சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய  அம்சங்கள்:


— 1980ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டத்தில் ((Sanrakshan Evam Samvardhan) Adhiniyam) சிறப்பு விலக்கு அளித்து, ஒன்றிய அரசு மட்டும் ஒப்புதல் வழங்கப்படாமல், மாநில அரசால் எல்லைச் சாலை அமைப்புக்கு (Border Roads Organisation (BRO)) ஒப்புதல் வழங்கப்பட்டது.


— இந்த விதி ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, முக்கியமான நேரியல் திட்டங்களை’ (strategic linear projects of national importance) ஒன்றிய அரசின் ஆய்வில் இருந்து விலக்கு அளிக்கிறது. அதற்குப் பதிலாக, இத்தகைய திட்டங்கள் மாநில அளவிலான ஆய்வு குழுவால் அனுமதிக்கப்படுகின்றன. இறுதி அனுமதி ஈடுசெய்ய வனவளர்ப்பு மற்றும் வன உரிமைகள் தீர்வு ஆகியவற்றுக்கு உட்பட்டது.


— உத்தரகாசி மாவட்டத்தில் NH-34-ல் Hina மற்றும் Tekhla இடையே முன்மொழியப்பட்ட இந்த சுற்றுப்பாதை, பலவீனமான பாகீரதி சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் (Bhagirathi Eco-Sensitive Zone (BESZ)) என்னும் 4,157 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது கங்கோத்திரி மற்றும் உத்தரகாசி நகரத்திற்கு இடையே உள்ளது.


— பாகீரதி சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் ஆனது 2012-ல் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தாராசு-கங்கோத்ரி பாதையில் 17.5 ஹெக்டேர் வன நிலத்தைத் திருப்பிவிடுவதை உள்ளடக்கியது. இதனால் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருக்கும் காடுகளில் (untouched forests) ஏறக்குறைய 2,750 மரங்களை வெட்ட வேண்டும்.


— 2020 ஆம் ஆண்டில், சூழலியல் நிபுணர் ரவி சோப்ரா தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் உயர் அதிகாரக் குழு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக அடிப்படையில் அதே புறவழிச்சாலையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக தற்போதுள்ள NH-34-ஐ அகலப்படுத்த பரிந்துரைத்தது.


— குழு அரசின் 900 கிலோமீட்டர் சார்தாம் திட்டத்தை (Chardham project) மறு ஆய்வு செய்தது. இது யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகியவற்றை இணைக்கும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கி மேம்படுத்தும் நோக்கம் கொண்டது. குழு அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவான பரிந்துரைகளை சமர்ப்பித்தது.


— தாராலி பேரழிவுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் உயர் அதிகாரக் குழுவின் உறுப்பினர்களான புவியியலாளர் நவீன் ஜுயல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சாரகர் ஹேமந்த் தியானி ஆகியோர், சார்தாம் நெடுஞ்சாலையை அதன் தற்போதைய வடிவத்தில் தொடர வேண்டாம் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தை வலியுறுத்தினர். நெட்டாலா புறவழிச்சாலை திட்டத்தை (Netala bypass) கைவிட வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.


— கங்கோத்திரி பகுதியில் புதிய வன அழிப்பிற்கு எதிராக ஏற்கனவே போராட்டம் நடத்திவரும் உத்தரகாசி மாவட்ட மக்கள், நெட்டாலா சுற்றுப்பாதை அனுமதியை ரத்து செய்யவும் சார்தாம் திட்டத்தின் பணிகளை நிறுத்தவும் கோரிக்கை விடுத்தனர்.


உங்களுக்குத் தெரியுமா?


— 900 கிலோமீட்டர் சார்தாம் திட்டம் நான்கு புனித யாத்திரை மையங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகியவற்றை இணைக்கும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கி மேம்படுத்தும் பணியில் உள்ளது. உச்சநீதிமன்றம் 2021-ல் இதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.


— சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) என்பது நாடுகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இடையே சமநிலை காக்க உதவும் ஒரு வழிமுறையாக உருவாகியுள்ளது. இது வளர்ச்சி சூழலியல் நிலைத்தன்மையை கெடுக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது.


—சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது முன்மொழியப்பட்ட திட்டம் அல்லது மேம்பாட்டின் சாத்தியமான சுற்றுச்சூழல் விளைவுகளை - நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டையும் - அது அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு மதிப்பிடும் ஒரு முறையான செயல்முறையாகும்.


— EIA-ன் முதன்மை நோக்கங்கள் மேம்பாட்டு திட்டங்களின் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களை முன்கணிப்பு மற்றும் மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது.


— முன்மொழியப்பட்ட திட்டத்தின் ஆழமான பகுப்பாய்வை வழங்குவதன் மூலம் தகவலறிந்த முடிவெடுப்பதை இது எளிதாக்குகிறது மற்றும் திட்டமிடல் ஆரம்பகட்டத்தில் சாத்தியமான எதிர்மறை விளைவுகளை அடையாளம் காண்பதன் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதே, நேரத்தில் பொருத்தமான மாற்று வழிகள் மற்றும் தணிப்பு வழிமுறைகளையும் பரிந்துரைக்கிறது.


— ஒரு திட்டம் குறித்த பொதுக் கூட்டங்களில் மக்கள் தங்கள் கருத்துகளையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம், வளர்ச்சி முடிவுகளில் பங்கேற்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) உதவுகிறது.



Original article:

Share: