ரஷ்ய எண்ணெய்: பொருளாதாரத்திலிருந்து அரசியலைப் பிரித்தல் -ரிச்சா மிஸ்ரா

 ரஷ்ய எரிசக்தியை வாங்கியதற்காக டிரம்ப் அளித்த தண்டனை இந்தியாவிற்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளது. பொருளாதார நலன்களை மையமாகக் கொண்ட ஒரு நடைமுறைக் கொள்கை இந்தியாவிற்குத் தேவை.


ரஷ்யா மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் அலாஸ்காவில் சந்திக்கவுள்ளதால், ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் நிகழ்வுகளை அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் எரிசக்தித் துறையினர் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். அங்கு எடுக்கப்படும் எந்த முடிவும் எண்ணெய் சந்தையைப் பாதிக்கலாம்.


இதற்கிடையில், புதைபடிவ எரிபொருளின் மிகப்பெரிய நுகர்வோரில் ஒருவராகவும், ரஷ்யாவுடனான அதன் உறவுகளுக்காகவும் இந்த மோதலில் இந்தியா சிக்கியுள்ளது. அமெரிக்காவின் அபராத அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியா இதுவரை தனது அரசியல் அறிக்கைகளை அதன் பொருளாதார நலன்களிலிருந்து பிரித்து வைத்துள்ளது.


ஆகஸ்ட் 6-ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் காரணமாகவே இந்தியா மீதான வரிகள் விதிக்கப்படுவதாக அவர் கூறினார். ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் பிற நாடுகளுக்கும் இதேபோன்ற வரிகளை விதிக்க இந்த உத்தரவு ஒரு அமைப்பையும் அமைத்தது.


இந்தியா தற்போது ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்து வருவதாக டிரம்ப் கூறினார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட "தேசிய அவசரநிலை" என்று அவர் அழைத்ததற்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 27 முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரியை அறிவித்தார்.


வாண்டா இன்சைட்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வந்தனா ஹரி, இந்த அமெரிக்க நடவடிக்கை, நியாயத்தையும் தர்க்கத்தையும் புறக்கணிப்பதாகவும், உலகளாவிய எண்ணெய் சந்தைகளின் சிக்கல்களைப் பற்றிய மோசமான புரிதலைக் காட்டுவதாகவும் கூறினார்.

                     

ரஷ்யாவும் அமெரிக்காவும் மோதலில் ஈடுபட்டுள்ளன. மேலும், இந்தியா நடுவில் சிக்கிக் கொள்ளாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் சேமிப்பை உருவாக்குதல், பசுமை எரிசக்திக்கு மாறுதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் அதிக நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குதல் ஆகியவை இந்தியாவிற்கான பொதுவான இலக்குகளாகும். இருப்பினும், இந்தியா சவால்களை எதிர்கொள்கிறது.


ரஷ்யா, ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, குவைத் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இந்தியா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு எண்ணெயை வாங்குகிறது. அதன் எண்ணெய் இறக்குமதி ஆதாரங்கள் முன்பு 27 நாடுகளில் இருந்து இப்போது 40 நாடுகளாக வளர்ந்துள்ளன. ரஷ்யாவின் எண்ணெயை வாங்கும் ஒரே நாடு இந்தியா  மட்டும் அல்ல மற்ற நாடுகளும் எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.


டிசம்பர் 2022ஆம் ஆண்டு முதல் ஜூலை 2025 வரை, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகியவை முக்கிய வாங்குபவர்களாக இருந்தன. ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 47% சீனாவிற்கும், 38% இந்தியாவிற்கும், தலா 6% ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கும் அனுப்புகிறது.


LNG  இறக்குமதிகள்


ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஆர்தர் டி. லிட்டில் (ADL) நிறுவனமும், எரிசக்தி மற்றும் பயன்பாட்டுத் தலைவருமான ட்ரங் கி, இன்றைய நிச்சயமற்ற சூழ்நிலையில், நாடுகளும் வணிகங்களும் மிகவும் மீள்தன்மை கொண்டவர்களாகவும், எதிர்காலத் திட்டங்களைப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். குறுகியகால கணிப்புகள் கடினமாக இருந்தாலும், பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருப்பது முக்கியம்.


மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம் இந்தியா அமெரிக்காவிலிருந்து LNG இறக்குமதியை அதிகரிக்கலாம். மேலும், எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20%-ஆகக் குறைக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார். இது இந்தியா அமெரிக்காவின் அழுத்தத்தைக் குறைக்கவும், அதன் எரிசக்தி மாற்ற இலக்குகளை மேம்படுத்தவும், பல நாடுகளுடன் சமநிலையான உறவுகளைப் பேணவும் உதவும்.


தற்போதைய போக்குவரத்து வழிகளுடன் ஒப்பிடும்போது அலாஸ்கா பாதை வழியாக LNG  இறக்குமதியை அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.


புவிசார் அரசியல் நிபுணரும் எழுத்தாளருமான ஸ்வஸ்தி ராவ், இந்தியா உத்தி சார்ந்த பெட்ரோலிய இருப்புகளில் (strategic petroleum reserves (SPRs)) கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதில் தற்போது, மூன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், இரண்டு கட்டுமானத்தில் உள்ளன.


இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு 5.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் தேவைப்படுகிறது. அதில் 88% இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி நிறுத்தப்பட்டால் மூன்று SPRகள் 10 நாட்கள் காப்புப்பிரதியை வழங்க முடியும். மேலும் இரண்டு SPRகள் அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆனால், பிரச்சினையை முழுமையாகத் தீர்க்காது.


நீண்டகால ஒப்பந்தங்கள் கடைசிநேர அழுத்தங்களைத் தவிர்க்க உதவும் என்றும், இந்தியா குறைந்த ஆபத்துகள் கொண்ட எண்ணெய் ஆதாரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.


இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்தியாவால் அதிகம் செய்ய முடியாது என்றும், இது டிரம்பின் சமீபத்திய கட்டண முடிவுகளை ஏற்றுக்கொள்வதை கடினமாக்குகிறது என்றும் ஹரி கூறினார். நடைமுறை அணுகுமுறை, இராஜதந்திர தீர்வுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதும், பல்வேறு வகையான கச்சா எண்ணெய் ஆதாரங்களைப் பராமரிப்பதும் ஆகும்.


நடைமுறை அணுகுமுறை


எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் எரிசக்தித் துறை உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார்.


உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோர் நாடான இந்தியா, ஒரு நாளைக்கு சுமார் 5.4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் எரிசக்தி உத்தி நடைமுறை, மீள்தன்மை மற்றும் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.


கச்சா எண்ணெய் இறக்குமதியை பல்வகைப்படுத்துதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், மாற்று எரிபொருட்களை உருவாக்குதல், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி நகர்தல், மற்றும் 2028-ஆம் ஆண்டுக்குள் சுத்திகரிப்பு திறனை 310 MMTPA ஆக உயர்த்துவதன் மூலம் உலகளாவிய சுத்திகரிப்பு மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு படிகள் மூலம் புது தில்லி உலகளாவிய எரிசக்தி சவால்களை நிர்வகித்து வருவதாக அவர் விளக்கினார். 2030-ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் தொழிலாக மாற்ற பெட்ரோ கெமிக்கல் திறனை விரிவுபடுத்தவும் நாடு திட்டமிட்டுள்ளது.


இருப்பினும், இந்த இலக்குகள் நேரம் எடுக்கும் என்றும், அரசியல் அறிக்கைகளை பொருளாதார முடிவுகளிலிருந்து தனித்தனியாக வைத்திருக்க அரசாங்கம் கோரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Original article:

Share:

பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-வங்காளதேச நில எல்லை ஒப்பந்தம் மற்றும் அது பலருக்கு அளிக்கும் தனித்துவமான குடியுரிமை நிலைகளைப் புரிந்துகொள்வது. -அனிந்திதா கோஷ்

 2015-ம் ஆண்டின் நில எல்லை ஒப்பந்தம் (Land Boundary Agreement (LBA)) ஐம்பதாண்டுகளாக இந்தியா-வங்காளதேச எல்லைப் (India-Bangladesh border) பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் முழு வரலாறு மற்றும் இந்த எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அதன் தாக்கம் பற்றி மிகச் சிலரே அறிவார்கள்.


இந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய தலைநகரில் "சட்டவிரோத வங்காளதேச குடியேறிகள்" (“illegal Bangladeshi immigrants”) மீது டெல்லி காவல்துறை நடத்திய நடவடிக்கையின் போது நாற்பது வயதான ரெசால் ஹக் கைது செய்யப்பட்டார். வங்காளதேசத்தில் உள்ள தாஷியர்ச்சாராவின் முன்னாள் இந்தியப் பகுதியில் வசிக்கும் ஹக், இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே நில எல்லை ஒப்பந்தம் (LBA) கையெழுத்தானதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டெல்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது இந்திய குடியுரிமையை நிரூபிப்பதற்காக, டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தால் வழங்கப்பட்ட சில ஆவணங்களை அவர் வழங்கினார். ஒரு வருடத்திற்கு முன்பு டெல்லிக்கு இடம் பெயர்வதற்கு முன்பு கூச் பெஹாரில் அரசு நிதியுதவி பெற்ற தற்காலிக குடியேற்றத்தில் தங்கியிருந்ததையும் விவரித்தார். அடுத்தநாள் அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவரது குடியுரிமை நிலையின் சிக்கலான தன்மையைப் புரிந்து கொள்ள காவல்துறைக்கு பல மணிநேரம் ஆனது.


இதில் ஹக்கின் வழக்கும் விதிவிலக்கல்ல. இந்தியா-வங்காளதேச எல்லை ஒப்பந்தத்தின் சிக்கலான மரபுரிமையைச் சுற்றி தொடர்ந்துவரும் குழப்பத்தை இது எடுத்துக்காட்டுகிறது.


கடந்த ஐம்பதாண்டுகளாக, இந்தியாவும் வங்காளதேசமும் அண்டை நாடுகளாக இருந்துவரும் நிலையில், அவர்கள் பல சர்வதேச எல்லைப் பிரச்சினைகளை இராஜதந்திரம் மூலம் தீர்த்து வைத்துள்ளனர். இந்த செயல்பாட்டில் ஒரு முக்கிய சாதனையாக நில எல்லை ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது. இது ஜூன் 6 அன்று அதன் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறித்தது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் நிலப்பரப்புகளின் பௌதீக பரிமாற்றம் (physical exchange) ஜூலை 31, 2015 அன்று நடந்தது. இது 6,000 கிமீ நீளமான சர்வதேச எல்லையை, நான்காவது உலக எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இரு நாடுகளுக்கும் ஒரு அரிய மற்றும் வரலாற்று நிகழ்வாகும். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் வரலாறு மற்றும் இந்த எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களை இது எவ்வாறு பாதித்தது என்பது பற்றியும் அவர்களுக்கு அதிகம் தெரியாது.


நில எல்லை ஒப்பந்தம் (LBA) 2015-ல் என்ன பரிமாறப்பட்டது?


2015ஆம் ஆண்டின் நில எல்லை ஒப்பந்தம் (LBA) நீண்ட தாமதத்திற்குப் பிறகு, 17,160 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 111 இந்திய நிலப்பகுதிகளை வங்காளதேசத்திற்கு மாற்ற வழிவகுத்தது. இதனுடன் 7,110 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 51 வங்காளதேச நிலப்பகுதிகளையும் இந்தியாவிற்கு மாற்றியது. கூடுதலாக, அசாம், மேற்கு வங்காளம், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள 14 பகுதிகளைத் இந்தியா தக்க வைத்துக் கொண்டது. இந்த உடன்படிக்கையானது, இந்த உறைவிடங்களில் வசிக்கும் சுமார் 52,000 பேரின் குடியுரிமை மற்றும் பயன்பாட்டு உரிமைகளை (adverse possessions) தீர்மானித்தது. இந்த குடியிருப்பாளர்கள் தங்களுடைய குடியுரிமையை தேர்வு செய்து, இடமாற்றம் செய்ய அல்லது அதே இடத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.





Adverse possession : பயன்பாட்டு உரிமை  என்பது ஒரு சட்டக் கொள்கையாகும். இதில் ஒரு நபர் நிலத்தை வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும், உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு சட்டப்பூர்வ காலத்திற்கு, பெரும்பாலும் 12 ஆண்டுகளுக்கு வைத்திருப்பதன் மூலம் அதன் உரிமையைப் பெறலாம். இந்தக் கோட்பாடு, உண்மையான உரிமையாளரின் ஆட்சேபனை இல்லாமல், நிலத்தை ஆக்கிரமித்து, சொந்தமாகப் பயன்படுத்தும் ஒருவர், இறுதியில் சட்டப்பூர்வ உரிமையைப் பெற அனுமதிக்கிறது.


எதிர் நிலப்பரப்பு (adverse possessions) என்பது ஒரு தேசத்தின் சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள சிறிய பிரதேசங்கள் மற்றும் அந்த நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் சட்டப்பூர்வமாக அந்தப் பகுதிகள் எல்லையைத் தாண்டி அண்டை நாட்டிற்குச் சொந்தமான பகுதிகளாகும். இதில் வாழும் மக்கள் சர்வதேச எல்லைக்கு அப்பால் நிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் குடிமக்களாக இருக்கும் பட்சத்தில் நாட்டின் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்து சட்ட உரிமைகளையும் அனுபவிக்கிறார்கள். 


இந்தியாவைப் பொறுத்தவரை, மேகாலயா-வங்காளதேச எல்லையில் உள்ள லோபச்சேரா-நன்செரா (Lobachera-Nuncherra), பிர்த்விஹா (Pyrdwiha), நல்ஜூரி (Naljuri), லிங்காட் (Lyngkhat) மற்றும் டவ்கி-தமாபில் (Dawki-Tamabil) போன்ற பிரதேசங்கள், அஸ்ஸாம்-வங்காளதேச எல்லையில் பல்லத்தல் (Pallathal) மற்றும் போரோய்பாரி (Boroibari), திரிபுரா-வங்காளதேச எல்லையில் சந்தன்நகர் (Chandannagar), தெற்கு பெருபாரி, பத்ரிகாமா, தென் பெருபாரி, பத்ரிஹார் மேற்கு வங்காளம்-வங்காளதேச எல்லையில் உள்ள பகுரியா மற்றும் சார் மஹிஸ்குண்டி ஆகியவை எதிர் நிலப்பபரப்பு பகுதிகளாக இருந்தன. பிராந்திய எல்லையில் தெளிவு இல்லாததால் இந்த பகுதிகள் நீண்ட காலமாக பதற்றம் மற்றும் மோதல்கள் உருவாகின்றன.


ஒரு நாட்டின் பகுதிகள், மற்றொரு நாட்டால் முழுமையாக சூழப்பட்ட பகுதிகள் enclave ஆகும். கூச் பெஹார் சமஸ்தானத்திற்கும் வங்காள மாகாணத்தில் உள்ள ரங்பூர் மாவட்டத்திற்கும் இடையில் இதுபோன்ற 162 பகுதிகள் பகிரப்பட்டன. உள்ளூரில், அவை சிட்மஹால் (நிலத் திட்டுக்கள்) என்று அழைக்கப்பட்டன. பிரெண்டன் வைட்டின் விரிவான ஆய்வின்படி, கூச் பெஹார் 1950 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தபோது, அந்தப் பகுதியின் சரியான வரைபட அடிப்படையிலான ஆய்வு இல்லாமல் இந்த enclave உருவாக்கப்பட்டன. 1713ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் பதிவுசெய்யப்பட்ட கூச் பெஹாரின் எல்லைகளைப் பயன்படுத்தி ராட்க்ளிஃப் கமிஷன் (Radcliffe Commission) இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வரைந்தது.


இந்தியாவில் உள்ள அனைத்து வங்காளதேச பகுதிகளும் மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அதே சமயம், வங்காளதேசத்தில் உள்ள இந்திய பகுதிகள் ரங்பூர் பிரிவின் நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளன. அவை லால்மோனிர்ஹாட் (59), பொன்சோகர் (36), குரிகிராம் (12), மற்றும் நில்பமாரி (4) போன்றவை ஆகும். இவற்றில் சில நிலப்பகுதிகளில் சிலவற்றிற்குள், எதிர்-நிலப்பகுதிகளும் (counter-enclaves) இருந்தன.

இந்தப் பகுதிகள் வெளிநாட்டுப் பிரதேசத்திற்குள் அமைந்துள்ளன. மேலும், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு துண்டிக்கப்பட்டனர். இந்த நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த இடங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களுடன் வலுவான உறவுகளையும் மதப் பிணைப்புகளையும் கொண்டுள்ளனர்.  இதனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட இந்த இடத்தைப் பிடிக்கும் நாட்டுடனேயே அதிகம் தொடர்பு கொண்டனர். நில எல்லை ஒப்பந்தம் (LBA) 2015, 'இந்தப் பகுதிகளின் பரிமாற்றம் என்பது ஒரு கற்பனையான நிலப் பரிமாற்றத்தை மட்டுமே குறிக்கிறது' என்று சரியாகச் சுருக்கமாகக் கூறுகிறது.


இந்தியா மற்றும் வங்காளதேசம் மூன்று இடங்களில் நிலையான எல்லை இல்லாமல் சுமார் 6.1 கி.மீ நிலத்தைக் கொண்டிருந்தன. அவை, மேற்கு வங்காளத்தில் டைகட்டா-56, திரிபுராவில் முஹுரி நதி–பெலோனியா, மற்றும் அசாமில் லதிதிலா–துமாபரி போன்ற பகுதிகளாகும். பருவகாலங்களுக்கு ஏற்ப ஆறுகள் பாதை மாறியதாலும், அடர்ந்த காடுகள் எல்லை நிர்ணயத்தை கடினமாக்கியதாலும் இந்தப் பகுதிகள் சர்ச்சைக்குரியதாகவே இருந்தன.



நில எல்லை ஒப்பந்தம் (LBA) 2015-ன் வரலாறு


1947இல், இந்திய துணைக்கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தானாக பிரிக்கப்பட்டபோது, ராட்கிளிஃப் விருது (Radcliffe Award) புதிய நாடுகளின் எல்லைகளை வரையறுத்தது. வங்காள எல்லை ஆணையம் (Bengal Boundary Commission) இந்தியாவின் வடகிழக்கு எல்லைகளையும், மேற்கு வங்காள மாநிலத்தையும், சமஸ்தானமான கூச் பெஹார் எல்லை வரை வரையறுத்தது. கிழக்கு மற்றும் மேற்கு வங்கம் இடையேயான சில எல்லைப் பிரச்சனைகள் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை தீர்ப்பாயத்தில் 1948இல் டெல்லியில் நடைபெற்ற தன்னாட்சிகளுக்கு இடையேயான மாநாட்டில் (Inter-Dominion Conference) எழுப்பப்பட்டன. தீர்ப்பாயத்தில் ஸ்வீடிஷ் சட்ட வல்லுநரான அல்கோட் பேக்கே உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் ராட்கிளிஃப் விருது (Radcliffe Award) மற்றும் வங்காள எல்லைக் குழுவின் (Bengal Boundary Commission) எல்லைக்கான வரைபடங்களைப் புதுப்பிக்க ஆய்வு செய்து அதை பேக்கே விருது (Bagge Award) என்று அழைத்தனர்.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைகளை வரையும்போது நிலப்பகுதிகள் (Enclaves) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 1950ஆம் ஆண்டில் கூச் பெஹார் சமஸ்தானம் இந்தியாவில் இணைக்கப்பட்டபோது அவை தீர்ப்பாயத்தில் சேர்க்கப்பட்டன. தீர்ப்பாயம் இந்த விஷயத்தை மீண்டும் பரிசீலித்து, இந்த பிரதேசங்களை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. எல்லை நிர்ணய பிரச்சினையை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரித்து, பேக்கே விருதை (Bagge Award) நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவை என்று தீர்ப்பளித்தது.


1958ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் பெரோஸ் கான் நூன் ஆகியோர் நேரு-நூன் ஒப்பந்தத்தில் (Nehru-Noon Agreement) கையெழுத்திட்டனர். பெருபாரி யூனியன் எண் 12 ஐ கிழக்கு பாகிஸ்தானுக்கு மாற்றுவதும் இதில் அடங்கும். இருப்பினும், இந்தியாவில் சுமார் 10,000 ஏக்கர் கூடுதல் நிலப்பரப்புக்கான ஒப்பந்தத்திற்கு எதிராக பொது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால், கூடுதல் பகுதிகளை பாகிஸ்தானுக்கு மாற்ற அரசியலமைப்புத் திருத்தம் தேவை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


1960இல், இந்திய நாடாளுமன்றம் நிலத்தை மாற்றுவதற்கு அரசியலமைப்பின் 368வது பிரிவைத் திருத்தியது. 1959ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை மற்றும் பேக்கே விருதின் (Bagge Award) தீர்ப்பின் படி எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், மேற்கு வங்க மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு மற்றும் மோசமடைந்து வரும் இந்தியா-பாகிஸ்தான் உறவின் காரணமாக பிரதேசங்கள் பரிமாறப்படவில்லை.


1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, நில பரிமாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ முறை நிறுத்தப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான குடியேற்றமும் நிறுத்தப்பட்டது. ஆனால் எதிர்காலத்தில் இந்தப் பகுதிகள் மாற்றப்படும் என்ற நம்பிக்கையில், பல முஸ்லிம்கள் இன்னும் இந்திய எல்லைக்குள் அமைந்துள்ள கிழக்கு பாகிஸ்தானிய நிலப்பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.


1971இல் வங்காளதேசம் சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவும் வங்காளதேசமும் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. 1972இல், ஷேக் முஜிபுர் ரஹ்மானும் இந்திரா காந்தியின் நட்பும், ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் (Treaty of Friendship, Cooperation and Peace) கையெழுத்திட்டனர். பொதுவாக இந்திரா-முஜிப் ஒப்பந்தம் (Indira-Mujib Treaty) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் இந்தியா-வங்காளதேச எல்லைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல் படியாகும்.


இரு நாடுகளின் பிரதமர்களும் 1974இல் நில எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் பின்னர், வங்காளதேசம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது. இது நிலப்பகுதிகள் (enclaves) மற்றும் எதிர் நிலப்பரப்புகளாக (adverse possessions) மாற்றுவதை சட்டப்பூர்வமாக்கியது. தோஹோகிராம்- அங்கோர்போட்டா பகுதிகளை வங்காளதேசத்துடன் இணைக்க டின் பிகா தளவாடங்களை (Tin Bigha Corridor) குத்தகைக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில், வங்காளதேசம் தெற்கு பெருபாரியை இந்தியாவுக்கு மாற்ற ஒப்புக்கொண்டது. இதன் அடிப்படையில், வங்காளதேசம் தெற்கு பெருபாரியை உடனடியாக இந்தியாவிற்கு மாற்றியது. அதே நேரத்தில் இந்தியா LBA 1974யை நிறைவேற்ற அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது.


இருப்பினும், 1975இல் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படுகொலை மற்றும் வங்காளதேசத்தின் தலைமைத்துவ மாற்றங்கள் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. இதனால், 10,000 ஏக்கர் நிலப்பற்றாக்குறை காரணமாக இந்தியாவின் தயக்கம், தேக்கநிலைக்குப் பங்களித்தது.


1982இல் இந்திரா-எர்ஷாத் ஒப்பந்தத்தின் (Indira-Ershad Agreement) மூலம், டின் பிகா தளவாடப் பகுதியளவில் அங்கீகரிக்கப்பட்டது. டின் பிகா தளவாடம் (Tin Bigha Corridor) என்பது கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலத்தின் ஒரு பகுதி ஆகும். இது தோஹோகிராம்-அங்கோபோர்டா பகுதிகளை வங்காளதேசத்தின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்க வங்காளதேசத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. வங்காளதேசத்திற்கு இந்த தளவாடத்தை இந்தியா நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்தது. இருப்பினும், இந்த தளவாடத்தை பகலில் (12 மணிநேரம்) மட்டுமே பயன்படுத்த முடியும். இது உலகின் ஒரே பகுதிநேர நிலப்பகுதியாக மாறியது.


2000ஆம் ஆண்டு முதல், நிலப்பகுதிகள் (enclaves) மற்றும் எதிர் நிலபப்பரப்புகளில் (adverse possessions) எதிர்ப்புகள் வலுவடைந்தன. வில்லெம் வான் ஷென்டெல் (Willem van Schendel) போன்ற இனவியலாளர்கள் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை "காஃப்கேஸ்க்" (Kafkaesque) என்று விவரித்தனர். அவர்கள் ஆட்சியாளர்கள் இல்லாத மற்றும் பிரதிநிதித்துவம் இல்லாத பகுதிகளில் வாழ்ந்தனர். அவர்களுக்கு அடிப்படை சேவைகள் அல்லது அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இதனால், சில நிலப்பகுதிகள் (enclaves) நிர்வாகத்தை நிர்வகிக்க உள்ளூர் கவுன்சில்களை உருவாக்கின. இந்த கவுன்சில்கள் அத்தியாவசிய உள்கட்டமைப்பை உருவாக்க நிதி திரட்டின.


 தாஷியார்ச்சரா நிலப்பகுதிக் குழு (Dashiarchhara Enclave Committee), ஷித்மஹால் ஐக்கியக் குழு (Shitmahal United Council), இந்தியன் நிலப்பகுதிகள் அகதிகள் சங்கம் (Indian Enclaves Refugee Association) மற்றும் சித்மஹால் பினிமய் சமன்ய்யா குழு (Chhitmahal Binimay Samanyay Committee) போன்ற அமைப்புகள் சுதந்திரமான இயக்கம், நிலச் சீர்திருத்தம், குடிமை வசதிகள் மற்றும் LBA 1974-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரின. இவற்றில் சில அமைப்புகளும் அரசாங்கத்தின் கவனத்தையும், அரசாங்கத்தின் நிலப்பரிவர்த்தனையின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக உருவாகின.


2007ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு நடத்திய கூட்டுக் கணக்கெடுப்பில் பெரும்பாலான நிலப்பகுதி குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது. 2009-ம் ஆண்டில், ஷேக் ஹசீனா வங்காளதேசத்தின் பிரதமரானபோது, நில எல்லை ஒப்பந்தம் (LBA) 1974-ஐச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தினார். 


2010ஆம் ஆண்டு கூட்டு எல்லைப் பணிக்குழு கணக்கெடுப்பு (Joint Boundary Working Group survey) தொடங்கியது. கணக்கெடுப்பின்படி, இந்தியாவால் சூழப்பட்ட வங்காளதேசப் பகுதிகளிலுள்ள மக்கள் இந்தியாவுடன் சேரத் தேர்வுசெய்தனர். மனித புவியியலாளர்களான அஸ்மேரி ஃபெர்டோஷ் மற்றும் ரீஸ் ஜோன்ஸ் இருவரும் சேர்ந்து, ‘இந்தியாவின் மீள்குடியேற்றத் தொகுப்பு மற்றும் வங்கதேசத்தை விட வலுவான பொருளாதாரம் கொண்ட நாடு என்ற இந்தியாவின் பிம்பம் இந்த முடிவை பாதித்ததாகவும் அவர்கள் கண்டறிந்தனர்.


2011ஆம் ஆண்டில், இரு நாடுகளும் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க தீவிரமாகச் செயல்பட்டு வந்தன. முதல் படி, டின் பிகா வழித்தடத்தை முழுநேரமாகத் திறப்பது. இந்த வழித்தடம் இந்தியாவால் சூழப்பட்ட டோஹோகிராம்-அங்கோர்போட்டாவை வங்கதேசத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. டோஹோகிராம்-அங்கோர்போட்டா இந்தியாவில் பரிமாறிக்கொள்ளப்படாத ஒரே வங்காளதேசப் பகுதியாக உள்ளது. இருப்பினும், 1974ஆம் ஆண்டின் LBA இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இந்தியா வங்கதேசத்திற்கு 10,000 ஏக்கர் நிலத்தை வழங்கியதால், பாஜக இதை எதிர்த்தது. INC தலைமையிலான UPA அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது.


2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, அது 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமையை கொள்கை'(‘Neighbourhood First Policy’) அறிமுகப்படுத்தியது. முன்னதாக, வங்காளதேசத்துடனான நிலப்பரிமாற்றத்தை முதலில் எதிர்த்த அரசியல் கட்சி, அரசியலமைப்பு மாற்றங்களுக்கும், அண்டை நாடுகளுடன் நிலப்பரிமாற்றத்திற்கும் விரைவாக ஒப்புக்கொண்டது. வங்காளதேசத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட சர்வதேச எல்லைகளை பாதுகாப்பதற்காக நிலப்பகுதிகள் மற்றும் பாதகமான உடைமைகளின் பரிமாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இது ஒரு வருடத்திற்குள், நில எல்லை ஒப்பந்தம் (LBA) 2015 நடைமுறைப்படுத்தப்பட்டது.


இந்திய அரசியலமைப்பு "இந்தியா மற்றும் வங்காளதேசத்தின்  அரசாங்கங்களுக்கு இடையில் உள்ள ஒப்பந்தம் மற்றும் அதன் நெறிமுறையின்படி இந்தியா அரசால் பிரதேசங்களை கையகப்படுத்துதல் மற்றும் சில பிரதேசங்களை வங்காளதேசத்திற்கு மாற்றுதல் ஆகியவற்றை அங்கீகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு நாடும் அதன் பிரதேசத்தில் உள்ள அனைத்து நிலப்பகுதிகள் மற்றும் பாதகமான உடைமைகள் மீது இறையாண்மையை எடுத்துக்கொள்ளும். இந்த பகுதிகளில் வாழும் மக்கள் இந்தியாவிலோ அல்லது வங்காளதேசத்திலோ வாழலாமா என்பதைத் தேர்வு செய்யலாம். அவர்களுக்கு தேர்ந்தெடுத்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படும். ஜூலை 31, 2015 மற்றும் ஜூன் 30, 2016ஆம் ஆண்டுக்கு இடையில் நிலப்பகுதிகள், பாதகமான உடைமைகள் மற்றும் வரையறுக்கப்படாத நிலங்களின் பரிமாற்றம் முடிக்க திட்டமிடப்பட்டது.


நில எல்லை ஒப்பந்தம் (LBA) 2015-ன் பின்விளைவுகள்


முன்னாள் வங்காளதேச குடியேற்றங்களை மேம்படுத்துவதற்காக ரூ.3,000 கோடி மதிப்புள்ள தொகுப்பை இந்திய அரசாங்கம் அங்கீகரித்தது. முன்னாள் குடியிருப்பாளர்களின் நிலத்தின் பரிமாற்றம் மற்றும் குடியேற்றத்திற்கான வழிகாட்டுதல்களையும் இது உருவாக்கியது. கூடுதலாக, இந்திய குடியேற்றங்களிலிருந்து திரும்பும் மக்களை மறுவாழ்வு செய்வதற்கு அரசாங்கம் ரூ.1,000 கோடியை அங்கீகரித்தது. 


வங்காளதேசத்தில் உள்ள இந்தியப் பகுதிகளிலிருந்து திரும்பிய குறிப்பாக ரெசவுல் ஹக் போன்ற 987 இந்தியர்கள், கூச் பெஹார் மாவட்டத்தின் ஹல்திபாரி, மெக்லிகஞ்ச் மற்றும் தின்ஹாட்டா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று அரசு நிதியளிக்கப்பட்ட தற்காலிகக் குடியிருப்புகளில் ஒன்றிற்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இரு அரசாங்கங்களும் இணைந்து செயல்பட்டு, அவர்களின் தனிப்பட்ட உடைமைகள் மற்றும் அசையும் சொத்துக்களை கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. அவர்களின் நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் விற்பனை மூலம் பணம் அனுப்புவதன் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.


ஆனால், முன்னாள் வங்காளதேச நிலைப்பகுதியில் உள்ள மக்களுக்கும், இந்திய நிலப்பகுதியில் இருந்து திரும்பியவர்களுக்கும் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ”உத்தர பங்கா சங்க்பாத்” (ஆகஸ்ட் 2025) இதழில் பத்திரிகையாளர் தேபப்ரதா சாகி, இந்தப் புதிய குடிமக்களுக்கு இன்னும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என்று எழுதுகிறார். அவர்களின் முக்கிய வருமான ஆதாரமான அவர்களின் நிலம் இன்னும் அவர்களுக்குத் திருப்பித் தரப்படவில்லை. அவர்களுக்கு மாற்று வேலைகளும் கிடைக்கவில்லை.


 பலருக்கு, அவர்களின் குடியுரிமை ஆவணங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்தப் பகுதிகளில் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லை.  பகலிர்ச்சாரா (Bakalirchhara), கிழக்கு மஷால்தங்கா (Purba Mashaldanga) மற்றும் மத்திய மஷால்தங்கா (Madhya Mashaldanga) போன்ற பகுதிகளில் உள்ள முன்னாள் நிலப்பகுதிக்கான குடியிருப்பாளர்கள் தங்களுக்கு உரிய உரிமைகளை கோரி போராட்டங்களை நடத்தினர். இருப்பினும், அவர்களின் குரல்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகின்றன. குடியுரிமை மசோதா 2019 ஏற்படுத்திய அச்சம், நில எல்லை ஒப்பந்தம் (LBA) குறித்த குறுகிய புரிதலுடன் சேர்ந்து, அவர்களின் நிலைமையை மோசமாக்கியுள்ளது. வங்காளதேசத்துடனான அவர்களின் விசுவாசம் குறித்த ஊகங்கள் தொடர்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நில மாற்றத்திற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த சந்தேகங்கள் அவர்களை தனிமைப்படுத்தி ஓரங்கட்டியுள்ளன.


சிட் ஃபலானாபூரைச் சேர்ந்த 50 வயதான ஃபஸ்லு மியானின் (Fazlu Mian) வழக்கு, முன்னாள் வங்காளதேச குடியேற்ற நிலப்பகுதிகளின் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைக் காட்டுகிறது. 2015இல் நில எல்லை ஒப்பந்தம் (LBA) அங்கீகாரம் பெற்ற சிறிது காலத்திற்குப் பிறகு, மியான் வேலை தேடி டெல்லி சென்றார். அவருக்கு  வேலை கிடைத்தது,. ஆனால் சில மாதங்களில், அவர் கைது செய்யப்பட்டார். அவரது இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பித்த போதிலும், அவர் நகரத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.


அவர் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள இரயில் நிலையமான கூச் பெஹாருக்குத் (Cooch Behar) திரும்பியபோது, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில், மியான் அவரது கிராமமும் இன்னும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் அவரிடம் தெரிவித்தனர். LBA 2015 இன் கீழ், அவரது கிராமம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதை அவர் விளக்க முயன்றார். ஆனால் அவரது வேண்டுகோள் கேட்கப்படாமல் போனது. கூச் பெஹாரில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் இறுதியாக அவரை விடுவிக்க உத்தரவிடுவதற்கு முன்பு அவர் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.



Original article:

Share:

இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :  


  • 2023-ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle-East-Europe-Economic Corridor (IMEC)) அறிவிக்கப்பட்டது. ஆசியா, அரேபிய வளைகுடா மற்றும் ஐரோப்பா இடையே இணைப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். இது இந்தியா-வளைகுடா மற்றும் வளைகுடா-ஐரோப்பா போன்ற இரண்டு முக்கிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது .


  • கிழக்குப் பாதை இந்தியாவின் மேற்குத் துறைமுகங்களிலிருந்து கொள்கலன்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யும். அங்கிருந்து, அதிவேக சரக்கு ரயில்கள் அரேபிய தீபகற்பம் (UAE, சவுதி அரேபியா, ஜோர்டான்) வழியாக இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும்.


  • இரண்டாவது பாதை ஹைஃபாவிலிருந்து கிரீஸ் மற்றும் இத்தாலியில் உள்ள துறைமுகங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும். இந்தத் துறைமுகங்களிலிருந்து, ஐரோப்பாவின் தற்போதைய ரயில் அமைப்பு பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை வழங்கும்.


  • செங்கடல் பாதையுடன் ஒப்பிடும்போது IMEC இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு கப்பல் போக்குவரத்து நேரத்தை சுமார் 40% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் அறிவிப்பிலிருந்து முன்னேற்றம் மெதுவாக உள்ளது.


  • சமீபத்திய ஆண்டுகளில், பிராந்தியத்தில் மோதல்கள் (கத்தார் vs GCC, ஈரான் vs சவுதி அரேபியா, அரபு நாடுகள் vs இஸ்ரேல்) குறைந்துள்ளன. உறவுகளை மேம்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் நாடுகள் ஒப்பந்தங்களைச் செய்யத் தொடங்கின. மேலும், அரபு நாடுகளின் வளர்ந்து வரும் உறவுகள் பொருளாதார நன்மைகளைத் தந்தன. இந்த நன்மைகள் சில அரபு நாடுகளுக்கு பாலஸ்தீனப் பிரச்சினையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவுடனான I2U2 குழுவைப் போல இஸ்ரேலுடனான சிறிய அளவிலான கூட்டாண்மைகளை பரிசீலிக்க போதுமானதாக இருந்தன.


  • பிராந்திய ஒத்துழைப்பின் இந்த அரிய காலம் இந்தியாவிற்கும் அதன் மத்திய கிழக்கு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கூட்டாளர்களுக்கும் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு புதிய வர்த்தக வழித்தடத்தை உருவாக்குவதை கற்பனை செய்ய முடிந்தது.


  • இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடமானது (India-Middle-East-Europe-Economic Corridor (IMEC)), நிலையான கட்டணங்கள் தொடர்பான பிரச்சனைகள், கூட்டாளர்களிடையே பலவீனமான நிதி இணைப்புகள், பொதுவான காப்பீட்டு அமைப்பு இல்லாதது மற்றும் மிகவும் மாறுபட்ட துறைமுக திறன்கள் போன்ற தொடர்ச்சியான வர்த்தக மற்றும் அணுகல் சிக்கல்களைத் தீர்க்க உருவாக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் கடல்வழிப் பாதைகளுக்கு இடையே பொருட்களைக் கொண்டு செல்வதற்கான, சவுதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே திட்டமிடப்பட்ட ரயில் பாதை இன்னும் நன்கு வளர்ச்சியடையவில்லை.


  • இந்தப் பிரச்சினைகள் நிர்வகிக்கக்கூடியவை மற்றும் அனைத்துத் தரப்பிலிருந்தும் அர்ப்பணிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் சரிசெய்யப்படலாம். செப்டம்பர் 2023-ல், தெளிவான காலக்கெடுவுடன் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி அதில் உறுதியாக இருக்க பங்கேற்பாளர்கள் அறுபது நாட்களுக்குள் தீர்க்க ஒப்புக்கொண்டனர்.


  • ஒரு மாதத்திற்குள், மத்திய கிழக்கில் ஒரு பெரிய மோதல் வெடித்ததால்,  அந்த கூட்டம் இன்னும் நடக்கவில்லை.


  • IMEC-ன் அடிப்படை பொருளாதார யோசனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனால், அதன் சவால்கள் மிகவும் தீவிரமானதாகிவிட்டன. இப்போது மிகப்பெரிய பிரச்சனையாக 61,000 பேரை பலி வாங்கிய காசா மீதான இஸ்ரேலின் போர் ஆகும்.


  • இந்தப் போர் முந்தைய வர்த்தக ஒத்துழைப்பு மூலம் தீர்க்கப்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகளையும், நிர்வகிக்கக்கூடிய  பிரச்சினைகளையும் மோசமாக்கியுள்ளது.


  • இந்த வழித்தடத்தின் மேற்குப் பகுதி விரைவில் முடிய வாய்ப்பில்லை. ஆனால், அரபு நாடுகளுடனான இந்தியாவின் வலுவான கூட்டாண்மைகளால் கிழக்குப் பகுதி இன்னும் பயனடைகிறது.




உங்களுக்குத் தெரியுமா?:


* IMEC-ன் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகும். 2023-24 ஆம் ஆண்டில் $137.41 பில்லியன் மதிப்புள்ள வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. இந்தியா, UAE மற்றும் சவுதி அரேபியா இடையேயான எண்ணெய் அல்லாத வர்த்தகமும் சமீபத்திய ஆண்டுகளில் நிறைய வளர்ந்துள்ளது.  IMEC என்பது ஒரு சாதரண வர்த்தகப் பாதையை விட அதிகமாக செயல்பாட்டில் இருக்கும் என்று கருதப்பட்டது. ஏனெனில், அதன் கூட்டு நாடுகள் மின்சாரம் மற்றும் இணையத்திற்கான கேபிள்கள், சுத்தமான ஹைட்ரஜன் ஏற்றுமதிக்கான குழாய்களை அமைப்பார்கள்.  மேலும், செயல்திறனை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் பணியாற்றுவார்கள்.



Original article:

Share:

நெகிழிக் கழிவு மேலாண்மை விதி 2021 பற்றி… -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய குறிப்புகள்:


• சனிக்கிழமை இந்தியா குவைத், சவுதி அரேபியா, ரஷ்யா, ஈரான் போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் இணைந்து, முதன்மை பாலிமர்களை வழங்குதல் அல்லது ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த தனி விதிகளை எதிர்த்தது. மேலும், நெகிழி பொருட்களுக்கான (plastic products) எந்தவொரு கட்ட-வெளியேற்ற பட்டியலையும் சேர்ப்பதை அது எதிர்த்தது.


• கடல் சூழல் உட்பட, நெகிழி மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளின் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையாகக் கருதப்படும் இந்த சுற்றுக்காக 190 நாடுகள் ஜெனீவாவில் கூடியுள்ளன.


• இந்தியாவின் சார்பாக பேசிய, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வீர் விக்ரம் யாதவ், பேச்சுவார்த்தைகளின் தலைவரிடம், ஒப்பந்தத்தின் கவனம் நெகிழி மாசுபாட்டை நிவர்த்தி செய்வதில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அது ஏற்கனவே உள்ள பலதரப்பு சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற ஆணையிடும் அமைப்புகளுடன் ஒன்று சேரக்கூடாது என்றும் கூறினார்.


• ஒப்பந்தத்தின் வரைவு உரை தற்போது 35 பக்கங்களைக் கொண்டுள்ளது. மொழியின் உரை மற்றும் இறக்குமதி குறித்த கருத்து வேறுபாடுகளைக் குறிக்கும் கிட்டத்தட்ட 1,500 அடைப்புக்குறிகளைக் கொண்டுள்ளது. இந்த உரை 'தொடர்பு குழுக்களின்' உதவியுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இது நாடுகளின் பிரதிநிதிகள் ஒப்பந்தத்தின் கட்டுரைகளை விரிவாக விவாதிக்கிறது.


• நாடுகளின் நிலைப்பாடுகளுக்கு இடையேயான மிகப்பெரிய இடைவெளி இருந்தபோதிலும், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (United Nations Environment Programme (UNEP)) நிர்வாக இயக்குனர் Inder Andersen, ஒப்பந்தம் ‘நெருக்கமாக இருந்தது’ (was within grasp) என்றும், பேச்சுவார்த்தைகள் எளிதாக இல்லாவிட்டாலும், அவர்களால் நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார்.


• பூசனிலும், இந்தியா உற்பத்தி குறைப்புகளை ஆதரித்திருந்தது. இருப்பினும், இந்த முறை அது அரபு நாடுகளை வெளிப்படையாக ஆதரித்துள்ளது. மேலும், படிப்படியாக அகற்றப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தவிர்ப்பது குறித்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பலூன் குச்சிகள், உணவுபொருள் பயன்பாடு சாதனங்கள் (Cutlery), குடிநீர் உறிஞ்சு குழாய் (straws) மற்றும் சில ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களை முழுமையாக தடை செய்வதற்கான உள்நாட்டு ஒழுங்குமுறையை இந்தியா ஏற்கனவே நிறைவேற்றியுள்ளதால் இது குறிப்பிடத்தக்கது.


• இந்தியாவுடன் இணைந்த ஒத்த கருத்துடைய நாடுகள், ஒப்பந்தத்தில் நெகிழி உற்பத்தியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், உற்பத்தியில் கவலைக்குரிய இரசாயனங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை தொடர்ந்து எதிர்த்தன. இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ, பல ஆப்பிரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா ஆகியவை நெகிழிக் கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உற்பத்தி குறைப்புகளைச் சேர்ப்பது மற்றும் நெகிழி உற்பத்தியின் முழு சுழற்சியையும் நிவர்த்தி செய்வது போன்ற "உயர் லட்சியத்திற்கு" அழுத்தம் கொடுத்துள்ளன.


• பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தைப் போன்ற உலகளாவிய ஒப்பந்தத்தை அடைவதற்கான முறையான காலக்கெடு, கடந்த டிசம்பரில் கொரியாவின் பூசானில் தோல்வியில் முடிந்தது. இருப்பினும், பூசானில் தடைபட்ட இடங்களில் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.


உங்களுக்குத் தெரியுமா?


• 2022-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபை (United Nations Environment Assembly (UNEA)) நெகிழி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கியது, 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதை முடிக்க இலக்காக வைத்துள்ளது. இருப்பினும், 5-வது மற்றும் இறுதி சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்ததால், ஒப்பந்தம் இன்னும் முழுமையடையவில்லை.


• நெகிழிக் கழிவு மேலாண்மை விதி 2021, 2022-ஆம் ஆண்டில் 19 வகைகளை உள்ளடக்கிய ‘ஒரு முறை பயன்படுத்தப்படும்’ நெகிழிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி என்பது ஒரு முறை பயன்படுத்தப்பட்டு நிராகரிக்கப்படும் நெகிழிப் பொருட்களைக் குறிக்கிறது. தயாரிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் அனைத்து நெகிழிப் பொருட்களிலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிகள் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. இதில் ஷாம்பு மற்றும் சோப்பு பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், முகமூடிகள், காபி கப், குப்பை பைகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவை அடங்கும்.


• நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ன் படி, மறுசுழற்சி செய்வது எவ்வளவு எளிது என்பதைப் பொறுத்து நெகிழிகள் 7 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


சின்னம்

அறிவியல் பெயர் 

எதில் பயன்படுத்தப்படுகின்றன?


1

பாலிஎத்திலீன் டெரெஃபாலேட் (Polyethylene Terephalate (PET)

தண்ணீர் பாட்டில்கள், பாலி எதிலீன் டெரெப்தாலேட் பாட்டில்கள் (Polyethylene Terephthalate bottles (PET))  போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

2

உயர் அடர்த்தி பாலிஎதிலீன் (High Density Polyethylene (HDPE))

பால்/சோப்பு பைகள், பயண பைகள், கொள்கலன்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

3

பாலி வினைல் குளோரைடு (PVC)

குழாய்கள், மின்கம்பிகள், தரைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.


4

குறைந்த அடர்த்தி பாலிஎதிலின் (Low density polyethylene (LDPE))

பயண பைகள், திரைப்படங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.


5

பாலிப்ரொப்பிலீன் (Polypropylene (PP))

மருந்து பாட்டில்கள், தானிய லைனர்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.


6

பாலிஸ்டிரீன் ரெசின்கள் (Polystyrene resins (PS))

நுரை பேக்கேஜிங், ஐஸ்கிரீம் கோப்பைகள், தேநீர் கோப்பைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.


7

மற்றவை 

தெர்மோசெட் நெகிழிகள், பல அடுக்கு மற்றும் லேமினேட் பிளாஸ்டிக், பாலியூரிதீன் நுரை (Polyurethane Foam), பேக்கலைட், பாலிகார்பனேட், மெலமைன், நைலான் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.


Original article:

Share:

பிரம்மோஸ் ஏவுகணைகள். -ரோஷ்னி யாதவ்

 சுகோய்-30 ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையானது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முக்கிய தாக்குதல் ஆயுதமாகும் என்று DRDO தலைவர் கூறினார். பிரம்மோஸ் ஏவுகணைகள் என்பது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?


தற்போதைய  செய்தி?


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Defence Research and Development Organisation (DRDO)) தலைவர் சமீர் வி காமத், ஆகஸ்ட் 9-ம் தேதி சனிக்கிழமை, சுகோய்-30 MKI இலிருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆபரேஷன் சிந்தூர் போது பயன்படுத்தப்பட்ட முக்கிய தாக்குதல் ஆயுதம் என்று கூறினார். மேலும், பிரம்மோஸ்-NG எனப்படும் இந்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் சிறிய பதிப்பின் உருவாக்கம் விரைவில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


கூடுதலாக, ஏப்ரல் 19 அன்று இந்தியா பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை (BrahMos supersonic cruise missiles) வழங்கியது. இந்த விநியோகம் 2022இல் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான $375 மில்லியன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இதன் காரணமாக, பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பற்றி மேலும் புரிந்துகொள்வது முக்கியம்.


முக்கிய அம்சங்கள் :


1. பிரம்மோஸ் என்பது மிகவும் பல்துறை திறன் கொண்ட 'fire-and-forget  என்ற வகையைச் சார்ந்த சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையாகும். இது நிலம் சார்ந்த, கப்பல் சார்ந்த, வான்வழி ஏவப்பட்ட மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்த பதிப்புகளில் அதன் திறன்களை நிரூபித்துள்ளது.


2. இந்த சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைகள் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை போன்ற சேவைகளில் செயல்படுகின்றன. இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் NPO மஷினோஸ்ட்ரோயேனியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸால் (BrahMos Aerospace) உருவாக்கப்பட்டது.


3. பிரம்மோஸ் (BrahMos) என்பது திட உந்துசக்தி பூஸ்டர் இயந்திரத்துடன் கூடிய இரண்டு-நிலை ஏவுகணையாகும். அதன் முதல் நிலை ஏவுகணையை ஒலியின் வேகத்தை விட அதிக சூப்பர்சோனிக் வேகத்திற்கு செலுத்துகிறது. பின்பு, முதல் நிலை ஏவுகணையிலிருந்து பிரிக்கிறது. இரண்டாவது நிலையானது, ஒரு திரவ ராம்ஜெட் (liquid ramjet) பகுதி ஆகும். இது ஏவுகணையை அதன் பயண கட்டத்தில் ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் செலுத்துகிறது. இந்த இயந்திரம் காற்றில் கலந்த திரவ எரிபொருளை எரித்து உந்துதலை உருவாக்குகிறது. இது திரவ ராம்ஜெட் திட அல்லது வாயு எரிபொருளுக்குப் பதிலாக திரவ எரிபொருளை பயன்படுத்தும் ஒரு வகை ராம்ஜெட் இயந்திரமாகும். இது காற்றை உள்ளே இழுத்து திரவ எரிபொருளை எரித்து ஏவுகணையை வேகமாக நகர்த்த வைக்கிறது.


4. இந்த ஏவுகணை மிகக் குறைந்த ரேடார் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதனால் இது கண்டறிவதை கடினமாக்குகிறது. மேலும், இது பல்வேறு பாதைகளில் பறக்க முடியும். அதன் வலைத்தளத்தின்படி, இது 15 கிலோமீட்டர் உயரம் வரை பயணிக்க முடியும் மற்றும் இலக்கைத் தாக்கும் போது 10 மீட்டர் வரை குறைவாக பறக்க முடியும். இந்த ஏவுகணை 200-300 கிலோ எடையுள்ள பொதுவான போர்முனையைக் (conventional warhead) கொண்டுள்ளது.


stand-off range weapons : ஸ்டாண்ட்-ஆஃப் ரேஞ்ச் ஆயுதங்கள் என்றால், பாதுகாப்பான தூரத்தில் இருந்து இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள். 


5. பிரமோஸ் போன்ற போர்முனை ஏவுகணைகள், "ஸ்டாண்ட்-ஆஃப் ரேஞ்ச் ஆயுதங்கள்" (stand-off range weapons) என்று அழைக்கப்படும் வகையின் கீழ் வருகின்றன. இந்த ஆயுதங்கள், எதிரிகளின் தாக்குதலைத் தவிர்க்க பாதுகாப்பான தூரத்திலிருந்து ஏவப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான முக்கிய இராணுவங்கள் இந்த ஆயுதங்களை தங்கள் ஆயுதக் கிடங்கில் கொண்டுள்ளன.


6. தற்போது சோதிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளின் புதிய வரம்பில், 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டுள்ளது. இது 290 கிலோமீட்டர் என்ற முந்தைய வரம்பை விட அதிகமாகும்.  மேலும், இது 800 கிலோமீட்டர் வரை இன்னும் நீண்ட தூரம் கொண்ட பதிப்புகளை உருவாக்கவும் திட்டங்கள் உள்ளன. இந்த எதிர்கால பதிப்புகள் ஹைப்பர்சோனிக் வேகத்திலும் பயணிக்கக்கூடும். ஹைப்பர்சோனிக் வேகம் என்பது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகம்  கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


7. சப்சோனிக் கப்பல்  ஏவுகணைகளுடன் (subsonic cruise missiles) ஒப்பிடும்போது, பிரம்மோஸ் மூன்று மடங்கு வேகத்தையும், 2.5 மடங்கு பறக்கும் தூரத்தையும், அதிக தூரத்திலிருந்து இலக்குகளைக் கண்டறியக்கூடிய திறனையும் கொண்டுள்ளது. இந்த ஏவுகணை அதிக துல்லியத்தையும், ஒன்பது மடங்கு இயக்க ஆற்றலையும் அளிக்கிறது.


லக்னோவில் பிரம்மோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதி மையம்


             

மே 11 அன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் பிரம்மோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதி மையத்தை (BrahMos Integration and Testing Facility Centre) மெய்நிகர் விழா மூலம் திறந்து வைத்தார். இந்த ஏவுகணை இந்தியா மற்றும் ரஷ்யாவின் சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது என்று அவர் கூறினார். உலகின் வேகமான சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைகளில் ஒன்று என்று அவர் ஏவுகணையைப் பாராட்டினார். இந்த ஏவுகணை இந்திய ஆயுதப் படைகளின் வலிமையைக் குறிக்கிறது என்றும் அவர் கூறினார். இது எதிரிகளுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையையும் அனுப்புகிறது. இறுதியாக, இது  நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில்  ஒரு வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.




பிரம்மோஸின் வகைகள்


சந்திப்பூர் சோதனைப் பகுதியில் முதல் வெற்றிகரமான ஏவுதலுக்குப் பிறகு, பிரம்மோஸ் ஏவுகணை 2005இல் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இது 2007இல் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர், 2017இல், ஏவுகணை IAF இன் சுகோய்-30 MKI போர் விமானத்திலிருந்து ஏவப்பட்டபோது அதன் முதல் வெற்றிகரமான விமானத்திலும் சேர்க்கப்பட்டது. நிலம், வான், கடல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையின் பரந்த வகைப்பாடுகளாக இருந்தாலும், நீட்டிக்கப்பட்ட வரம்புகள் மற்றும் வளர்ந்து வரும் உணர்திறன் திறன்களைக் கொண்ட பல பதிப்புகள் கடந்த 24 ஆண்டுகளில் சோதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.


1. கப்பல் அடிப்படையிலான மாறுபாடு : 


கடற்படை பதிப்பை செங்குத்தாகவோ அல்லது சாய்வாகவோ, நகரும் அல்லது அசையாமல் நிற்கும் கப்பல்களிலிருந்து இதை ஏவலாம். இந்தக் கப்பல்களிலிருந்து, பிரம்மோஸை ஒற்றை ஏவுகணையாகவோ அல்லது எட்டு ஏவுகணைகள் கொண்ட குழுவாகவோ ஏவலாம். ஒரு குழுவாக ஏவப்படும்போது, ஏவுகணைகள் ஒவ்வொன்றிற்கும் இடையில் இரண்டரை வினாடிகள் இடைவெளியில் ஏவப்படுகின்றன. இந்த தாக்குதல்கள் நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட போர்க்கப்பல்களின் குழுவைத் தாக்கி அழிக்க முடியும். பிரம்மோஸ் அத்தகைய இலக்குகளுக்கு ஒரு 'முதன்மை தாக்குதல் ஆயுதம்' (prime strike weapon) மற்றும் நீண்ட தூரங்களில் கடற்படை மேற்பரப்பு இலக்குகளை ஈடுபடுத்தும் திறனை கணிசமாக அதிகரிக்கிறது.



இந்திய கடற்படை 2005-ம் ஆண்டு முதல் அதன் முன்னணி போர்க்கப்பல்களில் பிரம்மோஸைப் பயன்படுத்தத் தொடங்கியது. மேலும், இந்த ஏவுகணை கப்பலின் ரேடாரின் வரம்பைத் தாண்டி கடலில் உள்ள இலக்குகளைத் தாக்கும். இந்திய கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை தாக்குதல் ஐஎன்எஸ் ராஜ்புத் (INS Rajput) பிரம்மோஸை சுமந்து சென்ற முதல் கப்பலாகும். அதன் பின்னர் மற்ற போர்க்கப்பல்களிலும் இந்த ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது.


2. நில அடிப்படையிலான அமைப்பு : 


நில அடிப்படையிலான பிரம்மோஸ்  ஏவுகனையில் நான்கு முதல் ஆறு ஏவுகணைகள் தனித்தனியாக இயங்குகின்றன. ஒவ்வொரு ஏவுகணையும் மூன்று ஏவுகணைகளை வைத்திருக்கும். இந்த மூன்று ஏவுகணைகளையும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஏவ முடியும். அவை மூன்று வெவ்வேறு இடங்களையும் குறிவைத்து வெவ்வேறு வழிகளில் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்ய முடியும். பல பிரம்மோஸ் தரை அமைப்புகள் இந்தியாவின் நில எல்லைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


தரைவழி  தாக்குதலில் பிரம்மோஸ் ஏவுகனையானது  ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு வேகத்தில் பயணிக்க முடியும் (மாக் 2.8). இதை மேம்படுத்தப்பட்ட பிறகு, இது 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும். ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக பறக்கக்கூடிய மற்றும் 1,000 கிலோமீட்டருக்கு மேல் தூரத்தை அடையக்கூடிய மேம்பட்ட பதிப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தரை ஏவுகணைகளில் அணு, உயிரியல் மற்றும் வேதியியல் அச்சுறுத்தல்களிலிருந்து பணியாளர்களைப் பாதுகாக்கும் குளிரூட்டப்பட்ட கேபின்கள் உள்ளன. இந்திய ராணுவம் 2007ஆம் ஆண்டு தரைவழித் தாக்குதல் பிரம்மோஸைப் பயன்படுத்தத் தொடங்கியது.


3. வான்வழி ஏவப்பட்ட பதிப்பு :


 பிரம்மோஸ் வான்வழி ஏவப்படும் கப்பல் ஏவுகணை (Air Launched Cruise Missile (ALCM)) இந்தியாவின் முக்கிய போர் விமானமான சுகோய்-30 MKI சுமந்து செல்லக்கூடிய மிக கனமான ஏவுகணை ஆகும். நவம்பர் 2017இல், இந்த போர் விமானத்திலிருந்து ஏவப்பட்டபோது பிரம்மோஸ் முதன்முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதற்கான இலக்கு வங்காள விரிகுடாவில் கடலில் இருந்தது. அதன் பின்னர், ஏவுகணை பல முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில், பிரம்மோஸ் ALCM நிலத்திலும் கடலிலும் உள்ள இலக்குகளைத் தாக்க முடியும் என்று சோதனைகள் வெளிப்படுத்தின. இது நீண்ட தூரத்திலிருந்து, பகல் மற்றும் இரவு நேரங்களில் மற்றும் அனைத்து வகையான வானிலையிலும் நன்றாக வேலை செய்தது.

4. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பதிப்பு : 


இந்த ஏவுகணை பதிப்பை நீர் மேற்பரப்பிற்கு அடியில் சுமார் 50 மீட்டர் உயரத்தில் இருந்து ஏவ முடியும். ஏவுகணை ஒரு கேனிஸ்டரில் (canister) சேமிக்கப்பட்டு, நீர்மூழ்கிக் கப்பலின் அழுத்த மேலோட்டத்திற்குள் இருந்து நேராக மேலே ஏவப்படுகிறது. நீருக்கடியில் சரியாக வேலை செய்ய மற்றும் தண்ணீரிலிருந்து வெளியே வந்த பிறகு இது வெவ்வேறு அமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்தப் பதிப்பு முதன்முதலில் மார்ச் 2013இல் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகிலுள்ள நீரில் மூழ்கிய தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


5. எதிர்கால பிரம்மோஸ்-NG : 


பிரம்மோஸ்-NG (அடுத்த தலைமுறை) எனப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் எதிர்கால பதிப்பிற்கான ஆராய்சிகள் நடந்து வருகிறது. இந்த புதிய பதிப்பு முக்கியமாக வான் மற்றும் கடலிலும் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய பதிப்பை விட சிறியதாகவும் இலகுவாகவும் இருக்கும். இது அடுத்த தலைமுறையின் மேம்பட்டதாக கண்டறிவதை கடினமாக்குவதை இந்த ஏவுகணை அம்சங்களை உள்ளடக்கும். இந்த ஏவுகணை மின்னணு எதிர்-எதிர் நடவடிக்கைகளுக்கு (electronic counter-countermeasures (ECCM)) எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நீருக்கடியில் போருக்கு மிகவும் பல்துறை திறன் கொண்டதாக இருக்கும். கூடுதலாக, இது ஒரு டார்பிடோ குழாயிலிருந்து (torpedo tube) ஏவ முடியும்.


பிரலே அரை-பாலிஸ்டிக் ஏவுகணை (Pralay quasi-ballistic missile)


1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் APJ அப்துல் கலாம் தீவில் இருந்து தொடர்ச்சியாக இரண்டு அரை-பாலிஸ்டிக் ஏவுகணை பிரலேயை (Pralay quasi-ballistic missile) வெற்றிகரமாக சோதனை செய்தது. DRDO-ன் புனேவை தளமாகக் கொண்ட மூன்று வசதிகள் இராஜதந்திர ரீதியில் ஆயுத அமைப்பின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளன.


2. பிரலே என்பது முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஏவுகணை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது திட உந்துசக்தி (solid propellant) மற்றும் மேம்பட்ட வழிகாட்டுதல் (advanced guidance) மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளைப் (navigation systems) பயன்படுத்துகிறது. இது ஏவுகணையை மிகவும் துல்லியமாக இருக்க உதவுகிறது. பல்வேறு இலக்குகளைத் தாக்க பல்வேறு வகையான போர்முனைகளை இந்த ஏவுகணை சுமந்து செல்ல முடியும்.


3. "பரவலான அழிவு" (widespread destruction) என்று பொருள்படும் பிரலேயின் முதல் சோதனை டிசம்பர் 2021இல் நடந்தது. இந்த ஏவுகணை ஒரு வழக்கமான போர்முனையை சுமந்து செல்லும். மேலும், இந்திய இராணுவத்தின் பீரங்கிப்படைகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.


4. இந்த அமைப்பு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட DRDO ஆராய்ச்சி மையம் (DRDO facility) இமாரத், புனேவை தளமாகக் கொண்ட மூன்று நிறுவனங்களான ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Armament Research and Development Establishment (ARDE)), உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் (High Energy Materials Research Laboratory (HEMRL)) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பொறியாளர்கள் (Research & Development Establishment, Engineers (R&DE)) உள்ளிட்ட பிற வசதிகளுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.


01. பாலிஸ்டிக் ஏவுகணைகள் என்றால் என்ன?


பாலிஸ்டிக் ஏவுகணைகள் என்பது ஏவப்படும்போது எரியூட்டப்படுகின்றன. அவை பறக்கும்போது தொடக்கத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதன் பிறகு, அவை ஈர்ப்பு விசையால் இயக்கப்படும் ஒரு வளைந்த பாதையைப் பின்பற்றுகின்றன.


02. அரை-பாலிஸ்டிக் ஏவுகணைகள் என்றால் என்ன?


அரை-பாலிஸ்டிக் ஏவுகணைகள் (quasi-ballistic missiles) என்பது குறைந்த பாதையைக் கொண்ட மற்றும் பாலிஸ்டிக் பாதையைப் பின்பற்றும் ஆனால் தேவைப்பட்டால் பறக்கும்போது அதன் போக்கை மாற்றவும், தாக்குதலைச் செய்யவும் கூடிய ஏவுகணைகளின் வகையாகும்.


03. பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் ஏவுகணைகளுக்கு என்ன வித்தியாசம்?


பாலிஸ்டிக் ஏவுகணைகள் எரிபொருள் இயக்கத்தைப் பயன்படுத்தி எரியூட்டப்படுகின்றன அதன் இலக்கை நோக்கி அனுப்புகின்றன. அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் ஒரு சக்தி வாய்ந்த நிலையைக் கொண்டுள்ளன. இதற்குப் பிறகு, இதன் இலக்கை அடைய அவை இயற்பியலின் இயற்கை விதிகளைப் பின்பற்றுகின்றன. இந்த ஏவுகணைகள் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பாலிஸ்டிக் ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும். பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சில எடுத்துக்காட்டுகள் அக்னி I, அக்னி II, பிருத்வி I, பிருத்வி II மற்றும் தனுஷ் போன்ற ஏவுகணைகளாகும்.


கப்பல் ஏவுகணைகள் என்பது ஜெட் என்ஜின்களால் இயக்கப்படும் ஆளில்லா வாகனங்கள் ஆகும். அவை தரை, வான் அல்லது கடல் தளங்களில் இருந்து ஏவப்படலாம். கப்பல் ஏவுகணைகளின் எடுத்துக்காட்டுகளில் பிரம்மோஸ், டோமாஹாக், காலிபர், AGM-86 ALCM மற்றும் JASSM ஆகியவை அடங்கும்.


கப்பல் ஏவுகணைகள் தரையில் இருந்து குறைந்த தூரத்தில் பறக்கும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஒரு பரவளைய (curved) பாதையைப் பின்பற்றுகின்றன. பாலிஸ்டிக் ஏவுகணைகள் அவற்றின் பாதையை யூகிக்கக்கூடியவை என்பதால் அவற்றைக் கண்காணிப்பது எளிது. ஆனால், கப்பல் ஏவுகணைகள் திசையை மாற்றி வான் பாதுகாப்பு அமைப்புகளை குழப்பக்கூடும் என்பதால் அவற்றைக் கண்டறிவது கடினம்.



Original article:

Share: