பொதுவான இலக்குகள்: இந்தியா மற்றும் ஐந்து-நாடுகள் பயணம் பற்றி…

 பிரதமர் நரேந்திர மோடியின் பயணங்கள் உலகளாவிய தெற்கு நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியாவின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.


தற்போது நடந்து வரும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா (BRICS) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசிலுக்குச் செல்லும் வழியில், பிரதமர் நரேந்திர மோடி கானா டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் அர்ஜென்டினாவுக்கு தொடர்ச்சியான இருதரப்பு பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு நிறுத்தமும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் முக்கிய தனிமங்கள் (critical minerals) போன்ற சில பொதுவான தலைப்புகளை உள்ளடக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இருந்தது. அக்கராவில், இந்தியா-கானா உறவுகள் விரிவான கூட்டாண்மையாக (comprehensive partnership) மேம்படுத்தப்பட்டன. மேற்கு ஆப்பிரிக்காவிற்கு கானாவை "தடுப்பூசி மையமாக" (vaccine hub) மாற்ற உதவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில், டிரினிடாட் மற்றும் டொபாகோவில், இந்தியாவிலிருந்து தரமான மற்றும் மலிவான பொது மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்த "இந்திய மருந்தியல்" குறித்து ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பியூனஸ் அயர்ஸில், ஜேவியர் மிலே அதிபர் முக்கிய தனிமங்கள் மற்றும் அர்ஜென்டினாவின் பரந்த ஷேல் (shale) எரிவாயு மற்றும் எண்ணெய் இருப்புகள் மீது ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் இந்தியா தனது மருந்து தொழிலை அர்ஜென்டினாவிற்கு வழங்கியது. இந்த மூன்று நிறுத்தங்களும் "வளந்து வரும் உலகின்" [developing world] அல்லது உலகளாவிய தெற்கு [Global South] நாடுகளில் இருந்தன, மேலும் பிரேசில் மற்றும் பின்னர் நமீபியாவிற்கான முன்னோக்கிய பயணம், "வளர்ந்த உலகிற்கு" [developed world] அல்லது உலகளாவிய வடக்கிற்கு [Global North] மாற்று பொருளாதார வழிமுறைகளை கட்டமைப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய சவால்களுக்கு குறைந்த செலவிலான தீர்வுகளுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு வாய்ப்பு, இந்த நாடுகளுக்கு பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்புக் கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)) போன்ற இந்தியா தலைமையிலான சர்வதேச அமைப்புகளின் ஊக்குவிப்பை உள்ளடக்கியது. பிரதமர் நரேந்திர மோடி இந்திய புலம்பெயர்ந்தோர் (Indian diaspora) சமூகத்திற்கு தனது சிறப்பு உரையையும் வழங்கினார் - 1845-ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் காலனித்துவ முயற்சிகளால் இந்திய தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்ட போர்ட் ஆஃப் ஸ்பெயினில் அவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்கலூ மற்றும் பிரதமர் கம்லா பெர்சாட்-பிசாசரின் இந்திய வம்சாவளியை குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் 35 மில்லியன் இந்திய புலம்பெயர்ந்தோர் சமூகம் இந்தியாவின் "பெருமை" என்று கூறினார்.


அரசியல் வரலாற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இந்த ஐந்து நாடுகளுக்கும் இடையிலான ஆழமான தொடர்புகளைத் தவிர்க்க இயலாது. ஒவ்வொரு நாடும் ஒரு பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறது - பிரிட்டிஷ், ஸ்பானிஷ், போர்த்துகீசிய மற்றும் ஜெர்மன் படைகளின் கீழ் பாதிக்கப்பட்ட காலனிகள் - மற்றும் அவற்றில் சில ஏன் அணிசேராத இயக்கத்தில் (Non-Aligned Movement) சேர்ந்தன. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு என்று அழைக்கப்படும் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் சேர்ந்து (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) வழிமுறையை நிறுவுவதில் இந்தியாவும் பிரேசிலும் ஆற்றிய பங்கு, மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா (India, Brazil, South Africa (IBSA)) உருவாக்கம், உலக தெற்கின் நலன்களை வலுவாக முன்வைக்கும் விளைவாக இருந்தது. இந்த பயணத்தில் உள்ள நாடுகள் எதுவுமே "மேற்கத்திய எதிர்ப்பு" (anti-West) என அழைக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட, மோதல்களில் குறிப்பாக உக்ரைன் மற்றும் காசா புது டெல்லிக்கு அவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், இந்த உறவுகளுக்குப் பின்னால் உள்ள உந்து சக்தி, அதன் விளைவாக பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது நாள் பயணத்திட்டம், தற்போதைய உலக ஒழுங்கிற்கு அப்பாற்பட்டு, வளரும் மற்றும் வளர்ச்சி குறைந்த நாடுகளின் தேவைகளுக்கு மிகவும் சமமான, பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் உணர்திறன் கொண்ட ஒன்றைப் பார்ப்பதற்கான பொதுவான விருப்பத்தைப் பற்றியது.



Original article:

Share: