தேசிய குற்றப் பதிவுப் பணியக தரவுகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள். -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி :


தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (National Crime Records Bureau (NCRB)) 2026, மே 6 அன்று வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 6% குறைந்து, 2023-ஆம் ஆண்டின் 62.41 லட்சம் வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டில் 58.85 லட்சம் வழக்குகளாகப் பதிவாகியுள்ளது. இந்தப் பணியகம், 2024-ஆம் ஆண்டு  ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான குற்றத் தரவுகளை வழங்கியுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. குற்ற விகிதம்: தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (National Crime Records Bureau (NCRB)), ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு பதிவான வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் குற்ற விகிதத்தைக் கணக்கிடுகிறது. இந்தக் காலகட்டத்தில் இது சரிவைக் கண்டது. 2023-ல் 448.3-லிருந்து 2024-ல் 418.9-ஆகக் குறைந்துள்ளது.


2. இணையவழிக் குற்றங்கள்: இந்தக் காலகட்டத்தில் இணையவழிக் குற்றங்கள் ஏறக்குறைய 18% அதிகரித்துள்ளது. இணையவழிக் குற்றங்கள் பிரிவின் கீழ் மொத்தம் 1,01,928 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2023-ல் 86,420 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததை விட 17.9% அதிகமான  அளவாகும். இந்தப் பிரிவின் கீழ் குற்ற விகிதம் 2023-ல் 6.2-லிருந்து 2024-ல் 7.3 ஆக அதிகரித்துள்ளது.


3. பொருளாதாரக் குற்ற வழக்குகள்: இந்தக் காலகட்டத்தில் பொருளாதாரக் குற்றங்கள் 4.6% அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் இந்தப்பிரிவில் 2,04,973 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,14,379 வழக்குகளாக இருந்தது.


4. காணாமல் போன குழந்தைகள் (Missing children): 2024-ஆம் ஆண்டில் 98,375 குழந்தைகள் காணாமல் போனதன் மூலம், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலை தொடர்ந்து வருகிறது. இது 2023-ஆம் ஆண்டில் காணாமல் போன 91,296 குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் 7.8% அதிகமான  அளவாகும். இவர்களில் 75,603 பெண் குழந்தைகளும், 22,768 ஆண் குழந்தைகளும், 4 நான்கு மாற்றுப் பாலினக் குழந்தைகளும் அடங்குவர்.


தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (National Crime Records Bureau (NCRB)) பற்றி


குற்றத் தரவுகளைத் தொகுப்பதற்காக, தேசிய குற்றப் பதிவுப் பணியகம்  1986-ல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் ஆண்டு அறிக்கை, வன்முறைக் குற்றங்கள், சாதி அடிப்படையிலான குற்றங்கள், பொருளாதார மோசடிகள் மற்றும் பலவற்றைப் பற்றிய முக்கியமான தரவுகளை வழங்குகிறது. இந்தத்தரவுகள் கொள்கை உருவாக்கம் மற்றும் சட்ட அமலாக்க முன்னுரிமைகளுக்கு வழிகாட்டுகின்றன.


ஆண்டு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர, இது "மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச குற்றவாளிகள் குறித்த தகவல்களைச் சேகரித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் சமந்தபட்ட மாநிலங்களுக்குப் பரிமாறிக்கொள்ளுதல்" ஆகிய பணிகளிலும் ஈடுபடுகிறது. மேலும், தேசிய குற்றப் பதிவுப் பணியகம் இந்திய மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகளின் கைரேகைப் பதிவுகளுக்கான "தேசியக் காப்பகமாக" (national warehouse) செயல்படுவதுடன், கைரேகைத் தேடல் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளைக் கண்டறியவும் உதவுகிறது.


5. கொலை வழக்குகள்: இந்த ஆண்டில் 27,049 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது முந்தைய ஆண்டைவிட 2.4% என்ற மிகச்சிறிய அளவிலான வீழ்ச்சியைக் காட்டுகிறது. இந்தக்குற்றங்களுக்குப் பின்னால் உள்ள முதன்மையான நோக்கமாக பிரச்சனைகள் உள்ளன. இதைத் தொடர்ந்து தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது விரோதம் மற்றும் ஆதாயம் ஆகியவை மற்ற காரணிகளாக அமைந்திருந்தன.


2024- ஆம் ஆண்டு குற்றப் பதிவுப் பணியகம் :  இந்தியாவின் குற்றத் தரவுகள் பகுப்பாய்வு


சமூகம் மற்றும் அரசியல் — தரவு விளக்கவுரை


2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 58.85 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2023-ஆம் ஆண்டைவிட 6% குறைவான அளவாகும். ஆனால், இணையவழிக் குற்றங்கள், சிறார் குற்றங்கள் மற்றும் காணாமல் போன குழந்தைகளின் புள்ளிவிவரங்கள் மிகவும் சிக்கலான ஒரு கதையைச் சொல்கின்றன.




6. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டைவிட 1.5% குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 4.48 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-ஆம் ஆண்டில் 4.41 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது போன்ற  குற்றங்களுக்கு கணவன் அல்லது உறவினர்களின் கொடுமையே முக்கிய காரணமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து கடத்தல், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற நோக்கத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவையும் காரணங்களாக உள்ளன.


2024-ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்ற விகிதத்தில் தெலங்கானா மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாநிலம் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 128.6 குற்றச் சம்பவங்கள் என்ற விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. இது இந்தியாவிலேயே மிக உயர்ந்த விகிதமாகும். இதற்கு அடுத்தபடியாக, 118.3 என்ற விகிதத்துடன் ஒடிசா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையிலும் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு மொத்தம் 13,396 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெருநகரங்களில் பதிவான இது போன்ற மொத்தக் குற்றச் சம்பவங்களில், கால் பகுதிக்கும் அதிகமானவை டெல்லியில் நிகழ்ந்துள்ளன.


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: நாட்டிலேயே சண்டிகர்  மாநிலத்தில் அதிகமான பாலியல் வன்கொடுமை குற்ற விகிதம் பதிவாகியுள்ளனது. இங்கு ஒரு லட்சம் மக்கள் தொகையில் 16 பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

 

அதிகமான பாலியல் வன்கொடுமை விகிதத்துடன் சண்டிகர் 16.6 என்ற அளவில் இருந்தது. கோவா 13.3 என்ற பாலியல் வன்கொடுமை குற்ற விகிதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2024-ல் 105 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில் ராஜஸ்தான் 12.2 என்ற பாலியல் வன்கொடுமை விகிதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.




7. போக்குவரத்து தொடர்பான விபத்துகள்: இந்தியாவில், சராசரியாக ஒவ்வொரு நாளும் 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அறிக்கையின்படி, 2023-ல் 1.98 லட்சம் பேர் உயிரிழந்ததோடு ஒப்பிடுகையில், 2024-ல் போக்குவரத்து விபத்துகளில் 1.99 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது 0.79 சதவீதம் அதிகமாகும். உயிரிழப்புகளின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்கள் உத்தரப் பிரதேசம் (27,071), தமிழ்நாடு (20,390) மற்றும் மகாராஷ்டிரா (19,475) ஆகும்.


8. பட்டியல் சாதியினர் (Scheduled Castes (SCs)) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes (STs)) மீதான வழக்குகள்: பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களுக்காக மொத்தம் 55,698 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2023-ல் 57,789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததைவிட 3.6% குறைவான அளவாகும். பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களும் 23.1% என்ற அளவில் சரிவைக் காட்டியுள்ளன; 2023-ல் 12,960 வழக்குகள் பதிவான நிலையில், 2024-ல் மொத்தமாக 9,966 வழக்குகள் பதிவாகியுள்ளன.


உத்தரப் பிரதேச மாநிலத்தில்  பட்டியல் சாதியினருக்கு எதிரான வழக்குகள் அதிகபட்சமாக 14,642 பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 7,765 வழக்குகளும், பீகாரில் 7,549 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பழங்குடியினருக்கு எதிரான 9,966 குற்ற வழக்குகளில், மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 3,165 வழக்குகளும், அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 2,282 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 830 வழக்குகளும் பதிவாகியுள்ளன.


9. மனிதக் கடத்தல்: மனிதக் கடத்தலுக்கு எதிரான வழக்குகள் 2.2% குறைந்து, மொத்தம் 2,135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 6,018 பேர் கடத்தப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 2,297 குழந்தைகளும் 3,721 பெரியவர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.


10. சட்டத்துடன் முரண்படும் சிறார்கள்: 2023-ஆம் ஆண்டைவிட சிறார்களுக்கு எதிரான வழக்குகள் 11.2% அதிகரித்துள்ளன. மேலும் 2024-ஆம் ஆண்டில் 34,878 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code), பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் (Special and Local Laws (SLL)) குற்றங்கள் தொடர்பான சட்டத்துடன் தொடர்புடைய சிறார்களாக (சட்டத்துடன் முரண்படும் சிறார்களாக) கைது செய்யப்பட்டவர்களில் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் மொத்தம் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு,   2013-ஆம் ஆண்டு முதல் 18 வயது வரை உள்ளவர்கள் ஆவார். 33,129 பேர் (77.7%) இந்த வயதைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


உச்சநீதிமன்றம் ‘அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்’ என்பதற்கான வரையறையை விரிவுபடுத்தியது.


1. அமிலத் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களில், அமிலத்தை உட்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டு, வெளிப்படையான தழும்புகள் ஏதுமின்றி உள் காயங்களுக்கு உள்ளானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ன் கீழ் அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள் என்று மே 4 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


2. மாற்றுத்திறனாளிகள் சட்டம் (Rights of Persons with Disabilities (RPwD)), அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்களைத் குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த வரையறை சிறிய அளவிலேயே இருந்தது. மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் அட்டவணை 2(zc)-ன் கீழ், “அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்” (acid attack victim) என்பவர், “அமிலம் அல்லது அதுபோன்ற அரித்தழிக்கும் தன்மையுள்ள பொருளை வீசி நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களால் உருக்குலைந்தவர்” (disfigured due to violent assaults by throwing of acid or similar corrosive substance) ஆவார். அமிலம் வலுக்கட்டாயமாக உட்கொள்ளப்பட்டவர்கள் இந்த வரையறைக்குள் வரவில்லை.


3. சிதைக்கப்பட்ட (disfigured) எனும் சொல்லைப் பயன்படுத்துவது, உடலின் வெளிப்புறச் சிதைவு சார்ந்த வரம்பை மட்டுமே குறுகியதாகத் தோன்றுகிறது. இதன் விளைவாக, அமிலம் வீசப்பட்டதால் ஏற்படும் உள் காயங்கள் அல்லது தழும்புகள் சார்ந்த வழக்குகளை இது வரம்பிற்கு வெளியே நிறுத்திவிடுவதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


4. இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் வரம்பிற்குள் வராமல் உள்ளனர். சட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாற்றுத்திறன் சான்றிதழ் என்பது நிதி உதவி, மறுவாழ்வுத் திட்டங்கள், மருத்துவ ஆதரவு போன்றவற்றைப் பெறுவதற்கான ஒரு வழியாகும். மாற்றுத்திறன் என்ற சான்றிதழ் இல்லாமல், பாதிக்கப்பட்டவரால் எதையும்  பெற முடியாது.


Orginal article:  NCRB data: 10 key takeaways you must know. -Khushboo Kumari

Share: