மாசுபாடு குறித்த பாதையை மாற்றுதல்

 தகுதியான வாகனங்கள் அதன் உமிழ்வைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும். இருப்பினும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முழுமையான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது.


பழைய வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதை நிறுத்துமாறு செவ்வாயன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெறும் தற்காலிக நிவாரணம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக வாகன உரிமையாளர்களை தொந்தரவு செய்துவந்த அறிவியல் பூர்வமற்ற மற்றும் கடுமையான அணுகுமுறையிலிருந்து இது ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. 


தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களையும் தடை செய்யும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 2014 விதியை ஆதரித்த அதன் 2018 உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த மதிப்பாய்வு ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிய விவாதத்தை அனுமதிக்கிறது. தகுதியான வாகனங்கள் அதன் பயன்பாட்டு ஆண்டைவிட அதன் உமிழ்வைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.


தொடக்கத்தில் வாகனங்கள் மீதான தடையானது எளிமையானதாகத் தோன்றியது. பழைய வாகனங்கள் அதிக மாசுபடுத்தும் என்று கருதப்படுகிறது. ஆனால், இந்த அனுமானத்திற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து டீசல் வாகனங்களும் புதிய வாகனங்களை விட அதிகமாக மாசுபடுத்துகின்றன என்பதைக் காட்டும் தரவு எதுவும் இல்லை.


உண்மையில், பல பழைய வாகனங்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவை  நன்கு பராமரிக்கப்படுகின்றன. மேலும், மாசுக் கட்டுப்பாட்டு (Pollution Under Control (PUC)) தரநிலைகளை பூர்த்தி செய்கின்றன. எடுத்துக்காட்டாக, வருடத்திற்கு சில முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு விண்டேஜ் கார், டெல்லியின் போக்குவரத்தில் தினமும் இயக்கப்படும் ஒரு நவீன SUV-ஐ விட அதன் வாழ்நாளில் குறைவான மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடும். வாகனத்தை பயன்பாட்டு ஆண்டின் அடிப்படையிலான தடை  செய்வது எளிது. ஆனால், அது அறிவியல் பூர்வமாக துல்லியமானது அல்ல.


முக்கிய விஷயம் என்னவென்றால், டெல்லியின் மாசுபாடு பிரச்சனையை சிறிய, தனித்தனி நடவடிக்கைகளால் தீர்க்க முடியாது. தொழில்துறை உமிழ்வு, கட்டுமான தூசி மற்றும் உயிரிப் பொருள்கள் போன்ற பெரிய ஆதாரங்களைப் புறக்கணித்துவிட்டு வாகன ஓட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நியாயமற்றது. இந்தத் தடைகள் பெரும்பாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களைப் பாதிக்கின்றன. ஏனெனில், புதிய வாகனம் வாங்குவது அவர்களுக்கு கடினமான ஒன்று.  மேலும், வாகனங்களை அகற்றுவது மற்றும் உற்பத்தி செய்வது போன்ற செயல்முறைகள் பெரும் ஆற்றல் வளங்களை உட்கொள்கின்றன என்ற சுற்றுச்சூழல் செலவை இவை புறக்கணிக்கின்றன.


காற்றை சுத்தமாக்குவதே இலக்காக இருந்தால், அதற்கான தீர்வு தொழில்நுட்பத்தையும் கொள்கையையும் இணைக்கும் ஒரு முழுமையான துறை அளவிலான திட்டமாக இருக்க வேண்டும். இதில் உண்மையான உமிழ்வைக் கண்காணித்தல், சுத்தமான பொது போக்குவரத்தை விரிவுபடுத்துதல், அதிக அளவில் மாசுபடுத்தும் வாகனங்களை மேம்படுத்துவதை கட்டாயமாக்குதல் மற்றும் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல் ஆகியவை அடங்கும். அரசின் நடவடிக்கைகள் நிலையான மற்றும் அறிவியலை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் இப்போது ஒரு நியாயமான அமைப்பை உருவாக்கும் வாய்ப்பை அனுமதித்துள்ளது. அரசாங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பரந்த அளவிலான, ஆதார அடிப்படையிலான திட்டத்தை உருவாக்கினால், டெல்லி இறுதியாக அதன் காற்று மாசுபாடு பிரச்சனையைத் தீர்ப்பதை நோக்கி நகர முடியும்.



Original article:

Share: