நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுரிமையைப் பாதுகாத்தல் -பி.டி.டி. ஆச்சாரி

 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரம் அவை விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது, இந்த விதிகள் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் என்று தவறாக நினைக்க வழிவகுத்துள்ளது.


நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள், அரசியலமைப்பின் 105-வது பிரிவால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அவைகளில் பேச்சு சுதந்திரம் குறித்த பிரச்சினையை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளன. இது அரசியலமைப்பின் பிற விதிகள் மற்றும் அவைகளின் விதிகளுக்கு உட்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரம் அவைகளின் விதிகளுக்கு உட்பட்டது என்பது, விதிகள் ஒரு வகையில் அரசியலமைப்பு உரிமைகளை மீறக்கூடும் என்ற தவறான எண்ணத்தை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையின் வேர் இந்தத் தவறான எண்ணத்தில் உள்ளது. குடிமக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள் அந்த உரிமைகளை முற்றிலுமாகப் பறிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்திற்கும் இது பொருந்தும். அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளை பின்பற்றி, நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நிர்வகிக்கும் நோக்கத்துடன் நாடாளுமன்ற விதிகள் உள்ளன.

வார்த்தைகளை நீக்குதல்


நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் பகுதியில், எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சு சுதந்திரத்தின் மீது அதிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தனது உரையின் பல பகுதிகள் நீக்கப்பட்டதாகக் கூறி, அவைத் தலைவருக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. நீக்கங்கள் தனது உரையைப் புரிந்துகொள்வதை கடினமாக்குவதாகக் கூறி, அவற்றை மீண்டும் சேர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் சுதந்திரமாகப் பேசுவதற்கும், தனது கருத்துக்களை அவையின் அதிகாரப்பூர்வ பதிவுகளில் பதிவு செய்வதற்கும் உரிமை உண்டு. ஒரு உரை முழுமையாகப் பதிவு செய்யப்படாவிட்டால், சிறிய உரை மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது பெரிய பகுதிகள் சீரற்ற முறையில் அகற்றப்பட்டிருந்தால் அது பிரிவு 105-ன் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமையை மீறுகிறது. விதி 380, நாடாளுமன்றத்திற்குப் புறம்பான, அவதூறான, அநாகரீகமான அல்லது கண்ணியமற்ற வார்த்தைகளை சபாநாயகர் நீக்க அனுமதிக்கிறது. ஆனால், முழு வாக்கியங்கள் அல்லது பத்திகளை அல்ல, புண்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே நீக்க அனுமதிக்கிறது. முறையான சட்டமன்ற விவாதத்தில், அத்தகைய புண்படுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்க கூடாது. சபாநாயகருக்கு  அவற்றை நீக்கும் அதிகாரம் உண்டு. ஆனால் இந்த உரிமையைப் பயன்படுத்தும்போது, ​​அவைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரம் குறைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர்.


அரசியலமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய சலுகையாக பேச்சு சுதந்திரத்தை (freedom of speech) ஏற்றுக்கொண்டது. நாடாளுமன்ற அமைப்புகள் குறித்த நிபுணரான Erskine May கூற்றுப்படி, சட்டமன்றம் சீராக இயங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு உரிமைகள் உள்ளன. உறுப்பினர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் பேச முடிந்தால் மட்டுமே சட்டமன்றம் சிறப்பாகச் செயல்படும். புண்படுத்தும் வார்த்தைகளை நீக்குவதற்கான விதி கவனக்குறைவாகப் பயன்படுத்தப்பட்டால், அது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகப் பேசுவதைத் தடுக்கலாம்.

அவையில் பேச்சு சுதந்திரம் எந்த அரசியலமைப்பு விதிகள் மற்றும் அவையின் விதிகளுக்கு உட்பட்டது? உச்சநீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தக்கூடாது என்று பிரிவு 121 கூறுகிறது. நீதிபதியை நீக்குவதற்கான தீர்மானத்தை அவை பரிசீலிக்கும்போது மட்டுமே விவாதம் நடத்த முடியும். அவையின் விதிகளைப் பொறுத்தவரை, அவை பேச்சு சுதந்திரத்தின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. நீதிமன்ற வழக்குகளைப் பற்றிப் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவது, மற்ற உறுப்பினர்களின் நோக்கங்களைக் கேள்வி கேட்பது, உயர் அதிகாரிகளை விமர்சிப்பது அல்லது சபாநாயகருக்கு தெரியாமல் அவதூறான வார்த்தைகளை கூறுவது போன்ற சில வகையான பேச்சுகளை அவை விதிகள் கட்டுப்படுத்துகின்றன. இந்த விதிகள் எம்.பி.க்கள் சுதந்திரமாகப் பேசுவதைத் தடுக்காது. விதிகள் நியாயமற்ற முறையில் பயன்படுத்தப்படும்போதுதான் பிரச்சனை வருகிறது. புண்படுத்தும் வார்த்தைகளை நீக்குவதற்கான விதி கவனக்குறைவாகப் பயன்படுத்தப்பட்டால், அது ஒரு உரையை குழப்பமடையச் செய்யலாம். நாடாளுமன்றத்தில் உரைகள் பதிவு செய்யப்பட்டு எதிர்காலத்திற்காக வைக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகள் வலுவான அடித்தளங்களைக் கொண்டுள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா காலனித்துவ ஆட்சியிலிருந்து மாறியதும், பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசாங்கத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான உறவை மாற்றியமைத்தார். இந்தச் சூழலில் அவர் இரண்டு முக்கியமான காரியங்களைச் செய்தார். முதலாவதாக, அவர் ஒவ்வொரு நாளும் கேள்வி நேரத்தில் கலந்து கொண்டு அமைச்சர்களின் பதில்களைச் சேர்த்தார் அல்லது சரிசெய்தார். ஏனெனில், நாடாளுமன்றத்தில் துல்லியமான மற்றும் முழுமையான தகவல்கள் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இரண்டாவதாக, எதிர்க்கட்சித் தலைவர்களின் உரைகள் உண்மையான நிலைமையை தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களின் பாராட்டுகளைவிட சிறப்பாகக் காட்டுகின்றன என்று அவர் நம்பியதால், அவற்றைக் கேட்டார். எதிர்க்கட்சி இல்லாமல் ஒரு ஜனநாயக நாடாளுமன்றம் செயல்பட முடியாது. அரசியலமைப்பு வழக்கறிஞர் Ivor Jennings, அரசாங்கத்தையும், அமைச்சர்களிடம் கேள்வி கேட்பது  எதிர்க்கட்சியின் முக்கியப் பணி என்றும், அரசாங்கத்தை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சியின் கடமையாகும் என்று அரசியலமைப்பு வழக்கறிஞர் ஐவர் ஜென்னிங்ஸ் கூறினார்.

ஒரு துயரமான நிகழ்வு


இன்றைய நாடாளுமன்றம் இந்தக் கண்ணோட்டத்தை இழந்து வருவதாகத் தெரிகிறது. ஜனநாயக உலகில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அவையில் பேசுவதைத் தடுக்கும் ஒரே நாடாளுமன்றம் நம்முடையதுதான், அவருக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நாடாளுமன்றத்திற்கு ஒரு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டிய நிலையில், அவையின் மூத்த உறுப்பினர் ஒருவர் இதுபோன்ற முயற்சியை மேற்கொள்வது தவறான நடவடிக்கையாகும். அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான உறவு முற்றிலுமாக உடைந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது. பெரும்பான்மையினர் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்கிறார்கள். சிறுபான்மையினர் விமர்சிக்க வேண்டும் என்பதை பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்கிறார்கள். இரு தரப்பினரும் நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைபிடிக்காவிட்டால்  நாடாளுமன்ற அரசாங்கம் தோல்வியடையும்.


Original article : Protecting the freedom of speech of MPs -P.D.T. Achary

Share:

டெல்லி வழக்கறிஞர் சங்கம் வாக்காளர் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டது ஏன் சட்டரீதியான பிரச்சனைகளைத் தூண்டியுள்ளது? -அமால் ஷேக்

 வழக்கறிஞர் சங்கம் விவரங்களை வெளியிட்ட  சிறிது நேரத்திலேயே, வழக்கறிஞர்கள் ஏராளமான பிரச்சாரச் செய்திகளைப் பெறத் தொடங்கினர். எனவே, தேர்தல்கள் என்ற பெயரில் ஒரு சட்டப்பூர்வ தொழில்முறை அமைப்பு (statutory professional body) எவ்வளவு தனிப்பட்ட தகவல்களை பொது வெளியில் வைக்க முடியும்?


டெல்லி வழக்கறிஞர் சங்க (Bar Council of Delhi (BCD)) தேர்தலுக்கு முன்னதாக, வழக்கறிஞர் சங்கம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை அதன் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தது. பெயர்கள் மற்றும் பதிவு எண்களுடன், பட்டியலில் மொபைல் எண்கள், குடியிருப்பு முகவரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் புகைப்படங்கள் இருந்தன.


செய்திகள் வெளி வந்த பின்னர், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் பிரச்சாரம் தொடர்பான தகவல்களை பெறத் தொடங்கினர். குறுஞ்செய்தி சேவை (short message service (SMS)), மின்னஞ்சல், வாட்ஸ்அப் செய்திகள், தொலைபேசி அழைப்புகள், பிரச்சார சுவரொட்டிகள் மற்றும் விரைவு அஞ்சல் வழியாகவும்  தகவல்களை பெற்றனர். சில வழக்கறிஞர்கள் முன் அனுமதியின்றி வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்கப்பட்டதாகக் கூறினர்.


டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு, தரவுகளை வெளியிடுவதையே சவால் செய்கிறது.


பிப்ரவரி 18 அன்று, தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு, இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று கூறியது. வழக்கறிஞர்ளின் தனியுரிமையை மீற முடியாது என்றும், அனுமதியின்றி வழக்கறிஞர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், வழக்கறிஞர்களின்  தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், வழக்கறிஞர்களின் தனியுரிமை உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.


இந்த எண்ணிக்கை மற்றும் மக்கள் தொடர்புகளின் அதிர்வெண் ஒரு பரந்த கேள்வியை எழுப்புகிறது: தேர்தல்களை நடத்துவதற்காக ஒரு அதிகாரப்பூர்வ தொழில்முறை அமைப்பு எவ்வளவு தனிப்பட்ட தகவல்களை  பொது வெளியில் பகிர முடியும்?


மனுவில் என்ன சொல்லப்பட்டுள்ளது?


வாக்காளர் பட்டியல் வெளியீட்டை, அங்கீகரிக்கப்படாத வெளியீடு, பரப்புதல் மற்றும் வழக்கறிஞர்களின் முக்கியமான தனிப்பட்ட தரவுகளை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு விவரிக்கிறது. வெளியீட்டின் காரணமாக, வழக்கறிஞர்கள் தேவையற்ற அழைப்புகள், செய்திகள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனு சுட்டிக்காட்டுகிறது.


மனுவில், பிரிவு 21 மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி  vs இந்திய ஒன்றிய (Justice K.S. Puttaswamy (Retd.) v. Union of India) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலைப் பகிர்வது பிரிவு 21-ன் கீழ் உள்ள தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை தெளிவாக மீறுவதாகவும், சட்டப்பூர்வமானது, அவசியமானது மற்றும் விகிதாசாரமானது என்ற சட்டத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


தேர்தல்களை நடத்துவது ஒரு சட்டபூர்வமான நோக்கமாக இருக்கலாம் என்றாலும், "அத்தகைய தரவுகளை வெளியிடுவது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு முக்கியமானதாக இல்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்தத் தகவலைப் பகிர்வது பின்தொடர்தல், துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள், அடையாளத் திருட்டு, ஆன்லைன் மோசடி, தரவு தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பிற வகையான தீங்குகளுக்கு வழிவகுக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


சட்டப்பூர்வ கட்டமைப்பில், மனு இந்திய வழக்கறிஞர் சங்க விதிகளை குறிப்பிடுகிறது. இது வாக்காளர் பட்டியலில், "வரிசை எண்; மாநில பட்டியலில் உள்ள எண்; பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களின் பெயர் மற்றும் வழக்கறிஞரின் முகவரி" ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று வழங்குகிறது. தனிப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது விதிகளின்கீழ் கருதப்படவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


டெல்லி வழக்கறிஞர் சங்கவிதிகளின் பிரிவு 13-ஐக் குறிப்பிட்டு, வாக்காளர் பட்டியல்கள் இந்திய வழக்கறிஞர் சங்க விதிகளின்படி கண்டிப்பாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும், கூடுதலாக தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவது முற்றிலும் அனுமதிக்க முடியாது (wholly impermissible) என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனுவில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சேர்க்கை மற்றும் ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை, ஒப்புதல் இல்லாமல் வேறு காரணங்களுக்காகப் பகிர முடியாது என்று கூறுகிறது. டெல்லி வழக்கறிஞர் சங்க, தரவு முதலில் சேகரிக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே அதைப் பயன்படுத்தவும் பகிரவும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்றும் கூறுகிறது.


சட்டம்  என்ன சொல்கிறது


வழக்கறிஞர்கள் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகளாக வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. இது அவர்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரங்களை வழங்குகிறது. மேலும், அவர்கள் நடவடிக்கை எடுக்கும்போது, ​​அவர்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும். அரசியலமைப்பு விதிகள் அவர்களை இணையதளத்திலும் பின்தொடர்கிறது.


இந்த மனு ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி vs இந்திய ஒன்றிய வழக்கை அடிப்படையாகக் கொண்டது. இதில் உச்சநீதிமன்றம் பிரிவு 21-க்குள் தனியுரிமையை (privacy) அங்கீகரித்தது. தனிப்பட்ட தகவல்களின் மீதான கட்டுப்பாடு கண்ணியம் மற்றும் சுதந்திரத்திற்கு முக்கியமானதாகும் என்பதை தீர்ப்பு அங்கீகரித்தது. டிஜிட்டல் காலகட்டத்தில், தனியுரிமைக்கு அச்சுறுத்தல்கள் அரசுக்கு மட்டும் அல்ல; தனிநபர்கள் அல்லது அமைப்புகளாலும் அச்சுறுத்தப்படலாம் என்று நீதிமன்றம் கூறியது. மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் எப்படி, எப்போது பகிரப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்த உரிமை உண்டு என்றும், அனுமதியின்றி அதைப் பகிர்வது அந்த உரிமையை மீறுவதாகும் என்றும் நீதிபதி நாரிமன் வலியுறுத்தினார்.


சிறிய தரவுகள் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம். ஆனால், ஒன்றாக இணைக்கப்படும்போது, ​​அவை தனிப்பட்ட சுயவிவரத்தை வெளியிடலாம் என்று நீதிமன்றம் எச்சரித்தது. ஒரு பெயர், தொலைபேசி எண், முகவரி அல்லது புகைப்படம் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், ஒன்றிணைந்து பாதுகாப்பு இல்லாமல் பகிரப்பட்டால், அவை எளிதாகத் தேடக்கூடிய ஒரு கோப்பை உருவாக்குகின்றன.


அந்த ஆபத்து தற்போதைய சர்ச்சையை உருவாக்குகிறது


டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், ஒப்புதல் என்பது தனிப்பட்ட தரவு செயல்முறையை ஒழுங்கமைக்கும் கொள்கையாகும். தகவலறிந்த, தன்னார்வ ஒப்பந்தத்தால் ஆதரிக்கப்படும்போது மட்டுமே செயல்முறை சட்டபூர்வமானதாக கருதப்படும்.


முதலாவதாக, நோக்க வரம்பு என்பது தனிப்பட்ட தரவு சேகரிக்கப்பட்டு, தெளிவான, குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். உதாரணமாக, வழக்கறிஞர் சங்கம்  தேர்தல்களை நடத்துவதே குறிக்கோள் என்றால், தொடர்பு விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் வெளிப்படையாகப் பகிர்வது முக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவதாக, தரவு குறைப்பு (data minimisation) என்பது கூறப்பட்ட நோக்கத்திற்கு தேவையான தகவல்களைச் செயல்படுத்துவதற்கு மட்டுமே பொருந்தும்.


ஒரு நடைமுறை சிக்கலும் உள்ளது. பாதுகாப்புகள் இல்லாமல் ஒரு முழுமையான தரவுத்தளம் இணையதளத்தில் பகிரப்பட்டல், அதை அதிக முறை நகலெடுக்க முடியும். பின்னர், அதை நீக்குவது தகவல் பரவுவதைத் தடுக்காது. இணையதளத்தில்  பகிர்வது என்பது ஒரு பலகையில் ஒரு அறிவிப்பை ஒட்டுவது போன்றது அல்ல: இது ஆயிரக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு காற்றில் பறக்க விடுவது போன்றதாகும்.


சூழலுக்கு ஏற்ப, இணைய உலகில் அரசியலமைப்பு அமைப்புகளின் ஒழுங்குமுறைப் பொறுப்பை நீதிமன்றங்கள் ஏற்கனவே அங்கீகரித்துள்ளன. த்ரோனே திவான் vs இந்திய தேர்தல் ஆணைய வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் பிரிவு 324-ன் கீழ், நியாயமான தேர்தல்களைப் பாதிக்கக்கூடிய தவறான இணைய பிரச்சார தகவல்களை தேர்தல் ஆணையம்  தடுக்க வேண்டும் என்று கூறியது. நீதிமன்றம் ஆணையத்திற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைச் சரியாகச் சொல்லவில்லை. ஆனால், அதன் அரசியலமைப்பு கடமையை நினைவுபடுத்தியது. தொலைபேசிகள் மற்றும் இணைய சேவையகங்கள் மூலம் தொடர்புகள் நடைபெற்றாலும், மேற்பார்வை இன்னும் தேவைப்படுகிறது.


Original article : Why Bar Council of Delhi’s publication of voter details online has sparked a legal tussle?. -Amaal Sheikh

Share:

கட்டற்ற செயற்கை நுண்ணறிவு (open-source AI) சேவைகள் என்றால் என்ன? இந்தியா ஏன் அதை ஊக்குவிக்கிறது? -குஷ்பூ குமாரி

 செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் உள்ள வளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான 'ஜனநாயகப் பரவல்' (Democratic Diffusion) சாசனம், மற்றும் உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவு பற்றி ஆராய்ச்சி செய்பவர்களை ஒன்றிணைப்பதற்கான தன்னார்வ அறிவியல் நிறுவனங்களின் கூட்டமைப்பு எனப் பல முக்கிய அம்சங்கள் இதில் உள்ளன. இவற்றின் அடிப்படையில், இந்தியா நடத்திய ஐந்து நாள் 'India AI Impact Summit' மாநாட்டின் முக்கிய முடிவாக, 'செயற்கை நுண்ணறிவு தாக்கத்திற்கான புது டெல்லி பிரகடனத்தில்' (New Delhi Declaration on AI Impact) அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 88 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டன.


முக்கிய அம்சங்கள்:


— இது இந்தியாவுக்குக் கிடைத்த ஒரு ராஜதந்திர வெற்றி, ஏனெனில் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி பல நாடுகளை இந்தியா சம்மதிக்க வைத்தது. கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில், அமெரிக்காவும் இங்கிலாந்தும் இதில் கையெழுத்திட மறுத்துவிட்டன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவை முறைப்படுத்துவதில் ஐரோப்பிய நாடுகள் கையாளும்விதம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்தத் தீர்மானம் குறித்த விரிவான தகவல்களை பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனம் செய்தி வெளியிட்டது.


— இந்த அறிவிப்பின் மூலம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஒரு சில நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேற்கத்திய நாடுகளின் போக்கிற்கு மாற்றாக, அதன் பயன்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் ("democratising") என்பதையும், அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என்பதையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்தியா முன்வைக்கும் இந்த முக்கிய அணுகுமுறையை அதிகாரிகள் சுட்டிக்காட்டினாலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் கட்டாயமற்றவை என்பதால், நாடுகள் அவற்றை உண்மையில் எந்தளவிற்குச் செயல்படுத்தும் என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும் என்றும் கூறப்படுகிறது. 


— இந்த அறிவிப்பு, நாடுகள் தங்களுக்குள்ளான செயற்கை நுண்ணறிவு (AI) வளங்கள், பயன்பாட்டு முறைகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான பல தன்னார்வக் கட்டமைப்புகளை விளக்குகிறது. உதாரணமாக, இதில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் "செயற்கை நுண்ணறிவின் ஜனநாயகப் பரவலுக்கான சாசனம்" (Charter for the Democratic Diffusion of AI) என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் முக்கிய செயற்கை நுண்ணறிவு வளங்களுக்கான அணுகலை விரிவுபடுத்தவும், அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு உள்ளூர் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் மற்றும் வலுவான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப சூழலை உருவாக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.


— இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள், Global AI Impact Commons என்ற அமைப்பை ஒரு தன்னார்வ தளமாக அங்கீகரித்துள்ளனர். இந்தத் தளத்தின் மூலம் பல்வேறு நாடுகள் தங்களுக்குத் தேவையான வெற்றிகரமான செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கும், அவற்றை மீண்டும் உருவாக்கி மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கும் உதவி பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. 


— பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், தொழில்துறை சார்ந்த தன்னார்வ நடவடிக்கைகள், தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் ஆதரவான கொள்கைகளின் அவசியத்தை வலியுறுத்தி, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் நம்பகமான செயற்கை நுண்ணறிவு பொதுத்தளம் (Trusted AI Commons) என்ற அமைப்பை ஆதரித்தனர். இந்த கூட்டுத் தளம் தொழில்நுட்ப வளங்கள், கருவிகள், தர அளவீடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஒன்றிணைக்கிறது, இதனை நாடுகள் தங்களின் சொந்தத் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும் மாற்றியமைக்கவும் முடியும் என்கின்றனர். 


— நாடுகளுக்கிடையேயான அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை அணுகுவதில் உள்ள தடைகளை நீக்கவும், அதை எளிதாக்கவும் "அறிவியல் நிறுவனங்களுக்கான சர்வதேச செயற்கை நுண்ணறிவு வலையமைப்பு" (International Network of AI for Science Institutions) என்ற அமைப்பை உருவாக்க இந்த பிரகடனம் ஆதரவு அளித்துள்ளது. இந்தத் தளமானது பங்கேற்கும் நிறுவனங்களிடையே உள்ள அறிவியல் சமூகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சித் திறன்களை ஒன்றிணைத்து, அறிவியல் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயனுள்ள பயன்பாட்டை வேகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


— மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில் மறுதிறன் மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தொழிலாளர் வளர்ச்சி குறித்த கையேடு ஆகியவற்றை ஆதரித்துள்ளனர். பங்கேற்பாளர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவுவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும். மேலும், உறுதியான செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதற்காக, "நெகிழ்வான, புதுமையான மற்றும் திறமையான செயற்கை நுண்ணறிவுக்கான தன்னார்வ வழிகாட்டுதல்கள்" குறித்தும் இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


— செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) என்பது பொதுவாக மனித அறிவாற்றல் தேவைப்படும் வேலைகளை இயந்திரங்கள், குறிப்பாக கணினிகள் தானாகவே செய்யும் திறனைக் குறிக்கிறது. மொழியைப் புரிந்துகொள்வது, குறிப்பிட்ட அமைப்புகளை அல்லது தரவு அமைப்புகளைக் (patterns) கண்டறிவது, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் முடிவுகளை எடுப்பது போன்ற முக்கியமான செயல்பாடுகள் இதில் அடங்கும் என்கின்றனர். 


— அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மனிதர்களைப் போலவே இயந்திரங்களும் அனுபவத்திலிருந்து சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது. ஆனால் இது பெரும்பாலும் மனிதர்களைவிட மிக வேகமாகவும், மிகப்பெரிய அளவிலான தகவல்களைக் கையாளுவதன் மூலமும் செயல்படுகிறது.


— செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் சிறப்பாகச் செய்யக்கூடிய குறுகிய செயற்கை நுண்ணறிவு (Artificial Narrow Intelligence (ANI)), இதனை 'வலிமையற்ற AI' என்றும் அழைப்பார்கள் மற்றும் மனிதனைப் போலவே அனைத்துத் துறைகளிலும் சிந்தித்துச் செயல்படக்கூடிய பொதுவான செயற்கை நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)), இதனை 'வலிமையான செயற்கை நுண்ணறிவு' என்றும் அழைப்பார்கள்.


Original article : What are open-source AI services? Why is India promoting it? -Khushboo Kumari

Share:

இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறைக்கு உள்ள வாய்ப்புகள் என்னென்ன? -குஷ்பூ குமாரி

 சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான "Deewar Mein Ek Khirki Rehti Thi (A Window Lived in the Wall) என்ற தலைப்பு, இந்தியாவின் மருந்துத் தொழில்துறையை விவரிப்பதாக  மனிஷ் சபர்வால் குறிப்பிடுகிறார்.

முக்கிய அம்சங்கள்:

— இந்தியா உலகின் 60% மருந்துகளை உற்பத்தி செய்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் நோயாளிகளுக்கு 2 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தைச் சேமித்துக் கொடுத்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (United States Food and Drug Administration (USFDA)) அங்கீகாரம் பெற்ற தொழிற்சாலைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவற்றை இயக்குகிறது மற்றும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருந்துகளை விற்பனை செய்கிறது.

— சிப்லா (Cipla) நிறுவனத்தின் எய்ட்ஸ் எதிர்ப்பு மருந்துகளும் (antiretrovirals), லுபின் லிமிடெட் (Lupin Limited) நிறுவனத்தின் ரிஃபாம்பிசின் (Rifampicin - காசநோய் மருந்து) மருந்தும் இல்லையென்றால், உலகளவில் எய்ட்ஸ் மற்றும் காசநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் 85% குறைந்திருக்காது என்றும் கூறப்படுகிறது. இது வெறும் வர்த்தக நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மட்டுமல்ல — இது உயிர்காக்கும் உதவி என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் 1970-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டம் (India’s Patents Act, 1970) மற்றும் அமெரிக்காவின் ஹட்ச்-வேக்ஸ்மேன் சட்டம் (America’s Hatch-Waxman Act) போன்ற கொள்கை முடிவுகளால் சாத்தியமான இந்த வெற்றி, புத்திசாலித்தனமான அரசாங்கக் கொள்கைகளும் நாட்டின் தொழில்முனைவோரும் இணைந்து செயல்படும்போது என்ன மாதிரியான நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

— இந்தியாவின் 1970-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டம் (Patents Act), 35 ஆண்டுகளுக்கு 'பொருள் காப்புரிமைக்கு' பதிலாக 'முறைசார் காப்புரிமையை' நடைமுறைப்படுத்தியது. அமெரிக்காவின் 1984-ஆம் ஆண்டு ஹட்ச்-வேக்ஸ்மேன் சட்டம் (Hatch-Waxman Act), மருந்துகளுக்கான ஒப்புதல் நடைமுறையை எளிதாக்கியதுடன், முதல் வெற்றிகரமான ஜெனரிக் மருந்து (generic drug) விண்ணப்பதாரருக்கு ஆறுமாத கால தனிப்பட்ட விற்பனை உரிமையை வழங்கியது.

— இதன் முடிவுகள் வியக்கத்தக்க வகையில் இருந்தன. அமெரிக்காவில், மொத்த மருந்துப் பரிந்துரைச் சீட்டுகளில் (prescriptions) பொதுவான மருந்துகளின் (generics) பயன்பாடு 1 சதவீதத்திலிருந்து இன்று 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாத்திரை 2.62 டாலர் விலையில் இருந்த 'கிரெஸ்டர்' (Crestor) என்ற இதய நோய் மருந்து, இப்போது 90 சதவீதம் மலிவாகக் கிடைக்கிறது. இந்தியாவில், உள்நாட்டு மருந்து நுகர்வு இப்போது ஏற்றுமதிக்கு நிகராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

— இந்தியாவின் மருந்துத் துறை (Pharma) வெற்றிக்குக் காரணமான கொள்கை வகுப்பாளர்களான ராஜகோபால அய்யங்கார், ஜெய்சுக்லால் ஹாத்தி மற்றும் ஏனையோர், மற்றவர்கள் கவனிக்கத் தவறிய வாய்ப்புகளைக் கண்டறிந்தனர். ஆனால், சிப்லா (Cipla) நிறுவனத்தின் யூசுப் ஹமீத் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் (Dr. Reddy's) நிறுவனத்தின் அஞ்சி ரெட்டி போன்ற தொழில்முனைவோர் இல்லாமல் இவர்களது தொலைநோக்குத் திட்டம் வெற்றி பெற்றிருக்காது என்றும் கூறப்படுகிறது. லாபம் மற்றும் வருவாயைத் தாண்டி இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை இவர்கள் வலுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

— இந்திய மருந்து உற்பத்தித் துறையின் முக்கிய சவால், அளவிலிருந்து (Volume) — அதாவது உலகின் 60% மருந்துகளைத் தயாரிப்பதில் இருந்து — மதிப்பிற்கு (Value) — அதாவது உலகளாவிய மருந்து விற்பனையில் வெறும் 6% வருவாயை ஈட்டுவதில் இருந்து உயர்வதாகும். 2047-ஆம் ஆண்டிற்குள் 350 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய, இந்தியா ஐந்து முக்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். அவை பொதுவான மருந்துகள் (generics), உயிரியல் மருந்துகள் (biologics), கண்டுபிடிப்புகள் (innovation), உள்நாட்டு சந்தைக் கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஒப்பந்த உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி போன்றவை ஆகும்.

— அதேநேரத்தில், இது ஐந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அவை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல், துணிச்சலான முதலீடுகளுக்கான சூழலை மேம்படுத்துதல், தொழில் செய்வதை எளிதாக்குதல், சீனாவுடன் போட்டியிடுதல் மற்றும் வர்த்தகத் தடைகளைக் கடந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 

— ஒட்டுமொத்தமாக இவை அனைத்தும் இந்திய மருந்துத் துறை கொள்கை 2.0-க்கான (Indian Pharma Policy 2.0) வழிகாட்டியாக அமைகின்றன: அறிவியல் துறையில் கூடுதல் முதலீடு, குறைவான கட்டுப்பாடுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அதிக சுயாட்சி ஆகியனவாகும். 

— இந்தியாவின் மருந்துத் தயாரிப்புத் துறை (Pharma industry), வேதியியல் பேராசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் சிப்லா (Cipla), அலெம்பிக் (Alembic), லுபின் (Lupin) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் (Dr. Reddy’s) போன்ற நிறுவனங்களைத் தொடங்கியபோதே ஒரு நீண்டகாலத் தீர்வை கண்டறிந்துவிட்டது. அரசாங்கம் தொழில்முனைவோருக்கு ஆதரவளித்தால் என்னென்ன சாதனைகளைச் செய்ய முடியும் என்பதற்கு இவர்களின் உலகளாவிய வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. 

— சில அரசியல் வாரிசு குடும்பங்கள், பழைய காலத்து சிந்தனைகளால் இன்னும் வணிகத்துறையை சந்தேகத்துடனேயே பார்க்கின்றன. இருப்பினும், நம்பிக்கையின் அடிப்படையில் குற்றவியல் நீக்கம் (decriminalisation), கட்டுப்பாடுகள் குறைப்பு (deregulation) மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சமீபத்திய கொள்கைகளும் நிதிநிலைத் திட்டங்களும், தொழில்முனைவோரின் வலிமையை அங்கீகரிக்கின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் இன்னும் வேகமெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 

உங்களுக்குத் தெரியுமா?

— பயோசிமிலர்ஸ் (Biosimilars) என்பது ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஒரு உயிரியல் மருந்தைப் போலவே உருவாக்கப்பட்ட மற்றொரு உயிரியல் மருந்தாகும். இவை 'தொடர் உயிரியல் மருந்துகள்' (Follow-on biologics) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை அசல் மருந்தைப் போலவே அதே நோய்களைக் குணப்படுத்தக்கூடியவை என்கின்றனர். மேலும் அசல் மருந்தின் அதே அளவிலான செயல்திறனையும் பாதுகாப்பையும் கொண்டவையாகக் கூறப்படுகிறது. 

— இருப்பினும், பயோசிமிலர்கள் (Biosimilars) சாதாரண ஜெனரிக் (Generic) மருந்துகளைவிட வேறுபட்டவை என்கின்றனர். ஜெனரிக் மருந்துகள் பொதுவாக வேதிப்பொருட்களைக் கொண்டு செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை என்றும் அவற்றின் ஒவ்வொரு தொகுப்பிலும் (batch) ஒரே மாதிரியான மூலப்பொருட்களே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, பயோசிமிலர்கள் உயிருள்ள செல்கள் அல்லது உயிரினங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை உயிருள்ள அமைப்புகளிலிருந்து உருவாக்கப்படுவதால், தயாரிப்புச் செயல்பாட்டின்போது ஒவ்வொரு தொகுப்பிற்கும் இடையே இயற்கையான சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். 

— பயோசிமிலர் (Biosimilars) சந்தையில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது. மேலும், ஹெபடைடிஸ் பி (Hepatitis B) நோய்க்கான பயோசிமிலர் மருந்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா தான் என்றும் கூறப்படுகிறது. இந்திய பயோசிமிலர் சந்தையின் மதிப்பு 2022-ஆம் ஆண்டில் 349 மில்லியன் டாலராக இருந்தது. இது 2022-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 25.2% என்ற விகிதத்தில் வளர்ந்து, 2030-ஆம் ஆண்டிற்குள் 2,108 மில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Original article : What are the opportunities available to India’s pharmaceutical industry? -Khushboo Kumari

Share:

இலவசங்கள் மற்றும் நேரடி பணப்பரிமாற்றம் தொடர்பான நிதி சார்ந்த சிக்கல்கள் என்னென்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மானியங்களை வழங்கத் திட்டமிடும் அரசாங்கங்கள் அவற்றை தங்களின் நிதிநிலைத் திட்டத்தில்  சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.


— நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம் பான்சோலி ஆகியோரைக் கொண்ட இந்த அமர்வு, 2024-ஆம் ஆண்டின் மின்சார திருத்த விதிகளில் உள்ள 'விதி 23'-க்கு எதிராக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தது.


— இயற்கைப் பேரிடர் காலங்களைத் தவிர மற்ற நேரங்களில், மின்சாரக் கட்டணமானது அதன் உண்மையான உற்பத்திச் செலவைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட வருவாய் தேவைக்கும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் இடையே எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என்று இந்த விதியில் கூறப்பட்டுள்ளது.


— ஒன்றிய அரசுக்கு அறிவிப்பாணை அனுப்பியபோது, வருமான நிலை அல்லது கட்டணம் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்து தலைமை நீதிபதி குறிப்பிட்டார். மேலும், இந்தச் செலவுகள் அனைத்தையும் மாநில அரசே ஏற்றுக்கொள்வது பொது நலனுக்கு ஏற்றதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


— கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற வசதியில்லாத மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்பது புரிந்து கொள்ளத்தக்கது; அத்தகைய உதவியை சமூகம் வரவேற்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். இருப்பினும், ஏற்கனவே போதிய வசதி படைத்த செல்வந்தர்களுக்கும் இந்தச் சலுகைகள் சென்றடைய வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், மாநில அரசுகள் தங்களது கொள்கை திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


— மக்கள் நலத் திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை முடிவு செய்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் பொறுப்பு என்று தலைமை நீதிபதி கூறினார். இருப்பினும், மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் இருக்கும்போதும் இத்தகைய திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். அதோடு, இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


— ஒழுங்குமுறை ஆணையத்திற்காக (Regulatory Commission) ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளின்கீழ் வரும் (Directive Principles of State Policy) பிரிவு 39 (b)-ஐ மேற்கோள்காட்டிய அவர், சமுதாயத்தின் வளங்களின் உரிமையும் கட்டுப்பாடும் பொதுநலனுக்குச் சிறந்த முறையில் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.


— நீதிபதி பாக்சி  கூறுகையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் உருவாக்கப்படும் நலத்திட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை என்றார். இருப்பினும், இந்த 32-வது சட்டப்பிரிவு மனுவில் உள்ள உண்மையான கவலை 'திட்டமிட்ட செலவினம்' (Planned Expenditure) மற்றும் 'திட்டமிடப்படாத செலவினம்' (Non-planned Expenditure) பற்றியது. அரசாங்கங்கள் நலத்திட்டங்களை விரும்பினால், கல்விக்கான ஒதுக்கீடு அல்லது வேலையில்லா திண்டாட்ட கால சலுகைகள் போன்றவற்றை முறையான விளக்கங்களுடன் வரவு செலவுத் திட்டத்தில் (Budget) தெளிவாகச் சேர்க்க வேண்டும் என்றும் மாறாக, இந்த வழக்கில் காணப்படுவது போன்ற முறையில் அவற்றைச் செயல்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 





உங்களுக்குத் தெரியுமா:


— கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா தனது நலத்திட்ட முறையை ரேஷன் கடைகள் மற்றும் பொதுப்பணித் திட்டங்களில் இருந்து மாற்றி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் பெண்களுக்கு வருமான உதவி வழங்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு, பல மாநிலங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களின் வங்கித் கணக்குகளுக்கே நேரடியாகப் பணம் அனுப்பத் தொடங்கியபோது இந்த மாற்றம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. 


— இவ்வாறு, இந்தியாவின் நலத்திட்ட முறை அதன் ஆரம்ப காலத்திலிருந்து நீண்டதூரம் பயணித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசு வறுமையை ஒழிப்பதிலும் அடிப்படை பொருளாதாரப் பாதுகாப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது. அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளான, சமத்துவமின்மையைக் குறைத்தல் (பிரிவு 38) மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் (பிரிவு 41), உணவு விநியோகம், பொதுப்பணித் திட்டங்கள் மற்றும் மானிய விலையிலான சேவைகளின் அடிப்படையில் அமைந்த இந்த நலத்திட்ட மாதிரிகளை  வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. 


— பற்றாக்குறைகள் மற்றும் பலவீனமான பொருளாதாரச் சந்தைகளுடன் போராடிக்கொண்டிருந்த ஒரு நாட்டில், பொது விநியோகத் திட்டம் (Public Distribution System (PDS)), நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் ஆரம்பகால வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஆகியவை அவசியமான கருவிகளாக மாறின.


— காலப்போக்கில், சமூக நலத்திட்டங்கள் இரண்டு தெளிவான வடிவங்களை எடுத்தன. ஆரம்பத்தில், பொருட்களாக வழங்குதல் (In-kind transfers) மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன: பொது விநியோகத் திட்டத்தின் (Public Distribution System (PDS)) மூலம் மானிய விலையில் தானியங்கள், பிரதமரின் ஊட்டச்சத்துத் திட்டத்தின்கீழ் (Pradhan Mantri POSHAN (PM-POSHAN)) சமைத்த உணவுகள், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (PMAY (Pradhan Mantri Awas Yojana)) மூலம் வீடுகள் மற்றும் பிரதமரின் விரிவான ஊட்டச்சத்துத் திட்டத்தின்கீழ் (POSHAN (Prime Minister’s Overarching Scheme for Holistic Nourishment)) ஊட்டச்சத்துக் பெட்டகங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. குடும்ப வருமானம் குறையும் காலங்களில், இத்திட்டங்கள் மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பு நிலையை உறுதி செய்தன.


— ஆரம்பத்தில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், பணப்பரிமாற்றங்கள்  ஆதார் (Aadhaar), ஜன்-தன் வங்கி கணக்கு (Jan-Dhan), மற்றும் நேரடிப் பயன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) ஆகியவற்றின் மூலமாகவே பின்னாட்களில் சாத்தியமானது. இந்தத் திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணத்தைச் செலுத்துவதால், குடும்பங்கள் தங்களின் தேவைக்கேற்ப அந்தப் பணத்தைப் பயன்படுத்தும் சுதந்திரத்தைப் பெறுகின்றன. உதாரணமாக, PM-KISAN (Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டம் விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்குகிறது. அதேபோல் முதியோர்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியங்கள் பொதுவாக இந்த நேரடிப் பரிமாற்றங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன. 


— பணம் மற்றும் பொருட்கள்/சேவைகள் ஆகிய இந்த இரண்டு வடிவங்களும் இணைந்து, குடும்பகளோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு கலப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசை (Hybrid Welfare State) உருவாக்கியுள்ளன. அதாவது, மக்களுக்குத் தேவையான நிதி உதவியையும், அதே சமயம் உணவு அல்லது கல்வி போன்ற நேரடி வசதிகளையும் தங்குதடையின்றி வழங்குவதை அரசு உறுதி செய்கிறது. 

 


Original article : What are the financial concerns related to freebies and direct cash transfers? -Khushboo Kumari

Share:

உச்சநீதிமன்றத்தில் மாயத்தோற்றங்கள்: மோசமான வரைவு என்பது வெறும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பிரச்சனை மட்டுமல்ல. -ஸ்வப்னில் திரிபாதி

 முறையாக எழுதப்படாத மனுக்கள், சரியான பகுப்பாய்வின்றி அளவுக்கு அதிகமாக மேற்கோள்களைப் பயன்படுத்துதல் மற்றும் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் தீர்ப்பு முன்னுதாரணங்களை மேலோட்டமாகப் பயன்படுத்துதல் போன்றவை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாவதற்கு முன்பே இருந்தன. சொல்லப்போனால், ஏற்கனவே இருந்து வரும் இந்த பலவீனத்தை தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது வெளிக்காட்டியுள்ளது.


இந்த மாத தொடக்கத்தில், இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவிகளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட மனுக்களில் போலி வழக்கு மேற்கோள்கள் இடம்பெறுவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியது. இந்த நடைமுறையை "அதிர்ச்சியளிக்கக்கூடியது" மற்றும் "முற்றிலும் தேவையற்றது" என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை மட்டுமல்லாமல், வழக்கறிஞர்களின் தொழில்முறை சார்ந்த ஒரு தீவிரப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டுவதாகக் கூறினார். உண்மையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பிரச்சினையல்ல என்றும் அதை கவனமாகப் பயன்படுத்தினால் அன்றாட வேலைப் சுமைகளைக் குறைத்து ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும். ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கும் தகவல்களை கண்மூடித்தனமாக நம்புவதும், குறிப்பாக இல்லாத வழக்கு விவரங்களைச் சேர்ப்பதும்தான் உண்மையான சிக்கல் என்றும் தெரிவிக்கின்றனர். இதுவே தொழில்நுட்ப ரீதியாக மாயத்தோற்றம் அல்லது பிழையான தகவல் உருவாக்கம் (Hallucination) என்று கூறப்படுகிறது.


இந்திய நீதிமன்றங்கள் இத்தகைய சூழல்களை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பதில் மனுவில், உண்மையில் இல்லாத சில தீர்ப்புகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், வருமான வரி அதிகாரி ஒருவர் வழங்கிய தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்ட முந்தைய வழக்குகள் போலியானவை என்பதை மும்பை உயர்நீதிமன்றம் கண்டுபிடித்தது. கர்நாடகாவிலும் ஒரு நீதிபதி தனது உத்தரவை எழுதும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கிய தவறான தீர்ப்புகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இச்சம்பவங்கள் அனைத்தும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் தரும் தகவல்களைச் சரிபார்க்காமல் அப்படியே உண்மை என்று நம்புவது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நீதித்துறைக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகின்றன.


இது இந்தியாவுக்கு மட்டுமே உரிய பிரச்சனை அல்ல என்றும் உலகின் பிற நாடுகளிலும் உள்ள நீதிமன்றங்கள் இத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் 'ரோபர்டோ மாதா vs ஏவியங்கா' (Roberto Mata vs Avianca) என்ற வழக்கில், ஒரு வழக்கறிஞர் ChatGPT உருவாக்கிய போலி சட்ட முன்னுதாரணங்களை வழங்கியதற்காக அந்நாட்டு மத்திய நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தது. அதேபோல் இங்கிலாந்தில், 89 மில்லியன் பவுண்ட் இழப்பீடு கோரப்பட்ட ஒரு முக்கிய வணிக வழக்கு உட்பட பல வழக்குகளில், போலியாக உருவாக்கப்பட்ட சட்ட மேற்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த உதாரணங்கள் உலகளாவிய ஒரு கசப்பான உண்மையை உணர்த்துகின்றன. அதாவது, செயற்கை நுண்ணறிவு (Generative AI) கருவிகள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றாலும், அவை நம்பகமான சட்டத் தரவுத்தளங்கள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர்.  எனவே அவற்றை மனிதர்கள் எப்போதும் தீர ஆராய்ந்து சரிபார்ப்பது அவசியம் என்றும் தெரிவிக்கின்றனர். 


சர்வதேச அளவில், நீதிமன்றங்கள் இதற்கு இரண்டு முக்கிய வழிகளில் பதிலளித்துள்ளன. முதலாவதாக, சரிபார்க்கப்படாத செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தகவல்களைச் சமர்ப்பிக்கும் வழக்கறிஞர்களுக்கு அபராதம் அல்லது தடைகளை விதித்துள்ளன. இரண்டாவதாக, நீதிமன்றங்களும் தொழில்முறை அமைப்புகளும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன; இதன்படி வழக்கறிஞர்கள் தாங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை என்றோ, அல்லது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் ஏதேனும் இருந்தால் அவை தங்களால் சரிபார்க்கப்பட்டது என்றோ சான்றளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. 


இந்தியாவில் தற்போதைய நிலையில் நீதிமன்ற வழக்குகளில் செயற்கை நுண்ணறிவை (Generative AI) பயன்படுத்துவது குறித்து முழுமையான விதிகள் ஏதும் வரையறுக்கப்படவில்லை. இந்திய உச்சநீதிமன்றம் இது தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன், கேரள உயர்நீதிமன்றம் போன்ற சில நீதிமன்றங்கள் தங்களின் நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்காகப் பரந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளை உருவாக்கிப் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதே சமயம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வழங்கும் பதில்களைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளன. இருப்பினும், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ஒருங்கிணைந்த மற்றும் விரிவான வழிகாட்டுதல்களும், தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கான முறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் இன்னும் தேவைப்படுகின்றன.


இதன் முக்கியப் பொறுப்பு வழக்கறிஞர்களிடமே உள்ளது. செயற்கை நுண்ணறிவால் தற்செயலாக உருவாக்கப்பட்டிருந்தாலும், தவறான தீர்ப்பு முன்னுதாரணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது வெறும் தொழில்நுட்பப் பிழை மட்டுமல்ல என்றும் அது ஒரு நேர்மையற்ற செயல் மற்றும் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கறிஞர் செய்ய வேண்டிய கடமையை மீறும் செயல் என்றும் கூறப்படுகிறது.  உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை, மனுக்களைத் தாக்கல் செய்யும் பொறுப்பைக் கொண்டுள்ள 'பதிவுபெற்ற வழக்கறிஞர்களுக்கு' (Advocates-on-Record (AOR)) இந்தப் பொறுப்பு இன்னும் அதிகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த 'பதிவுபெற்ற வழக்கறிஞர்' முறை உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தவறுகள் இடம் பெற்றால், அது தொழில்நுட்பத் தோல்வி அல்ல, மாறாக மேற்பார்வை செய்யத் தவறியதே ஆகும் என்றும் கூறியுள்ளது. எனவே இதற்குத் தகுந்த தண்டனை அல்லது தடுப்பு நடவடிக்கை அவசியமாகும். அதேபோல், இந்திய வழக்கறிஞர் சங்கம் (Bar Council of India (BCI)) மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகள், சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இதற்கான தீர்வு செயற்கை நுண்ணறிவுக்குத் தடை விதிப்பது அல்ல என்றும் மாறாகப் பொய்யான மேற்கோள்கள் உருவாகும் அபாயம் உள்ளிட்ட அதன் வரம்புகளைப் புரிந்துகொள்ள வழக்கறிஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதே ஆகும்.


அதே நேரத்தில், நீதிமன்றம் தனது சொந்த பங்களிப்பைக் குறித்தும் சிந்திக்க வேண்டும். அண்மைக் காலங்களில், குறிப்பாக 'சிறப்பு விடுப்பு மனுக்களில்' (Special Leave Petitions), தெளிவான சட்ட ரீதியான காரணங்களுக்குப் பதிலாக நீண்ட மேற்கோள்கள் மட்டுமே இடம் பெறுவதாகவும், இதனால் முறையான சட்ட ஆவணங்களைத் தயாரிக்கும் கலை (art of legal drafting) நலிவடைந்து வருவதாகவும் நீதிபதி பாக்சி விசாரணையின் போது கவலை தெரிவித்தார். இந்த விவகாரமானது வெறும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த விவாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. 


செயற்கை நுண்ணறிவு (Generative AI) உருவாவதற்கு முன்பே, தரமற்ற முறையில் மனுக்களைத் தயாரிப்பது, முறையான பகுப்பாய்வின்றி அளவுக்கு அதிகமான மேற்கோள்களைக் கையாளுவது மற்றும் சூழலைப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக முன்மாதிரித் தீர்ப்புகளைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் நடைமுறையில் இருந்தன.  இருப்பினும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வருகை இந்த பலவீனங்களை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. துல்லியமான வாதங்களைவிட நீளமான பக்கங்களுக்கும், தெளிவான சிந்தனையைவிட இயந்திரத்தனமான மேற்கோள்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் சட்டக் கலாச்சாரமே இத்தகைய குறுக்கு வழிகளை ஊக்குவிக்கிறது. மேலும், இதில் நிறுவன ரீதியான சிக்கலும் உள்ளது. நீதிமன்றங்கள் சில சமயம் மனுக்களின் தரத்தை முறையாக வலியுறுத்தாமல் அவற்றை ஏற்றுக்கொள்வதால், சட்ட வல்லுநர்களிடையே துல்லியமாகச் செயல்பட வேண்டிய அவசியம் குறைகிறது. தெளிவான வழக்குக் காரணம், தொடர்புடைய உண்மைகள் மற்றும் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகள் போன்ற முறையான விதிகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். இந்த விதிகளைத் துல்லியமாக நடைமுறைப்படுத்தினால், மனிதர்கள் உருவாக்கினாலும் அல்லது இயந்திரங்கள் உருவாக்கினாலும், மேலோட்டமான மற்றும் தரமற்ற மனுக்கள் உருவாவதை இயற்கையாகவே தடுத்து நிறுத்த முடியும் என்று கூறப்படுகிறது. 


ஸ்வப்னில் திரிபாதி,  எழுத்தாளர் மற்றும் விதி சட்டக் கொள்கை மையத்தில் உள்ள அரசியலமைப்பு சட்ட மையமான சர்க்காவை வழிநடத்துகிறார்.


Original article : Hallucinations in the Supreme Court: Poor drafting isn’t just an AI problem. -Swapnil Tripathi

Share:

சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த ஒரு திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான செயல்முறை என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


நதி பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக் குழு (expert appraisal committee (EAC)) ஜனவரி 9 கூட்டத்தில் இந்த முடிவை எடுத்தது. நீர் மின் திட்டங்களுக்கு தளர்வு அளிக்கும் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (National Company Law Tribunal (NCLT)) அல்லது நீதிமன்றங்களில் வழக்குத் தொடர இழந்த நேரத்தை 'பூஜ்ஜிய காலம்' (‘zero period’) என்று கருதும் 2025 அக்டோபர் மாத முக்கிய அலுவலக குறிப்பாணை (office memorandum (OM)) ஆகியவற்றை நம்பியிருந்தது.


இருப்பினும், இந்தக் குழு ஒரு முக்கிய விவரத்தை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. திட்டத்தின் வன அனுமதிக்கு எதிரான மேல்முறையீடு தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) விவகாரம் திட்டத்தை நிறுத்தியது மட்டுமல்லாமல், திட்டத்தின் வனவிலங்கு அனுமதியை தீர்ப்பாயம் ஒதுக்கி வைப்பதில் உச்சத்தை அடைந்தது.


இந்த வனவிலங்கு அனுமதி முன்னர் வன அனுமதி வழங்குவதற்கான அடிப்படையாக இருந்தது. இந்த விஷயத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தேசிய வனவிலங்கு வாரியத்திடம் தீர்ப்பாயம் கூறியது. அதே நேரத்தில், வன அனுமதியை அது தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. பின்னர், திட்டம் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. 2018-ல் மீண்டும் ஒருமுறை வனவிலங்கு அனுமதியைப் பெற்றது.


தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிபுணர் உறுப்பினர்களின் கருத்துக்களை சரியான காரணமின்றி நிராகரித்து. அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் முடிவுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அசாமில் உள்ள திப்ரு-சைகோவா தேசிய பூங்காவில் ஏற்படக்கூடிய தாக்கத்திற்காக நிபுணர்கள் இந்த திட்டத்தை எதிர்த்தனர்.


நீதிமன்ற வழக்குகள் காரணமாக இழந்த நேரத்தை அமைச்சகத்தின் 2025 அலுவலக குறிப்பாணை "பூஜ்ஜிய காலம்" என்று கருதுகிறது. இருப்பினும், நீதிமன்றங்கள் திட்ட அனுமதிகளை ரத்து செய்த வழக்குகளில் இந்த விதி பொருந்துமா என்பதை அது தெளிவுபடுத்தவில்லை.


நிபுணர் மதிப்பீட்டுக் குழு அறிவிப்பின் கீழ், திட்டங்களின் புதிய மதிப்பீட்டிற்கு மட்டுமே புதிய அடிப்படை ஆய்வுகள் கோரப்படுகின்றன. மேலும், ஒரு திட்டம் இன்னும் பரிசீலனையில் இருக்கும்போது மட்டுமே அடிப்படை ஆய்வுகளுக்கு ஒரு நிலையான செல்லுபடியாகும் தன்மை உள்ளது.


2025ஆம் ஆண்டின் அலுவலக குறிப்பாணைக்கு முன், சுற்றுச்சூழல் அனுமதியின் செல்லுபடியாகும் காலத்திற்குள் பணியைத் தொடங்காத எந்தவொரு திட்டத்தையும் தொடக்கத்திலிருந்தே மீண்டும் பரிசீலிக்க வேண்டியிருந்தது. இது "புதிய" பரிசீலனை என்று அழைக்கப்படுகிறது. கூடுதல் தாமதங்களைத் தடுக்க "பூஜ்ஜிய காலம்" விதி பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. தாமதங்கள் அவர்களின் தவறு அல்லாதபோது திட்டத்தை உருவாக்குநர்களுக்கு உதவுவதற்கும், இழந்த நேரத்தைக் கணக்கிடுவதற்கும் இது நோக்கமாக இருந்தது.


பிப்ரவரி 2010-ல் முதலில் வழங்கப்பட்ட திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி (EC) 2020ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும். இருப்பினும், 2022ஆம் ஆண்டு அறிவிப்பின் அடிப்படையில், நீர் மின் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகள் (EC) அவற்றின் நீண்ட காலம் காரணமாக 13 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும், சுற்றுச்சூழல் அனுமதிகள் (EC) செல்லுபடியை இறுதி வன அனுமதி வழங்கப்பட்ட தேதியிலிருந்து அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள், எது குறைவாக இருக்கிறதோ, அதிலிருந்து கணக்கிடப்பட வேண்டும் என்றும் 2022ஆம் ஆண்டின் அலுவலக குறிப்பாணை கூறியது. இந்த விதிகளின் அடிப்படையில், டெம்வே திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி (EC) செல்லுபடியாகும் தன்மை பிப்ரவரி 2012ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டது.


இதன் காரணமாக, பிப்ரவரி 2025ஆம் ஆண்டு வரை அதன் சுற்றுச்சூழல் அனுமதி (EC) செல்லுபடியாகும் தன்மையை தக்க வைத்துக் கொண்டது. மேலும், இந்த திட்டத்திற்கு ஒரு வருட கோவிட் கால தளர்வு கிடைத்தது. இதனால் பிப்ரவரி 2026ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

இந்த திட்டம், அஞ்சாவ் மற்றும் லோஹித் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தில் லோஹித் ஆற்றின் குறுக்கே 162.12 மீட்டர் உயரமுள்ள கான்கிரீட் ஈர்ப்பு அணை கட்டப்படும். 1,416 ஹெக்டேர் வன நிலம் திருப்பி விடப்படும். மேலும், 1,589.97 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும்.


திட்டத்தின் மேல் பகுதியில் உள்ள லோஹித் படுகை மற்றும் கம்லாங் புலிகள் சரணாலயம், மிகவும் அழிந்து வரும் வெள்ளை-வயிற்று ஹெரான் (White-Bellied Heron) இனத்திற்கு ஒரு முக்கியமான வாழ்விடமாக செயல்படுகிறது. 2020-ஆம் ஆண்டில் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) இந்தப் பறவைக்கான விரிவான பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரிக்க பரிந்துரைத்திருந்தாலும், ஜனவரி 2026ஆம் ஆண்டு கூட்டப் பதிவுகள் பல்லுயிர் பெருக்கம் குறித்து எந்த விவாதமும் இல்லை என்பதைக் காட்டுகின்றன.


கிரீன்கோவின் சமர்ப்பிப்புகளின்படி, டெம்வே லோயர் என்பது 3,000 மெகாவாட் நீர் மின் திட்டத்தின் ஒதுக்கப்பட்ட நதிப் பகுதியில் மிகக் குறைந்த திட்டம்/நிலையாகும்.


உங்களுக்குத் தெரியுமா? :


வளர்ச்சி-சுற்றுச்சூழல் விவாதம் என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான மோதலை ஆராயும் ஒரு சமகால விவாதப் பொருளாகும். சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடும் அதே வேளையில், அதன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் லட்சியங்களைக் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த பிரச்சினை மிகவும் பொருத்தமானது.


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமநிலைப்படுத்தும் நாடுகளுக்கு உதவுகிறது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் இழப்பில் பொருளாதார வளர்ச்சி நடக்காது என்பதை இது உறுதி செய்கிறது.


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) என்பது ஒரு முன்மொழியப்பட்ட திட்டம் அல்லது மேம்பாட்டின் சாத்தியமான நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முறையான செயல்முறையாகும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) முதன்மை நோக்கங்களில் வளர்ச்சித் திட்டங்களின் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களின் கணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவை அடங்கும்.


இது முன்மொழியப்பட்ட திட்டத்தின் வலுவான பகுப்பாய்வை வழங்குவதன் மூலம் முடிவெடுப்பதை எளிதாக்குகிறது மற்றும் திட்டமிடல் கட்டத்தில் சாத்தியமான எதிர்மறை விளைவுகளை அடையாளம் காண்பதன் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதேநேரத்தில், தீங்கைக் குறைப்பதற்கான பொருத்தமான மாற்றுகள் மற்றும் நடவடிக்கைகளை இது பரிந்துரைக்கிறது.


Original article : What is the process of getting environment clearance for an ecologically sensitive project? -Khushboo Kumari

Share:

MANAV தொலைநோக்குப் பார்வை என்பது என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


புது தில்லியில் நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் (India AI Impact Summit) உலகளாவிய தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கேட்டபோது, ​​மோடி, "செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு 'இராஜதந்திர சொத்து' என்றும் இரகசியமாக உருவாக்கப்பட வேண்டும் என்று நம்பும்" "சில நாடுகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து" "இந்தியா வித்தியாசமாக சிந்திக்கிறது" என்று கூறினார்.


"செயற்கை நுண்ணறிவுக்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையைப் பகிர்ந்து கொண்டார். அவர் இந்த பார்வையை ”MANAV” என்று அழைத்தார். இதன் பொருள் மனிதன் ஆகும்.


MANAV தொலைநோக்கு பார்வை பின்வருவனவற்றைக் குறிக்கிறது. அவை, 


M - தார்மீக மற்றும் நெறிமுறை அமைப்புகள் (Moral and ethical systems) : செயற்கை நுண்ணறிவு (AI) தெளிவான நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட வேண்டும்.


A - பொறுப்பான நிர்வாகம் (Accountable governance): செயற்கை நுண்ணறிவு (AI) வெளிப்படையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இது வலுவான மேற்பார்வையையும் கொண்டிருக்க வேண்டும்.


N - தேசிய இறையாண்மை (National sovereignty): தரவு அதை உருவாக்கும் மக்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்.


A – அணுகக்கூடியது மற்றும் உள்ளடக்கியவை (Accessible and inclusive): செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்படக்கூடாது. இது அனைவருக்கும் பயனளிக்க வேண்டும்.


V – செல்லுபடியாகும் மற்றும் சட்டபூர்வமானது (Valid and legitimate): செயற்கை நுண்ணறிவு (AI) சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். இது நம்பகமானதாகவும் சரிபார்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.


வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மூத்த கொள்கை ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணன், இந்தியா உட்பட அதன் நட்பு நாடுகள் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (AI) நிலையின் மேல் தங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்று கூறிய ஒரு நாள் கழித்து அவரது கருத்துக்கள் வந்தன.


அதே வியாழக்கிழமை, முன்னணி சர்வதேச மற்றும் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் உச்சிமாநாட்டில் புது தில்லி எல்லைப்புற செயற்கை நுண்ணறிவு (AI) தாக்க உறுதிமொழிகளில் கையெழுத்திட்டன. இது ஒரு தன்னார்வ மற்றும் வழிகாட்டும் கட்டமைப்பாகும். இதன் கீழ் உலகளாவிய சூழல்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளை மதிப்பிடுவதில் பணியாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். "செயற்கை நுண்ணறிவை (AI) ஜனநாயகப்படுத்துவதற்கு" மொழிகளுக்கு இடையேயான ஆதரவு உதவியாக இருக்கும் என்பதை அங்கீகரித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஒரு சிலரால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுவதைத் தடுக்க இந்தியாவின் உந்துதலுடன் இந்த யோசனை பொருந்துகிறது.


தனது உரையில், உலகளாவிய தரநிலைகளுக்கான அவசரத் தேவையை எடுத்துரைத்த பிரதமர்,  deepfakes  மற்றும் போலி டிஜிட்டல் உள்ளடக்கம் திறந்த சமூகங்களை "நிலைத்தன்மையின்மைக்கு ஆளாக்குகின்றன" என்று சுட்டிக்காட்டினார். உணவில் ஊட்டச்சத்து அடையாளங்களுக்கு இணையாக, மின்னணு உள்ளடக்கமும் நம்பகத்தன்மை அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டும். இதனால் மக்கள் உண்மையான மற்றும் AI-உருவாக்கப்பட்ட பொருட்களை வேறுபடுத்தி அறிய முடியும் என்றார். வாட்டர்மார்க்கிங் மற்றும் தெளிவான மூல தரநிலைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.


குழந்தை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மோடி, பள்ளி பாடத்திட்டங்கள் நிர்வகிக்கப்படுவது போலவே, செயற்கை நுண்ணறிவு (AI) இடமும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகவும் குடும்பத்தால் வழிநடத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். இன்று இரண்டு வகையான மக்கள் இருப்பதாக அவர் கூறினார். ஒன்று செயற்கை நுண்ணறிவில் (AI) பயத்தைப் பார்ப்பவர்கள் மற்றும் மற்றொரு குழு செயற்கை நுண்ணறிவில் (AI) வாய்ப்பையும் நன்மைகளையும் பார்ப்பவர்கள் ஆவர். இந்தியா AI இல் வாய்ப்பையும் எதிர்காலத்தையும் காண்கிறது என்று அவர் மேலும் கூறினார். இந்த நம்பிக்கை இந்தியாவின் வலுவான திறமை, வளர்ந்து வரும் ஆற்றல் திறன் மற்றும் தெளிவான கொள்கைகளிலிருந்து வருகிறது.


பொருளாதார பயன்பாட்டிற்கான உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) தத்தெடுப்பின் பகுப்பாய்வை மேம்படுத்த பங்கேற்கும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும். அடுத்த AI உச்சிமாநாட்டிற்குள், சர்வதேச முயற்சிகளுக்கு பங்களிப்புகள் மூலம் நேரடியாகவோ அல்லது (பொருத்தமான இடங்களில்) அநாமதேயப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வகைபிரிக்கப்பட்ட பயன்பாட்டுத் தரவுகளிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவர நுண்ணறிவுகளை வெளியிடுவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.


சி. ராஜா மோகன் குறிப்பிடுவதாவது, டெல்லியில் இந்த வார AI தாக்க உச்சி மாநாடு-2023 இல் பிளெட்ச்லி பூங்காவில் தொடங்கி சியோலில் (2024) மற்றும் பாரிஸில் (2025) தொடர்ந்த தொடரில் நான்காவது செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய உரையாடலில் ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறிக்கிறது.


பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரிட்டனில் தொடங்கிய, தென் கொரியாவின் பாதுகாப்புத் தடுப்புகள் மீதான அக்கறையைக் கடந்து, பிரான்சில் உள்ளடக்கிய ஒரு சொல்லாட்சிக் குழுவைப் பெற்ற, இப்போது டெல்லியில் AI-ஐ விரைவாகவும், பரவலாகவும் ஏற்றுக்கொள்வதற்கான அழைப்பாக மாறியுள்ளது. இது குறிப்பாக வளரும் நாடுகளை இலக்காகக் கொண்டது. இந்த அணுகுமுறை கடுமையான பிணைப்பு விதிகளை அல்ல, தன்னார்வ பாதுகாப்புகளை நம்பியுள்ளது.


இது கடுமையான ஒப்பந்தம் போன்ற கடமைகளை விட "தன்னார்வ" உறுதிமொழிகளை இந்த உச்சிமாநாடு வலியுறுத்தியது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா இடையே கடுமையான புவிசார் அரசியல் போட்டியின் மறைமுகமான ஒப்புதலாகும். இது உலகளாவிய விதி உருவாக்கத்தை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியுள்ளது.


டொனால்ட் டிரம்பிற்கு, இலக்கு தெளிவாக உள்ளது. சீனாவிற்கு எதிராக அவர் முதன்மையாகக் காணும் ஒரு போட்டியில் AI, பிரபஞ்சத்தின் மீது அமெரிக்க ஆதிக்கத்தை அவர் விரும்புகிறார். மோடியைப் பொறுத்தவரை, இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்தவும், வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய தொழில்நுட்ப சக்தியின் படிநிலையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கான சரியான இடத்தைப் பெறவும் செயற்கை நுண்ணறிவைப்  பயன்படுத்துவதே அவர் விரும்புகிறார்.


பிப்ரவரி 2025-ல் பாரிஸ் AI உச்சி மாநாட்டில், துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இந்த கொள்கைகளை உலகளவில் ஊக்குவித்தார். "பயம் சார்ந்த ஒழுங்குமுறையை நோக்கிய உயரடுக்கு ஐரோப்பிய சாய்வு" என்று அவர் அழைத்ததை அவர் நிராகரித்தார். உலகிற்கு AI குறைவாக அல்ல, அதிகமாகத் தேவை என்று அவர் வாதிட்டார்.


இது கடுமையான ஒழுங்குமுறைக்கான ஐரோப்பாவின் நீண்டகால விருப்பத்திற்கு முரணாக இருந்தது. டெல்லி உச்சிமாநாட்டில் மூத்த அமெரிக்க அரசியல் குழு இல்லாவிட்டாலும், மூத்த அதிகாரிகள், முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க கொள்கை குரல்களும் அங்கு இருந்தன. இது விவாதங்களை வடிவமைத்து இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைப் பங்கை ஆதரித்தன.


பாரிஸ் வாஷிங்டனின் லட்சியத்தை அடையாளம் கண்டால், டெல்லி இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்தியது. AI இன் ஆரம்பகால மற்றும் உற்சாகமான விளம்பரதாரரான மோடி, தெளிவான இராஜதந்திர நோக்கத்துடன் 2026 கூட்டத்தை நடத்தும் உரிமைகளைப் பெற பாரிஸ் உச்சிமாநாட்டைப் பயன்படுத்தினார். உலகளாவிய AI விவாதத்தில் இந்தியாவை ஒரு முக்கிய நட்பு நாடாகச் சேர்ப்பது மற்றும் இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்ப வேகத்திற்கான சர்வதேச ஆதரவையும் சேகரிக்க அவர் விரும்பினார்.


மோடியின் செயற்கை நுண்ணறிவு (AI) இராஜதந்திரத்தை மூன்று ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கூறுகள் ஆதரிக்கின்றன. முதலாவது இந்தியாவின் வலுவான திறமைக் குழு. பல திறமையான மக்கள் வளரவும் புதுமைப்படுத்தவும் தயாராக உள்ளனர். இரண்டாவது, இந்திய நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்யும் திறன். இது உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் டாடா குழுமத்தின் பெரிய AI உறுதிமொழிகள் மூலம் காட்டப்பட்டது. மூன்றாவது அமெரிக்கா மற்றும் அதன் தொழில்நுட்ப நிறுவனங்களுடனான இந்தியாவின் வளர்ந்து வரும் கூட்டாண்மை.


திறமை, மூலதனம் மற்றும் கூட்டாண்மை ஆகிய இந்த மூன்று பிரிவுகளும் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) லட்சியங்களின் அடித்தளமாக மாறியுள்ளன.


வெள்ளிக்கிழமை முறைப்படுத்தப்படவுள்ள அதன் Pax Silica முன்முயற்சியில் இந்தியாவை அழைக்கும் அமெரிக்காவின் முடிவு, சீனா தலைமையிலான குறைமின்கடத்தி விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) உலகின் புவிசார் அரசியல் கட்டமைப்பை வடிவமைப்பதில் இந்தியாவின் பங்கை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


செயற்கை நுண்ணறிவு (AI) மீதான இந்தியாவின் கவனம் வரலாற்றிலிருந்து ஒரு முக்கியமான பாடத்தையும் பிரதிபலிக்கிறது. பெரிய தொழில்நுட்ப புரட்சிகளில் பின்னர் சேரும் நாடுகள் தைரியமாக செயல்பட்டால் வெற்றிபெற முடியும். ஜப்பானும் தென் கொரியாவும் மின்னணுவியலில் அவ்வாறு செய்தன. சீனா உற்பத்தியில் இதைச் செய்தது. இந்தியாவே தகவல் தொழில்நுடபச் சேவைகளில் முன்னதாகவே இதைச் செய்தது.


செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் அமெரிக்க தலைமையிலான முயற்சியில் சேர இந்தியா அழைக்கப்படும் என்று அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் அறிவித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தியாவும் அமெரிக்காவும் வெள்ளிக்கிழமை Pax Silica பிரகடனத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது.


அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, பாக்ஸ் சிலிக்கா, முக்கிய தொழில்நுட்பங்கள் பாதுகாப்பானவை, நம்பகமானவை மற்றும் விரோதப் போக்கால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக “நட்பு மற்றும் நம்பகமான” நாடுகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


உலகளாவிய உற்பத்தி விநியோகச் சங்கிலியின் மீதான சீனாவின் வலுவான கட்டுப்பாட்டை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகக் கருதப்படும் இந்த இராஜதந்திர முயற்சி, டிசம்பர் 12, 2025 அன்று “கட்டாய சார்புகளைக் குறைப்பதற்கும்” “பாதுகாப்பான, வளமான மற்றும் புதுமை சார்ந்த சிலிக்கான் விநியோகச் சங்கிலியை” உருவாக்குவதற்கும் தொடங்கப்பட்டது. முக்கியமான கனிமங்கள் மற்றும் எரிசக்தி உள்ளீடுகளிலிருந்து மேம்பட்ட உற்பத்தி, குறைமின்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் வரை ஆகியவை அடங்கும்.


அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், அமெரிக்கா, இங்குள்ள பலரை ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஜப்பான், கொரியா குடியரசு, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற “கூட்டணி அமைப்புகளை” குறிப்பிட்டு, இந்த முயற்சியில் இருந்து இந்தியாவை விலக்கியது. இது வர்த்தக ஒப்பந்தத்தைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை இரு நாடுகளுக்கும் இடையே பரந்த வேறுபாடுகளை உருவாக்குகிறது என்ற கவலைகளுக்கு வழிவகுத்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, இந்த முயற்சி, கவலைக்குரிய நாடுகளின் தேவையற்ற அணுகல் அல்லது கட்டுப்பாட்டிலிருந்து உணர்திறன் வாய்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) அமைப்புகள், ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் (fibre-optic cables), தரவு மையங்கள், அடிப்படை மாதிரிகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட நம்பகமான தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதையும் உள்ளடக்கும். தொலைத்தொடர்பு போன்ற அதன் முக்கியமான உள்கட்டமைப்பில் சீனாவின் ஈடுபாடு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.


Original article : What is MANAV vision? -Khushboo Kumari

Share: