Showing posts with label பசுமைப் புரட்சி. Show all posts
Showing posts with label பசுமைப் புரட்சி. Show all posts

வளர்ந்து வரும் சீனாவும் ஒன்றிணையும் இந்தியா - அமெரிக்காவும் -ராம் மாதவ்

     பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு வேகம் பெற்றுள்ளது. குறிப்பாக சுதந்திரமான இராஜதந்திரத்தின் இந்தியாவின் வலியுறுத்தலில் உள்ள வேறுபாடுகளை தீர்ப்பதே வரும் ஆண்டுகளில் சவாலாக உள்ளது.


இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அண்மையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜோ பைடன் அல்லது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. எப்படியிருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் மோடி உருவாக்கிய நாடுகளின் உறவுகள் தொடரும். ஜவஹர்லால் நேரு மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளை சந்தித்தார்: ஹாரி ட்ரூமன் (Harry Truman), டுவைட் ஐசனோவர் (Dwight Eisenhower) மற்றும் ஜான் எஃப் கென்னடி (John F Kennedy) ஆவார். மோடி தனது பதவிக் காலத்தில், பராக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ.பைடன் ஆகிய மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளை ஏற்கனவே சந்தித்துள்ளார். அவர் மீண்டும் ஜோ.பைடனையோ அல்லது டிரம்பையோ சந்திக்க காத்திருக்கிறார். 


இந்தியா சுதந்திரம் அடைந்த உடனேயே இந்தியாவும் அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின. இருப்பினும், இந்த உறவு பனிப்போர் கால அவநம்பிக்கையையும் இந்தியாவின் அணுசக்தித் திட்டம் மீதான அமெரிக்காவின் அதிருப்தியையும் எதிர்கொண்டது. நேருவின் சுதந்திரமான அணிசேரா கொள்கை (non-alignment) அமெரிக்க நிர்வாகங்களுக்கு சரியாக அமையவில்லை. 1962-ம் ஆண்டு இந்திய-சீனப் போரின் போது அமெரிக்கா உதவியது மற்றும் இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு உதவியது. ஆனால், ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் 1969-74 காலகட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பக்கம் நின்றார். 1974-ல் இந்திரா காந்தியின் அணுகுண்டு சோதனை அமெரிக்கத் தலைமையை கோபப்படுத்தியது. இந்த உறவை சீராக்கிய பெருமை பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு உண்டு. 1998-ம் ஆண்டு இந்தியா அணு ஆயுத சோதனை நடத்திய பிறகு, அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. 


2000-ம் ஆண்டில் கிளிண்டனின் இந்திய வருகையும், வாஜ்பாயின் இராஜதந்திர முயற்சிகளும் நிலைமைகளை தணிக்க உதவியது. இரு தலைவர்களும் இணைந்து வெளியிட்ட தொலைநோக்கு ஆவணம்தான் முதல் பெரிய சாதனையாக இருந்தது. அதில், "நாங்கள் பல மரபுகள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து வருகிறோம், பன்முகத்தன்மையைக் காட்டுவது எங்கள் பலம். பல்வேறு பின்னணிகள் இருந்தாலும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் அமைதி மற்றும் செழுமைக்கு முக்கியமானது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த மதிப்புகள் உலகளாவியவை, கலாச்சாரம் அல்லது பொருளாதார நிலைகளால் வரையறுக்கப்படவில்லை" என்று குறிப்பிடப்பட்டது. அதே ஆண்டில், வாஜ்பாய் ஐ.நா. பொதுச் சபைக்காக நியூயார்க்கிற்குச் சென்று ஆசிய சங்கத்தில் பேசினார். இந்தியாவும் அமெரிக்காவும் "இயற்கை நட்பு நாடுகள்" என்று அவர் கூறியது பிரபலமானது, இது அவர்களின் எதிர்கால உறவுக்கு அடித்தளம் அமைத்தது. 2013-ம் ஆண்டு, அமெரிக்கப் பயணத்தின்போது, ​​பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிபர் ஒபாமாவும், 21-ம் நூற்றாண்டிற்கான அமெரிக்க-இந்திய கூட்டுறவை முக்கியமானதாகக் கூட்டறிக்கையில் குறிப்பிட்டனர்.


பிரதமர் மோடியின் கீழ், இந்த நாடுகளுக்கிடையேயான உறவு வேகம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 8 முறை அமெரிக்கா சென்ற ஒரே இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், மோடியும் பிடனும் அமெரிக்காவையும் இந்தியாவையும் மிக நெருங்கிய பங்காளிகளாகப் பார்க்கிறோம் என்று கூறினார்கள். இரு நாடுகளும், ஜனநாயக நாடுகளாக, 21-ம் நூற்றாண்டில் லட்சியம் மற்றும் நம்பிக்கையுடன் இணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறார்கள். அவர்களின் கூட்டாண்மை கடல் முதல் நட்சத்திரங்கள் வரை (seas to the stars) நீண்டுள்ளது என்றும் மோடி விவரித்தார். 


இரு அரசாங்கங்களும் தங்கள் புதிய பாதைகளைத் தொடங்குவதால், இந்த உறவு சோதிக்கப்படுகிறது. இரு தரப்பிலும் கவலைகள் உள்ளன. "சுதந்திரமான இராஜதந்திரம்" இந்தியாவின் முக்கியத்துவம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களில் சிலருக்கு கவலையளிக்கிறது. இந்தோ-பசிபிக் நேட்டோவைப் (Indo-Pacific NATO) போன்ற ஒரு கடல்சார் கூட்டணி நாடாக குவாடை (Quad) பார்க்க இந்தியா மறுக்கிறது. இந்த நிலைப்பாடு அமெரிக்க தலைமையில் சிலரை சங்கடப்படுத்துகிறது. குவாடின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சாத்தியம் குறித்து இந்தியர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இதற்கிடையில், மறுபக்கம் AUKUS செயல்திட்டத்தில் முன்னெடுப்பதில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறது.


கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் (Quad summit) கலந்து கொள்ள வேண்டாம் என்று ஜோ பைடன் முடிவு செய்தார். மற்றொரு குவாட் உச்சிமாநாட்டிற்காக அவர் இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு வரவில்லை. அமெரிக்க தலைமை வேண்டுமென்றே இந்த ஏற்பாட்டைப் புறக்கணிப்பதாக விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு AUKUS அதிகளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆஸ்திரேலியாவின் சமீபத்திய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை AUKUS பற்றி நிறைய பேசுகிறது ஆனால் குவாட் பற்றி மட்டுமே சுருக்கமாக குறிப்பிடுகிறது. AUKUS வளர்ந்தால், குவாட் நாடுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதை மாற்றலாம்.


இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த செப்டம்பரில் ஐ.நா.வில் பேசியதுடன், நாடு எதிர்கொள்ளும் இதர பிரச்சனைகளை வலியுறுத்தினார். ஐ.நா. சாசனத்தின் அடிப்படையில் (UN charter) மரியாதைக்காக அழைக்கப்பட்ட போதிலும், ஒரு சில நாடுகள் மட்டுமே செயல்திட்டத்தை எவ்வாறு அமைத்து வரையறுக்கின்றன என்பதை அவர் விமர்சித்தார். சிலர் அவரது பேச்சு துணிச்சலானது என்று பாராட்டினர். மற்றவர்கள் அதில் இந்தியாவின் வளர்ந்து வரும் “போராளி”யைக் கண்டனர். ஜெய்சங்கர் மேற்கு நாடுகளுக்கு "விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கு" (rules-based order) தொடர்பாக தெளிவான செய்தியை வழங்கினார். விதிகளை உருவாக்குபவர்கள் அதை பின்பற்றுபவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று எச்சரித்த அவர், விதிகள் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதை வலியுறுத்தினார். அவர்களின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், காலிஸ்தான் பிரச்சினையை அமெரிக்காவும் கனடாவும் கையாண்டதற்காக விமர்சித்தார். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான அவர்களின் பதில்களில் அரசியல் தேவைகள் செல்வாக்கு செலுத்துவதாகக் கூறினார். உண்மையில் நடப்பது கூறப்படுவதிலிருந்து வேறுபட்டால், அதை நாம் தைரியமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். உண்மையான நம்பிக்கை உண்மையான ஒற்றுமையுடன் மட்டுமே இருக்கும் என்ற உலகளாவிய தெற்கின் முன்னோக்கை அவர் வலியுறுத்தினார்.


சீனாவின் எழுச்சி மற்றும் ஒரு புதிய பனிப்போர் போன்ற நிலைமை உட்பட வளர்ந்துவரும் உலகளாவிய சவால்கள், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிக புரிதல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கின்றன. வெவ்வேறு புவிசார் இராஜதந்திர ரீதியான இடங்களில் பகிரப்பட்ட இலட்சியங்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு அவர்களின் உறவின் எதிர்காலப் பாதையை தீர்மானிக்கும்.


Share:

வேளாண்துறைக்கான ஆராய்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் - பகீரத் சௌத்ரிகாட் மாய்

     நலத்திட்டங்களுக்கு பதிலாக வேளாண் ஆராய்ச்சியில் முதலீடுகளை அதிகரிப்பது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முக்கியமாகும்.


பசுமைப் புரட்சிக்குப் பிறகு முதல் முறையாக, இந்தியா உணவு தானிய விநியோகத்தில் குறைவு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறது. முழு தானியக் களஞ்சியங்கள் மற்றும் உணவு தானிய மற்றும் தோட்டக்கலை உற்பத்தியில் அதிக அளவு இருந்தபோதிலும், காலநிலை மாற்றம் கணிக்க முடியாத வானிலையை ஏற்படுத்துகிறது. இந்த வானிலை மாறுபாடு உணவு உற்பத்தி, உணவு கிடைக்கும் தன்மை மற்றும் பணவீக்கத்தை எதிர்மறையாகப் பாதிக்கிறது. இதன் விளைவாக, பலர் அரசாங்கம் வழங்கும் இலவச பொதுவிநியோக குடிமைப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை நம்பியுள்ளனர்.


உணவுப் பாதுகாப்பின்மை குறித்த உரையாடல் ஒரு கடினமான உண்மையாகும். உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் கொள்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. கையிருப்பைக் கட்டுப்படுத்துதல், ஏற்றுமதி வரிகளை விதித்தல், இறக்குமதி சுங்கவரிகளைக் குறைத்தல் மற்றும் அரிசி முதல் சர்க்கரை வரை விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்தல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இந்தக் கொள்கைகள் இந்தியாவின் 140 கோடி மக்களை பாதிக்கின்றன.


இந்தியாவின் வேளாண் வர்த்தக உபரி குறைந்து வருகிறது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையில் சமநிலையற்றத் தன்மை உள்ளது, மேலும் உணவுப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்து வருகிறது. இந்த இறக்குமதிகள் சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகள் முதல் மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் தானியங்கள் போன்ற விலங்கு தீவனங்கள் வரை உள்ளன. 2023ஆம் ஆண்டில், இந்தியா-அமெரிக்க வர்த்தகக் கொள்கை மன்றத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவிலிருந்து அல்பால்ஃபா (alfalfa) வைக்கோலை இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் கால்நடைத் துறைக்கு கால்நடைத் தீவனத்தின் பற்றாக்குறையைக் குறிக்கிறது.


இந்தியாவில், பாமாயில், சோயாபீன் எண்ணெய், பருப்பு, பட்டாணி, கொண்டைக்கடலை, வாஷிங்டன் ஆப்பிள் மற்றும் கலிபோர்னியா பாதாம் ஆகியவற்றை மக்களுக்காக இறக்குமதி செய்வதைத் தவிர, இப்போது கால்நடைகள் மற்றும் எருமைகளுக்கான அல்ஃப்ல்ஃபா வைக்கோலை இறக்குமதி செய்வதற்கான உந்துதல் உள்ளது. கடந்தகால வெற்றிகளால் மறைக்கப்பட்ட விவசாயத்தின் தற்போதைய நிலையை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் விவசாய ஆராய்ச்சி 1960கள் மற்றும் 1970களின் பசுமைப் புரட்சியின் முழக்கங்களில் கவனம் செலுத்துகிறது.


கடந்த 75 ஆண்டுகளில், இந்தியா தனது விளை நிலங்களை 1950-ல் 97.3 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 2023-24-ல் 132.2 மில்லியன் ஹெக்டேராக விரிவுபடுத்தியுள்ளது, இது ஆண்டுக்கு சராசரியாக 0.47% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இதற்கிடையில், உணவு தானிய உற்பத்தி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது, 1950-ல் 50.8 மில்லியன் டன்னிலிருந்து 2023-24-ல் 350 மில்லியன் டன்னாக, ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.85%. அதிக மகசூல் தரும் விதை வகைகள், அதிகரித்த நீர்ப்பாசனம், இயந்திரமயமாக்கல் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சியின் காரணமாக உற்பத்தித்திறனில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி மூலம் வலுவான நிறுவன ஆதரவுடன் விவசாய உற்பத்தியை தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை பசுமைப் புரட்சி எடுத்துக்காட்டுகிறது.


இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் சமீபத்திய ஆய்வுகள் விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் முதலீடுகள் மூலம் கணிசமான வருமானத்தை எடுத்துக்காட்டுகின்றன. செலவழித்த ஒவ்வொரு ரூபாய்க்கும், விவசாய ஆராய்ச்சிக்கு ₹13.85, விரிவாக்க சேவைகள் ₹7.40, கால்நடைத் துறைக்கு ₹20.81 கிடைக்கும். இந்த வருவாய் பொருளாதாரத்தில் மற்ற துறைகளைவிட அதிகமாக உள்ளது. இதேபோல், 2008ஆம் ஆண்டு ரிசர்வ்வங்கி ஆய்வில், விவசாய ஆராய்ச்சியில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு ரூபாய்க்கு ₹13.45 வருமானம் கிடைக்கிறது. விவசாய ஆராய்ச்சி, கல்வி மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வது விவசாய வளர்ச்சியை திறம்பட ஊக்குவிக்கிறது மற்றும் வறுமையைக் குறைக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.


இந்த கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், விவசாய முதலீடுகள் கடந்த இருபது ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் கல்வியைவிட நலன்புரித் திட்டங்களை அதிகளவில் விரும்பியுள்ளன. விவசாய ஆராய்ச்சி மற்றும் நலன்புரி முதலீட்டின் விகிதம் 4:1 லிருந்து 15:1 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையானது, 2013-14ல் ₹21,190 கோடியிலிருந்து 2023-24ல் ₹1,15,532 கோடியாக, சுமார் 450% அதிகரித்து, நலன்புரி முதலீட்டில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் வேளாண் ஆராய்ச்சிக்கான முதலீடுகள் ₹4,881 கோடியிலிருந்து ₹9,504 கோடியாக உயர்ந்துள்ளது, இது 90% அதிகரிப்பைக் குறிக்கிறது.


விவசாய ஆராய்ச்சிக்கான தற்போதைய பட்ஜெட் ஒதுக்கீடு விவசாய நலன் மற்றும் பண உதவிக்கான மொத்த பட்ஜெட்டில் 8% மட்டுமே. இந்த சிறிய அளவிலான வளங்கள் ஒரு பெரிய தேசிய வேளாண் ஆராய்ச்சி முறையை ஆதரிக்கிறது. இந்த அமைப்பில் 103 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும நிறுவனங்கள், 72 மாநில மற்றும் மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் 6,000க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள் உள்ளனர். கூடுதலாக, 731 க்ரிஷி விக்யான் கேந்திராவில் (கேவிகே) பணிபுரியும் 25,000 கல்வியாளர்கள் மற்றும் சுமார் 11,000 விரிவாக்க வல்லுநர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, விவசாய ஆராய்ச்சிக்கான நிதியில் கிட்டத்தட்ட 90% சம்பளத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 10% நிர்வாகச் செலவுகளுக்குச் செல்கிறது, உண்மையான ஆராய்ச்சிக்கு ஒரு சிறிய பகுதியை மட்டுமே விட்டுச்செல்கிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் பல புதிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பு காலாவதியானது மற்றும் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.


கடுமையான  சட்டங்கள்


பூச்சிக்கொல்லிகள், உயிர்-தூண்டுதல்கள் (bio-stimulants) மற்றும் பயோடெக் பண்புகளுக்கான பயன்பாடுகளின் தேக்கத்துடன் இந்தியா சவால்களை எதிர்கொள்கிறது. பாரம்பரிய விவசாய முறைகளில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது, இது பயனளிக்காது. விவசாயத்திற்கு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 மற்றும் உரக் கட்டுப்பாடு ஆணை 1985 ஆகிய இரண்டு கடுமையான சட்டங்களிலிருந்தும் சுதந்திரம் தேவை. இந்தியா தனது அறிவியல் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சட்ட நடைமுறைகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். விவசாய ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் பொதுத்துறை முதலீட்டை அதிகரிப்பது முக்கியமானது.


உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய, உணவு, தீவனம், நார்ச்சத்து மற்றும் எரிபொருள் துறைகளில் இந்தியா திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம். விஞ்ஞானத்தால் உந்தப்பட்ட உணவு தன்னிறைவு மற்றும் விவசாயிகளின் செழிப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, பொதுமக்களுக்கான திட்டங்களுக்கு மேல் 'நலன்புரி அறிவியலை' நோக்கி இந்தியா மாற வேண்டும்.


எழுத்தாளர்கள் ஜோத்பூரில் உள்ள தெற்காசிய பயோடெக்னாலஜி மையத்தில் உள்ளனர்.  

Share: