தேர்தல் அறிக்கை தருணம் முதல் பட்ஜெட் ஏமாற்றம் வரை -அனிஷ் கவாண்டே

 2024 தேர்தலுக்கு முந்தைய அரசியல் வாக்குறுதிகள் “பால் புதுமையினர்” (Lesbian, gay, bisexual, and transgender (LGBTQ+)) சமூகத்திற்கு நம்பிக்கையை அளித்தாலும், ஒன்றிய பட்ஜெட்டின் ஒதுக்கீடுகள் ஏமாற்றமளிக்கின்றன.



2024 பொதுத் தேர்தலுக்கு முன்னர் பல முக்கிய அரசியல் கட்சிகள் LGBTQ+ சமூகத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தன. இருப்பினும், 2024 ஒன்றிய  பட்ஜெட் தேசிய அரசியலில் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இந்த சமூகத்திற்கு ஏமாற்றம் அளித்தது.

 

LGBTQ+ உரிமைகளுக்கான அரசாங்கத்தின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. குறிப்பாக, சொலிசிட்டர் ஜெனரல் கடந்த ஆண்டு ஒரே பாலின திருமணத்தை கடுமையாக எதிர்த்தார். இருப்பினும், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் திருநங்கைகளின் உரிமைகள் பற்றி குறிப்பிட்டது. மோடி 3.0 அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கை அளித்தது.


மாறாக, LGBTQ+ சமூகத்தை பற்றி பட்ஜெட்டில் பெயரளவு குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வாழ்வாதாரம் மற்றும் நிறுவனத்திற்கான விளிம்புநிலை தனிநபர்களுக்கான ஆதரவு (Support for Marginalized Individuals for Livelihood and Enterprise (SMILE)) திட்டத்தின் கீழ் "திருநங்கைகள் நலனுக்கான விரிவான மறுவாழ்வுக்கான” நிதி அளித்தது. இந்த திட்டம் தங்குமிடம் (கரிமா கிரஹாஸ்), உதவித்தொகை மற்றும் திருநங்கைகளுக்கான தேசிய ஆணையத்திற்கு (National Council for Transgender) நிதியளிக்கும்.

 

முக்கியமான திட்டங்களுக்கு அற்ப நிதி (Meagre funding)   


காகிதத்தில், திருநங்கைகள் நலனுக்கான பட்ஜெட் நிதியாண்டில் ₹52.91 கோடியிலிருந்து 2025-ஆம் நிதியாண்டில் ₹68.46 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2024-ஆம் நிதியாண்டில் ₹22.82 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. பல கரிமா கிரஹாக்கள் (தங்கும் இல்லங்கள்) நிதிப் பற்றாக்குறையால் மூடப்பட்டிருப்பதாலும், திருநங்கைகளுக்கான தேசிய ஆணையம் (National Council for Transgender Persons (NCTP)) அரிதாகவே செயல்படுவதாலும் இந்த இடைவெளி தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆண்டுக்கான நிதியில் ஒரு சிறிய அதிகரிப்பு மட்டுமே இருப்பதால், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையான சங்கல்ப் பத்ராவில் குறிப்பிடப்பட்டுள்ள கரிமா கிரஹாக்கள் (தங்கும் இல்லங்கள்) உருவாக்குவதற்கான வாக்குறுதியை யார் நிறைவேற்றுவார்கள் என்று தெரியவில்லை. வாழ்வாதாரம் மற்றும் நிறுவன திட்டத்திற்கான விளிம்புநிலை தனிநபர்களுக்கான ஆதரவு (Support for Marginalized Individuals for Livelihood and Enterprise (SMILE)) பாதிக்கப்படும் ஒரே திட்டம், புன்னகை அல்ல. மற்றொரு கவலை என்னவென்றால், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புக்கான (National AIDS Control Organisation (NACO)) நிதி குறைக்கப்பட்டுள்ளது. இது 2024-ஆம் நிதியாண்டில் ₹3,079.97 கோடியிலிருந்து 2025-ஆம் நிதியாண்டில்  ₹2,892.00 கோடியாகக் குறைந்துள்ளது.


நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி எதிர்த்துப் போராடுவதற்கும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு முக்கியமானது. முன்னேற்றம் இருந்தபோதிலும், இந்தியா இன்னும் உலகளவில் மிகப்பெரிய மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது. LGBTQ+ இந்தியர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.தற்போது, ​​இந்தியாவில் 2.4 கோடி மக்ககளில்  மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) நோய்க்கு கிட்டத்தட்ட 900,000 பேர் சிகிச்சை பெறவில்லை. மேலும், அரை கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது கூட தெரியாது.

 

உரிமை மறுப்பு (denial of rights) 


நிதிப் பற்றாக்குறை என்பது மோசமான முன்னுரிமைகள் அல்லது நம்பிக்கைகளில் உள்ள வேறுபாடுகள் மட்டுமல்ல. இது கோடிக்கணக்கான LGBTQ+ இந்தியர்களின் உரிமைகளை முறையாக மறுப்பது, நாட்டின் வளங்களில் சமமான பங்கை அவர்கள் பெறமுடியாமல்  தடுக்கிறது. எண்கள் சிக்கலை வெளிப்படுத்துகின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4.9 லட்சம் திருநங்கைகள் இந்தியர்கள். 2024-ஆம் பட்ஜெட்டில் திருநங்கைகளுக்கு ₹1,400 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளின் எண்ணிக்கை சுமார் 1.22 கோடி என்று மிகவும் துல்லியமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு திருநங்கைக்கு நிதியானது ₹56 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.


அரசியலமைப்புச் சட்டம் அனைவரையும் பாதுகாக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகளில் ஊக்குவிக்கப்பட்ட இளம் இந்தியர்களுக்கு, பள்ளிகளில் துன்புறுத்தலைத் தடுக்க பாதுகாப்பான இடங்களை உருவாக்கும் அரசாங்கம் தேவை. LGBTQ+ இளைஞர்களிடையே அதிகரித்து வரும் தற்கொலை விகிதங்களை நிவர்த்தி செய்வதற்கும், கல்வி மற்றும் வேலைகளுக்கு சமமான அணுகலைப் பெறுவதற்கும் உள்ளடங்கிய மனநலப் பாதுகாப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது.


2020-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் திருநங்கைகள் நல வாரியத்தை நிறுவியது மற்றும் 2024-ல் தமிழ்நாட்டின் LGBTQ+ (Tamil Nadu’s LGBTQ+ policy) கொள்கையை வரைவு செய்தது போன்ற சமீபத்திய தீர்ப்புகள், நீதித்துறை முன்னேற்றம் குடிமை சமூக அழுத்தத்தால் ஆதரிக்கப்படும்போது நிர்வாக நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது என்பதைக் காட்டுகிறது. 

 

அனிஷ் கவாண்டே, தேசிய செய்தித் தொடர்பாளர், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) மற்றும் நிறுவனர், பிங்க் லிஸ்ட் இந்தியா



Original article:

Share: