முக்கிய அம்சங்கள் :
2025-ம் ஆண்டில், இந்தியா 44 ஜிகாவாட்-க்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் சேர்க்கப்படுவதால், இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy (RE)) திறன் அளவு 262 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. தற்போது, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 51%-க்கும் அதிகமான பங்கை புதுப்பிக்கத்தக்க ஆற்றலே கொண்டுள்ளது.
ஆனால், வளர்ந்து வரும் இந்த பசுமை ஆற்றலை மின் கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பது கடினமாக உள்ளது. இந்தப் பிரச்சினை குறித்துப் பேசிய மத்திய மின்சார ஆணையத்தின் (Central Electricity Authority (CEA)) தலைவர் கன்ஷியாம் பிரசாத், அனல்மின் நிலையங்கள் (thermal power plants) அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இயங்குவதை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் தற்போது முன்மொழியப்படுவதாகக் கூறினார்.
இருப்பினும், இத்துறையைச் சார்ந்த தொழில்துறை வல்லுநர்கள் இதை முழுமையாக ஏற்கவில்லை. மின் நிலையங்களை குறைந்த மின்சுமையில் (lower loads) இயக்குவது, அவற்றில் உள்ள கொதிகலன்கள் (boilers) மற்றும் விசையாழிகளைப் (turbines) பாதிக்கக்கூடும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். மேலும், இது இயந்திரங்களின் தேய்மானத்தையும் அதிகரிக்கக்கூடும். காலப்போக்கில், இது அந்த மின்உற்பத்தி நிலையங்களின் ஆயுட்காலத்தையே குறைக்கக்கூடும். இந்த அபாயங்களை நிதிசார் ஊக்கத்தொகைகள் மட்டும் முழுமையாகச் சமாளிக்க முடியாது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. இது குறிப்பாக நாட்டில் உள்ள பழமையான அனல் மின் நிலையங்களைப் பொறுத்தவரை, இந்தக் கவலை மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
அதிகபட்ச சூரிய ஒளி நேரங்களில், நிலக்கரி மின் நிலையங்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரங்களில்தான், குறிப்பாக சூரியன் மறைந்த பிறகு சூரிய மின் உற்பத்தி விரைவாக அதிகரிக்கும் என்றும், சூரியன் மறைந்த பிறகு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் உள்ள பல நிலக்கரி மின் நிலையங்களுக்கு இந்த செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை இல்லை.
எரிசக்தி சிந்தனைக் குழுவான எம்பர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, சூரிய மின் உற்பத்தியில் ஏற்படும் இழப்பின் காரணமாக, 2025 மே முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 2.3 டெராவாட்-மணி (TWh) சூரியசக்தி மின் உற்பத்தியை இழந்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 14 லட்சம் வீடுகளுக்கு ஒரு வருடத்திற்கு மின்சாரம் வழங்கப் போதுமானதாகும்.
இதன் நிதித் தாக்கமும் குறிப்பிடத்தக்கது. இந்த மின் உற்பத்திக் குறைப்பின் விளைவாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5.75 பில்லியன் முதல் ரூ. 6.9 பில்லியன் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று எம்பர் அறிக்கை தெரிவித்தது. குறிப்பாக, அவசரகால சூழ்நிலைகளின்போது மின் உற்பத்தி குறைக்கப்படும்போது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
இது தவிர, கடந்த ஆண்டு மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், அதிகரித்து வரும் பசுமை மின் உற்பத்தியானது நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டு வரம்புகளுடன் மோதியதால், சூரிய ஒளி உச்சத்தில் இருந்த நேரங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பெருமளவில் குறைக்கப்பட்ட சிக்கலை சமீபத்திய மத்திய மின்சார ஆணைய (CEA) அறிக்கை ஒரு முக்கியப் பிரச்சினையை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்தியாவின் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களில் கணிசமான பகுதி, 55% குறைந்தபட்ச தொழில்நுட்பச் சுமைக்கு (minimum technical load (MTL)) கீழே செயல்பட இயலாது என அந்த அறிக்கை தெரிவித்தது. குறைந்தபட்ச தொழில்நுட்பச் சுமை (MTL) என்பது, ஒரு அனல் மின் நிலையம் நிறுத்தப்படாமல் பாதுகாப்பாக இயங்கக்கூடிய மிகக் குறைந்த நிலையான உற்பத்தி அளவாகும்.
தற்போது தெரிந்து கொள்ளும் நிலை :
இந்தியா, மின் உற்பத்தி நிலையங்கள், விநியோகப் பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும் மொத்த நுகர்வோரை இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய மின்கட்டமைப்பை இயக்குகிறது. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையில் சமநிலையின்மை ஏற்பட்டால், அமைப்பின் நிலை பாதிக்கப்படுகிறது. அமைப்பின் நிலையானது அனுமதிக்கப்பட்ட வரம்பு 49.900 ஹெர்ட்ஸ் – 50.050 ஹெர்ட்ஸ் ஆகும். இருப்பினும், கடந்த ஆண்டு மே மாதத்தில், அமைப்பின் நிலை இந்திய மின்சாரக் கட்டமைப்பு குறியீட்டின் (Indian Electricity Grid Code (IEGC)) இயக்க வரம்பிற்கு மேல் கிட்டத்தட்ட 20% நேரம் இருந்ததாக சமீபத்திய மத்திய மின்சார ஆணைய (CEA) அறிக்கை கூறியது. சூரிய மின் உற்பத்தி நேரங்களில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடித்த உயர் அதிர்வெண் நிலைமைகள், உபரி விநியோகத்தின் அழுத்தத்தைப் பிரதிபலித்தன.
மூன்றாம் நிலை துணை இருப்பு சேவைகளுக்கான (Tertiary Reserve Ancillary Services (TRAS)) விரிவான நடைமுறையின்கீழ், அவசரகால சூழ்நிலைகளின் போது மின் உற்பத்தி குறைக்கப்படும்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்உற்பத்தி நிலையங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. மின்சாரச் சட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஆற்றல் கட்டண விகிதத்தில் அவர்களுக்குப் பணம் செலுத்தப்படுகிறது. இந்த இழப்பீடு மின் அமைப்பு முழுவதும் பகிரப்பட்டு, மின்சாரக் கட்டணங்கள் மூலம் மறைமுகமாக நுகர்வோருக்குக் கடத்தப்படுகிறது. இதன் விளைவாக, உற்பத்தி செய்யப்பட்ட ஆனால் பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு நுகர்வோர் பணம் செலுத்த நேரிடுகிறது.
Original Link: What is the concept of “flexible thermal power generation?