ஒரு தொன்மையான மலைத்தொடரை எவ்வாறு வரையறுப்பது? ஒரு நுட்பமான சமநிலையைப் பாதுகாப்பதன் மூலம். — அனூப் சிங்

வரைபடத்தை புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நினைவில் கொள்ள இதுவும் ஒரு நல்ல நேரமாகும். ஏனெனில், ஆரவல்லி மலைத்தொடர் 2011-ஆம் ஆண்டு, திறமையான இயக்குநர் ஜெனரலான மறைந்த ஆர்.டி. ஜகாட்டி தலைமையில் வன ஆய்வு நிறுவனம் (Forest Survey of India (FSI)) மூலம் நுணுக்கமாக வரைபடமாக்கப்பட்டது.


ஒரு தொன்மையான மலைத்தொடரை வரையறுக்கும், மேலும் சிக்கலானதாகத் தோன்றும் ஒரு பணியை ஒரு புதிய நிபுணர் குழு மேற்கொள்ளவிருக்கும் நிலையில், அப்போதைய இந்திய வன ஆய்வுத் துறையின் (Forest Survey of India (FSI)) தலைமை இயக்குநராக (DG) இருந்தபோது, ஆரவல்லிக்கு 100 மீட்டர் உயரத்தை அடிப்படையாகக் கொண்ட வரையறையை நான் ஏன் எதிர்த்தேன் என்பதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

வரைபடத்தை புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நினைவில் கொள்ள இதுவும் ஒரு நல்ல நேரமாகும். ஏனெனில், மிகவும் திறமையான தலைமை இயக்குநர், மறைந்த ஆர். டி. ஜகாதி அவர்களின்கீழ், இந்திய வன ஆய்வுத் துறையால் (FSI) ஆரவல்லி மலைகள் 2011-ஆம் ஆண்டிலேயே துல்லியமாக வரைபடமாக்கப்பட்டன.


பிப்ரவரி 19, 2010 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ராஜஸ்தானின் ஆரவல்லி மலைகளில் உள்ள சுரங்கப் பகுதிகளை வரைபடமாக்கும் பணியை, உச்சநீதிமன்றத்தின் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு வன ஆய்வுத் துறைக்கு வழங்கியது.


பின்னர், அராவள்ளி மலைத்தொடரின் வரைபடத்தை பிற வரைபட அமைப்புகளிடமிருந்து பெற முடியாததால், இந்திய வன ஆய்வுத்துறை (FSI) தானாகவே கடினமான வரைபட பணியை மேற்கொண்டது. அதன் பிறகு, 2011 ஏப்ரல் 13 அன்று, ராஜஸ்தானின் 15 மாவட்டங்களுக்கான ஆரவல்லி மலைத்தொடரின் வரையறுக்கப்பட்ட வரைபடத்தை சமர்ப்பித்தது.


அராவலி குன்றுகள் மற்றும் மலைத்தொடர்களுக்கு ஒரு சீரான வரையறையைக் கண்டறியும் வகையில், 2024 மே 9 அன்று உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, செயலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டபோது, ​​இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது.


குழு தனது அறிக்கையை 2025 அக்டோபர் 3 அன்று தனது பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பித்தது. இந்திய வன ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநராக, நான் அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தேன். கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக, ஒரு குறிப்பு மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரத்தை அடிப்படையாகக் கொண்ட வரையறையை நான் எதிர்த்திருந்தேன். 2025 நவம்பர் 20 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, இந்தப் பத்திரிகையின் பல அறிக்கைகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டிசம்பர் 29 அன்று, உச்சநீதிமன்றம் நவம்பர் மாதத் தீர்ப்புக்குத் தடை விதித்து, இந்தப் பிரச்சனையை ஆராய ஒரு புதிய குழுவை அமைக்குமாறு உத்தரவிட்டது.


இந்தக் குழு அமைக்கும் செயல்முறை நடைபெற்று கொண்டிருக்கும்போது, சில முக்கிய அம்சங்களை குறிப்பிடுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.


ஆரவல்லி மலைத்தொடரின் வரையறை, பரப்பு, பரவல், எல்லை நிர்ணயம் மற்றும் உயர நிலைப்பகுதிகளின் பிரிவுகள் குறித்து சமீபத்திய ஆய்வு, நான் இந்திய வன ஆய்வுத்துறையின் (FSI) இயக்குனராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. நான் நெதர்லாந்தின் ITC-ல் தொலை உணர்தல் (Remote Sensing) மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (Geographic information system (GIS))  பற்றிப் படித்தேன். மேலும், அமெரிக்காவின் ESRI நிறுவனத்தில் ஆறு மாதங்கள் பணியாற்றினேன். இந்த தொழில்நுட்பத்தில் எனக்கு ஒரு அளவான புரிதல் உள்ளது என்று நான் கூறுகிறேன்.


தலைமை இயக்குநராகப் பணியாற்றியபோது, ஆரவல்லியிலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள மலைகளை விலக்குவதால் ஏற்படும் தாக்கத்தைக் கண்டறிய, ராஜஸ்தானின் 15 மாவட்டங்களுக்கான தரவுகளை நான் பகுப்பாய்வு செய்திருந்தேன். 2011-ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அரசு, ஆரவல்லி மலைகள் அந்த மாவட்டங்களில் மட்டுமே காணப்படுவதாகக் கூறியிருந்ததால், 15 மாவட்டங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.


இந்த 15 மாவட்டங்களுக்கான டிஜிட்டல் உயர வரைபட (contour) தரவுகள் வன ஆய்வு நிறுவனத்திடம் இருந்தன. இந்த தரவுகள் 2011-ஆம் ஆண்டு 1:50,000 அளவிலான Survey of India நிலவரைபடங்களிலிருந்து டிஜிட்டல் வடிவில் உருவாக்கப்பட்டன. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, 2011-ல் 3-டிகிரி சரிவு (slope) அளவுகோலை பயன்படுத்தி அராவள்ளி மலைத்தொடரின் எல்லையை உச்சநீதிமன்றத்திற்கு இந்திய வன ஆய்வுத்துறை முன்மொழிந்தது. மேலும், 2025-ஆம் ஆண்டு இந்திய வன ஆய்வுத் துறையின் (Forest Survey of India (FSI)) மேற்கொண்ட பகுப்பாய்வு முடிவுகள் கடந்த நவம்பரில் இந்த செய்தித்தாளில் வெளியிடப்பட்டன. அதை  நாம் அட்டவணை 1-ன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இந்த ஆய்வின் துல்லியம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், முன்னாள் தலைமை இயக்குனர் இந்திய வன ஆய்வுத் துறையில் பணியாற்றிய ஜகாதியின் பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய நில அளவைத் துறை தாள்களை அடிப்படையாகக் கொண்ட தரவுத்தொகுப்பை மாற்றாமல், முன்மொழியப்பட்ட குழுவால் இந்த ஆய்வு மீண்டும் செய்யப்பட வேண்டும்.


செப்டம்பர் 22, 2025 தேதியிட்ட இந்திய வன ஆய்வுத் துறையின் அறிக்கையின்படி, 62 மாவட்டங்கள் ஆரவல்லியில் சேர்க்கப்படுவதற்குத் தகுதி பெறுகின்றன. இதற்கு மாறாக, சுற்றுச்சூழல் செயலாளரின் குழு அக்டோபர் 3, 2025 அன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 37 மாவட்டங்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளது. கோட்டைகளுக்குப் புகழ்பெற்ற சவாய் மாதோபூர் மற்றும் சித்தூர்கர் போன்ற முக்கிய மாவட்டங்கள், ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்திலும், கலாச்சார அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரிய தளங்களிலும் "ராஜஸ்தானின் மலைக்கோட்டைகள்" (Hill Forts of Rajasthan) என சேர்க்கப்பட்டுள்ளதால், செயலாளரின் குழுவால் ஆரவல்லி மாவட்டங்களின் பட்டியலிலிருந்தும் அவை விலக்கப்பட்டன.


சேர்க்கப்பட வேண்டிய மாவட்டங்களும், அவற்றைச் சேர்ப்பதற்கான காரணங்களும் இந்திய வன ஆய்வுத் துறையின் அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அட்டவணை காட்டுவது போல, இதில் ஏற்பட்டுள்ள இடைவெளி வெளிப்படையானதாக உள்ளது. அதை நாம் அட்டவணை 2-ன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இதைச் சரிசெய்யாவிட்டால், பல மாவட்டங்களில் மலைகள் குரல் கொடுக்கக்கூட வாய்ப்பின்றி அழிக்கப்பட்டு விடும் நிலைக்கு ஆளாகும்.


சுற்றுச்சூழல் அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், ஒன்றிய நிலத்தடி நீர் வாரியம், இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) போன்ற பல்வேறு அரசு முகமைகள், குறிப்பிட்ட சில மாவட்டங்களை 'ஆரவல்லி'  மண்டலத்தின்கீழ் ஏன் சேர்த்து வருகின்றன என்பதற்கான காரணங்களை அறிந்துகொள்ள, இந்தப் புதிய குழுவானது இந்திய வன ஆய்வுத் துறையின் செப்டம்பர் 2025-ஆம் ஆண்டு  அறிக்கையையும் ஆய்வு செய்ய வேண்டும்.


புதிய குழு, முன்பு இந்திய வன ஆய்வுத் துறை (FSI) பயன்படுத்திய 3-டிகிரி சரிவு அளவுகோலின் நம்பகத்தன்மையையும் மீண்டும் பரிசீலிக்கலாம். இது காலத்தால் சோதிக்கப்பட்ட முறையாகும். ஆரவல்லிப் பகுதியில் மலைகளை மிகவும் துல்லியமாக அடையாளம் காண இது உதவியாக இருக்கும்.


ராஜஸ்தானின் 8 சதவீதம் மட்டுமே காடுகளாலும் மரங்களாலும் சூழப்பட்டுள்ளது  என்று 2023-ஆம் ஆண்டு இந்திய வன அறிக்கை (India State of Forest Report (ISFR)) தெரிவிதுள்ளது. இதில் பெரும்பாலான பகுதி ஆரவல்லி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த நுட்பமான சமநிலையை குலைக்காமல் இருக்க ஆரவல்லி மலைப்பகுதியின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.


சிங் என்பவர் இந்திய வன ஆய்வு மையத்தின் (FSI) முன்னாள் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார்.


Original Link: How to define an ancient hill range? By protecting a delicate balance?.


Share: