இரவீந்திரநாத் தாகூர் எப்போதும் வங்காளதேசத்திற்கு முக்கியமானவராக இருப்பார். -சுப்ரதா முகர்ஜி

 அவரது படைப்புகள் 1952 மொழி இயக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த இயக்கம் இறுதியில் வங்காளதேசத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.


சமீபத்தில், வங்காளதேசத்தின் சிராஜ்கஞ்சில் உள்ள குத்தி பாரி என்ற ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையர் வீடு சேதப்படுத்தப்பட்டது. இந்தச் செயல் இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. முஹம்மது யூனுஸ் தலைமையிலான தற்போதைய இடைக்கால அரசாங்கம் அதைக் கண்டித்து, இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் நடக்கக்கூடாது என்றும் அரசாங்கம் கூறியது. தாகூர் தொடர்ந்து மக்களை ஊக்குவிக்கும் தன்மையின் ஆதாரமாக இருக்கிறார் என்றும், இதுபோன்ற தவறான சம்பவங்கள், வங்காளதேச வரலாற்றில் அவரது முக்கிய பங்கை எந்த வகையிலும் குறைக்காது என்றும் கூறியது.


கடந்த காலத்தில், கிழக்கு பாகிஸ்தானில் தாகூரை விமர்சிக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சி நடந்தது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட வானொலி அவரது பாடல்களை இசைக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவரது படைப்புகள் 1952 மொழி இயக்கத்தில் (Language Movement) குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இறுதியில் வங்காளதேசத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. மொழிவழி தேசியவாதம் (Linguistic nationalism) வகுப்புவாதத்தை (communalism) வென்றது மற்றும் இரு தேசக் கோட்பாட்டின் அடிப்படையையே சவால் செய்தது.


மௌலானா பஷானி, அரசாங்கத்தின் ஆணையை எதிர்ப்பதில் ஒரு வரலாற்று முக்கியத்துவத்தை வகித்தார் மற்றும் வங்காள தேசியவாதத்தின் உறுதியான அடித்தளத்தை உருவாக்குவதில் உதவினார். மேலும், தாகூரின் படைப்புகள் வங்காள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்தன. இஸ்லாமியர்களின் ஒரு சிறிய பிரிவினரால் நடத்தப்பட்ட அவதூறுகளில் ஒன்று, தாகூர் டாக்கா (Dacca) (இப்போது டாக்கா-now Dhaka) பல்கலைக்கழகத்தை நிறுவுவதை எதிர்த்தார், இதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. டக்கா நவாப் குடும்பத்தினரும் (Dacca Nawab family) இதில் எந்த உண்மையும் இல்லை என மறுத்தனர். உண்மையில், தாகூர் 1926-ல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, இ​​ரயில் நிலையத்தில் இருந்து அவர் தங்கியிருந்த இடத்திற்கு மாணவர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். இதேபோல், வங்காளதேசத்தின் தேசிய கீதமான அமர் சோனார் பங்களாவை (Amar Sonar Bangla) மாற்ற விரும்பும் ஒரு சிறிய பிரிவினர் வங்காளதேசத்தின் உயரடுக்கினரிடையே உள்ளனர்.


ஒரு புகழ்பெற்ற வங்காளதேச தாகூர் ஆய்வறிஞர் காஜி அப்துல் மன்னான், மத்தியகால சூஃபி புனிதர்களின் மீது தாகூர் கொண்டிருந்த மரியாதை குறித்து கருத்து தெரிவித்தார். தாகூர் குறுகிய மத எல்லைகளை கடந்தவர்களில் நம்பிக்கை வைத்ததாகவும், இரு சமூகங்களைச் சேர்ந்த மனிதநேயவாதிகள் இடைவெளியை இணைக்க முடியும் என்று நம்பியதாகவும் மன்னான் குறிப்பிட்டார். தாகூரைப் பொறுத்தவரை, தீர்வு அரசியல் மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் இருக்க வேண்டும். மத்தியகாலத்தில் கூட, பல புனிதர்கள் — அவர்களில் பலர் முஸ்லிம்கள் — இந்த இடைவெளியைக் குறைக்க முயற்சித்ததை தாகூர் காட்டினார். காஜி நஜ்ருல் இஸ்லாமின் இலக்கிய திறமைகளை தாகூர் அங்கீகரித்து, இளம் முஸ்லிம்களின் இலக்கிய முயற்சிகளை ஊக்குவித்தார். "அமர் சோனார் பங்களா" பாடல் ஒரு புதிய யுகத்தை உருவாக்கும் நம்பிக்கையை பிரதிபலித்தது.


1890-களில் பத்மா நதிக்கரையில் உள்ள ஷிலைடாஹாவில் உள்ள குத்தி பாரியில் தாகூரின் சிறந்த மற்றும் அதிக படைப்புக்கான காலமாக இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் அவரது மிகச்சிறந்த இலக்கிய எழுத்துக்களில் அவரது மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றான நிர்ஜரேர் ஸ்வப்னா பங்கா அடங்கும். இது விஸ்வபாரதியின் அடிப்படைத் தத்துவத்தை உள்ளடக்கியது. இங்கே, அவர் மற்றொரு கிளாசிக் எழுதியதாவது, துய் பிகா ஜோமி (Dui Bigha Jomi) ஆகும். ஜனவரி 10, 1972 அன்று, ஷேக் முஜிபுர் ரஹ்மான் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ​​அவரது உரையில் தாகூரின் "நான் வெறுமையாக இருக்கிறேன், நான் சுதந்திரமாக இருக்கிறேன், என்னிடம் கொடுக்க எதுவுமில்லை, அன்பு மட்டுமே உள்ளது, அதனால் அதை கொடுக்கிறேன்." என்ற மேற்கோள் இருந்தது. இன்றும் கூட, வங்காளதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தினமும் ஷைலதாஹாவுக்கு வருகிறார்கள்.


இந்தியா வீழ்ச்சியடைந்து வருவதற்கான அறிகுறியாக இந்து-முஸ்லீம் கலவரத்தை தாகூர் பார்த்ததாக மன்னான் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வைக் காண அவர் முயன்றார். உதாரணமாக, 1936-ம் ஆண்டில், இந்து-முஸ்லீம் மோதல் குறித்து அறிஞர்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரிக்க தாகூர் நிஜாம் சொற்பொழிவுகளைத் தொடங்கினார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, காசி அப்துல் வதூத் இந்த தலைப்பில் மூன்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.


தாகூர் குடும்பம் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்தது. 1800களின் பிற்பகுதியில் அவர்கள் மற்ற இந்து வங்காள உயரடுக்கினரிடமிருந்து ஓரளவு தனிமைப்படுத்தப்பட்டனர். அந்தக் குடும்பம் "பிராளி" (Pirali) பிராமணர்கள் என்ற குழுவைச் சேர்ந்தது. இந்தப் பெயர் பீர் மற்றும் அலி ஒரு காலத்தில் தங்கள் மூதாதையர்களுடன் உணவருந்தி அவர்களை மதம் மாற்றியதாக ஒரு நம்பிக்கையிலிருந்து வந்தது. இந்த நம்பிக்கையின் காரணமாக, மரபுவழி பிராமணர்கள் தாகூர்களை சமூக ரீதியாக விலக்கி வைத்தனர். நவாப் வாஜித் அலி ஷா குடும்பத்தில் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்தார். வங்காளதேச எழுத்தாளர் குலாம் முர்ஷித்தின் கூற்றுப்படி, "தாகூர் அளவுக்கு மகத்தான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இரண்டாவது மேதை வங்காளத்திற்கு இல்லை. ஆனால் தாகூர் மேதையால் மட்டுமே இவ்வளவு உயரங்களை எட்டவில்லை. அவர் பிறந்த குடும்பமும் சூழலும் அவரது மேதையைத் தூண்டி அதை வளர ஊக்குவித்தது. இது அவரது இலக்கியப் படைப்பாற்றலுக்கு மட்டுமல்ல, அவரது மற்ற எல்லா மேதைகளுக்கும் உண்மை.


நவீன வங்காள இலக்கியத்தில் பல முக்கிய நபர்களில், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் மற்றும் சரத் சந்திர சட்டோபாத்யாய் ஆகியோர் உள்ளனர். ஆனால் தாகூர் மிகவும் மதச்சார்பற்ற, நவீன மற்றும் உலக கண்ணோட்டரீதியில் (cosmopolitan) தனித்து நிற்கிறார். அவர் ஒரு கிளாட்ஸ்டோனிய தாராளவாதியாகவும் (Gladstonian liberal) இருந்தார். அவர் வங்காள மொழி மற்றும் கலாச்சாரத்தை வலுவாக ஆதரித்தார். அதே நேரத்தில், தேவைப்படும்போது அவற்றை விமர்சிக்கவும் தயங்கவில்லை. பங்கமாதா (Bangamata) என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை ஒன்றில், வங்காளத்தின் பாசமுள்ள, தாய்வழி கலாச்சாரம் அவர்களின் ஆறுதல் மண்டலத்தின் (comfort zone) எல்லைக்கு அப்பால் உலகை ஆராய்வதில் ஆர்வம் இல்லாததற்கு காரணம் என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் எந்த மதம் அல்லது உள்ளூர் தன்மைக்கு அப்பாற்பட்டவை. அவர் வங்காளதேசம், இந்தியா மற்றும் உலகிற்குப் பொருத்தமானவராக இருந்தார்.


எழுத்தாளர் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பித்தார்.



Original article:

Share: