திடக்கழிவு மேலாண்மை மேல் வரி (SWM cess) என்றால் என்ன? கழிவை உருவாக்குபவர்களிடம் ஏன் வசூலிக்கப்படுகிறது? -புஷ்கரா எஸ்.வி.

திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management (SWM)) மேல் வரி (cess) இதுவரை எவ்வாறு வசூலிக்கப்பட்டது மற்றும் அது ஏன் இப்போது  தலைப்புச் செய்திகளில் உள்ளது? பெங்களூரு அதன் திடக்கழிவுகளை எவ்வாறு நிர்வகிக்கிறது. எதிர்காலத்தில் என்ன மாற்றங்கள் வரப்போகிறது?


ப்ருஹத் பெங்களூரு மஹாங்கரா பாலிகே (Bruhat Bengaluru Mahangara Palike (BBMP)) ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு ₹100 என்ற திடக்கழிவு மேலாண்மை (SWM) மேல் வரி வசூலிக்கத்  திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குடியிருப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  திடக்கழிவு மேலாண்மை மேல் வரி ஏன் வசூலிக்கப்படுகிறது என்பதை அறிவது முக்கியம். மேல் வரி (cess) திடக்கழிவுகளை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.


இந்தியாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULBs)) திடக்கழிவு மேலாண்மையை நிர்வகிப்பதில் பல சவால்களை எதிர்கொள்கின்றன. திடக்கழிவு மேலாண்மை மேல் வரி என்பது இந்த சவால்களை தீர்ப்பதற்கான ஒரு வழியாகும்.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ன் அடிப்படையில் பயனர் கட்டணம் அல்லது  திடக்கழிவு மேலாண்மை மேல் வரியை வசூலிக்கின்றனர். பொதுவாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், திடக்கழிவு மேலாண்மை மேல் வரி சொத்து வரியுடன் சேர்த்து மாதத்திற்கு ₹30-50 வசூலிக்கப்படுகிறது.


இப்போது, ​​நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்  இந்த வரி விகிதங்களைத் திருத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றன. மொத்தமாக கழிவுகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களுக்கு அதிகக் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளனர். இது திடக்கழிவு மேலாண்மை சேவைகளை வழங்குவதற்கான செலவுகளை ஈடுகட்ட உதவும்.


செலவுகள் என்ன?


திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management (SWM)) சேவைகள் சிக்கலானவை மற்றும் அதை நிர்வகிப்பதற்கு நிறைய வளங்கள் தேவைப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் தொழிலாளர்களில் 80% மற்றும் திடக்கழிவு மேலாண்மை சேவைகளுக்காக தங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் 50% வரை பயன்படுத்துகின்றன.


பெங்களூரில், ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு சுமார் 0.6 கிலோ கழிவுகளை உருவாக்குகிறார்கள். இது ஆண்டுக்கு 0.2 டன்கள் வரை சேர்க்கிறது. முழு நகரமும் தினமும் சுமார் 5,000 டன் திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இந்தக் கழிவுகளை நிர்வகிக்க, சுமார் 5,000 வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் வாகனங்கள், 600 சுருக்கி எந்திரங்கள் (compactors) மற்றும் சுமார் 20,000 தூய்மை பணியாளர்கள் (Paurakarmikas) தேவை.


திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management (SWM)) சேவைகளில் நான்கு பகுதிகள் உள்ளன: திடக்கழிவு மேலாண்மைச் சேவைகளில் கழிவு சேகரிப்பு, போக்குவரத்து, பதப்படுத்துதல் மற்றும் அகற்றல் ஆகியவை அடங்கும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சேகரிப்பு மற்றும் போக்குவரத்தை ஒரு குழுவாகவும், பதப்படுத்துதல் மற்றும் அகற்றலை மற்றொரு குழுவாகவும் இணைக்கின்றன. சேகரிப்பு மற்றும் போக்குவரத்துக்கு நிறைய வளங்களும் உழைப்பும் தேவை. திடக்கழிவு மேலாண்மை பட்ஜெட்டில் 85-90% வரை ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஒதுக்கப்பட்டதில் 10-15% மட்டுமே கழிவுகளை பதப்படுத்தவும் அகற்றவும் செலவிடப்படுகிறது.


சவால்கள் என்ன?


இந்திய நகரங்களில், திடக்கழிவுகள் முக்கியமாக 55-60% ஈரமான மக்கும் பொருள் மற்றும் 40-45% மக்காத பொருள். உலர் கழிவுகளில் 1-2% மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ளவை மறுசுழற்சி செய்ய முடியாதவை மற்றும் மக்காதவை.


55% ஈரக் கழிவுகளை கரிம உரமாகவோ அல்லது உயிர் வாயுவாகவோ மாற்ற முடியும் என்றாலும், உண்மையான மகசூல் 10-12% மட்டுமே. இந்த குறைந்த மகசூல் திடக்கழிவுகளிலிருந்து உரம் தயாரித்தல் மற்றும் உயிர்வாயு உற்பத்தி ஆகிய இரண்டையும் நிதி ரீதியாக நீடிக்க முடியாததாக ஆக்குகிறது.


நிதி சவால்களுக்கு கூடுதலாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் SWM சேவைகளில் உள்ள பிற சிக்கல்களைக் கையாளுகின்றன:


           1. அவர்கள் திறந்த புள்ளிகள் மற்றும் வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டும்.


2. அவர்கள் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை (open littering) தடுக்க            

    வேலை செய்கிறார்கள்.


3. கழிவு உற்பத்தி (waste generation) பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.


4. அவர்கள் தொடர்ந்து துப்பறவு பணிகளை மேற்கொள்கின்றனர்.


மேலும், மக்காத மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத உலர் கழிவுகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக், ஜவுளிக் கழிவுகள் மற்றும் மந்தமான பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துவது விலை அதிகம். நகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள சிமென்ட் தொழிற்சாலைகள் அல்லது கழிவுகளில் இருந்து எரிசக்தித் திட்டங்களுக்கு இந்தக் கழிவுகள் நீண்ட தூரம், பொதுவாக 400-500 கி.மீ தூரம் கொண்டு செல்லப்பட வேண்டும்.


பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில், திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management (SWM)) சேவைகளுக்காக அவர்கள் தங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் சுமார் 15% - ₹11,163 கோடியில் ₹1,643 கோடியை ஒதுக்குகிறார்கள். இருப்பினும், இந்த சேவைகள் மூலம் அவர்கள் ஆண்டுக்கு சுமார் ₹20 லட்சம் மட்டுமே திரும்பப் பெறுகிறார்கள். சிறிய நகரங்கள் தங்கள் பட்ஜெட்டில் 50% வரை திடக்கழிவு மேலாண்மைக்கு செலவு செய்யலாம். ஆனால், அவற்றின் வருவாய் குறைவாக உள்ளது. இதனால் தான் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த செலவுகளை ஈடுகட்ட திடக்கழிவு மேலாண்மை  மேல் வரி வசூலிக்கின்றன.

தீர்வு என்ன?


கழிவுகளை சேகரித்தல் மற்றும் கொண்டு செல்வது பணத்தைக் கொண்டு வராது, ஆனால், செலவுகளைக் குறைக்கவும் கழிவு மேலாண்மைக்கான கட்டணங்களைக் குறைக்கவும் வழிகள் உள்ளன. கழிவுகள் உருவாகும் இடத்தில் பிரிக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைக் குறைவாகப் பயன்படுத்தவும். உள்ளூரில் குப்பைகளை உரமாக்கத் தொடங்குங்கள், குப்பை போடவேண்டாம் என்று மக்களுக்கு கற்றுக்கொடுங்கள். பெரிய கழிவுகளை உருவாக்குபவர்கள் தங்கள் கழிவுகளை சொந்தமாக கையாளச் செய்யுங்கள்.


ஒரு சமநிலையான அணுகுமுறை, சிறிய பயனர் கட்டணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் விஷயங்களை நன்றாக இயக்குதல், நமது நகரங்களை தூய்மையாக வைத்திருக்க உதவும்.


புஷ்கரா எஸ்.வி., பெங்களூருவில் உள்ள மனித குடியேற்றங்களுக்கான இந்திய நிறுவனத்தில் (Indian Institute for Human Settlements)  பணிபுரிகிறார்.


Share: