தேர்தலுக்குப் பிந்தைய சூழல்: நான்கு மாநிலங்கள், ஒரு பொருளாதாரச் சவால்.

 மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) வளர்ச்சி விகிதம் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை விட மிக மெதுவாக இருப்பது மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் கவலைக்குரிய அளவில் இருப்பது ஆகியவை, பொருளாதார அமைப்பிற்குள் அதிகரித்து வரும் அழுத்தங்களின் வெளிப்பாடாகும். இந்தத் தேர்தல் முடிவுகள், பொருளாதாரப் பாதையைச் சீர்செய்வதற்கான ஒரு வாய்ப்பாக  கருதப்பட வேண்டும்.


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் தெளிவான முடிவுகள் அசாமில் ஆளுங்கட்சியின் வலிமையான மறுவருகையாக இருந்தாலும் சரி, அல்லது மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் சரி புதிய அரசுகள் தங்கள் மாநிலப் பொருளாதாரங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு அவசரமாகத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் காட்டுகின்றன. இதில் மிகவும் முக்கியப் பணியானது, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதேயாகும். இந்த நான்கு மாநிலங்களில், அசாம் மட்டுமே சிறந்த சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. 2014-15 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அசாம் மாநிலம்  11.4 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தைப் (Compound Annual Growth Rate (CAGR)) பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 10.3 சதவீதம் வளர்ச்சியடைந்தது. அதே, வேளையில் கேரளா (8.6 சதவீதம்) மற்றும் மேற்கு வங்கத்தின் (9.1 சதவீதம்) வளர்ச்சி விகிதங்கள் இரட்டை இலக்கத்தைக்கூட எட்டவில்லை. 2004 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த     வளர்ச்சி விகிதம் 12.3 சதவீதமாக இருந்துள்ளது. அசாம் மாநிலம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு, வேகமாக வளர முடியும் என்பதை இந்த வளர்ச்சி காட்டுகிறது. மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தங்கள் மந்தமான வளர்ச்சியின் காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் பின்னுக்கு செல்லும் நிலையில் உள்ளது.


இந்த நான்கு மாநிலங்களும் கடன் மற்றும் அதிகரித்துவரும் வட்டி செலுத்தும் சுமையாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பொதுவாக, மாநில அரசுகள் கடன் வாங்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், அது போன்ற கடன்கள், சாலைகள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உற்பத்தி சார்ந்த  சொத்துக்களை உருவாக்குவதற்குச் செலவிடப்படுவதே  சிறந்த நடவடிக்கையாகும். இது போன்ற முதலீடுகளே பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதோடு, எதிர்காலத்தில் வரி வருவாய் அதிகரிப்பதன் மூலம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவும் மாநில அரசுகளுக்கு உதவும். ஆனால், வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) பற்றிய தரவுகளைப் பார்க்கும்போது, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் போன்ற  தினசரி நிர்வாகச் செலவுகளைச் சமாளிக்கவே கடன் வாங்கி வருகின்றன என்பது தெரிய வருகிறது. மேலும், மாநில அரசுகள் நிபந்தனையற்ற பணப் பரிமாற்றங்களை அதிகரித்திருப்பதும் சமீபத்திய ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. அசாம் மாநில, மொத்த வருவாய் வருவாயில் 4.3 சதவீதம் என்ற பணப் பரிமாற்றங்களுக்கு செலவிடப்படுகிறது. மேற்கு வங்கம் இதில் அதிகமாக, 10 சதவீதத்தைச் செலவிடும் மாநிலமாக உள்ளது.


கடன் சுமையில் சிக்கிய அரசு நிதியும், மந்தமான பொருளாதார வளர்ச்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். உற்பத்தித்திறனற்ற திட்டங்களுக்கு நிதியளிக்க வேண்டும் என்பதற்காகப் கடன் வாங்கும் அரசுகள் பொருளாதார வளர்ச்சியைத் தீவிரமாகப் பலவீனப்படுத்துகின்றன.  மொத்த  உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product (GDP)) வளர்ச்சியைக் காட்டிலும்  மெதுவாக இருக்கும் தனிநபர் வளர்ச்சி விகிதமும், அச்சுறுத்தும் அளவை எட்டியுள்ள வேலையின்மையும், பொருளாதார அமைப்பிற்குள் அதிகரித்துவரும் அழுத்தங்களின் பிரதிபலிப்புகளாகும். இந்தச் சூழலை, பொருளாதாரப் பாதையைச்  சரி செய்வதற்கான இதை ஒரு வாய்ப்பாக  கருத வேண்டும்.


Orginal article:  Post polls, four states, one economic challenge.

Share: