மணிப்பூரில் நடக்கும் இனக்கலவரத்திற்கு காரணம் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில், 2023-ம் ஆண்டில் கிளர்ச்சி தொடர்பான வன்முறை அதிகரித்ததாக உள்துறை அமைச்சகம் (MHA) குறிப்பிட்டிருந்தது. இதில், முக்கியமாக மணிப்பூரில் உள்ள இனக்கலவரத்தின் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. மெய்தேய், நாகா, குகி, சோமி மற்றும் ஹ்மார் குழுக்கள் உட்பட பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களின் நடவடிக்கைகளால் மணிப்பூர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.


2. 2023-ம் ஆண்டில் வட-கிழக்கு பிராந்தியத்தில் (North-East Region (NER)) நடந்த வன்முறை சம்பவங்களில் மணிப்பூர் 77% என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மணிப்பூரில் 187 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அதே நேரத்தில், முழு வட-கிழக்கு பிராந்தியத்தில் (NER) 243 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் 33 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக கிளர்ச்சியாளர்கள், 184 பேர் கைது, 49 ஆயுதங்கள் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக, 80 கிளர்ச்சி குழு உறுப்பினர்கள் சரணடைந்தனர். மேலும், 31 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.


3. மணிப்பூருக்கு ஒன்றிய அரசு சிறப்பு உதவி வழங்கியுள்ளதாகவும், இந்த ஆண்டு மார்ச் 31 வரை ரூ.247.26 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


4. தரவுகளின்படி, 2021-ம் ஆண்டில் 209 கிளர்ச்சி தொடர்பான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 23 பொதுமக்கள், எட்டு பாதுகாப்புப் படையினர் மற்றும் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 686 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் 1,473 தீவிரவாதிகள் சரணடைந்தனர், 368 ஆயுதங்கள் மீட்கப்பட்டன, 471 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன, 94 பேர் கடத்தப்பட்டனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


5. இந்த ஆண்டு மார்ச் 31 வரை, 77 கிளர்ச்சி தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களில், ஒன்பது பொதுமக்களும், நான்கு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஐம்பத்து மூன்று பேர் கடத்தப்பட்டனர். நூற்று இருபத்தைந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர், 25 பேர் சரணடைந்தனர். ஐம்பத்தொரு ஆயுதங்கள் மீட்கப்பட்டன, ஏழு ஆயுதங்கள் திருப்பி அனுப்பப்பட்டன என்று அறிக்கை கூறுகிறது.


7. அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள தொலைதூரப் பகுதிகளை இணைக்க ஹெலிகாப்டர் மானியத் திட்டத்தை (helicopter subsidy scheme) உள்துறை அமைச்சகம் (MHA) செயல்படுத்துகிறது.


உங்களுக்கு தெரியுமா?


1. மணிப்பூரில் உள்ள மிகப்பெரிய சமூகம் மெய்தேயி இனத்தவர் ஆவர். அரசால், அங்கீகரிக்கப்பட்ட 34 பழங்குடியினர் உள்ளனர். அவை 'ஏதேனும் குக்கி பழங்குடியினர்' (Any Kuki Tribes) மற்றும் 'ஏதேனும் நாகா பழங்குடியினர்' (Any Naga Tribes) என பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் மத்திய பள்ளத்தாக்கு மணிப்பூரின் நிலப்பரப்பில் சுமார் 10% ஆகும். மேலும், இது முதன்மையாக மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 64.6% உள்ள மெய்தேய் (Meitei) மற்றும் மெய்தேய் பங்கல்களின் (Meitei Pangals) தாயகமாகும். மாநிலத்தின் புவியியல் பரப்பளவில் மீதமுள்ள 90% பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைகளை உள்ளடக்கியது. அவை, அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினரின் தாயகமாகும். இது மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 35.4% ஆகும். 


2. மே 3, 2023 அன்று, மணிப்பூரில் இம்பால் பள்ளத்தாக்கின் பெரும்பான்மைக் குழுவான மெய்தேய் மற்றும் சுற்றியுள்ள மலைகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கு (Kuki-Zo tribals) இடையே இன வன்முறை வெடித்தது. பழங்குடியினரின் அமைதியின்மையைக் கையாள்வதில் ஒரு முக்கிய பாடத்தை இந்திய அரசு மறந்துவிட்டதாகத் தெரிகிறது. வன்முறையை நிறுத்துவதே முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். 


இருப்பினும், குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளால் இது விரைவாகப் பின்பற்றப்பட வேண்டும். ஒரு நடுத்தர நிலத்தைக் கண்டுபிடித்து வேறுபாடுகளை சரிசெய்ய வேண்டியது அவசியம். பல்வேறு நிலைகளில் அமைதிக் குழுக்கள் (Peace committees) அமைக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் நேர்மையைக் காட்டவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவும் அரசியல் முயற்சிகள் தேவை. இந்த அணுகுமுறை WHAM அணுகுமுறை எனப்படும் இதயங்களையும் மனதையும் வெல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.




Original article:

Share: