இலவச உணவு, நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) கீழ் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா என்பதை நிபுணர்கள் தீர்மானிக்க வேண்டும் -ஜியா ஹக்

 5,00,000 தொலைதூர நியாய விலைக் கடைகளின் வலையமைப்பைக் கொண்ட பொது விநியோக முறை (public distribution system(PDS)) அல்லது PDS-ன் கீழ் இலவச ரேஷன் பொருட்களை எவ்வாறு "நடத்துவது" என்பது குறித்து நிபுணர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு விவாத அறிக்கையை வெளியிட்டுள்ளது. 


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) 2013-ன் கீழ் கிட்டத்தட்ட 800 மில்லியன் மக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவானது, பணவீக்கக் கணக்கீடுகளில் (inflation calculations) இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டுமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க விரும்புகிறது. இது புதிய, புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டை (consumer price index (CPI)) உருவாக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகும். இது சில்லறை விலையில் ஏற்படும் மாற்றங்களை அளவிடும்.


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு விவாதக் கட்டுரையை வெளியிட்டுள்ளதாவது, பொது விநியோக முறையின் (public distribution system (PDS)) மூலம் விநியோகிக்கப்படும் இலவச உணவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த நிபுணர்களின் கருத்துகளை இது குறிப்பிடுகிறது. PDS ஆனது 500,000 நியாய விலைக் கடைகளின் வலையமைப்பை உள்ளடக்கியது.


குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) 2022-23 தொடங்கப்பட்ட பிறகு, 2012 முதல் 2024 வரை நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படை ஆண்டை (base year) திருத்தம் செய்வதற்கு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) முடிவு செய்தது. தற்போது, அடிப்படை ஆண்டை (base year) மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது என்று நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து இலவச பொது விநியோக முறையின் (public distribution system (PDS)) மூலம் பொருட்களை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார். இதற்கான, நிபுணர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜனவரி 15 ஆகும். 


வேகமாக மாறிவரும் நுகர்வு முறைகளைக் கருத்தில் கொண்டு, பொதுவான பொருட்கள் மற்றும் சேவைகளின் பொதுவான சில்லறை விலைகளில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் துல்லியமாக கண்காணிக்க நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மறுசீரமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கும், அதற்கு மேலே இருப்பவர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும். PDS ரேஷன் ஆனது, முன்பு அதிக மானியத்துடன் வழங்கப்பட்டது. 


நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும் பயனாளிகள், ஒரு கிலோ அரிசிக்கு 3 ரூபாய், ஒரு கிலோ கோதுமைக்கு 2 ரூபாய், சிறுதானியங்களுக்கு 1 ரூபாய் என்ற பெயரளவு விலையை இன்னும் செலுத்த வேண்டியிருந்தது. 2023 முதல், அரசாங்கம் தானியங்களை இலவசமாக வழங்கத் தொடங்கியது. 2021 முதல், இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இது முக்கியமாக வானிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த பணவீக்கத்தையும் அதிகரித்துள்ளது.


நிபுணர்களின் கூற்றுப்படி, தற்போதைய CPI மாதிரி இரண்டு முக்கிய காரணங்களால் காலாவதியானதாகிவிட்டது. ஒன்று, தற்போதைய நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 2012 உடன் குறியிடப்படுகிறது. இது அடிப்படை ஆண்டு (base year) என்று அழைக்கப்படுகிறது. இதை பத்தாண்டிற்கும் மேலாக வரம்பை நிர்ணயிக்கிறது. அடிப்படை ஆண்டில் விலைகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சியைக் கணக்கிட ஒரு குறிப்பு நிலையாக (reference point) செயல்படுகிறது. இது 2024 வரை புதுப்பிக்கப்படுகிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


இரண்டாவதாக, குடும்பங்களின் நுகர்வு-செலவு முறைகள் 2012 முதல் மாறிவிட்டன. நுகர்வோர் பொதுவாக தங்கள் ஒட்டுமொத்த செலவினங்களின் விகிதாச்சாரமாக உணவுக்கு குறைவாக செலவிடுகிறார்கள். உணவு மற்றும் பான வகை தற்போதைய CPI உள்ளடக்கத்தில் 54.2% ஆகும். 


"புதிய CPI நடவடிக்கையில் உணவு போன்ற இலவச சமூக இடமாற்றங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பது பற்றிய தெளிவான புரிதல் எங்களுக்குத் தேவை" என்று அந்த அதிகாரி கூறினார்.


சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்களின்படி, CPI ஆனது குடும்பங்களின் இறுதி நுகர்வு செலவினங்களை மட்டுமே சேர்க்க வேண்டும். உணவு போன்ற இலவச சமூக இடமாற்றங்கள் குறியீட்டிலிருந்து விலக்கப்பட வேண்டும்.


கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தைச் சேர்ந்த அரிஹந்த் வாஜ்பாய், IMF பரிந்துரைத்தபடி, பணவீக்கக் கணக்கீடு பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றார்.

                     



Original article:

Share: