அமைதிக்கான பேச்சுவார்த்தை

    சுவிஸ் மாநாட்டில் கலந்து கொண்டு வாக்களிக்காமல் இருப்பது என்ற இந்தியாவின் முடிவு சரியானது. 


ஞாயிற்றுக்கிழமை பர்கன்ஸ்டாக்கில் முடிவடைந்த இரண்டு நாள் "அமைதிக்கான உச்சி மாநாடு" (Summit on Peace) கலவையான விளைவுகளை ஏற்படுத்தியது. இதில், சுவிட்சர்லாந்து வெற்றிகரமாக 90-க்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைத்து, குறைந்தது 56 தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். மேலும், இதில் சுமார் 82 நாடுகள் மற்றும் அமைப்புகள் இறுதி கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டன. ஆனால், இந்தியா உட்பட சில நாடுகள் கையெழுத்திடவில்லை. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய கூட்டமைப்பின் போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த இந்த அறிக்கை, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேசக் சட்டத்திற்கு இணங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தப்பட்டது. அணுசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் அனைத்து போர்க் கைதிகள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள உக்ரேனியர்கள் பரிமாற்றம் ஆகிய மூன்று பகுதிகளை இது எடுத்துக்காட்டியது. இந்த உச்சிமாநாட்டின் நோக்கம் அதிகளவில் கொண்டதாக இருக்கவில்லை. ஏனெனில், இதன் அமைப்பாளர்கள் முடிந்தவரை பல நாடுகளை, குறிப்பாக "உலகாளவிய தெற்கில்" (Global South) இருந்து வருபவர்களை ஈடுபடுத்தும் நோக்கத்தை கொண்டிருந்தனர். அதை அவர்கள் ஓரளவிற்கு சாதித்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதை "வரலாற்றின் வெற்றி" (historic victory) என்று அழைத்தாலும், இதில் குறைபாடுகள் இருந்தன. இந்தக் கூட்டமைப்பில், ரஷ்யாவை அழைக்க வேண்டாம் என்று சுவிட்சர்லாந்து எடுத்த முடிவு, உக்ரைன் அமைதி விதிமுறை (Ukraine Peace Formula) மற்றும் ஐ.நா தீர்மானங்களின் (UN resolution) அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. மாஸ்கோ மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ள சீனா, ஒரு குழுவைக் கூட அனுப்பவில்லை. இது அவர்களை நம்ப வைப்பதில் தோல்வியடைந்தது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் (BRICS member) எவையும், தற்போதைய அல்லது எதிர்கால அறிக்கையில் கையெழுத்திடவில்லை. இது வளர்ந்து வரும் பொருளாதாரங்களால் ஆதரிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. 


மாநாட்டிற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற சுவிட்சர்லாந்து, உக்ரைன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டன. இத்தாலியில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டின் போது ஜெலன்ஸ்கி பிரதமர் மோடிக்கு கடைசி நிமிட வேண்டுகோள் விடுத்தார். ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடாகவும், உலகளாவிய தெற்கில் ஒரு முக்கிய உறுப்பு நாடாகவும் இந்தியா, மோதலில் அதன் சீரான நிலைப்பாட்டின் காரணமாக அமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய சொத்தாக இருந்திருக்கலாம். எவ்வாறாயினும், இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) மற்றும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (Deputy NSA) ஜெட்டா மற்றும் டாவோஸில் இரண்டு ஆயத்த மாநாடுகளுக்கு அனுப்பியபோது, ​​இங்குள்ள இந்திய பிரதிநிதிகள் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (மேற்கு) தலைமையில் இருந்தனர்.


ஐ.நா., பாதுகாப்புக் குழுமம் (UN, Security Council), பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency (IAEA)), மனித உரிமை ஆணையம் (Human Rights Council) மற்றும் பிற பன்னாட்டு நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை விமர்சித்து வரும் ஒவ்வொரு தீர்மானத்திலும் இந்தியா தொடர்ந்து வாக்களிக்கவில்லை. இந்த மாநாட்டு உரையின் பெரும்பகுதி குறித்து இந்தியா கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால், அதன் வெளிப்படையான ரஷ்ய-விரோத நிலைப்பாட்டை ஆதரிக்க முடியவில்லை. ஆனால், அதில் கலந்து கொண்டதன் மூலமாக, குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளடக்கமாக வருங்கால மாநாடுகளில் பங்கெடுப்பதற்கான அதன் விருப்பத்தை இந்தியா நிரூபித்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வது, மேலும், இதில் ஒப்புதல் அளிக்காதது என்ற இந்தியாவின் முடிவு எதிர்பார்த்ததுதான். 


Share: