புதிய அமைச்சர்கள் குழு மற்றும் காப்பீடுகளுக்கான வரி மாற்றங்கள் குறித்து..

 சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) குழு கூட்டம் காப்பீட்டு நுகர்வோருக்கு சில நிவாரணங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. 


2024 பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST))  குழு இரண்டாவது முறையாக கூடியது. இந்த சந்திப்பு செப்டம்பர் 9, 2024 திங்கட்கிழமை அன்று நடந்தது. காப்பீட்டுத் தவணைத் தொகை (insurance premium payments) செலுத்துவதில் 18% மறைமுக வரி குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதை குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. 


ஆயுள் மற்றும் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகள் மீதான வரிகளில் மாற்றங்களை விரைவில் பரிந்துரைப்பதற்காக குழு புதிய அமைச்சர்கள் குழுவை உருவாக்குகிறது. குழுவின் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்ய நவம்பர் மாதம் மீண்டும் கூட்டம் நடத்த இருப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.


கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் காப்பீட்டுக்கான வரியை வலுவாக ஆதரித்தது குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. மாநிலங்கள் இந்த வருவாயில் பெரும் பகுதியைப் பெறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், வரியை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் முடிவில் அங்கம் வகிப்பதால், அவர்கள் தங்களது மாநில அமைச்சர்களுடன் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் கூறினார்.


சரக்கு மற்றும் சேவை வரி  குழு ஜூலை 2017-ல் சரக்கு மற்றும் சேவை வரி தொடங்கப்பட்டதில் இருந்து குறைந்தபட்சம் மூன்று முறை காப்பீடு மீதான வரியை குறைப்பதாக கூறியது. இருப்பினும், ஒவ்வொரு வரி விதிப்பில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படாமல் பழைய நிலையே தொடர்கிறது.

 

இந்த முறை, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களும் வரி குறைப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆயுள் காப்பீட்டுத் தவணைத் தொகை வரி விதிப்பது என்பது நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பது போன்றது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். கூடுதலாக, ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கூட்டணி கட்சிகளான, தெலுங்கு தேசம் கட்சி (Telugu Desam Party (TDP) மற்றும் ஜன சேனா கட்சிகளும், உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரிகளை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன. 


தேர்தலுக்குப் பிறகு சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பற்றி பேச வேண்டாம் என்று என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நுகர்வோர் மீது அதிக வரி விதிப்பதாக பலர் இதைப் பார்க்கிறார்கள். 2021-22-ஆம் ஆண்டு மற்றும் 2023-24-ஆம் ஆண்டு இடையில் சுகாதார காப்பீட்டு தவணைத் தொகையிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி  வருவாய் 54% மேல் அதிகரித்துள்ளது.  கடந்த ஆண்டு வரி வசூல் ரூ.8,262 கோடியாக இருந்தது. 


ஆயுள் காப்பீட்டின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியில் எந்தக் குறைப்பும், குழுக் கொள்கைகள் அல்லது மூத்த குடிமக்கள் போன்ற குறிப்பிட்ட குழுக்களுக்கு மட்டும் அல்ல. அது குறைந்த தொகையில் ஆயுள் காப்பீடு  பெறுவதற்கு வழிவகுக்கும். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, மக்களுக்கு ஆயுள் காப்பீடு தேவை அதிகமாகிவிட்டது. ஆனால், மருத்துவமனையில் தங்குவதற்கும் காப்பீடு செய்வதற்கும் ஆகும் செலவுகள் இன்னும் அதிகமாகிவிட்டன.


இந்தியாவின் பொது சுகாதார அமைப்புகள் இன்னும் போதுமானதாக இல்லை.  ஒரு குடும்ப உறுப்பினரை மட்டுமே பாதிக்கும் ஒரு கடுமையான நோய் ஒரு சராசரி குடும்பத்தை வறுமையில் தள்ளும். ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் ஆயுள் காப்பீடு கொள்கைகளுக்கு அதிக நிவாரணம் வழங்க வேண்டும். இதனால் இக்கொள்கைகள் குடும்பங்களின்  கடினமான சூழ்நிலைகளில் உதவும். மறுபுறம், காப்பீடாக விற்கப்படும் சந்தை முதலீட்டு தயாரிப்புகளுக்கு அதே நிவாரணம் தேவையில்லாத ஒன்று. 


சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் அறிவுரைப்படி, ஹெலிகாப்டர் சேவைகளுக்கு 'பகிர்வு இருக்கை' (‘shared seat’) அடிப்படையில் 5% ஜிஎஸ்டி இருந்தால் மட்டுமே, காப்பீட்டு  கொள்கைகள்  அதிக தீங்கற்ற வரிவிதிப்புக்கு தகுதியானவை.



Original article:

Share: