பூட்டானின் இராஜதந்திர நகர்வு, கெலெபு திட்டத்தின் நன்மைகள் -சுஹாசினி ஹைதர்சுஹாசினி ஹைதர்

 இந்த மெகா திட்டம், பூட்டானுக்கு ஒரு பெரிய சூழ்ச்சியாகும். இது, இந்தியாவின் உதவியுடன், பிராந்தியத்திற்கு ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.


இன்றைய உலகில், மக்களை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகள், ஸ்மார்ட் சிட்டிகள் போன்றவற்றை உருவாக்குவதில் பல நாடுகள் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவில், அஸ்ஸாமுக்கு அடுத்துள்ள நகரமான கெலேபுவை (Gelephu) பிராந்திய பொருளாதார மையமாக (regional economic hub) மாற்றுவதற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்க பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே (Tshering Tobgay) இந்த வாரம் இந்தியாவில் இருக்கிறார். இது குறித்து, டெல்லியில் உள்ள அரசிடமும் மற்றும் மும்பையில் உள்ள இந்திய தொழில் அதிபர்கள் இருவரிடமும் பூடான் பிரதமர் பேசி வருகிறார். டிசம்பர் 2023இல், பூட்டானின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck) அறிமுகப்படுத்திய இந்த திட்டம், 1,000 சதுர கிலோமீட்டருக்கு மேல் பூட்டானிய கட்டிடக்கலையுடன் "கெலெஃபு மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டியை" (Gelephu Mindfulness City(GMC)) உருவாக்குவதை இது உள்ளடக்கியது. இது, முதலீட்டாளர்களுக்கு உகந்த சட்டங்களைக் கொண்ட ஒரு சிறப்பு மண்டலமாக இருக்கும்.


கெலெபு, மாசு இல்லாத நகரமாக இருக்கும். இது, தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் அப்பகுதியில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கான மையமாக மாறுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த நகரம் துபாய், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நிதி மையங்களை விட சவுதி அரேபியாவில் உள்ள நியோம் (Neom) மற்றும் இந்தோனேசியாவில் உள்ள நுசந்தாரா (Nusantara) போன்ற திட்டமிடப்பட்ட நகரங்களைப் போலவே உள்ளது. இந்தியாவின் "Act East" திட்டங்கள் சந்திக்கும் இடத்தில், மியான்மர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது இந்தியா-ஜப்பான் இணைப்புத் திட்டங்களுடன் இணைகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்காளதேசம் வழியாக வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. பிப்ரவரியில், பெர்த்தில் (Perth) நடைபெற்ற 7வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் (7th Indian Ocean Conference) 2024இன் போது, இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் நிலம் சார்ந்த இணைப்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார். இதில், கடல் வழிகளை ஆதரிப்பதும், சேர்ப்பதும் முக்கியம் என்று குறிப்பிட்டுருந்தார். மேற்கில், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor(IMEC)) மற்றும் இந்தியாவின் கிழக்கில் முத்தரப்பு நெடுஞ்சாலை (Trilateral Highway) போன்ற குறிப்பிட்ட முன்முயற்சிகளை அவர் மேலும் குறிப்பிட்டார்.


பூட்டான், உயர்ந்த லட்சிய இலக்குகள் இருந்தபோதிலும், கெலெபு திட்டத்திற்கு (Gelephu project), இந்தியா நம்பிக்கையின் ஒரு பெரிய பாய்ச்சலை எடுக்க வேண்டும். கெலெபுவின் புவியியல் நிலப்பரப்பானது, ஒரு மலைப்பாங்கான நாட்டில் ஒரு அரிய தட்டையான பகுதியாக இருப்பதால், மிகப்பெரிய சவால்களை முன்வைக்கிறது. இதில், மழைக்காலத்தில், இது அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது. இதனால், அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. இப்பகுதி காடுகள் மற்றும் வனவிலங்குகளால் சூழப்பட்ட யானைகளின் இடம்பெயர்வு பாதைகளின் ஒரு பகுதியாகும். மேலும், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மியான்மர் எல்லையைத் தாண்டி கிளர்ச்சிகள் காரணமாக இப்பகுதி பாதுகாப்பு கவலைகளை எதிர்கொண்டுள்ளது. பூட்டானின் முன்னாள் மன்னர், 2003 ஆம் ஆண்டில், இந்திய இராணுவத்தின் உதவியுடன், தீவிரவாத குழுக்களை அகற்ற ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையான, ஆபரேஷன் ஆல் கிளியர் (Operation All Clear) என்ற திட்டத்தை நடத்தினார். இப்பகுதி, நிலத்தால் சூழப்பட்டிருப்பதால், சிறப்பு நிர்வாக பிராந்தியத்திலிருந்து வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பை வழங்க கெலெபுவானது, இந்தியா போன்ற நாடுகளை நம்பியுள்ளது.


கெலெபு திட்டம் பூட்டானுக்கு அவசியமானது


பூட்டான் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. எனவே, அதற்கு கெலெபு திட்டமானது முக்கியமாக தேவையாக உள்ளது. நீர், மின்சாரம் தவிர, பூடானுக்கு சுற்றுலா அவசியமாகிறது. பூட்டான், சுற்றுலா மூலம் அதிக பணம் சம்பாதிக்க விரும்பினால், அதிக சுற்றுலாப் பயணிகளையும், பெரிய விமானங்களையும் வரவேற்கும் திறனை விரிவுபடுத்த வேண்டும். இது, சிறிய பாரோ பள்ளத்தாக்கில் (Paro valley) உள்ள விமான நிலையத்தை விட, பெரிய விமான நிலையத்தை உருவாக்குவதாகும்.


கெலெபு திட்டம் (Gelephu project) இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, கெலேபு விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். இதற்கு, இந்தியாவின் பணமும் உதவியும் தேவைப்படும். மற்றொரு பிரச்சினை என்னவென்றால், பல பூட்டானிய இளைஞர் வெளிநாட்டில் வேலை தேடுவதற்காக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். கெலெபு போன்ற பெரிய திட்டங்கள் இதைத் தடுக்க உதவும் என்று அரசாங்கம் நினைக்கிறது. கூடுதலாக, எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவும் பூட்டான் நாடு, சீனாவால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தெற்கில் உள்ள கெலெபு பகுதியானது, எல்லை நிலைத்தன்மைக்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது பூட்டானை உலகிற்கு திறக்க உதவக்கூடும்.


இந்தியாவைப் பொறுத்தவரை, பெய்ஜிங்குடன் அணிசேராத ஒரே அண்டை நாடு பூட்டான் என்பதால், சீனாவுடனான பூட்டானின் உறவைக் கண்காணிப்பது முக்கியம். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. ஒவ்வொரு பூடான் மன்னரும், இந்திய பிரதமரும் கடந்த 75 ஆண்டுகளாக நல்ல புரிந்துணர்வைக் கடைபிடித்துள்ளனர். பூட்டானின் கோரிக்கைகளை இந்தியா எப்போதும் ஆதரித்து வருகிறது மற்றும் அந்த நாட்டின் மிகப்பெரிய முதலீட்டாளராகவும் உள்ளது. அதன், அந்நிய நேரடி முதலீட்டில் 50% ஐ வழங்குகிறது. இலங்கையின் அம்பாந்தோட்டையில் (Hambantota) நடந்ததைப் போன்ற போன்ற தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதை தவிர்ப்பதில் இந்தியா எச்சரிக்கையாக இருக்கலாம். அது இலங்கையை சீனாவின் பக்கம் சாய்க்க வழிவகுத்தது. அதிக கடனை ஏற்படுத்தியது மற்றும் பயனற்ற திட்டத்தை உருவாக்கியது. கெலெபுவின் உள்கட்டமைப்புத் தேவைகள், பூட்டானின் எல்லை வரை ரயில் பாதைகளை விரிவாக்குவது உட்பட, பிராந்தியத்திற்கான இந்தியாவின் திட்டங்களுடன் ஒத்துப்போகிறது. வாங்காளதேசம் மற்றும் இலங்கைக்கு வழங்குவதற்காக நேபாளம் மற்றும் பூட்டானில் இருந்து மின்சாரத்தைப் பெறும் ஒரு தெற்காசிய மின் தொகுப்பை உருவாக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இது, கெலெபுவுக்கு ஒரு நிலையான மின்சார விநியோகத்தை வழங்கும்.  


கெலெபு சவால்களை எதிர்கொண்டாலும், இந்தியாவின் பிற இணைப்பு திட்டங்களிலும் தடைகள் உள்ளன. ஈரான் மற்றும் ரஷ்யா வழியாக சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து நடைபாதை பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கிறது. மேலும், இந்தியா-மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor(IMEC)) மற்றும் I2U2 (இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் குழுவாகும்) குழு போன்ற முயற்சிகள் மத்திய கிழக்கில் மோதல்களால் பாதிக்கப்படுகின்றன. கூடுதலாக, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் மோசமடைந்துள்ளன. மேற்கு எல்லையில் நில இணைப்புக்கான திட்டங்களுக்கு இடையூறாக உள்ளன. 


அது உறவுகளை மாற்றியமைக்க முடியும்


முதலீட்டில் உடனடி வருமானம் இல்லாமல் கற்பனை செய்யப்பட்ட "கெலெஃபு மைண்ட்ஃபுல்னெஸ் நகரத்தைப்" (Gelephu Mindfulness City(GMC)) போன்ற ஒரு மெகா-திறன்மிகு நகரத்தை உருவாக்குவது இப்போது சிறந்ததல்ல. எவ்வாறாயினும், உலகளாவிய உறவுகள் மிகவும் தீவிர முனைப்புடன், நாடுகள் தங்கள் அண்டை நாடுகளில் உள்ள பாரம்பரிய நட்பு நாடுகளை நோக்கி சாய்ந்து வருகின்றன. இதில், பகிரப்பட்ட மொழி, நம்பிக்கை, கலாச்சாரம், புவியியல் மற்றும் காலநிலை ஆகியவற்றைக் கொண்ட தெற்காசியாவில் இந்தியா தனது உறவுகளை வலுப்படுத்த வேண்டும். இலங்கைக்கு உதவுவதன் மூலம் இந்தியாவின் நல்லெண்ணம் மற்றும் வங்காள்தேசத்துடனான அதன் வலுவான உறவை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த முடியும். உதாரணமாக, நேபாளத்தின் புதிய விமான நிலையங்களுக்கு வான்வழி உரிமைகளை வழங்குவதன் மூலமும், சமீபத்திய பின்னடைவுகள் இருந்தபோதிலும் மாலத்தீவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலமும் இந்தியா உதவ முடியும். பாகிஸ்தானுடன் புதிய வாய்ப்புகளை இந்தியா மேற்கொள்வதற்கு சிறப்பு கவனம் செலுத்தலாம். கெலெபு திட்டம், ஒரு சிறந்த எதிர்காலத்தை கற்பனை செய்ய பிராந்தியத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது,  இந்தியாவின் ஆதரவுடன் பிராந்தியத்தை மாற்றியமைக்கும்.




Original article:

Share: