யுரேனிய அமைதியின்மை: மேகாலயாவில் யுரேனிய சுரங்கம் பற்றி...

 வளத்தை பிரித்தெடுக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு மக்களிடம் கருத்துக்களை  கேட்க வேண்டும்.


உள்ளூர் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னரும், மேகாலயாவில் யுரேனியத்தை வெட்டி எடுக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது இந்தியாவின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் ஒரு கவலைக்குரிய நடவடிக்கையாகும். 1980-களில் இருந்து டோமியாசியாட் மற்றும் வஹ்காஜியில் யுரேனியம் வெட்டியெடுப்பதை காசி சமூகங்கள் எதிர்த்து வருகின்றன. சமீபத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அணு, முக்கியமான கனிமங்களை வெட்டியெடுப்பதற்கு இனி பொது மக்களின் ஒப்புதல் தேவையில்லை என்று அறிவிப்பை வெளியிட்டது. உள்ளூர் குழுக்கள் ஏற்கனவே இந்த புதிய விதியை விமர்சித்துள்ளன. ஆளும் கட்சியுடன் கட்சியுடன் தொடர்புடைய ஒரு குழு பழங்குடி உரிமைகளைப் பாதுகாக்க காசி மலைகள் தன்னாட்சி மாவட்ட குழு (Khasi Hills Autonomous District Council) அதன் 6-வது பட்டியல் அதிகாரங்களை பயன்படுத்த அழைப்பு விடுத்துள்ளது. அலுவலக குறிப்புகள் (Office Memorandums) என்பது முக்கியமான விதிகளை பலவீனப்படுத்தும் நிர்வாகக் கருவிகளாகும் மற்றும் அவை எந்தவொரு வெளிப்புற சரிபார்ப்பு அல்லது தன்னிச்சையான ஆய்வும் (independent scrutiny) இல்லாமல் பிறப்பிக்கப்படுகின்றன.  இந்த வழக்கில், அலுவலக குறிப்புகள் உள்ளூர் சமூகங்களை ஓரங்கட்டி, அவர்களை ஆழமாகப் பாதிக்கும் தேர்வுகளில் அவர்களைப் பார்வையாளர்களாகக் கருதுகிறது. யுரேனியம் பிரச்சினைகளில் அரசாங்கம் வலுக்கட்டாயமாகச் செயல்படுவது இது முதல்முறை அல்ல. ஜார்க்கண்டின் சிங்பூம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் செயல்பட்டு வருகிறது. புதிய சுரங்கங்களை விரிவுபடுத்தவோ அல்லது திறக்கவோ முயன்றபோது, ​​கதிர்வீச்சு மற்றும் வீடுகள் மற்றும் வேலைகளை இழப்பது குறித்து மக்கள் கவலைப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களுக்குப் புரியாத மொழிகளில் மாநகராட்சி அறிவிப்புகளை அனுப்பி, தங்கள் கவலைகளைப் புறக்கணித்ததாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர். இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தங்கள் நிலம் இன்னும் ஒரு ‘வள எல்லையாக’ (resource frontier) பார்க்கப்படுவதாக பழங்குடி சமூகங்கள் உணர்கின்றன.


உள்ளூர் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளில், அரசு அவர்களின் மறுப்பை மதித்திருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக 'இல்லை' என்று சொல்வது இனி அனுமதிக்கப்படாது என்பதைக் காட்டியது. யுரேனியம் சுரங்கம் அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகிறது மற்றும் நிலத்தை நிரந்தரமாக சேதப்படுத்தும். இது போன்ற காரணிகளால் தான், உலகளாவிய விதிகள் கூறுவது போல், ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முன் மக்களிடமிருந்து அனுமதியைப் பெறுவது முக்கியம்.  அத்தகைய ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால், ஜனநாயக பாதுகாப்புகளை நிறுவிய அதே அரசு, தேசியப் பாதுகாப்பு அல்லது வளர்ச்சிக்கான ஒரே வழியாக யுரேனியத்தைக் கருதுவதை நிறுத்திவிட்டு, பிற வைப்புத்தொகைகள், மாற்றீடுகள் அல்லது மின் உற்பத்தி உத்திகளை மேம்படுத்த வேண்டும். 2013ஆம் ஆண்டு  நியம்கிரி வழக்கை உதாரணமாகக் கொண்டும், அரசியலமைப்பின் 5-வது மற்றும் 6-வது அட்டவணைகளின் கீழ் பாதுகாப்புகளைக் குறிப்பிட்டும், அலுவலக குறிப்புகளை சமூகங்கள் நீதிமன்றத்தில் சவால் செய்யலாம். இரண்டாவதாக, அமைச்சகம் அதன் அலுவகக் குறிப்புகளை திரும்பப் பெற வேண்டும்: பல கனிமங்களை வெட்டியெடுப்பதை பொது ஆலோசனையிலிருந்து விலக்குவதன் மூலம், இந்தியா முழுவதும் சுரங்க நிர்வாகத்தை மறுவடிவமைக்கக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை இது அமைக்கிறது. இறுதியாக, உள்ளூர் போராட்டங்கள் அதிகரித்தால், அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் பதிலளிக்க வேண்டும், வலுக்கட்டாயமாக அல்ல. வற்புறுத்தல் தற்காலிகமாக வேலை செய்தாலும், பின்னர் அது வெறுப்பை உருவாக்கும். அரசாங்கம் ஒழுங்கைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், நடைமுறையில் அரசியலமைப்பு பாதுகாப்புகள் நிலைநிறுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.


Original article:

Share: