டணியில் உள்ள சில முக்கிய குழுக்களாகும். 'எதிர்ப்பு அச்சின் வேர்கள் 1979-ஆம் ஆண்டு ஈரானிய புரட்சிக்கு பிறகு தொடங்கின. இது தீவிர ஷியா முஸ்லிம் மதகுருமார்கள் ஆட்சிக்கு வர வழி வகுத்தது. அமெரிக்க நட்பு நாடான சவுதி அரேபியா போன்ற பெரும்பாலான சக்திகள் சன்னி முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாக இருக்கும் ஒரு பிராந்தியத்தில் அதன் அரசியல் மற்றும் இராணுவ செல்வாக்கை விரிவுபடுத்த, ஈரானின் புதிய ஆட்சி அரசு சாராத நபர்களை ஆதரிக்கத் தொடங்கியது.


9. ஹெஸ்பொல்லா: ஈரானின் மாற்றுப்படைக் குழு ஹெஸ்பொல்லா அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்தி கமெனியை கொன்றதை கண்டித்து வடக்கு இஸ்ரேல் மீது பல்வேறு ஏவுகணைகளை ஏவியது. ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமெனெய் கொல்லப்பட்டதற்குப் பதிலாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்த பயங்கரவாதக் குழு தெரிவித்தது. இருப்பினும், லெபனான் ஹெஸ்பொல்லாவின் நடவடிக்கையை கண்டித்து வருகிறது. முக்கியமாக, ஹெஸ்பொல்லா என்பதன் பொருள் “கடவுளின் கட்சி” (Party of God) ஆகும். இது 1982-ஆம் ஆண்டு ஈரானின் புரட்சிப்பாதாளர்கள் அமைத்த ஷியாக்கள் ராணுவ அமைப்பு ஆகும். அந்த வருடம் லெபனானை கைப்பற்றிய இஸ்ரேல் படைகளுடன் போராட அமைக்கப்பட்டது.


குழு

Description

ஹமாஸ்

ஹமாஸ், ஒரு சன்னி இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவாகும். 2007-ஆம் ஆண்டிலிருந்து காசா பகுதியை நிர்வகித்து வருகிறது. இது சயோனிசத்தை எதிர்க்கிறது. 

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (PIJ)


பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (Palestine Islamic Jihad (PIJ)) மற்றொரு சன்னி இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவாகும். இந்த குழுவின் முக்கிய நோக்கம் பாலஸ்தீனத்தில் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவவதாகும்.


10. ஹவுத்திகள்: இது ஒரு சய்தி ஷியா போராளிக் குழுவாகும். இது பத்தாண்டுகளுக்கு மேலாக ஏமனில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் தங்களது இருப்பைக் கொண்டுள்ளனர்.


ஆபரேஷன் ‘கசாப் லில் ஹக்’ என்றால் (Ghazab Lil Haq) என்றால்  என்ன?


ஈரானுடனான அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ள நிலையில், நமது அண்டை நாடுகளில் மற்றொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அதைப் புரிந்துகொள்வது முக்கியமானது.


1. வியாழக்கிழமை இரவு (பிப்ரவரி 26) பாகிஸ்தான் தனது பல எல்லைப் பகுதிகளில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கையைத் தொடங்கியது. இதுவரை 133 தாலிபான் போராளிகளைக் பாகிஸ்தான் கொன்றதாகக் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


2. வியாழக்கிழமை மாலை கைபர் பக்துன்க்வாவின் சித்ரல், கைபர், மொஹ்மண்ட், குர்ரம் மற்றும் பஜௌர் செக்டார்களில் உள்ள எல்லையில் உள்ள பல இடங்களில் பாகிஸ்தான் "தூண்டப்படாத துப்பாக்கிச்சூடு" (unprovoked firing) என்று அழைப்பதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆபரேஷன் கசாப் லில் ஹக் (Operation Ghazab Lil Haq) என்ற ஒரு இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. இது வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு இராணுவத் தாக்குதல் ஆகும்.


3. டான் பத்திரிகையின் படி, 'கசாப் லில் ஹக்' என்ற அரபு சொல் ஆங்கிலத்தில் "சரியான கோபம்" (Righteous Fury) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக உள்ளது. ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சிக்கு எதிராக அல்ல.


4.குறிப்பிடத்தக்க வகையில், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள், எல்லை தாண்டிய விமானத் தாக்குதல்களையும் அதற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளையும் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய துரந்த் எல்லை வழியாக தீவிரமடைந்தன.


Original article : US-Israel war on Iran -Roshni Yadav

Share: