2025-ஆம் ஆண்டு உலகளாவிய வாழ்வாதார குறியீடு, உலகம் முழுவதும் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது. இந்த குறியீடு எதை அளவிடுகிறது, அதன் முக்கிய கண்டுபிடிப்புகள் என்ன?
தற்போதைய செய்தி:
நகரமயமாக்கல் (Urbanisation) மற்றும் நகர்ப்புற இடம்பெயர்வு (urban migration) சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஏனெனில், மக்கள் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைத் தேடுகின்றனர். நிலையான, உள்ளடக்கிய மற்றும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு அத்தியாவசிய சேவைகள், வசதிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் இடங்கள் போன்ற காரணிகளால் வாழக்கூடிய நகரங்கள் என்ற கருத்தாக்கத்திற்கு வழிவகுத்தது. இந்த சூழலில், உலகளாவிய வாழ்வாதாரக் குறியீடு (Global Liveability Index 2025) மற்றும் அதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit (EIU)) வெளியிட்ட உலகளாவிய வாழ்வாதார 2025-ஆம் ஆண்டின் அறிக்கையின் படி, உலகெங்கிலும் எந்த இடங்கள் சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகளை வழங்குகின்றன என்பதை மதிப்பிடுகிறது.
2. முறைமை மற்றும் குறிகாட்டிகள்: பொருளாதார புலனாய்வு பிரிவின் 2025-ஆம் ஆண்டின் உலகளாவிய வாழ்வாதார குறியீடு ஆனது 173 நகரங்களை உலகளவில் இந்த ஐந்து பிரிவுகளில் 30 குறிகாட்டிகளின் அடிப்படையில் மதிப்பிட்டது. இந்த நகரங்களில் வாழ்வது எவ்வளவு வசதியானது என்பதை வெளிப்படுத்த இந்த கணக்கெடுப்பை நடத்தியது.
நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி, மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை முக்கிய குறிக்கட்டிகளாகும்.
3. ஒவ்வொரு குறிகாட்டியும் ஏற்றுக்கொள்ளத்தக்கது, பொறுத்துக்கொள்ளக்கூடியது, அசௌகரியமானது, விரும்பத்தகாதது அல்லது சகிக்க முடியாதது என மதிப்பிடப்படுகிறது. பின்னர், இந்த மதிப்பெண்கள் 1 முதல் 100 வரை இறுதி மதிப்பீட்டை வழங்க சரிசெய்யப்படுகின்றன. ஒரு நகரத்தின் வாழ்வாதார மதிப்பீடு ஒட்டுமொத்த மதிப்பெண்ணாகவும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு மதிப்பெண்ணாகவும் வழங்கப்படுகிறது. நகரங்கள் அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பெண்ணின் அடிப்படையில் 173 இடங்களிலிருந்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
2025-ஆம் ஆண்டின் உலகளாவிய வாழ்வாதார குறியீட்டின் சிறப்பம்சங்கள்
1. இந்த ஆண்டு குறியீட்டில் உள்ள 173 நகரங்களின் உலகளாவிய சராசரி வாழ்க்கைத் தகுதி மதிப்பெண் கடந்த ஆண்டைப் போலவே இருந்தது, 100-இல் 76.1 ஆக இருந்தது.
2. 2025-ஆம் ஆண்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் ஒட்டுமொத்த முன்னேற்றங்களைக் கண்டன; இருப்பினும், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மை, உள்நாட்டு அமைதியின்மை மற்றும் உலகளாவிய வீட்டுவசதி நெருக்கடிக்கு மத்தியில் உலகளாவிய சராசரி நிலைத்தன்மை மதிப்பெண்கள் 0.2 புள்ளிகள் குறைந்தன.
3. கோபன்ஹேகன் (Copenhagen) 2025-ல் உலகின் மிக வாழத்தக்க நகரமாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நிலைத்தன்மை, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளில் சரியான மதிப்பெண்களை அடைவதன் மூலம் வியன்னாவின் (Vienna) மூன்று ஆண்டு ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. ஆஸ்திரிய நகரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக அதன் நிலைத்தன்மை மதிப்பெண்ணில் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. ஆனால், அது சுகாதாரப் பராமரிப்பில் டென்மார்க் தலைநகரை விடமுன்னணியில் உள்ளது.
4. மேற்கு ஐரோப்பிய நகரங்கள் மீண்டும் 2025-இல் உலகளாவிய வாழ்வாதாரத் தகுதி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தின. அதைத் தொடர்ந்து ஆசிய பசிபிக் பிராந்தியம் நெருக்கமாக இருந்தது மற்றும் கனேடிய நகரமான வான்கூவரும் வட அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் பத்து இடங்களைப் பிடித்தன.
5. இதற்கு மாறாக, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நகரங்கள் குறைந்த வாழத்தக்க நகரங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டன; இருப்பினும், மிகவும் நேர்மறையான குறிப்பில், சராசரியாக சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளில் சிறிய முன்னேற்றங்களுடன் இருந்தன.
6. மறுமுனையில், மோதல் மண்டலங்களில் உள்ள நகரங்கள் அல்லது பலவீனமான உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவைகளுடன் போராடும் நகரங்கள் கீழே தரவரிசைப்படுத்தப்பட்டன.
7. 2025-ஆம் ஆண்டில் வாழத் தகுதியற்ற நகரங்களில், டமாஸ்கஸ் உலகின் வாழத் தகுதியற்ற நகரமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. வெறும் 30.7 புள்ளிகள் மட்டுமே பெற்றது. திரிபோலி, டாக்கா மற்றும் கராச்சி ஆகியவையும் கடைசி இடத்திலேயே இருந்தன.
8. அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் ஆயுத மோதல் அச்சுறுத்தல் காரணமாக தெஹ்ரான், தைவான் மற்றும் இந்தியா போன்ற இடங்களிலும் நிலைத்தன்மை மதிப்பெண்கள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிவுறு நகரங்கள்
1. பொலிவுறு நகரங்கள் திட்டம் ஜூன் 25, 2015 அன்று 100 பொலிவுறு நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஜனவரி 2016 முதல் ஜூன் 2018 வரை நடைபெற்ற போட்டிச் சுற்றுகளில் இந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும், அவை அந்தந்த தேர்விலிருந்து ஐந்து ஆண்டுகள், அதாவது 2021 முதல் 2023 வரை, திட்டங்களை முடிக்க அவகாசம் அளித்தன.
2. அதன் ராஜதந்திர கூறுகளில் 'பகுதி அடிப்படையிலான மேம்பாடும்' (area-based development) அடங்கும். இதில் நகர மேம்பாடு (மறுசீரமைப்பு), நகர புதுப்பித்தல் (மறுவளர்ச்சி) மற்றும் நகர விரிவாக்கம் (பசுமைப் புல மேம்பாடு), மேலும் நகரத்தின் பெரிய பகுதிகளை உள்ளடக்கிய 'ஸ்மார்ட் தீர்வுகள்' பயன்படுத்தப்படும் ஒரு நகரம் முழுமைக்குமான முன்முயற்சி (pan-city initiative) ஆகியவை அடங்கும்.
3. 2021-ஆம் ஆண்டில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 100 நகரங்களுக்கும் ஜூன் 2023 வரை காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்தது. மேலும், காலக்கெடு ஜூன் 30, 2024 ஆகவும் பின்னர் மார்ச் 31, 2025 வரையும் நீட்டிக்கப்பட்டது.