தரநிலையை நிர்ணயித்தல் -Editorial

 ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) சட்டத்திலிருந்து  இந்தியா சரியான குறிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


ஐரோப்பிய ஒன்றிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) சட்டம், மார்ச்சில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அடுத்த மாதம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அனைவருக்கும்  ஒரு முன்னோடி சட்டமாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை குறித்த இந்தியா உட்பட பிறநாடுகளுக்கு இது ஒரு அளவுகோலாக மாறக்கூடும். இந்தச் சட்டம் புதுமைகளைப் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை பரிசீலனைகளுடன் சமநிலைப்படுத்த முற்படுகிறது. இது AI பயன்பாடுகளை வெவ்வேறு ஆபத்து நிலைகளாக வகைப்படுத்துகிறது மற்றும் தொடர்புடைய பாதுகாப்புகளை அமைக்கிறது. இந்த அணுகுமுறை பொது நலனைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் புதுமையை வளர்க்கும் நுணுக்கமான விதிகளை உருவாக்க உதவுகிறது.

 

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற இணையதளம் சட்டத்தைப் பற்றிய பல முக்கிய விஷயங்களைக் குறிப்பிடுகிறது:


1. பயோமெட்ரிக் (biometric) அமைப்புகளின் வரம்புகள்: பயோமெட்ரிக் அடையாள அமைப்புகளைக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே (“narrowly defined situations”) பயன்படுத்த முடியும்.


2. சில நடைமுறைகள் மீதான தடைகள்: சமூக மதிப்பெண்கள், முன்கணிப்புக் காவல் (ஒரு நபரின் விவரக்குறிப்பின் அடிப்படையில்), பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் உணர்ச்சிகளை அங்கீகரிப்பது மற்றும் சமூக அங்கீகார தரவுத்தளங்களுக்கான முகப் படங்களை மறைத்தல் (scraping facial images) செய்வது ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.


3. செயற்கை நுண்ணறிவு கையாளுதலின் மீதான கட்டுப்பாடுகள்: பாதிப்புகளைப் பயன்படுத்தி மனித நடத்தையைக் கையாளும் AI-யும் தடைசெய்யப்பட்டுள்ளது.


4. அதிக ஆபத்துள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கான கட்டுப்பாடு: உள்கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வங்கி மற்றும் சட்ட அமலாக்கம் போன்ற முக்கியமான பகுதிகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் விதிகளைப் பின்பற்ற வேண்டும். வெளிப்படைத்தன்மை, பயன்பாட்டுப் பதிவுகளை பராமரித்தல் மற்றும் மனித மேற்பார்வை ஆகியவை இதற்கு உட்பட்டவை. 


செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் குறித்து புகார் அளிக்க குடிமக்களுக்கு உரிமை உண்டு. மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கான வெளிப்படைத்தன்மையை இந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. பயனர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது அதன் விளைவுகள் குறித்து அவர்களுக்குத் தெரியும் என்பதை உறுதி செய்கிறது. இது நம்பிக்கை மற்றும் தகவலறிந்த ஒப்புதலை ஊக்குவிக்கிறது. இது பொறுப்பான செயற்கை நுண்ணறிவு வரிசைப்படுத்தலுக்கு முக்கியமானது. இந்தியா தனது சட்டங்களையும் விதிகளையும் இதேபோல் உருவாக்க வேண்டும். அவற்றை ஆபத்து நிலைகளுக்கு ஏற்ப உருவாக்க வேண்டும். டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மை (Global Partnership on Artificial Intelligence (GPAI)) உச்சி மாநாடு, புதிய கண்டுபிடிப்புகளை சமநிலைப்படுத்துவதிலும், அபாயங்களைக் கட்டுப்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தது.


இந்தச் சட்டம் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இது நிறுவனங்களுக்கு, குறிப்பாக தொடக்கநிலை மற்றும் சிறு-நடுத்தர நிறுவனங்களுக்கு (small-to-medium enterprises (SMEs)) எவ்வாறு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது ஒரு கவலையாக உள்ளது.  அதிக ஆபத்துள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்குத் தேவைப்படும் கடுமையான ஆவணங்கள் மற்றும் சோதனைகள் சிறு வணிகங்களை சந்தையில் சேரவிடாமல் தடுக்கலாம். இது பன்முகத்தன்மை, போட்டி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை கட்டுப்படுத்தலாம். மற்றொரு கவலை என்னவென்றால், தேசிய பாதுகாப்பிற்கான விதிவிலக்குகள். இதில் முக்கியமான செயற்கை நுண்ணறிவு விதிமுறைகளை அரசாங்கங்கள் புறக்கணிக்க முடியும்.


செயற்கை நுண்ணறிவில் சிறந்ததாக இருக்க உலகம் போட்டியிடுகிறது. செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் உருவாக்கப்படுகிறது என்பதற்கான உலகளாவிய ஒப்பந்தங்களும் விதிகளும் தேவை. தனிப்பட்டத் தரவு பாதுகாப்பு விதிகளுக்காக காத்திருக்காமல், புதிய அரசாங்கம்  செயற்கை நுண்ணறிவுக்கான விதிகளை விரைவாக உருவாக்க வேண்டும். இப்போது சட்டங்களை உருவாக்குவது பாதுகாப்பான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். மேலும் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவதில் இந்தியாவை முதன்மையான நாடாகக் காட்டும். 




Original article:

Share: