இரண்டடிகள் பின்னே : இந்தியா மற்றும் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2024 குறித்து . . .

கல்வியிலும் அரசியலிலும் பாலின வேறுபாடுகளை இந்தியா குறைக்க வேண்டும்.


உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum (WEF)) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் உலகளாவிய பாலின இடைவெளி 68.5%ஆக உள்ளது. இது 2023-ல் 68.4%ஆக இருந்தது. இந்த விகிதத்தில், முழு பாலின சமத்துவத்தை அடைய 134-ஆண்டுகள் ஆகும். இந்த காலக்கெடு 2030 நிலையான வளர்ச்சி இலக்கு (Sustainable Development Goal (SDG)), இலக்கைத் தாண்டி சுமார் ஐந்து தலைமுறைகளை நீட்டிக்கிறது.


ஐஸ்லாந்து அதன் பாலின இடைவெளியில் (gender gap) முதலிடத்தை (93.5%) தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும், அதன் பாலின இடைவெளியில் 90%-க்கும் மேல் தக்கவைத்துக் கொண்ட ஒரே பொருளாதாரம் இதுவாகும். கடந்த ஆண்டு 127-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 146 நாடுகளில் 129-வது இடத்தில் உள்ளது. 2022-ல், 135-வது இடத்திலிருந்து முன்னேறியது. 2024-ஆம் ஆண்டில் இந்தியா தனது பாலின இடைவெளியை 64.1% தக்கவைத்துளது. இது கொள்கை வகுப்பாளர்களுக்கு முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது.


சிறிய பின்னடைவுக்கு (“slight regression”) கல்வி மற்றும் அரசியல் அதிகார அமைப்பில் ஏற்பட்ட சிறிய சரிவுகளே காரணம் என அறிக்கை கூறுகிறது. 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், ஒரு சிறிய பின்னடைவுகூட குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப ஆண்டுகளில் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் இந்தியா சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், அதன் 2012-ஆம் ஆண்டு  தரவரிசை  46 சதவீதத்தை எட்ட இன்னும் 6.2 சதவீத புள்ளிகள் அதிகரிக்க வேண்டும்.


இந்த இலக்கை அடைவதற்கான ஒரு வழி, தொழிலாளர் பங்கேற்பு போன்ற பகுதிகளில் பாலின இடைவெளியைக் குறைப்பதாகும். இது தற்போது 45.9%-ஆக உள்ளது. இதற்கு, பெண்களை உயர்கல்வியில் படிக்க வைத்தல், வேலைத் திறன்களை வழங்குதல், பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்தல், திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் வேலைகளைத் தக்கவைக்க உதவும் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.


கல்வியில், ஆண்கள் மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 17.2 சதவீத வித்தியாசத்துடன் பெரிய அளவில் உள்ளது. இந்தியா இதில் 124-வது இடத்தில் உள்ளது. அரசியல் அதிகாரப்பகிர்வில் இந்தியா முன்னேற்றம் கண்டிருந்தாலும், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. சமீபத்திய மக்களவைத் தேர்தலில், ஏறக்குறைய 800 பெண்கள் போட்டியிட்டனர். ஆனால், இப்போது 74 பெண் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இது 2019-ல் 78 ஆக இருந்தது. இது மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 13.6% ஆகும்.


குறிப்பாக நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா (Women’s Reservation Bill) 2023-ஐ கருத்தில் கொண்டு, மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க இந்த மசோதா முன்மொழிகிறது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் பொருளாதாரத் தேவையாக பாலின சமத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்க வணிக மற்றும் குடிமை சமூக ஒத்துழைப்பை ஆதரிக்கும் நிலைமைகளை மேம்படுத்துமாறு உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum (WEF)) நிர்வாக இயக்குநர் சாடியா ஜாஹிடி (Saadia Zahidi’s) கேட்டுக்கொள்கிறார்.


Share: