காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப வெப்பமடைதல் : பூமி வெப்பமடைகிறதா? -அலிந்த் சவுகான்

 காலநிலை மாற்றம், அதன் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் அதன் தாக்கம் பற்றிய சில அடிப்படைக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறோம். முதல் தவணையில், பூமி வெப்பமடைகிறதா? என்ற கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கிறோம்.    

 

2023 கோடை காலத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத அளவு வெப்பம் இருந்தது. செயற்கைக்கோள் தரவுகளின் (satellite data) அடிப்படையில் அண்டார்டிகாவில் கடல் பனியின் அளவு 45 ஆண்டுகளில் மிகக் குறைவு. ஆர்க்டிக்கில் உள்ள கடல் பனி மிகக் குறைந்த அளவை எட்டியது. மக்கள் வசிக்கும் அனைத்து கண்டங்களும் கடுமையான வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளன. இந்த நிகழ்வுகள் உணவுப் பாதுகாப்பின்மை, மக்கள்தொகை இடப்பெயர்வு மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான தாக்கங்களை அதிகப்படுத்தியது.


காலநிலை மாற்றம் உண்மையானது என்பதை விஞ்ஞானிகள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்புக்கொண்டாலும், இந்த விஷயத்தைச் சுற்றி இன்னும் பல கட்டுக்கதைகள் மற்றும் நிறைய குழப்பங்கள் உள்ளன. இந்த விளக்கத் தொடரில், காலநிலை மாற்றம், அதன் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் அதன் தாக்கம் பற்றிய சில அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முயற்சிப்போம். முதல் தவணையில், ‘பூமி வெப்பமடைந்து வருகிறதா?’ என்ற கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கிறோம்.


பூமி வெப்பமடைகிறது என்பதை எப்படி அறிவது?


1880 களின் பிற்பகுதியில் வெப்பநிலை தரவுகளை ஆராய்வது ஒரு வழி. தற்போது, விஞ்ஞானிகள் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி மேற்பரப்பின் வெப்பநிலையைக் கண்காணிக்கவும், ஒன்றிணைக்கவும், பூமி வெப்பமடைவதை குறைக்கவும் பயன்படுகிறது. 1880ல் இருந்து சராசரி புவி வெப்பம் குறைந்தது 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.


 இந்த வரைபடம் ஆண்டுதோறும் மேற்பரப்பு வெப்பநிலையை 1880 முதல் 2022 வரையிலான 20 ஆம் நூற்றாண்டின் சராசரியுடன் ஒப்பிடுகிறது. நீலப் பட்டைகள் குளிர்ந்த ஆண்டைக் குறிக்கின்றன, மேலும் சிவப்பு பட்டைகள் வெப்பமான ஆண்டுகளைக் குறிக்கின்றன. சுற்றுச்சூழல் தகவலுக்கான தேசிய மையங்களிலிருந்து தரவு வருகிறது மற்றும் NOAA Climate.gov என்ற இணையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.


பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதை உறுதிப்படுத்த சரிபார்க்கும் முறைகள் மூலம் 1998 ஆம் ஆண்டில், ஒரு ஆய்வு மர வளையங்கள், பனிக்கட்டிகள் மற்றும் பிற இயற்கை அறிகுறிகளை பகுப்பாய்வு செய்தது, மேல்நோக்கி திரும்புவதற்கு முன் பல நூற்றாண்டுகளாக நிலையான வெப்பநிலையைக் காட்டுகிறது. மற்றொரு வழி உயரும் வெப்பநிலை விளைவுகளை கவனிக்க வேண்டும். பெருங்கடல்கள் வெப்பமடைந்து வருகின்றன. வடக்கு அரைக்கோளத்தில் பனி மற்றும் பனி உறைகள் குறைந்து வருகின்றன. மேலும் கிரீன்லாந்து பனிக்கட்டி சுருங்குகிறது மற்றும் அதனால் கடல் மட்டம் உயர்கிறது. 


இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி (UK’s Royal Society) மற்றும் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி (US National Academy of Sciences) ஆகியவற்றால் 'காலநிலை மாற்றம் : சான்றுகள் மற்றும் காரணங்கள்' (Climate Change: Evidence & Causes) என்ற ஆய்வில் கூறப்பட்டுள்ளபடி, புவி வெப்பமடைதலுக்கான வலுவான ஆதாரங்களை வழங்கும் நிலம், கடல் மற்றும் விண்வெளியில் இருந்து பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து இந்தத் தகவல் வருகிறது.


 ஆர்க்டிக் கடல் பனி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் சிறியதாக இருக்கும். 1981 முதல் 2010 வரை, ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 12.2% பனி சுருங்கி வருகிறது. இந்த வரைபடம் 1979 இல் செயற்கைக்கோள் கண்காணிப்பு தொடங்கியதிலிருந்து, செப்டம்பர் ஆர்க்டிக் கடல் பனி அளவைக் காட்டுகிறது. (Credit: NASA)


எவ்வாறாயினும், பூமியின் காலநிலை அதன் 4.5 பில்லியன் ஆண்டு வரலாற்றில்  மாறிவிட்டது. ஆனால் சமீபத்திய வெப்பமயமாதலுக்கு இயற்கை சுழற்சிகள் காரணமாக இருக்க முடியாது. இப்போது நடக்கும் வெப்பமயமாதல் மிக வேகமாக நடைபெறுகிறது. இயற்கைக்கான உலகளாவிய நிதி (World Wide Fund for Nature(WWF)) அறிக்கையின்படி, 1975ல் இருந்து, பத்தாண்டிற்கு 0.15 முதல் 0.20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது.


கூடுதலாக, 2022-ம் ஆண்டை 20 ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையின் (1977 முதல்) தொடர்ச்சியாக 46 வது ஆண்டைக் குறிக்கிறது. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (US National Oceanic and Atmospheric Administration (NOAA)) அறிக்கையின்படி, பதிவு செய்யப்பட்ட 10 வெப்பமான ஆண்டுகள் அனைத்தும் 2010 முதல் நிகழ்ந்துள்ள்ன, கடந்த ஒன்பது ஆண்டுகளும் (2014-2022) முதல் 10 வெப்பமான ஆண்டுகளில் உள்ளன என்று அறிக்கை தெரிவித்துள்ளது.


ஆனால் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்குப் பின்னால் என்ன இருக்கிறது?


எளிமையாகச் சொன்னால், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் பூமியின் காலநிலையில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த வாயுக்கள் வளிமண்டலத்தின் ஒரு சிறிய பகுதியாக இருந்தாலும், விஞ்ஞானிகள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இதை அறிந்திருக்கிறார்கள்.


 அவை சூரியனின் ஆற்றலை தக்கவைத்துகொள்கின்றன மற்றும் பசுமை இல்ல விளைவு எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் பூமியை வெப்பப்படுத்துகின்றன, இது வாழக்கூடிய அளவில் வெப்பநிலையை பராமரிக்க வேண்டியது மிக அவசியம். 1700 களில் தொழில்துறை புரட்சி தொடங்கிய போது நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகள் அதிக அளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியிடத் தொடங்கின. உலகளவில் இந்த வாயுக்களின் அளவு அதிகரித்ததால், அதிக வெப்பமாகி, பூமியின் வெப்பநிலைஅதிகரிக்க தொடங்கும்.


இந்த வரைபடம் NOAA Climate.gov இலிருந்து வந்தது மற்றும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்(NOAA) குளோபல் கண்காணிப்பு ஆய்வகத்திலிருந்து தரவைப் பயன்படுத்துகிறது.



மார்ச் 2023 இல், காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) ஒரு தொகுப்பு அறிக்கையின் படி, முக்கியமாக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதன் மூலம் மனித நடவடிக்கைகள் புவி வெப்பமடைதலை சந்தேகத்திற்க்கு இடமின்றி மறுக்க முடியாத வகையில் ஏற்படுத்தியுள்ளன. இந்த உமிழ்வுகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகள் ஆற்றல் பயன்பாடு, நில பயன்பாடு மற்றும் பொருட்களை தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகும்.




Original article:

Share: