எல்லை கட்டுப்பாட்டுக் கோடு என்பது என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 முக்கிய  அம்சங்கள்:


– வெளியுறவு அமைச்சகம் (MEA) கூற்றுப்படி, அக்டோபர் 25 அன்று சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் 23-வது சுற்று படைப்பிரிவு தளபதிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.


– ஆகஸ்ட் 19 அன்று சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த சந்திப்பு முதல் உயர்மட்ட விவாதமாகும். 22வது சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அக்டோபரில் இரு தரப்பினரும் இந்தப் புள்ளிகளிலிருந்து விலகி ஒரு வருடம் கழித்து இது நடந்தது.


– கடந்த அக்டோபரில் ஒப்பந்தம் எட்டப்பட்டபிறகு, இரு நாடுகளும் தங்கள் படைகளுக்கு இடையே மோதல்களைத் தடுக்க ஒருங்கிணைந்த சுற்றுக்கு காவல் (ரோந்து) பணிகளை மேற்கொண்டு வருகின்றன.


– 2020ஆம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் இராணுவ மோதலின் போது தொடங்கிய அதிகரித்த பாதுகாப்பு படைகளின் வருகைக்குப் பிறகு இரு தரப்பினரும் அங்கு அமைதியைப் பேண முயற்சிக்கும்போது சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.


— படை விலகல் செயல்முறைக்குப் பிறகும், முழுமையான பதற்றம் தணிப்பு இன்னும் நடக்கவில்லை. சீனா சில பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற்றிருந்தாலும், பிராந்தியத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் சுமார் 50,000 முதல் 60,000 வீரர்கள் இன்னும் உள்ளனர்.


— மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முதலில் எந்த எல்லைப் பகுதிகளை கவனிக்க வேண்டும் என்பதை அடையாளம் காண இராஜதந்திர மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.


— நான்கு ஆண்டுகளுக்கும் மேலான இராணுவ மோதலுக்குப் பிறகு, 2024 அக்டோபரில் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில்  உள்ள இரண்டு முக்கிய பிரச்சனை புள்ளிகளான டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக்கில் ரோந்து ஏற்பாடுகளை ஒப்புக்கொண்டபோது முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் அக்டோபர் 23, 2024 அன்று ரஷ்யாவின் கசானில் நடந்த BRICS உச்சி மாநாட்டில் மோடிக்கும் ஷிக்கும் இடையிலான சந்திப்பிற்கு வழி வகுத்தது. அங்கு இரு தரப்பினரும் இந்த புள்ளிகளில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெற ஒப்புக்கொண்டனர்.


— உறவுகளை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன.


— களத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் இன்னும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் விழிப்புடன் உள்ளனர். ஆனால், இரு நாடுகளும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேலை செய்கின்றன.


— இந்தியாவைப் பொறுத்தவரை, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட அதன் தொழில்நுட்பக் கண்காணிப்பு அமைப்புகளை சார்ந்திருப்பதை அதிகரிப்பதையும் குறிக்கிறது. நீண்டகாலத்திற்கு கூடுதல் சுற்றுக்காவல் தேவையைக் குறைக்க இந்த அமைப்புகள் மேலும் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா ?:


— இந்தியா மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பிரிக்கும் எல்லையே எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC)) ஆகும். LAC சுமார் 3,488 கி.மீ நீளம் கொண்டது என்று இந்தியா கூறுகிறது. ஆனால் சீனா இது சுமார் 2,000 கி.மீ நீளம் மட்டுமே என்று கூறுகிறது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிமை உள்ளடக்கிய கிழக்குப் பகுதி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடுத்தரப் பகுதி மற்றும் லடாக்கில் மேற்குப் பகுதி போன்ற  மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.



Original article:

Share: