இந்தியாவில் வறுமை உண்மையிலேயே 5% ஆக குறைந்துள்ளதா? -பிரசாந்த் பெருமாள் ஜெ.

 நிதி ஆயோக்கின் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் சமீபத்தில் 5% க்கும் குறைவான இந்தியர்கள் வறுமையில் வாழ்கின்றனர் என்று கூறினார். 2022-23 ஆம் ஆண்டிற்கான குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பை (Household Consumption Expenditure Survey (HCES)) அடிப்படையாகக் கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். திரு. சுப்ரமணியம் இந்தியாவில் 5% ஏழைகளின் செலவு வறுமைக் கோட்டுடன் பொருந்துகிறது என்று கூறினார், வறுமை 0 முதல் 5% வரை இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார். ஆனால் வறுமை உண்மையில் 5% ஆகக் குறைந்துள்ளதா? சுர்ஜித் பல்லா மற்றும் ஜெயதி கோஷ், பிரசாந்த் பெருமாள் ஜே உடன் இதைப் பற்றி உரையாடுகிறார்கள். அவர்களின் உரையாடலின் சில திருத்தப்பட்ட பகுதிகள் இங்கே.


5% க்கும் குறைவான இந்தியர்கள் வறுமைக் கோட்டிற்குக் (poverty line) கீழே வாழ்கின்றனர் என்பது கூற்று. இந்தியாவில் வறுமைக் கோடு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதை விளக்க முடியுமா? வறுமைக் கோட்டை உயர்த்த வேண்டுமா? 


சுர்ஜித் பல்லா: நாம் வறுமையின் மட்டத்தில் மாற்றம் (level of poverty) பற்றி பேசுகிறோம். 2011-12ல், அதே வறுமைக் கோட்டின் அடிப்படையில் இன்றைய நிலவரப்படி இந்தியாவில் வறுமை நிலை 12.5% ஆக இருந்தது. இப்போது அது 5% ஆக குறைந்துள்ளது. டெண்டுல்கர் வறுமைக் கோட்டின்படி கிராமப்புறங்களில் ₹1,500 மற்றும் நகர்ப்புறங்களில் ₹1,800 ஆக இருக்கும் வறுமைக் கோட்டைப் பயன்படுத்தினால், நீங்கள் சுமார் 2% வறுமை நிலையைப் பெறுவீர்கள். எனவே, 2011-12ல் சுமார் 12.5% ஆக இருந்த 2022-23ல் 2% ஆகக் குறைந்துள்ளோம். உலகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்கான அளவீடு உயர்த்தப்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது. வறுமையை அளவிடுவதற்கு உலக வங்கியின் குறைந்த-நடுத்தர வருமான வரியைப் பயன்படுத்தினால், கிராமப்புறங்களில் சுமார் 25% மற்றும் நகர்ப்புறங்களில் 11% வறுமை நிலை இருப்பதைக் காண்கிறோம், இது 21% வறுமை விகிதத்தைக் கூட்டுகிறது. வறுமைக் கோட்டிற்கான அளவீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.


ஜெயதி கோஷ்: நான் ஏற்கவில்லை, ஏனென்றால் இந்தியாவில் இப்போது தரவுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல்மயமாக்கப்பட்டுள்ளன. சுர்ஜித் பல்லா, டெண்டுல்கர் வறுமைக் கோட்டை  (Tendulkar line) பயன்படுத்துகிறார், உலக வங்கியின் நாளொன்றுக்கு $2.15 வாங்கும் சக்தி கொண்ட மக்கள் வறுமைக் கோட்டில் உள்ளதாகவும், அவர்கள் மொத்த  மக்கள் தொகையில் 5% க்கும் குறைவாக இருப்பதாக இருவரும் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஒரு சிக்கல் உள்ளது. டெண்டுல்கர் வறுமைக் கோடு ஒரு நிலையான கருத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. இது குறைந்தபட்ச கலோரி தேவை யோசனையிலிருந்து விலகிச் செல்கிறது. இதன் பொருள் போதுமான கலோரிகளை உட்கொள்ளும் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளதாக கருதப்படும். மேலும், இந்தியாவில் தற்போது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தெளிவான வறுமைக் கோடு என்பது இல்லை. கூடுதலாக, இந்த கணக்கெடுப்பை முந்தையவற்றுடன் ஒப்பிடும் போது நாம் எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும். ஏனெனில், அவை ஒப்பிடத்தக்கவை அல்ல என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.


2011-12 முதல் நுகர்வு செலவினம் (consumption expenditure) சுமார் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என்று கணக்கெடுப்பு கூறுகிறது, ஆனால் விமர்சகர்கள் இந்த கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் வருமானம் உயரவில்லை என்று கூறுகின்றனர். இடைவெளியை விளக்குவது எது?


சுர்ஜித் பல்லா: சரி, அது பெயரளவில் தான். உண்மை அடிப்படையில் கடந்த 11 ஆண்டுகளில் தனிநபர் நுகர்வு சுமார் 40% அதிகரித்துள்ளது. அதனால், இதில் என்ன பிரச்சனை என்று நான் பார்க்கவில்லை. கூற்றை உறுதிப்படுத்தும் மற்ற புள்ளிவிவரங்கள் உள்ளன. ஊதியத்தைப் பாருங்கள், காலமுறை தொழிலாளர்  கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) பல்வேறு தொழிலாளர்களின் ஊதியம் குறித்த தரவை உங்களுக்கு வழங்குகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கு, 2011 முதல் ஆண்டுக்கு 3.2% ஊதியம் உயர்ந்துள்ளது. எனவே, உண்மையான ஊதியம் உண்மையில் உயர்ந்துள்ளது. மேலும், ஊதியம் பெறும் தொழிலாளர்களின் ஊதியத்தில் 2011 முதல் நியாயமான, வலுவான வளர்ச்சியைக் காட்டுகின்றன. எனவே, வருமானம் உயர்ந்துள்ளது, அதனால் நுகர்வு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டும் தரவு உள்ளது.


 ஜயதி கோஷ்: தரவுகளில் கருத்து வேறுபாடு இருப்பது வருந்தத்தக்கது. பல்வேறு ஆய்வுகள் 2017 முதல், உண்மையான ஊதியங்கள் (real wages) ஆண்டுதோறும் 1%க்கும் குறைவாக அதிகரித்துள்ளன. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உண்மையில் ஊதியம் குறைந்துள்ளது. 2022-23க்கான சமீபத்திய காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பில் கூறப்படும் வேலைவாய்ப்பின் அதிகரிப்பு தவறானது. ஏனென்றால், ஊதியம் இல்லாத குடும்ப உதவியாளர்களின் அதிகரிப்பு, ஊதியம் இல்லாத வேலை அதிகரிப்புதான் இந்த அதிகரிப்புக்குக் காரணம். 2011-12 மற்றும் 2017-18 ஆகிய இரண்டிலும் 32% இருந்த பெண் தொழிலாளர்களில் 37.5% ஊதியம் பெறவில்லை என்று தற்போது காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. ஊதியம் பெறும் வேலையை மட்டும் பார்க்கும்போது, ஆண்களுக்கு 48% மற்றும் பெண்களுக்கு 13%. எனவே, பெரும்பாலான உழைக்கும் குடும்பங்களின் உண்மையான ஊதிய வருமானம் அதிகரித்து வருகிறது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை.


ஒவ்வொரு ஆண்டும் உண்மையான நுகர்வு (real consumption) சுமார் 3% அதிகரித்து வருவதாக தேசிய மாதிரி ஆய்வு (National Sample Survey) அமைப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், இந்த வளர்ச்சியானது, மக்கள் தொகையில் 10 முதல் 15% செல்வந்தர்களிடையே குறிப்பிடத்தக்க அளவு நுகர்வு காரணமாக உள்ளது. இந்த போக்கு நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், ஒட்டுமொத்த நுகர்வு வளர்ச்சியை முதன்மையாகவும் அதிக வருமானமும் கொண்ட குழுக்களால் தூண்டப்படுகிறது. வெகுஜன நுகர்வு மற்றும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் தேவையின் குறைந்தபட்ச வளர்ச்சி போன்ற பிற அறிகுறிகளும் இந்த சிக்கலை சுட்டிக்காட்டுகின்றன. கூடுதலாக, இரு சக்கர வாகனங்களுக்கான தேவையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி குறைவு, நவம்பர் 2016 இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் காணப்பட்ட விற்பனை அளவைக் கூட எட்டவில்லை.


மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது தற்போது மூலதனச் செலவினங்களால், குறிப்பாக, பொதுத்துறையில் இருந்து உந்தப்பட்டு வருகிறது. தனியார் முதலீட்டில் இதேபோன்ற மீள் எழுச்சி இல்லாததால் இது நடக்கிறது. வெகுஜன நுகர்வுச் சந்தைகளில் தேங்கி நிற்கும் தேவை இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.


அரசாங்கத்தின் தரவுகளின் நம்பகத்தன்மையின்மை குறித்து விமர்சகர்கள் முன்வைத்த வாதங்களுக்கு பதிலளிக்க நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


சுர்ஜித் பல்லா:  தனிப்பட்ட ஆதாரங்களில் இருந்து தரவின் துல்லியம் பற்றி ஒரு பரந்த உரையாடல் தேவை. இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (Centre for Monitoring Indian Economy(CMIE)) தரவுகளில் ஒரு குறிப்பிடத்க்க கவலை உள்ளது. இது இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் யேமன் மற்றும் ஈராக்கை விட குறைவாக உள்ளது. இது இந்தியப் பெண்களில் 9% மட்டுமே வேலை செய்வதைக் குறிக்கிறது. கூடுதலாக, அரசாங்க தரவின் தரத்தில் பல சிக்கல்கள் உள்ளது; எடுத்துக்காட்டாக, 2017-18 நுகர்வோர் செலவின கணக்கெடுப்புத் தரவு (consumer expenditure survey) தவறான தரவு காரணமாக வெளியிடப்படவில்லை. இந்தத் தரவை வெளியிட வேண்டாம் என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், வெளியிடப்படாத தரவு தரம் குறைந்ததாகக் கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையானது அரசாங்கத் தரவைக் காட்டிலும் தனியார் மூலங்களிலிருந்து வரும் தரவு நம்பகத்தன்மை குறைவாக இருக்கலாம் என்ற கவலையை எழுப்புகிறது.


ஜெயதி கோஷ்: தரவுகளின் தரம் மற்றும் அரசியல்மயமாக்கல் குறித்த பார்வையை நான் ஏற்கவில்லை. 2017-18 இன் நுகர்வோர் செலவினக் கணக்கெடுப்பு மோசமான தரம் வாய்ந்ததாக இருந்ததால் அது கைவிடப்பட்டது,. ஆனால், கணக்கெடுப்பின் முடிவுகளைப் பெற்று,  என்ன தவறு என்று ஆராய்தல் வேண்டும். ஆனால், 2019 மக்களவைத் தேர்தல் முடியும் வரை காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பை வெளியிடப்படாத விதத்தைப் பாருங்கள். கடந்த ஆண்டு, திறந்தவெளி மலம் கழித்தல் பற்றிய தரவுகளுக்காக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் முடிவுகளை வெளியிட்ட, மக்கள்தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனத்தின் (the International Institute for Population Sciences) தலைவர் விமர்சிக்கப்பட்டார். 


 அரசாங்கத்தின். ‘தூய்மை கங்கை’ (Clean Ganga) பணி போன்ற பல தணிக்கை அறிக்கைகள் நசுக்கப்படுவதைப் பாருங்கள். இந்தச் செயல்முறையைத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் நாம் இன்னும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கூட செய்யவில்லை என்பதைப் பாருங்கள். இந்த ஆண்டு கணக்கு வாக்கெடுப்புக்கு முந்தைய பொருளாதார ஆய்வாக இருந்தாலும், உண்மையான பொருளாதார ஆய்வை விட பிரசாரத் தாள் போல் வெளிவந்தது இந்தக் குறிப்பிட்ட நுகர்வு அறிக்கை, வழக்கமான அனைத்து விவரங்களையும் வழங்காத பகுதி அறிக்கைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீட்டைப் பாருங்கள். இது நமக்கு போதுமான விவரங்களைத் தருவதில்லை. இது ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, ஏனென்றால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாட்டிற்கான உலகின் சிறந்த புள்ளிவிவர அமைப்புகளில் ஒன்று எங்களிடம் இருந்தது. மேலும், இது மிகவும் அப்பட்டமாக அரசியல்மயமாக்கப்பட்ட முறையில் அழிக்கப்படுவது ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.


‘தானியங்கள் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களைத் தாண்டி அதிகமான பொருட்களுக்காக மக்கள்  செலவிடுகிறார்கள்’ என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார். இது பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளம் அல்லவா?


ஜெயதி கோஷ்: முற்றிலும் சரி. ஆனால், வருமான அதிகரிப்புடன் இது நடக்க வேண்டும், இல்லையா? இது ஒரு ஆச்சரியம் அல்ல, அதிக இயந்திரமயமாக்கல் மிகவும் குறைவான நடைபயிற்சி போன்றவை இருப்பதால், நீங்கள் குறைந்த தானியங்களை சாப்பிட வேண்டும். மற்றும், நீங்கள் மிகவும் சீரான, மற்றும் சத்தான உணவை சாப்பிட வேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். அதில் தெற்காசியாவிற்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச சத்தான உணவை 74% இந்திய மக்களால் வாங்க முடிவதில்லை என்று கூறுகிறது. அதனால் நாம் இன்னும் மிகவும் பின்தங்கியுள்ளோம்.


சுர்ஜித் பல்லா: 1980களில், கலோரி உட்கொள்ளல் வறுமையின் முக்கிய நடவடிக்கையாக பரவலாகக் கருதப்பட்டது. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் கலோரி உட்கொள்ளல் தரத்தின்படி, 80% அமெரிக்கப் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, உலக வங்கி வறுமையை வரையறுப்பதற்கான அதன் அணுகுமுறையை புதுப்பித்துள்ளது. இப்போது முழுமையான வருமான நிலைகளை அளவுகோலாகப் பயன்படுத்துகிறது. இந்த மாற்றம் வெறும் கலோரி நுகர்வுக்கு அப்பால் வறுமை என்ன என்பதைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்கிறது.


ஜெயதி கோஷ்: நல்ல ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து அவசியம். ஐக்கிய நாடுகளின் 12 முக்மைகளால் உருவாக்கப்பட்ட ஒரு குறிகாட்டியானது கலோரி உட்கொள்ளலை அளவிடுவதற்கு பயன்படுத்தியது.  இந்தியாவின் மக்கள்தொகையில் முக்கால்வாசி பேர் சரியான ஆரோக்கியத்திற்குத் தேவையான குறைந்தபட்ச சத்தான உணவை வாங்க முடிவதில்லை என இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த குறிகாட்டி கலோரி நுகர்வுக்கு பதிலாக ஊட்டச்சத்து பற்றிய விரிவான தோற்றத்தைக் காட்டுகிறது.  


சுர்ஜித் பல்லா பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர்.ஜெயதி கோஷ் ஒரு வளர்ச்சி பொருளாதார அறிஞர் மற்றும் ’The Making of a Catastrophe: The Disastrous Economic Fallout of the COVID-19 Pandemic in India’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்.




Original article:

Share: