விலங்குக் கழிவுகளில் செல்வம். -அனில் குமார், பிரதாப் எஸ் பர்தல்

 இது அதிக ஆற்றல் திறன் கொண்ட ஒரு பசுமையான ஆற்றல் மூலமாகும்.


இந்தியா இறக்குமதி செய்யப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (liquefied natural gas (LNG)) மற்றும் உரங்களையே அதிகம் சார்ந்துள்ளது. 2022 முதல் 2024 வரை, அது ஒவ்வொரு ஆண்டும் 22 மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் 8 மில்லியன் டன் உரங்களை இறக்குமதி செய்தது. இது அதன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தேவைகளில் 46% மற்றும் அதன் உர தேவையில் 31%-ஐ பூர்த்தி செய்கிறது.


வெளிநாட்டு ஆதாரங்களை அதிகமாகச் சார்ந்திருப்பது நாட்டின் அந்நியச் செலாவணி இருப்புக்களை மோசமாக்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் உணவு உற்பத்தி, விவசாய லாபம் மற்றும் உணவு விலைகளைப் பாதிக்கும் ஏற்ற இறக்கமான உலகளாவிய விலைகளுக்கு நாடு ஆளாகிறது. மேலும், அதிகரித்து வரும் புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் இரசாயன உரங்களின் பயன்பாடு இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் சேதப்படுத்துகிறது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.


விவசாயம் இந்தப் பிரச்சினைகளுக்கு பங்களிப்பதோடு தீர்வுகளையும் வழங்குகிறது. இந்தியாவில் 303 மில்லியன் கால்நடைகள் மற்றும் எருமைகள் உள்ளன. இந்த கால்நடைகளின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1,271 மில்லியன் டன்களுக்கு மேல் சாணத்தை உற்பத்தி செய்கின்றன. பெரும்பாலும் கழிவுகளாகக் காணப்படும் இந்த சாணத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகவும் இயற்கை உரமாகவும் மாற்றலாம்.


புதிய தொழில்நுட்பம் இப்போது விவசாயத்தை ஆதரிக்கும் அதே வேளையில் வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு சாணத்தை சுத்தமான எரிபொருளாக மாற்ற உதவியுள்ளன.


சாணப் பொருளாதாரம்


இந்தியாவில், மொத்த சாணத்தில் 35 சதவீதம் கிராமப்புற வீடுகளால் பாரம்பரிய வீட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 65 சதவீதம் உரமாக்குவதற்குக் கிடைக்கிறது.


இந்தப் பயன்பாட்டு முறையைக் கருத்தில் கொண்டு, சாணம் 2.64 மில்லியன் டன் நைட்ரஜன், 1.16 மில்லியன் டன் பாஸ்பரஸ் மற்றும் 2.48 மில்லியன் டன் பொட்டாசியத்தை மண்ணில் சேர்க்கிறது. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வணிக ஆதாரமாக சாணத்தின் திறன் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.


நிலவும் பயன்பாட்டு முறையைக் கருத்தில் கொண்டு, விவசாயத்திற்கு அதன் ஊட்டச்சத்து பங்களிப்பை சமரசம் செய்யாமல் ஆற்றல் உற்பத்திக்காக உரமாக தற்போது பயன்படுத்தப்படும் சாணத்தை பதப்படுத்துவதன் மூலம் 13.4 மில்லியன் டன் உயிர் - அழுத்த இயற்கை எரிவாயுவை (compressed natural gas (CNG)) உருவாக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 1,270 மில்லியன் டன் சாணம் முழுவதும் பதப்படுத்தப்பட்டால், அது 21.8 மில்லியன் டன் உயிர் - அழுத்த இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும்.  இது நாட்டின் lNG இறக்குமதிக்கு சமமானதாகும். மேலும், இந்த செயல்முறை கூடுதலாக 3.4 மில்லியன் டன் கரிம உரத்தை உருவாக்குகிறது. இது உர இறக்குமதியை 43 சதவீதம் குறைக்கும்.


சாண உரத்தை பதப்படுத்துவது, நிர்வகிக்கப்படாத கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படும் மீத்தேன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைக்கும். மேலும், சாணத்தை பதப்படுத்துவதில் இருந்து மீதமுள்ள மண்ணின் அமைப்பு மற்றும் நீர் தக்கவைப்பை மேம்படுத்தி, நீண்டகால வளத்தை அதிகரிக்கும் உரமாக செயல்படுகிறது. அரசாங்கம் இயற்கை மற்றும் கரிம விவசாயத்தை ஊக்குவிப்பதால், சாணம் சார்ந்த உரங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சாணத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் சாத்தியமான உயிரி-LNG 31.9 பில்லியன் லிட்டர் பெட்ரோலுக்கு சமம். இது எரிபொருள் மாற்றாகப் பயன்படுத்தப்படும்போது 60 சதவீதம் வரை கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும்.


தீவனப் பிரச்சினைகள்


சுத்தமான சமையல் எரிபொருளை வழங்குவதற்கும், புதைபடிவ எரிபொருள் சார்புநிலையைக் குறைப்பதற்கும் சாணத்திலிருந்து உயிரிவாயு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அரசாங்கங்களின் திட்டங்கள், வீட்டு மட்டத்தில் போதுமான தீவனப் பொருட்கள் கிடைப்பதால், குறைந்த அளவிலான வெற்றியை அடைந்துள்ளன.


இருப்பினும், வணிக அளவில் உயிரிவாயு மற்றும் உயிரி-LNG உற்பத்திக்கு சாணத்தைப் பயன்படுத்துவதை நோக்கி கொள்கை முக்கியத்துவம் இப்போது மாறி வருகிறது.


இந்த மாற்றத்தை ஆதரிக்க, விவசாயிகளுக்கு திறமையான சாண சேகரிப்பு மாதிரிகள் மற்றும் சலுகைகளை உருவாக்குவது அவசியம். குறிப்பாக, புதிய உயிரி ஆற்றல் வசதிகளுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் உயிரிவாயு மற்றும் உயிரி-LNG திட்டங்களில் முதலீட்டை ஊக்குவிக்க கார்பன் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.


குமார் முதன்மை விஞ்ஞானி மற்றும் பிரதாப் எஸ் பிர்தல், புது தில்லியில் உள்ள ICAR-தேசிய வேளாண் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்.


Original article:
Share: