சண்டிகர் மேயர் தேர்தலை உச்ச நீதிமன்றம் ஏன் ரத்து செய்தது?, அது ஏன் முக்கியமானது என்பதை பற்றி பிரிவு 142 விளக்குகிறது. -ஹினா ரோஹ்தகி , அனந்தகிருஷ்ணன் ஜி

 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, சண்டிகர் மேயர் தேர்தலின் முடிவை ரத்து செய்தது. மேலும், அவரகள்  குல்தீப் குமாரை சரியான வெற்றியாளராக அறிவித்தனர். ஆனால் முழு தேர்தல் செயல்முறையையும் ரத்து செய்யவில்லை.


சண்டிகர் மேயருக்கான ஜனவரி 30 தேர்தல் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party (AAP)) மற்றும் காங்கிரஸ் (Congress) வேட்பாளர் குல்தீப் குமார் டைட்டாவுக்கு அளிக்கப்பட்ட 8 வாக்குகளை வேண்டுமென்றே அனில் மாசிஹ் செல்லாததாக்கியதைக் கண்டறிந்த உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. 


எந்த விதியின் அடிப்படையில் நீதிமன்றம் தேர்தல் முடிவை ரத்து செய்தது?


தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யவும், நமது ஜனநாயகத்தின் நேர்மையைப் பாதுகாக்கவும் நீதிமன்றம் அரசியலமைப்பின் 142-வது பிரிவைப் பயன்படுத்தியது. ”இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால், நமது நாட்டில் ஜனநாயகத்தின் முழு கட்டமைப்பையும் நம்பியிருக்கும் அடிப்படைக் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்" என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.


"மனுதாரர் 12 வாக்குகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், செல்லாதவை என வகைப்படுத்தப்பட்ட எட்டு வாக்குகள் தவறாகக் கருதப்பட்டன" என்றும், "அவை ஒவ்வொன்றும் செல்லாத வாக்குகள் உண்மையில் செல்லுபடியாகும்” என்று  மனுதாரருக்கு ஆதரவாக கூறப்பட்டது. 


குல்தீப் உண்மையில் 20 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே சமயம் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்த நேரத்தில்,  தலைமை அதிகாரியால் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


இந்த மேயர் தேர்தல் ஏன் முக்கியமானது?


சண்டிகர் மாநகராட்சியின் மேயர் முக்கியமாக கூட்டங்களை அழைத்து செயல்திட்டங்ககளை தீர்மானிக்கிறார். மேலும், சண்டிகர் மாநகராட்சிக்கு ஐந்தாண்டு பதவி காலம் இருந்தாலும், ஓராண்டுக்கு மட்டுமே மேயர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு பதவிக்காலத்தின் முதல் மற்றும் நான்காவது ஆண்டுகளில் ஒரு பெண் வேட்பாளருக்கு இந்த பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2021ல் தேர்தல் நடைபெற்றது.


இந்த ஆண்டு தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான முதல் கூட்டணியை பாஜகவுக்கு எதிராக அமைத்தது. இது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிகளை வடிவமைக்கும் திறன் கொண்டது. எதிர்க்கட்சியான இந்தியா அணியின் ஒரு பகுதியாக உள்ள கட்சிகள் டெல்லியில் தொகுதி வாரியாக பங்கீடு குறித்து விவாதித்துள்ளன. இருப்பினும் அவை பஞ்சாபில் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளன.




தேர்தலுக்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது? 


தேர்தல்கள் முதலில் ஜனவரி 18-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, தலைமை அதிகாரி அனில் மசிஹ் உடல்நிலை சரியில்லாததால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. யூனியன் பிரதேச நிர்வாகம் பிப்ரவரி 6 ஆம் தேதி தேர்தலை நடத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததது. இருப்பினும், குல்தீப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், இது ஜனவரி 30 ஆம் தேதி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.


தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும், காங்கிரஸுக்கு ஏழு கவுன்சிலர்களும் இருந்தனர். இது 36 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. பாஜகவுக்கு கவுன்சிலர்கள் மற்றும் சண்டிகர் மக்களவை உறுப்பினர் கிரண் கெரின் வாக்குகளையும் சேர்த்து 15 வாக்குகள் இருந்தன. மேலும், ஒரு கவுன்சிலர் சிரோமணி அகாலிதளத்தை (Shiromani Akali Dal (SAD)) சேர்த்து, பாஜக மொத்தம் 16 வாக்குகள் பெற்று ஆதரவு தெரிவித்தது.


தேர்தல் நாளன்று, ஆம் ஆத்மி-காங்கிரஸுக்கு எட்டு வாக்குகள் செல்லாது என்று தலைமை அதிகாரி மாசிஹ் நிராகரித்த பின்னர், பாஜகவின் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


மேயர் தேர்தலுக்குப் பிறகு நடந்தது என்ன?


வாக்குச் சீட்டுகளை செல்லாததாக்க மாசிஹ் குறியிடுவதைக் காட்டிய வீடியோக்களுக்குப் பிறகு, குல்தீப் இந்த விஷயத்தை உயர் நீதிமன்றத்திற்கும் பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றார்.


பிப்ரவரி 5 அன்று, தலைமை நீதிபதி சந்திரசூட், மாசிஹ் வாக்குச் சீட்டுகளை சிதைத்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் கூறினார். ஜனநாயகத்தின் "கேலி" (mockery) மற்றும் ஜனநாயக "கொலை" (murder) குறித்து நீதிமன்றம் தனது  திகைப்பூட்டும் நிலையை வெளிப்படுத்தியது.  ஜனவரி 19 அன்று மாசிக்கிற்கு  சம்மன் அனுப்பியது.

பாஜக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், வாக்குச் சீட்டுகள் செல்லாதவை என்று காட்டுவதற்காக மாசிஹ் அவற்றைக் குறியிட்டதாக நீதிமன்றம் கண்டறிந்தது.


நீதிமன்றம் மாசிஹ்யின் நடத்தையை விமர்சித்தது, "முதலில்,... அவர் மேயர் தேர்தலின் போக்கை சட்டவிரோதமாக மாற்றியுள்ளார்" என்றும், "இரண்டாவதாக, பிப்ரவரி 19 அன்று இந்த நீதிமன்றத்தின் முன் ஒரு ஆணித்தரமான அறிக்கையை அவர் வெளிப்படுத்தினார். ஒரு காப்புரிமை பொய்யானது, அதற்காக அவர் பொறுப்பேற்க வேண்டும்."


சிதைக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவதற்காக குறியிட்டதாக மாசிஹ் திங்களன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். செவ்வாய்க்கிழமை, அவருக்கு காரணம் காட்ட நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவுக்கு மாறினர். தேர்தல் முடிவை ரத்து செய்வதற்குப் பதிலாக புதிய தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால், ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியின் மொத்த எண்ணிக்கை 20ல் இருந்து 17 ஆகக் குறைந்திருக்கும். அதே சமயம் பிஜேபியின் வாக்குகள் 19 ஆக அதிகரித்திருக்கும் (சிரோமணி அகாலிதளம் (SAD) கவுன்சிலரின் வாக்கு மற்றும் மக்களவை உறுப்பினர் கேர் உட்பட). இது 36 வாக்குகளில் பெரும்பான்மையை பாஜகவுக்குக் கொடுத்திருக்கும். பாராளுமன்ற தேர்தல் அல்லது மாநில சட்டசபை தேர்தல் போல், மாநகராட்சி தேர்தல்களில் கட்சி தாவல் தடைச் சட்டம் (anti-defection law) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




Original article:

Share: