ரைசோடோப் திட்டம் (Rhisotope Project) -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


IAEA-ன் படி, கதிரியக்க ஐசோடோப்புகள் (ரேடியோஐசோடோப்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன) என்பது கதிர்வீச்சை வெளியிடும் ஒரு தனிமத்தின் நிலையற்ற வடிவமாகும். இவை மிகவும் நிலையான வடிவமாகவும் மாறுகின்றன. இது, உமிழப்படும் கதிர்வீச்சைக் கண்டறிய முடியும். மேலும், இந்த கதிர்வீச்சு பொதுவாக அது தொடும் பொருளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.


ஆக்கிரமிப்பு இல்லாத நடைமுறைகள் (non-invasive procedure) மூலம், காண்டாமிருகக் கொம்புகள் (rhino horns) குறைந்த அளவிலான கதிரியக்க ஐசோடோப்புகளால் குறிக்கப்படுகின்றன. இது அங்கீகரிக்கப்படாத அணுசக்தி பொருட்களை அடையாளம் காண உலகளவில் எல்லைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ள கதிர்வீச்சு போர்டல் கண்காணிப்பாளர்கள் (radiation portal monitors (RPM)) மூலம் அவற்றைத் தயாராகக் கண்டறிய அனுமதிக்கிறது.


இந்த அமைப்பைச் சோதிக்க, ஆராய்ச்சியாளர்கள் 3D-அச்சிடப்பட்ட காண்டாமிருகக் கொம்புகளைப் பயன்படுத்தினர். இந்த கொம்புகள் உண்மையான கெரட்டின் (real keratin) போன்ற அதே பாதுகாப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. கெரட்டின் என்பது உண்மையான காண்டாமிருகக் கொம்பை உருவாக்கும் பொருளாகும். பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, சோதனைகள் முக்கியமான ஒன்றை உறுதிப்படுத்தின. 40 அடி நீளமுள்ள கப்பல் கொள்கலன்களுக்குள் வைக்கப்பட்டாலும் கூட தனிப்பட்ட கொம்புகளைக் கண்டறிய முடியும்.


தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் வடக்கே லிம்போபோவின் வாட்டர்பெர்க்கில் உள்ள வாட்டர்பெர்க் பயோஸ்பியரில் 20 காண்டாமிருகங்களுக்கு ரேடியோஐசோடோப்புகளை செலுத்தியபோது, கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட சோதனை கட்டத்தின் முடிவுகளையும் பல்கலைக்கழகம் அறிவித்தது. இது, பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, சிகிச்சையளிக்கப்பட்ட 15 காண்டாமிருகங்களின் ஆரோக்கியத்தைக் கண்காணித்து, அவற்றில் சைட்டோலாஜிக்கல் பரிசோதனைகளை (cytological examinations) நடத்தியது. இந்த முடிவுகளை சிகிச்சை அளிக்கப்படாத ஐந்து காண்டாமிருகங்களுடன் முடிவுகளை ஒப்பிட்டனர்.

உங்களுக்குத் தெரியுமா? 


20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகளாவிய காண்டாமிருக எண்ணிக்கை சுமார் 500,000 ஆக இருந்ததாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature) மதிப்பிட்டுள்ளது. தற்போது, காண்டாமிருகக் கொம்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், அது 27,000 ஆகக் குறைந்துள்ளது. இந்தக் கொம்புகள் ஆசிய சந்தைகளுக்குக் கடத்தப்படுகின்றன. அங்கு, அவை பாரம்பரிய மருத்துவத்திலும், அந்தஸ்தின் அடையாளமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.


உலகின் மிகப்பெரிய காண்டாமிருக எண்ணிக்கையைக் கொண்ட தென்னாப்பிரிக்கா, கடந்த பத்தாண்டுகளில் வேட்டையாடுதலால் 10,000-க்கும் மேற்பட்ட காண்டாமிருகங்களை இழந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 103 காண்டாமிருகங்களை இழந்துள்ளதாக தென்னாப்பிரிக்க வனத்துறை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வேட்டையாடுவதை நிறுத்துவதற்கான திட்டம் முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும், அது ஒரு வலுவான தடுப்பாக செயல்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வேட்டையாடுதலைத் தடுக்க காண்டாமிருகங்களின் கொம்புகள் அகற்றப்படுவது, கொம்புகளை வெட்டுவதைவிட இது காண்டாமிருக நடத்தைக்கு குறைவான இடையூறாக இருக்கும் என்பதை நிச்சயமாக நிரூபிக்கும். 2024-ம் ஆண்டு அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் காண்டாமிருகங்கள் இருக்கக்கூடிய எட்டு சரணாலயங்களில் கொம்புகளை வெட்டுவது என்பது வேட்டையாடுவதை 78 சதவீதம் குறைத்ததாகக் காட்டியது. இருப்பினும், முந்தைய ஆண்டில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், கொம்புகள் வெட்டப்படுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் கண்டறியப்பட்டன. கொம்புகள் வெட்டப்பட்டதால் காண்டாமிருகங்கள் அவற்றின் மற்ற விலங்குகளுடன் பழகும் திறன் பாதிக்கப்பட்டதுடன், அவற்றின் இருப்பிட எல்லைகள் குறைந்துவிட்டன என்பதையும் குறிப்பிட்டுள்ளது.



Original article:

Share: