இந்தியாவின் மிகப்பெரிய உவர் சதுப்புநிலம் - நிதேந்திர பால் சிங்

 1. சாம்பார் ஏரி (Sambhar Lake) இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியாகும். இது 230 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் ஜெய்ப்பூர் மற்றும் நாகூர் மாவட்டங்கள் மற்றும் அஜ்மீரின் ஒரு பகுதி முழுவதும் பரவியுள்ளது.


2. இது 5,700 சதுர கிமீ நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் நீரின் ஆழம் மாறுகிறது. வறண்ட காலங்களில், இது சுமார் 60 செ.மீ முதல் பருவமழையின் முடிவில் சுமார் 3 மீட்டர் வரை மழைப்பொழிவு மாறுபடும். 


3.  ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் முதல் பிப்ரவரி வரை, இந்த ஏரி வட ஆசியா மற்றும் சைபீரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகளை ஈர்க்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான செந்நாரைகளும் (flamingo) அடங்கும். ஜூலை மாதம் பருவமழை பெய்யும் போது, ​​ஏரி முழுவதும் நிறைந்து இருக்கும். கூட்ஸ், கறுப்பு இறக்கைகள் கொண்ட ஸ்டில்ட்ஸ், பொரி உள்ளான்கள் (sandpipers) மற்றும் புள்ளிச் செங்கால் உள்ளான் (redshanks) போன்ற பறவைகளின் கீச்சொலிகளால் சூழல் நிரம்பியிருக்கும்.


4. சாம்பார் ஏரி ராம்சார் தளமாகவும் (Ramsar Site) வகைப்படுத்தப்பட்டுள்ளது.




Original article:

Share: