வெளிநாட்டு பங்கு முதலீட்டாளர்களின் (FPI) முக்கியத்துவம் என்ன? -ரோஷ்னி யாதவ்

 

Foreign portfolio investors (FPI) - வெளிநாட்டு பங்கு முதலீட்டாளர்கள் : இவர்கள் பொதுவாக பங்குச் சந்தைகள் மூலம் பங்குகள், பத்திரங்கள் மற்றும் பிற நிதிச் சொத்துக்களில் குறுகிய கால நோக்கில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆவர்.


முக்கிய அம்சங்கள் :


வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களை (foreign portfolio investors (FPI)) கருத்தில் கொள்ளுங்கள். இவர்கள், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (ஏப்ரல்-மார்ச்) 2021-22 வரை, ஒரே ஒரு வருடத்தில் (2023-24) இந்திய பங்குச் சந்தைகளில் நிகர FPI $25.3 பில்லியன் வரவுகளைக் கண்டது. மற்ற ஆண்டுகளில், FPI-கள் தாங்கள் முதலீடு செய்ததை விட அதிகமாக திரும்பப் பெற்றன. இது, 2021-22ல் $18.5 பில்லியன், 2022-23ல் $5.1 பில்லியன், 2024-25ல் $14.6 பில்லியன் மற்றும் 2025-26ல் (செப்டம்பர் 5 வரை) $2.9 பில்லியன் என வெளியேற்றப்பட்டது.


பொதுவாக, அதிக விகிதத்தில் வளரும் ஒரு பொருளாதாரம், அந்த வளர்ச்சியின் பலன்களில் பங்குகொள்ள ஆர்வமுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனச் செயல்பாடுகளை ஈர்க்கும். இதில், மூலதனப் பற்றாக்குறை உள்ள இந்தியா போன்ற நாட்டிற்கு, வெளிநாட்டுப் பணமும் ஒரு தேவையாகும்.


ஆனால், அதனுடன் உள்ள அட்டவணை இந்தியாவுக்குள் நிகர மூலதன செயல்பாட்டைக் காட்டுகிறது.  இதில் வெளிநாட்டு முதலீடு, வணிகக் கடன்கள், வெளிப்புற உதவி மற்றும் வெளிநாடு வாழ் இந்திய வைப்புத்தொகை ஆகியவை அடங்கும். 2024-25 ஆம் ஆண்டில் வெறும் $18.3 பில்லியன் ஆகும். இது உலக நிதி நெருக்கடியான 2008-09-ல் $7.8 பில்லியன் டாலர்களுக்குப் பிறகு இது மிகக் குறைவு மற்றும் 2007-08 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு $107.9 பில்லியனை விட மிகக் குறைவாகும்.


நடப்பு நிதியாண்டில் இந்த போக்கு தொடர்கிறது. ஏப்ரல்-ஜூன் 2025-ல் மூலதன வரவுகள் ஏப்ரல்-ஜூன் 2024 உடன் ஒப்பிடும்போது 40%-க்கும் அதிகமாக குறைந்துள்ளது. சமீபத்திய காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்த்ததை விட 7.8% ஆக இருந்தபோதும் இது நடந்தது.


இது ஒரு வெளிப்படையான கேள்வியை எழுப்புகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏன் இந்திய வளர்ச்சிக் கதையில் பங்கு பெறவில்லை? முன்னதை விட இப்போது நாட்டின் பொருளாதார எதிர்காலம் குறித்து அவர்களுக்கு நம்பிக்கை குறைவாக உள்ளதா? அதிகாரப்பூர்வ வரவுச்செலவு சமநிலையின் (balance of payments (BOP)) தரவு இதற்கான உறுதித்தன்மையைப் பரிந்துரைக்கிறது.


உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதாரம் கடந்தகால முதலீடுகளுடன் தொடர்புடைய அதன் நிலைக்கு ஏற்றவாறு வெளிநாட்டு மூலதனச் செயல்பாடுகளை இந்தியா பெறவில்லை என்பதற்கான நம்பத்தகுந்த விளக்கமாகும்.


2010-களின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் வந்து 2020-21-ல் உச்சத்தை எட்டிய FDI இன் பெரும்பகுதி தனியார் பங்கு (private equity (PE)) மற்றும் துணிகர மூலதனம் (venture capital (VC)) வடிவத்தில் இருந்தது. இந்த முதலீடுகள் சில்லறை விற்பனை, மின் வணிகம், நிதி சேவைகள், பசுமை எரிசக்தி, சுகாதாரம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பல துறைகளில் சென்றன. இதில் முதலீடு செய்த பணத்தைப் போட்டவர்கள், தாங்கள் முதலில் வாங்கிய பங்குகளை, அதே வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மற்ற நிறுவனங்களுக்கோ அல்லது முதலீட்டு நிறுவனங்களின் ஆரம்பப் பொதுச் சலுகைகள் மூலமாகவோ விற்றுப் பணமாக்குகிறார்கள்.


இந்தியாவின் பொருட்களின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதியை விட மிக அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, பெரிய வணிகப் பற்றாக்குறைகள் 2007-08 முதல் 2024-25 இல் 287.2 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இருப்பினும், அதிகரித்து வரும் பொருட்களின் வர்த்தக பற்றாக்குறைகள் BOP இன் "கண்ணுக்கு தெரியாத" கணக்கில் உள்ள உபரிகளால் பெரிதும் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உபரிகள் முக்கியமாக சேவை ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அனுப்பும் தனியார் பணம் மூலம் வருகின்றன.


இந்த கண்ணுக்குத் தெரியாத உபரிகள் இந்தியாவின் வெளிப்புறப் பரிவர்த்தனைகளில் ஒட்டுமொத்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை பெரும்பாலான ஆண்டுகளில் $50 பில்லியனுக்கும் குறைவாகவே வைத்திருக்கின்றன. இந்தப் பற்றாக்குறைகள் மூலதன வரவுகளால் எளிதில் நிதியளிக்கப்படுகின்றன. மேலும், கூடுதல் வரவுகள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அந்நியச் செலாவணி இருப்புக்களில் சேர்க்கப்பட்டுள்ளன.


வர்த்தகப் பற்றாக்குறையை மேலும் விரிவுபடுத்துவது அல்லது மூலதனச் செயல்பாடுகள் நீர்த்து போவது போன்ற ஒரு சூழ்நிலையில், அந்த ஆறுதல் நீடிக்கப்படாமல் சவாலின் கீழ் வரலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கான 50% வரி விதிப்பு, குறிப்பாக 2024-25ல் அதன் மொத்தப் பொருட்கள் ஏற்றுமதியான 437.7 பில்லியன் டாலர்களில் 86.5 பில்லியன் டாலர்களைக் கொண்ட சந்தைக்கு ஏற்றுமதிகளைத் தடுக்கலாம்.


மூலதன வரவுகள் முக்கியமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. அவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எண்களில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. அவர்களின் முக்கிய கவலை பெருநிறுவன வருவாயாகும். இவை தங்கள் முதலீடுகளை நியாயப்படுத்தும் அளவுக்கு வருவாய் உயர்ந்து வருகிறதா என்பதுதான். அவர்களைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த வணிகச் சூழல் மற்றும் வருவாயின் நிலைத்தன்மை ஆகியவை முக்கியம். சந்தை மதிப்பீடுகள் நியாயமற்ற முறையில் உயர்ந்ததாகக் காணப்பட்டால், அவர்கள் புதிதாக முதலீடு செய்வதற்குப் பதிலாக பணத்தைப் பெறுவார்கள்.


இதனால்தான் நரேந்திர மோடி அரசாங்கம் சமீபத்தில் பல சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. உள்நாட்டு நுகர்வு மற்றும் நிறுவன வருவாயை அதிகரிக்க இது பொருட்கள் மற்றும் சேவை வரி விகிதங்களைக் குறைத்துள்ளது. இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக "அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான பணிக்குழு" (task force for next-generation reforms) ஒன்றையும் அது முன்மொழிந்துள்ளது.



Original article:

Share: