பேரிடர் மீட்பு நிதி அமைப்பின் (disaster response financing system) மிகவும் நிபந்தனைக்குட்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட மாதிரிக்கான சான்றுகள் உள்ளன.
பேரிடர் மீட்புக்கான மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வளங்களை மாற்றுவது வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வைக் காட்டுகிறது. இது மாநிலங்களின்
மதிப்பிடப்பட்ட தேவைகளுக்கும், அவை உண்மையில் பெறுவதற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது. வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு மத்திய அரசு கேரளாவிற்கு நிதியை வழங்கியபோது இந்த ஏற்றத்தாழ்வு மீண்டும் தெளிவாகியது. இந்தப் போக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. இந்தியாவின் நிதி கூட்டாட்சி அமைப்பு ஒத்துழைப்பிலிருந்து விலகி, மேலும் நிபந்தனைக்குட்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட பேரிடர்-ஆபத்து நிதி மாதிரியாக மாறுகிறதா?
ஜூலை 2024-ல் வயநாட்டில் ஏற்பட்ட சோகம், கிட்டத்தட்ட 300 இறப்புகளை ஏற்படுத்தியது மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்தது. இந்த பிரச்சினையில் கடுமையான கவனத்தை ஈர்த்ததாவது, கேரளாவின் ₹2,200 கோடி இழப்புக்கு எதிராக, ஒன்றிய அரசு ₹260 கோடியை மட்டுமே அங்கீகரித்தது. இது வெறும் 11% (₹1,200 கோடி மதிப்பிடப்பட்ட இழப்பு, ஆனால் ₹2,200 கோடி மீட்புக்கான குறிப்பாணையில் மாநிலத்தால் கோரப்படுகிறது). இந்த பொருத்தமின்மை கேரளாவிற்கு மட்டும் உரியது அல்ல. இது கூட்டுறவுக் கூட்டாட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது. இன்றைய பேரிடர்கள் மாநிலங்களுக்கு நிதி அழுத்த சோதனைகளாக செயல்படுகின்றன. மேலும், காலநிலை மாற்றங்கள் தீவிரமடைவதால், இந்தியாவின் பேரிடர்-நிதி அமைப்பு வெளிப்படையான அழுத்தத்தைக் காட்டுகிறது.
ஒரு சரிவு உள்ளது
பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005-ன் (Disaster Management Act) கீழ் நிறுவப்பட்ட இந்தியாவின் பேரிடர்-மீட்பு நிதி அமைப்பு (disaster-response financing system), இரண்டு-அடுக்கு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதமும் மற்றும் பெரும்பாலான மாநிலங்களுக்கு பகிர்வு விகிதம் 75:25 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கூட்டாக நிதியளிக்கப்படும் மாநில பேரிடர்-மீட்பு நிதியின் (State Disaster Response Fund (SDRF)) மூலம் தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் இழப்பீடு ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணத்தை வழங்குகிறது. மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் தேசிய பேரிடர்-மீட்பு நிதி (National Disaster Response Fund (NDRF)), ஒரு பேரிடர்காலம் கடுமையானதாக வகைப்படுத்தப்படும்போது அது மாநிலங்களை ஆதரிக்கிறது. கொள்கையளவில், இந்த அமைப்பு சமநிலையில்
தெரிகிறது. ஆனால் நடைமுறையில், அது மத்தியக் கட்டுப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளது.
முதலாவதாக, நிவாரண விதிமுறைகள் காலாவதியானவை (பழமையானவை) மற்றும் நெகிழ்வானவை அல்ல. இது இழப்பீட்டுக்கான உச்சவரம்புகள், இழந்த ஒவ்வொரு உயிருக்கும் ₹4 லட்சம் மற்றும் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு ₹1.2 லட்சம் ஒரு பத்தாண்டுகளில் அரிதாகவே மாறியுள்ளன. இந்தத் தொகைகள் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் மறுகட்டமைப்பிற்கு அல்ல. இந்த இடைவெளி ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் மாநிலங்களை நிதி ரீதியாக பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.
இரண்டாவதாக, பேரிடர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன என்பதில் குழப்பம் உள்ளது. "கடுமையான" பேரிடர் என்றால் என்ன என்பதை சட்டம் தெளிவாக வரையறுக்கவில்லை. இது தேசிய பேரிடர்-மீட்பு நிதி (NDRF) உதவிக்கு யார் தகுதியானவர் என்பதை தீர்மானிக்கும்போது பரந்துபட்ட விருப்பத்திற்கு இடமளிக்கிறது.
மூன்றாவதாக, உதவி வெளியீடுகள் நடைமுறை சார்ந்தவை, தானியங்கியாக (automatic) செயல்படுபவை அல்ல. பொருள்சார் குறிகாட்டிகள் (objective indicators) ஆதரவைத் தூண்டும் அமைப்புகளைப் போலன்றி, இந்தியாவின் செயல்முறை தொடர்ச்சியான அனுமதிகள், மாநில குறிப்பாணை, மத்திய மதிப்பீடு மற்றும் அவசரநிலை மிகவும் முக்கியமானதாக இருக்கும்போது தாமதங்களை ஏற்படுத்தும் உயர்மட்ட ஒப்புதல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.
இறுதியாக, நிதி ஆணையத்தின் ஒதுக்கீடு அளவுகோல்கள் பலவீனமாக உள்ளன. இது வெளிப்பாட்டை அளவிட மக்கள்தொகை மற்றும் மொத்த புவியியல் பகுதியைப் பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறை உண்மையான ஆபத்தான நிலைகளைப் புறக்கணிக்கிறது. இது பேரிடர் பாதிப்புக்கான ஒரு மறைமுகமாக வறுமையையும் பயன்படுத்துகிறது. இது ஒரு வலுவான பேரிடர்-ஆபத்து குறியீட்டைப் பயன்படுத்துவதில்லை. இது வெள்ளம், நிலச்சரிவுகள் அல்லது சூறாவளிகளுக்கு மக்களின் உண்மையான அபாயங்களுடன் இந்த நிதி ஒதுக்கீடுகள் பொருந்தவில்லை.
வயநாடு நிகழ்வு வலுவான நிறுவன குறைபாடுகளை அம்பலப்படுத்தியது. நிதி உதவியைக் குறைப்பதை நியாயப்படுத்த, கேரளாவின் செலவிடப்படாத மாநில பேரிடர்-மீட்பு நிதி (SDRF) இருப்பு ₹780 கோடியையும், மூலதன முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முந்தைய ₹529 கோடி வட்டி இல்லாத கடனையும் மத்திய அரசு மேற்கோள் காட்டியது. இருப்பினும், இந்த நிலுவையில் உள்ள நிதி பெரும்பாலும் செயலற்ற நிதியை அல்ல, உறுதியான பணிகளை பிரதிபலிக்கின்றன. மாநில பேரிடர்-மீட்பு நிதி (SDRF) தவணைகள் நிதியாண்டின் பிற்பகுதியில் வருகின்றன. அதே நேரத்தில், பேரிடர்கள் பருவகாலமாக இருப்பதால் தற்காலிக நிலுவைகள் தவிர்க்க முடியாதவை. மேலும், மாநில பேரிடர்-மீட்பு நிதி (SDRF) விதிகள் செலவினங்களை மறுகட்டமைப்பு அல்லது வாழ்வாதார மறுசீரமைப்பிற்கு அல்ல, உடனடி நிவாரணத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. இதன் காரணமாக, மாநிலங்கள் பணப்புழக்கத்திற்காக சில இருப்புக்களை வைத்திருக்க வேண்டும்.
காலநிலை பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன்பு இந்தியா நடவடிக்கை எடுப்பதன் மூலம் பில்லியன் கணக்கான பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று உலகளாவிய ஆய்வு கூறுகிறது.
மேலும், வயநாடு நிலச்சரிவுகளை கடுமையான பேரிடராக வகைப்படுத்துவதை ஒன்றிய அரசு தாமதப்படுத்தியது. இதனால், கேரளாவிற்கு அதிக தேசிய பேரிடர் மீட்பு நிதி (NDRF) ஆதரவு கிடைப்பது கட்டுப்படுத்தப்பட்டது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் இதே போன்ற பேரிடர்களுக்கு பெரிய தொகுப்புகளைப் பெற்றன. 2018-ல் கஜா புயலுக்குப் பிறகு தமிழ்நாடு இதே போன்ற பொருத்தமின்மைகளை எதிர்கொண்டது. 2019 வெள்ளத்தின்போது கர்நாடகாவும் இதே பிரச்சனையைக் கண்டது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே மாதிரியைக் காட்டுகின்றன. மெதுவான ஒப்புதல்கள் மற்றும் இழப்புகளுக்கும் உதவிக்கும் இடையிலான இடைவெளிகள் அதிகரிப்பது கூட்டுறவு கூட்டாட்சி, அதிகாரத்துவ பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்த ஒரு அமைப்பை வெளிப்படுத்துகின்றன.
உலகளாவிய நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்வது
பல நாடுகள் இப்போது தரவு சார்ந்த மற்றும் வெளிப்படையான பேரிடர் நிதியுதவியைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்காவின் கூட்டாட்சி அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (Federal Emergency Management Agency (FEMA)) தனிநபர் சேத வரம்புகளைப் பயன்படுத்துகிறது. மெக்சிகோவின் முன்னாள் இயற்கை பேரிடர்களுக்கான நிதி (FONDEN) மழை அல்லது காற்று வரம்புகளை மீறும் போது தானாகவே நிதியை வெளியிட்டது. பிலிப்பைன்ஸ் மழை மற்றும் இறப்புக்கான குறியீடுகள் மூலம் விரைவான பேரிடர் மீட்பு நிதிகளை தீவிரப்படுத்துகிறது. அதேநேரத்தில், ஆப்பிரிக்க மற்றும் கரீபியன் காப்பீட்டு வசதிகள் விரைவான பணம் பரிமற்றங்களுக்கு செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்துகின்றன. ஆஸ்திரேலியா கூட்டாட்சி உதவியை வருவாயுடன் ஒப்பிடும்போது ஒரு மாநிலத்தின் நிவாரணச் செலவுடன் இணைக்கிறது. இந்த அமைப்புகள் தெளிவான விதிகளுடன் விருப்புரிமையை மாற்றுகின்றன. நிவாரணம் விரைவாகவும் பொறுப்புணர்வுடனும் இருக்க முடியும் என்பதை அவை காட்டுகின்றன. தாமதம், விருப்புரிமை மற்றும் கூட்டாட்சி பரிமாற்றங்களில் நம்பிக்கையை மீட்டெடுக்க மழையின் தீவிரம், மில்லியனுக்கு இறப்புகள் அல்லது இழப்பு-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதம் போன்ற ஒத்த புறநிலைத் தூண்டுதல்களை இந்தியா ஏற்றுக்கொள்ளலாம்.
கூட்டாட்சி உணர்வை மீண்டும் கட்டியெழுப்புதல்
16-வது நிதி ஆணையம் இந்த கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்ய ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளது. தற்போதைய செலவுகளுக்கு ஏற்ப நிவாரண விதிகளை இது புதுப்பிக்க முடியும். இது விரிவான பாதிப்பு குறியீட்டைப் பயன்படுத்தி ஒதுக்கீடுக்கான அளவுகோல்களை திருத்தலாம் மற்றும் பேரிடர் உதவி கடன் அடிப்படையிலானதாக இல்லாமல் மானிய அடிப்படையிலானதாக இருப்பதை உறுதி செய்யலாம். மாநிலங்கள் தங்கள் பேரிடர் நிதிகளின்மீது செயல்பாட்டு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றிய அரசு செலவினங்களுக்குப் பிறகு மட்டுமே கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும், அவற்றை முன்கூட்டியே அங்கீகரிக்கக்கூடாது. இந்த சீர்திருத்தம் மத்திய மேற்பார்வையை பலவீனப்படுத்துவது பற்றியது அல்ல, ஆனால் கூட்டாட்சி செயல்பாட்டை வலுப்படுத்துவது பற்றியது. வேகமான, விதிகள் அடிப்படையிலான பதில்களை செயல்படுத்தும் ஒரு அமைப்பு அரசாங்கத்தின் இரு அடுக்குகளுக்கும், மிக முக்கியமாக, நடைமுறை தாமதங்களில் சிக்கித் தவிக்கும் ஒரு அமைப்பைவிட குடிமக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும்.
நெருக்கடிகளின்போது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசரத் தேவை
பேரிடர்கள் உடல்ரீதியான பாதிப்புகளை மட்டுமல்ல, நிறுவன ரீதியான பாதிப்புகளையும் வெளிப்படுத்துகின்றன. நிவாரண முயற்சிகள் பெரும்பாலும் ஒற்றுமை செயல்களுக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகளாக மாறும். இது நிதி கூட்டாட்சி அமைப்பை அழுத்தத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் பேரிடர் நிதி அமைப்பு, நடைமுறை தொண்டு நிறுவனத்திலிருந்து (procedural charity) விதிகள் சார்ந்த கூட்டாண்மையாக உருவாக வேண்டும்.
எதிர்காலத்தில் வரும் வெள்ளம் அல்லது நிலச்சரிவு, அரசியலமைப்பு ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கும் கூட்டுறவு, சமத்துவம் மற்றும் சரியான நேரத்தில் பதிலளிப்பதற்காக மாநிலங்கள் வாதிட வேண்டியதில்லை. கூட்டாட்சி நெருக்கடியில் முக்கியமானதாக இருக்கும்போது, அது தோல்வியடைகிறது. வயநாடு சோகம் ஒரு எச்சரிக்கையாக செயல்படுகிறது. அடுத்த புயல் வருவதற்கு முன்பு இந்தியா பேரிடர் நிவாரணத்தின் நிதி அடித்தளத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
அஸ்வதி ரேச்சல் வருகீஸ், திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி மற்றும் வரிவிதிப்பு நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர்.