குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) முதல் வகை குடும்பக் கணக்கெடுப்பை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்குமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது எதைப் பற்றியது? குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் யார்? அவர்களின் நலனுக்காக என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன?
தற்போதைய செய்தி
குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் முதல் வகை குடும்பக் கணக்கெடுப்பை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பல்வேறு ஒன்றிய மற்றும் மாநில திட்டங்கள் இந்த சமூகங்களை எவ்வாறு சென்றடைகின்றன என்பது குறித்த விரிவான தரவுகளை சேகரிப்பதே இந்த கணக்கெடுப்பின் நோக்கமாகும் என்று Indian Express செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சூழலில், இந்த கணக்கெடுப்பு எதைப் பற்றியது மற்றும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் தொடர்பான பல்வேறு முக்கிய முயற்சிகள் பற்றி அறிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. இந்த கணக்கெடுப்பு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) குடும்பங்களும் ஒன்றிய மற்றும் மாநில நலத்திட்டங்களின்கீழ் வருவதை உறுதி செய்வதையும், கணக்கெடுப்புக்குப் பிறகு உரிமை அட்டைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஒவ்வொரு வீட்டிற்கும் கணக்கெடுப்புக்கு நிதியளிக்கும். தேசிய மின்-ஆளுமைப் பிரிவால் (e-Governance Division) உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு செயலியைப் பயன்படுத்தி PVTG குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
3. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) குடும்பங்கள் எந்த உரிமைகளைப் பெற்றுள்ளன அல்லது இன்னும் நிலுவையில் உள்ளன என்பதைக் காட்டும் டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்க இந்த செயலி ஒன்றிய அரசுக்கு உதவும்.
4. வரவிருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு பழங்குடியினர் விவகார அமைச்சகம், இந்தியப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரைக் கேட்டுக் கொண்ட நேரத்தில் இந்த ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) என்றால் என்ன?
1. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் என்பது வழக்கமான பட்டியல் பழங்குடியினர்களைவிட மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படும் பட்டியல் பழங்குடியினர் அல்லது பட்டியல் பழங்குடியினர்களின் ஒரு பிரிவின் துணை வகைப்பாடு ஆகும். அழிந்துவரும் பழங்குடி குழுக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தும் நோக்கத்துடன் PVTG பட்டியல் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.
2. 1960-61-ஆம் ஆண்டில், தேபார் ஆணையம் பட்டியல் பழங்குடியினரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிந்தது. இது "பழமையான பழங்குடி குழுக்கள்" (Primitive Tribal Groups (PTG)) வகையை உருவாக்க வழிவகுத்தது. 2006-ஆம் ஆண்டில், இந்த வகை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் என மறுபெயரிடப்பட்டது.
3. 18 மாநிலங்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் உள்ளன. குறைந்து வரும் மக்கள்தொகை கொண்ட, புவியியல்ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட, வேட்டையாடுதல் மற்றும் சேகரிப்பு போன்ற வேளாண் பணிகளுக்காக முந்தைய நடைமுறைகளைப் பின்பற்றும் மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய மற்றும் குறைந்த கல்வியறிவு நிலைகளைக் கொண்ட பட்டியல் பழங்குடியினருக்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுவிற்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
4. தனிமை, குறைந்த மக்கள் தொகை மற்றும் தனித்துவமான சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார பண்புகள் காரணமாக குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். அடிப்படை சேவைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், சமூக பாகுபாடு மற்றும் வளர்ச்சி மற்றும் இயற்கை பேரழிவுகளிலிருந்து இடம்பெயர்வு பாதிப்பு ஆகியவற்றுடன் அவர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இது முடிவெடுப்பதில் அவர்களின் பங்கேற்பைத் தடுக்கிறது.
PM JANMAN என்றால் என்ன?
1. ஒன்றிய அரசு தற்போது பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN)) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, இது 2023 நவம்பர் 15-ஆம் தேதி ஜார்கண்டின் குந்தியில் 75 PVTG சமூகங்களை இலக்காகக் கொண்டு ரூ.24,104 கோடி செலவில் பிரதமரால் தொடங்கப்பட்டது.
2. ஒன்பது வரி அமைச்சகங்கள் மூலம் பதினொரு முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முந்தைய PVTG-களின் மேம்பாட்டுத் திட்டம் முடிவுக்கு வந்த பிறகு இவை தொடங்கப்பட்டன. கிராமப்புற சாலைகள் அமைத்தல், குழாய் நீர் வழங்குதல், தொலைதூரப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குதல், வலுவான வீடுகளைக் கட்டுதல் மற்றும் மொபைல் கோபுரங்களை அமைத்தல் ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும்.
3. பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN)) திட்டத்தின் அணுகல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் நாடு தழுவிய தகவல், கல்வி மற்றும் தொடர்பு (Information, Education, and Communication (IEC)) பிரச்சாரம் தொடங்கப்பட்டது. PVTG அதிகம் உள்ள பகுதிகளில் அரசுத் திட்டங்கள் 100% நிறைவுறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, இந்த பிரச்சாரம் ஆகஸ்ட் 23, 2024 முதல் செப்டம்பர் 10, 2024 வரை நடைபெற்றது.
குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களுக்கான (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) பிற நலத்திட்டங்கள்
1. PVTG மேம்பாட்டுத் திட்டம் பாரம்பரிய அறிவைப் பாதுகாக்கும் அதே வேளையில் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குகிறது.
2. பிரதம மந்திரி ஜன்ஜாதிய விகாஸ் மிஷன் (Pradhan Mantri Janjatiya Vikas Mission (PMJVM)) குறைந்தபட்ச ஆதரவு விலையில் சந்தை இணைப்புகள் மற்றும் பழங்குடி சமூகங்கள் சிறு வன விளைபொருட்களை (Minor Forest Produce (MFP)) கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துகிறது.
3. பிரதம மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம யோஜனா, ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டுத் திட்டம் (Integrated Tribal Development Project (ITDP)), மற்றும் பழங்குடி துணைத் திட்டம் (Tribal Sub-Plan (TSP)) போன்ற பிற முக்கிய திட்டங்கள் பழங்குடிப் பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஆதரிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
4. கூடுதல் முயற்சிகளில், ஏகலைவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள், வன உரிமைகள் சட்டம் 2006-ன் கீழ் நில உரிமைகளை வழங்குதல், பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு (Support to Tribal Research Institute (STRI)) திட்டம், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகளைத் தடுக்கும்) சட்டம் 1989, பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம் 1996, மற்றும் இடஒதுக்கீடு மூலம் நேரடி ஆட்சேர்ப்பு போன்ற கூடுதல் நடவடிக்கைகள் கல்வி, தன்னாட்சி மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பில் உதவுகின்றன.
Original article : PVTGs Household Survey -Roshni Yadav