பசுமை இல்ல வாயு உமிழ்வுக்கான தீவிர (Greenhouse Gases Emissions Intensity (GEI)) இலக்கு விதிகள், 2025 என்ன கூறுகிறது? அவை ஏன் தேவைப்படுகின்றன?, இந்த இலக்குகள் இந்தியாவின் கார்பன் வரவு வர்த்தக சந்தை (carbon credit trading market) மற்றும் நாட்டின் பரந்த காலநிலை இலக்குகளுக்கு எவ்வாறு உதவும்?
பசுமை இல்ல வாயு (greenhouse gas (GHG)) கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான இலக்குகளை நிர்ணயிக்கும் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த இலக்குகள் ஆற்றல் மிகுந்த துறைகள் மற்றும் தொழில்களில் "கட்டுப்பட்ட நிறுவனங்களுக்கு" (obligated entities) பொருந்தும்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஏப்ரல் 16 அன்று வரைவு பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிர (GEI) இலக்கு விதிகள், 2025-ஐ அறிவித்தது. இந்த விதிகள் கார்பன் வரன் வர்த்தகத் திட்டம், 2023 (Carbon Credit Trading Scheme, 2023 (CCTS))-க்கான இணக்கமான வழிமுறையை நிறுவுகின்றன.
கார்பன் வரவுகளை வர்த்தகம் செய்வதற்கான ஒரு கட்டமைப்பை வழங்க CCTS உருவாக்கப்பட்டது. இது ஆற்றல் மிகுந்த தொழில்களில் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுவதையும் 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவின் காலநிலை உறுதிப்பாடுகளை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரைவு விதிகள் (draft Rules) ஆட்சேபனைகள் (objections) மற்றும் பரிந்துரைகளுக்கு (suggestions) திறந்திருக்கும். இது அவற்றின் அறிவிப்பு தேதியிலிருந்து 60 நாள் காலத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
பசுமை இல்ல வாயுக்கள் (GHG) வளிமண்டலத்தில் வெப்பத்தை சிக்க வைக்கும் வாயுக்கள் ஆகும். அவை, பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலையை உயர்த்தும் "பசுமைஇல்ல விளைவுக்கு" (greenhouse effect) பங்களிக்கின்றன.
வளிமண்டலத்தில் மிகுதியாக உள்ள ஐந்து பசுமை இல்ல வாயுக்கள் (Greenhouse Gases(GHG)) நீர் நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகும். மற்ற GHG களில் செயற்கை ஃப்ளோரினேட்டட் வாயுக்கள் (fluorinated gases) அடங்கும். இந்த வாயுக்களில் குளோரோஃப்ளூரோகார்பன்கள் (chlorofluorocarbons (CFCs)) மற்றும் ஹைட்ரோகுளோரோஃப்ளூரோகார்பன்கள் (hydrochlorofluorocarbons (HCFCs)) ஆகியவை அடங்கும்.
பசுமை இல்ல வாயு உமிழ்வின் தீவிரம், அல்லது பசுமை இல்ல வாயு உமிழ்வுக்கான தீவிரம் (Greenhouse Gases Emissions Intensity (GEI)), ஒரு யூனிட் தயாரிப்பு வெளியீட்டிற்கு வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை அளவிடுகிறது. இது சிமென்ட், அலுமினியம் அல்லது காகிதம் போன்ற 1 டன் பொருட்களின் உற்பத்தியில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களைக் குறிக்கிறது.
வரைவு விதிகள் GEI-ஐ "சமமான வெளியீடு அல்லது உற்பத்திக்கு tCO2e-ல் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு தீவிரம்" என்று வரையறுக்கின்றன. tCO2e என்பது டன் கணக்கிலான கார்பன் டை ஆக்சைடு (tonnes of carbon dioxide)-க்கு சமமானதைக் குறிக்கிறது. இது CO2 மட்டுமல்ல, அனைத்து பசுமை இல்ல வாயுக்களின் (GHG) தாக்கத்தையும் அளவிடப் பயன்படுத்தப்படும் நிலையான அலகு ஆகும். இந்த அலகு பூமியை வெப்பமாக்கும் அவற்றின் திறனை அடிப்படையாகக் கொண்டது.
வரைவு விதிகள் 2023-24-க்கான அடிப்படை கார்பன் உமிழ்வை நிறுவுகின்றன. 2025-26 மற்றும் 2026-27-ஆம் ஆண்டுகளுக்கான படிப்படியான குறைப்பு இலக்குகளையும் அவை வரையறுக்கின்றன. இந்த இலக்குகள் இந்தியாவின் கார்பன் வரவு வர்த்தகத் திட்டம், 2023-ஐ (Carbon Credits Trading Scheme) செயல்படுத்துவதற்கான வழிமுறையின் ஒரு பகுதியாகும்.
அதிக ஆற்றல் தேவைப்படும் அலுமினியம், குளோர்-காரம், கூழ் மற்றும் காகிதம் மற்றும் சிமென்ட் தொழில்களுக்கு பசுமை இல்ல வாயு வெளியேற்றக் குறைப்பு இலக்குகள் மற்றும் அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இலக்குகளானது 2025-26-ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டு காலத்திற்கு பொருந்தும். இந்தத் தொழில்கள் முழுவதும் 282 நிறுவனங்கள் அல்லது தொழில்துறை அலகுகளை உள்ளடக்கியது. இவற்றில் 13 அலுமினிய ஆலைகள், 186 சிமென்ட் ஆலைகள், 53 கூழ் மற்றும் காகித ஆலைகள் மற்றும் 30 குளோர்-கார ஆலைகள் (chlor-alkali plants) ஆகியவை அடங்கும்.
இந்த வரைவு விதிகளின் கீழ் இலக்குகள் ஒதுக்கப்பட்டுள்ள பெரிய நிறுவனங்களில் வேதாந்தா, ஹிண்டால்கோ, பாரத் அலுமினியம், JSW சிமென்ட், அல்ட்ராடெக், நால்கோ, JK சிமென்ட், டால்மியா சிமென்ட், ஸ்ரீ சிமென்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் JK பேப்பர் ஆகியவை அடங்கும்.
மேற்கண்ட தொழில்துறைகள் இந்த இலக்குகளுக்கு இணங்குவதற்கான செயல்முறையையும் வரைவு விதிகள் வகுத்துள்ளன. மேலும், அவ்வாறு செய்யத் தவறினால் சில அபராதங்களைக் குறிப்பிடுகின்றன.
இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடைய தொழில் சார்ந்த இலக்குகளை அறிமுகப்படுத்துவது முக்கியம். குறைந்த கார்பன் வளர்ச்சியை நோக்கி தொழில்களை வழிநடத்துவதே இதன் குறிக்கோள் ஆகும். இது பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல் (reducing), அகற்றுதல் (removing) அல்லது தவிர்ப்பதன் (avoiding) மூலம் செய்யப்படும்.
எடுத்துக்காட்டாக, ஒரு சிமென்ட் ஆலை தூய்மையான மற்றும் பசுமையான செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் உமிழ்வைக் குறைக்க முடியும். இது நிலக்கரியை உயிரி எரிபொருளால் மாற்ற முடியும் மற்றும் அதிக ஆற்றல் திறன் கொண்ட சூளைகளைப் (more energy-efficient kilns) பயன்படுத்த முடியும்.
மிக முக்கியமாக, விதிகளின் நோக்கம், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் செய்யப்பட்ட முக்கிய உறுதிப்பாட்டை இந்தியா பூர்த்தி செய்ய உதவுகிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை (ஜிடிபியின் ஒரு யூனிட்டுக்கு பயன்படுத்தப்படும் ஆற்றல் அளவு) 2005-ஆம் ஆண்டைவிட 2030-ஆம் ஆண்டளவில் 45% குறைக்கிறது.
வரைவு விதிகளின் ஒட்டுமொத்த நோக்கம், "காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்காக, பாரம்பரியமாக அதிக உமிழ்வு கொண்ட தொழில்களில் நிலையான, அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதாகும்”.
இவை அனைத்தும் முற்றிலும் புதியவை அல்ல. முதன்முறையாக GHG உமிழ்வுத் தீவிரத்தைக் குறைப்பதற்கான இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், PAT - Perform (செயல்திறன்), Achieve (சாதனை), Trade (வர்த்தகம்) எனப்படும் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் 2012 முதல் இயங்கி வருகிறது.
CCTS ஆனது கார்பன் வரவு சான்றிதழ்களை உருவாக்குவதற்கும், வர்த்தகம் செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்கியது.
கியோட்டோ நெறிமுறையின் (Kyoto Protocol) 17-வது பிரிவின் கீழ், தொழில்மயமான நாடுகள் மற்றும் மாற்றத்தில் உள்ள பொருளாதாரங்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் தேவைப்பட்டன. ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட இலக்குகளை ஒப்புக்கொண்டன. பயன்படுத்தப்படாத உமிழ்வு அலகுகள் (unused emission units) அல்லது அதிகப்படியான திறன் (excess capacity) கொண்ட நாடுகள் அவற்றை விற்கலாம். இந்த உமிழ்வு அலகுகள் தங்கள் இலக்குகளை மீறிய நாடுகளுக்கு விற்க அனுமதிக்கப்பட்டன.
கார்பன்-டை-ஆக்சைடு முக்கிய பசுமை இல்ல வாயுவாக இருப்பதால், இந்த வர்த்தகம் "கார்பன் சந்தையில்" (carbon market) கார்பன் வர்த்தகம் என்று அழைக்கப்படுகிறது.
GEI இலக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், கார்பன் வரவுகளைப் பெறுவதற்கு தொழிற்சாலைகள் என்ன முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதை சரியாக அறிந்து கொள்ளும். இதன் இலக்குகளை அடைய அவர்கள் செயல் திட்டங்களையும் உருவாக்க வேண்டும்.
இந்தியாவின் கார்பன் சந்தையில் வர்த்தகம் செய்யக்கூடிய உமிழ்வுக்கான தீவிரத்தை குறைப்பதற்காக தொழிற்சாலைகளுக்கு கார்பன் வரவுகள் வழங்கப்படும். கார்பன் வர்த்தகத் திட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிய தொழில்கள், அவற்றின் இணக்கப் பற்றாக்குறையைச் சமாளிக்க கடன்களை வாங்க வேண்டும் அல்லது விதிகளின்படி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (Central Pollution Control Board) அபராதம் விதிக்கப்படும்.
கார்பன் வரவுகள் இந்திய கார்பன் சந்தை தளத்தில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி திறன் பணியகம், இந்த தளத்தை மேற்பார்வையிடுகிறது.
கார்பன் உமிழ்வைக் குறைக்க வரவுகளானது தொழில்களுக்கு ஊக்கத்தை அளிக்கின்றன. இது, சுத்தமான தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வளங்களைக் கொண்ட தொழில்கள் லாபம் ஈட்ட வரவுகளைப் பயன்படுத்தலாம். குறைவான வளங்களைக் கொண்ட தொழில்கள் படிப்படியாக மாற்றத்தை ஏற்படுத்த வரவுகளை வாங்கலாம்.
இதேபோன்ற கார்பன் வரவு சந்தைகள் 2005 முதல் ஐரோப்பாவிலும் 2021 முதல் சீனாவிலும் செயல்பட்டு வருகின்றன.