சமீபத்தில், தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)), இணைய குற்றங்கள், நிதி மோசடி மற்றும் தொலைத்தொடர்பு வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் என்ன, நாட்டில் அதிகரித்துவரும் இணைய மோசடி நிகழ்வுகள் குறித்து சமீபத்திய தரவுகள் எதை வெளிப்படுத்துகின்றன?
தற்போதைய செய்தி?
தொலைபேசி தயாரிப்பாளர்கள் அரசுக்குச் சொந்தமான சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை தொலைத்தொடர்புத் துறை (DoT) புதன்கிழமை ரத்து செய்தது. 2025ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு இணைய பாதுகாப்பு திருத்த விதிகளின் (Telecommunication Cybersecurity Amendment Rules) கீழ் வெளியிடப்பட்ட நவம்பர் 28 ரகசிய உத்தரவு, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் உட்பட இந்தியாவில் உள்ள திறன்பேசி நிறுவனங்களுக்கு, அரசு உருவாக்கிய சஞ்சார் சாத்தி எனப்படும் இணைய பாதுகாப்பு செயலியை முன்கூட்டியே நிறுவுமாறு உத்தரவிட்டது. இது டிஜிட்டல் உரிமைக் குழுக்களின் சாத்தியமான கண்காணிப்பு குறித்து மட்டுமல்லாமல், பெரிய மொபைல் போன் தயாரிப்பாளர்களின் வணிகங்களில் அதன் தாக்கம் குறித்தும் கவலைகளை அதிகரிக்க செய்தது.
எதிர்ப்பைத் தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த செயலி "விருப்பத்தேர்வு" என்றும், பயனர்கள் அதை நீக்கலாம் என்றும், இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.
சஞ்சார் சாத்தி செயலி பற்றி
ஜனவரியில் தொடங்கப்பட்ட சஞ்சார் சாத்தி செயலி, சந்தேகத்திற்குரிய மோசடி தொடர்பு மற்றும் தொலைந்து போன/திருடப்பட்ட மொபைல் போன்களைப் பற்றி புகாரளிக்கவும், வங்கிகள்/நிதி நிறுவனங்களின் நம்பகமான தொடர்பு விவரங்களைச் சரிபார்க்கவும் பயனர்களை அனுமதிக்கிறது.
செயலி பின்வரும் சேவைகளைச் செய்கிறது:
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளை சர்வதேச மொபைல் கருவி அடையாளங்களின் (International Mobile Equipment Identity (IMEI)) அடிப்படையில் கண்காணித்துத் தடுக்க அனுமதிக்கிறது.
தொலைபேசிகளின் IMEI அடிப்படையில், இந்தியாவில் எங்கும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளைக் கண்காணித்துத் தடுக்க அனுமதிக்கிறது.
தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களைத் தடுக்கும் விருப்பத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.
திருடப்பட்ட அல்லது தொலைந்து போன சாதனங்களைக் கண்டுபிடிப்பதில் காவல் அதிகாரிகளுக்கு உதவ முடியும். இது கள்ளச் சந்தையில் போலி தொலைபேசிகள் (counterfeit phones) நுழைவதைத் தடுக்கக்கூடும்.
சாக்சு (Chakshu) விருப்பத்தேர்வு பயனர்கள் சந்தேகிக்கப்படும் மோசடி தகவல்தொடர்புகளை அழைப்புகள், குறுஞ்செய்தி அல்லது வாட்சாப் போன்ற தளங்கள் வழியாகப் புகாரளிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், இணைய குற்றங்களைப் புகாரளிக்க சாக்சு-வைப் பயன்படுத்த முடியாது என்று எச்சரிக்கிறது.
இன்றைய கட்டுரையில், நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடி வழக்குகளைத் தீர்க்க அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. சந்தாதாரர் அடையாள தொகுதி (Subscriber Identification Module (SIM)) பிணைப்பு விதி: சமீபத்தில், பயன்பாட்டிற்கு பதிவுசெய்ய பயன்படுத்தப்படும் சந்தாதாரர் அடையாள தொகுதி இல்லாமல் பயனர்கள் தங்கள் சேவைகளை அணுகுவதைத் தடுக்க இணையவழி செய்தித் தளங்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் டிஜிட்டல் மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழி இந்த உத்தரவு என்று துறை கூறியுள்ளது.
இந்த உத்தரவுகள் வாட்ஸாப், டெலிகிறாம், சிக்னல், அரட்டை, ஸ்னாப்சாட், ஷேர்சாட், ஜியோசாட் மற்றும் ஜோஷ் போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த தளங்கள் இப்போது 90 நாட்களுக்குள், அவற்றின் சேவைகள் தங்களுடன் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் சந்தாதாரர் அடையாள தொகுதியுடன் "தொடர்ந்து" இணைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சாதனத்தில் சந்தாதாரர் அடையாள தொகுதி இல்லையென்றால் அவர்கள் அதை பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. தொழில்நுட்ப ரீதியாக, இது சிம் சந்தாதாரர் அடையாள தொகுதி (Subscriber Identification Module (SIM)) பிணைப்பு விதி என்று அழைக்கப்படுகிறது. WhatsApp வலை போன்ற இணைக்கப்பட்ட சேவைகள் குறைந்தது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் தானாகவே வெளியேற வேண்டும்.
2. மொபைல் எண் சரிபார்ப்பு (Mobile Number Validation (MNV)) தளம்: தொலைத்தொடர்புத் துறை, தொலைத்தொடர்பு இணைய பாதுகாப்பைப் புதுப்பித்துள்ளது. தொலைத்தொடர்பு இணைய பாதுகாப்பு (Telecommunication Cyber Security (TCS)) திருத்த விதிகள், 2024 மூலம், மொபைல் எண் சரிபார்ப்பு (MNV) தளத்தை முறைப்படுத்தியது. இது அடையாள மோசடி மற்றும் நிதி மற்றும் டிஜிட்டல் சேவைகளில் "சட்டவிரோதமான ஆள்மாறாட்டக் கணக்குகளின்" (Mule accounts) பெருக்கத்தை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு மொபைல் எண் உண்மையிலேயே கொடுக்கப்பட்ட சேவையின் பயனருக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்த சேவை வழங்குநர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான, பரவலாக்கப்பட்ட மற்றும் தனியுரிமை உணர்வுள்ள வழிமுறையை வழங்குகிறது.
3. மறுவிற்பனை சாதனங்களில் IMEI-ஐ கட்டாயமாக சரிபார்ப்பு செய்தல்: மறுவிற்பனை அல்லது புதுப்பிக்கப்பட்ட சாதனங்களில் கையாளும் நிறுவனங்கள், மறுவிற்பனை செய்வதற்குமுன், ஒவ்வொரு சாதனத்தின் சர்வதேச மொபைல் உபகரண அடையாள (International Mobile Equipment Identity (IMEI)) எண்ணையும் கருப்புப் பட்டியலில் உள்ள IMEI-களின் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தின் மூலம் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று திருத்த விதிகள் கோருகின்றன. இது வாங்குபவர்களை கவனக்குறைவாக சட்டவிரோத அல்லது சமரசம் செய்யப்பட்ட சாதனங்களை வாங்குவதிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் திருடப்பட்ட மொபைல் உபகரணங்களைக் கண்காணிப்பதில் சட்ட அமலாக்கத்தை ஆதரிக்கிறது.
4. தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனம் (Telecom Identifier User Entity (TIUE)): தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனங்கள் (TIUEs) என்ற புதிய இணக்கப் பிரிவை தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) சேர்த்துள்ளது. இதில் மொபைல் எண்கள், IP முகவரிகள் மற்றும் IMEI எண் போன்ற தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளை நம்பியிருக்கும் நிறுவனங்கள் அங்கீகாரத்திற்காகவோ அல்லது வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், மின்வணிகத் தளங்கள் போன்ற சேவைகளை வழங்குவதற்காகவோ அடங்கும். இணைய மோசடிகளைச் சமாளிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, தொலைத்தொடர்பு-அடையாளங்காட்டி தரவை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ள தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனம் அவர்களை கட்டாயப்படுத்துகிறது.
5. இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)): 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம், நாட்டில் இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும், இணையக் குற்றங்களுக்கு எதிராகப் போராட ஒட்டுமொத்த பாதுகாப்பு எந்திரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2024-ல், நான்கு இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மைய தளங்கள் —இணைய மோசடி குறைப்பு மையம் (Cyber Fraud Mitigation Centre (CFMC)), ‘Samanvaya’ தளம், ஒரு இணைய கமாண்டோஸ் திட்டமும் சந்தேகப் பதிவேடும் (Suspect Registry) தொடங்கப்பட்டன. இது இணைய குற்றங்களை ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் கையாள சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.
6. வங்கிகளுக்கான ‘bank.in’ டொமைன்: அதிகரித்து வரும் டிஜிட்டல் கட்டண மோசடியை எதிர்த்துப் போராட, இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரியில் இந்திய வங்கிகளுக்காக ‘bank.in’ என்ற சிறப்பு இணைய டொமைனை அறிமுகப்படுத்தியது. இணைய அச்சுறுத்தல்களைக் குறைப்பதும், இந்தியாவின் டிஜிட்டல் வங்கியில் நம்பிக்கையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
7. புதிய e-Zero FOR: இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மின்னணு பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (Electronic Zero First Information Report) 1930 என்ற உதவி எண் அல்லது தேசிய இணையக் குற்ற அறிக்கையிடல் தளம் (National Cybercrime Reporting Portal (NCRP)) பதிவு செய்யப்படும் ரூ.10 லட்சத்திற்கு மேல் மோசடி மதிப்புள்ள இணைய நிதி குற்ற புகார்களை தானாகவே முதல் தகவல் அறிக்கைகளாக மாற்றும் முயற்சி இது.
டிஜிட்டல் இந்தியா திட்டம்மற்றும் பிற முயற்சிகள் தொடங்கப்பட்டதன் மூலம், 86%-க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் இப்போது இணைய இணைப்பை பெற்றுள்ளன. ஆனால், ஆன்லைனில் அதிகமான மக்கள் இருப்பதால், டிஜிட்டல் மோசடி மற்றும் இணைய குற்றங்களும் அதிகரித்துள்ளன. இந்தியாவில் அதிகரித்துவரும் இந்த இணைய குற்றங்கள் குறித்த சமீபத்திய எண்கள் இங்கே.
நாட்டில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள்
1. வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (National Crime Records Bureau (NCRB)) 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் இணைய குற்றங்கள் 31.2% அதிகரித்துள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் மோசடி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றால் ஏற்படுகின்றன என்று கூறியுள்ளது.
2. ‘இந்தியாவில் குற்றம்’ என்ற அறிக்கையின்படி, இணைய குற்றப் பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2022-ல் பதிவு செய்யப்பட்ட 65,893 வழக்குகளிலிருந்து 2023-ல் 86,420-ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பிரிவின் கீழ் குற்ற விகிதம் 2022-ல் 4.8%-லிருந்து 2023-ல் 6.2%-ஆக அதிகரித்துள்ளது.
3. உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRP) தொகுத்த தரவுகளின்படி, இந்தியாவில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி ரூ.33,165 கோடி மோசடி செய்துள்ளனர். இதில் 2024ஆம் ஆண்டில் ரூ.22,812 கோடியும் அடங்கும்.
4. 2021ஆம் ஆண்டில் ரூ.551 கோடியும், 2022ஆம் ஆண்டில் ரூ.2,306 கோடியும், 2023ஆம் ஆண்டில் ரூ.7,496 கோடியும் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றியுள்ளதாக தரவு காட்டுகிறது. 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு நகரங்கள் இணைய குற்றங்களின் முக்கியப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
5. பிப்ரவரி 2025-ல் காஸ்பெர்ஸ்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூன்று இணைய பயனர்களில் ஒருவர் கடந்த ஆண்டு ஆன்லைன் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகக் கண்டறியப்பட்டது. ஜனவரி மற்றும் டிசம்பர் 2024-க்கு இடையில், இந்தியாவில் உள்ள பயனர்களின் கணினிகளில் 4,43,72, 823 இணையம் வழியாக இணைய அச்சுறுத்தல்களை நிறுவனம் கண்டறிந்துள்ளது.
Original link:
Sanchar Saathi, SIM-Binding and India’s Cybersecurity push.