கடைசியாக தொகுதி மறுவரையறை (delimitation) எப்போது செய்யப்பட்டது? மாநிலங்களில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து உள்துறை அமைச்சர் கூறியது என்ன? அது எப்படி செய்யப்படும்? திட்டமிடப்பட்ட மக்கள்தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் எந்த மாநிலங்களுக்கு பாதகமாக இருக்கும்?
சமீபத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தொகுதி மறுவரையறை தொடர்பான பிரச்சினையை எழுப்பினார். இது ஒரு புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் செயல்முறை 2026-க்குப் பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.
அரசியலமைப்பு விதிகள் என்ன சொல்கிறது ?
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எல்லைகளை தீர்மானிக்கும் செயல்முறையே தொகுதி மறுவரையறை (Delimitation) ஆகும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தால் உருவாக்கப்பட்ட “தொகுதி மறுவரையறை ஆணையம்” (Delimitation Commission) இந்தப் பணியை மேற்கொள்கிறது. இது 1951, 1961 மற்றும் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்டது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவையில் 543 இடங்கள் உள்ளன. அப்போது மக்கள் தொகை 54.8 கோடியாக இருந்தது. மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த எண்ணிக்கை முடக்கப்பட்டது. 2026-க்குப் பிறகு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு இது மாற்றப்படும். கோவிட்-19 காரணமாக முதலில் ஒத்திவைக்கப்பட்ட 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் தொடங்கப்படாததால், அதைத் தொடர்ந்து வரும் தொகுதி மறுவரையறை ஆணையத்துடன் அதை இணைப்பது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.
பிரச்சினைகள் என்ன?
கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள்தொகை வெடிப்பு (population explosion) சீரற்றதாகவே இருந்து வருகிறது. உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தில் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மக்கள்தொகையில் மெதுவான வளர்ச்சியைக் கண்டன. திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை செயல்முறைக்கு இரண்டு அணுகுமுறைகள் விவாதிக்கப்படுகின்றன.
முதலாவதாக, தற்போதுள்ள முதலாவது, 543 இடங்களை வைத்துக்கொண்டு மாநிலங்களுக்கு இடையே மறுபகிர்வு செய்வது (விருப்பத் தேர்வு 1). இரண்டவதாக, பல்வேறு மாநிலங்களுக்கு இடையே விகிதாசார அதிகரிப்புடன், இடங்களின் எண்ணிக்கையை 848 ஆக அதிகரிப்பதாகும் (விருப்பத் தேர்வு 2). உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், எந்த மாநிலத்திற்கும் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்றும், தென் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் “சார்பு விகிதாச்சார” (‘pro-rata’) அடிப்படையில் அது அதிகரிக்கப்படும் என்றும் கூறினார். மாநிலங்களுக்கான இந்த 'சார்பு விகிதாச்சார' பங்கிற்கான அடிப்படை தற்போதுள்ள இடங்களின் பங்கின் சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டதா அல்லது திட்டமிடப்பட்ட மக்கள்தொகையைப் பொறுத்து அமையுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்ட விருப்பத் தேர்வு 2-ன் படி, தென் மாநிலங்கள் மற்றும் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் போன்ற சிறிய வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பெரிய வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பாதகமான எதிர்கொள்ளலாம். இது நமது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள “அடிப்படை கட்டமைப்பிற்கு” (basic structure) எதிரானதாக இருக்கலாம். விகிதாசார பிரதிநிதித்துவத்தை இழக்கும் மாநிலங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக உணரக்கூடும். மேலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருந்தாலும் இடங்களை இழப்பது மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தையும் குறைக்கும். தற்போது 24% இடங்களைக் கொண்டுள்ள தென் மாநிலங்களில் மாநிலங்களின் எண்ணிக்கை 5% குறையும்.
இதற்கு என்ன தீர்வை வழங்கலாம் ?
ஜனநாயகம் (Democracy) என்பது மக்களால் நடத்தப்படும் ஆட்சி அல்லது அரசாங்கம் (rule or government by the people) என்பதாகும். அரசாங்கம் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. “ஒரு குடிமகன், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு” (‘one citizen - one vote - one value’) என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. இருப்பினும், 1976 முதல், மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஆதரிக்க இந்தக் கொள்கை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை செயல்முறை முதல் முறையாக ஒத்திவைக்கப்பட்டபோது இது நடந்தது.
அமெரிக்கா போன்ற ஒரு கூட்டமைப்பில், 1913 முதல் பிரதிநிதிகள் சபையில் இடங்களின் எண்ணிக்கை 435-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் நாட்டின் மக்கள் தொகை 1911-ல் 9.4 கோடியிலிருந்து 2024-ல் 34-கோடியாக 4 மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் முக்கியப் பங்கு, “ஒன்றியப் பட்டியல்” பாடங்களில் சட்டங்களை இயற்றுவதும், ஒன்றிய அரசின் பொறுப்பை உறுதி செய்வதும் ஆகும். பெரும்பாலான ஒன்றிய அரசுத் திட்டங்கள் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக, இந்தியா 543 மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மக்கள் தொகை 55 கோடியிலிருந்து 145 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 165-170 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்போதிலிருந்து 15% அதிகரித்து. அதன் பிறகு, அது குறையத் தொடங்கும். இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிலையாக இருக்கலாம். இது மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பராமரிக்கும் மற்றும் கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்கும். தென் மாநிலங்கள், சிறிய வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பிராந்தியங்களின் அரசியல் நலன்களைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் இந்த உச்சவரம்பை வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் திட்டமிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இது ஜனநாயக பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய உதவும்.
R. ரங்கராஜன் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் “‘Polity Simplified’ என்ற நூலின் ஆசிரியர்.