தற்போதைய செய்தி : 2024-25 நிதியாண்டில் “மாசு கட்டுப்பாடு” திட்டத்திற்காக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.858 கோடியில் 1 சதவீதத்திற்கும் குறைவான தொகையே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
முக்கிய அம்சங்கள் :
• 2025-26-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையில் நிதி மோசமாகப் பயன்படுத்தப்பட்டதைக் கண்டு அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்றக் குழு அதிர்ச்சியடைந்தது. இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்து அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டது.
• ஒதுக்கப்பட்ட ரூ858 கோடியில் ஜனவரி 21-ஆம் தேதி வரை ரூ7.22 கோடி மட்டுமே செலவிடப்பட்டது குறித்து குழு ஆச்சரியப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தொடர அனுமதிக்காகக் காத்திருப்பதால், நிதியைப் பயன்படுத்த இயலாது என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், கடந்த இரண்டு நிதியாண்டுகளில், இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவு அறிக்கை நிதி முழுமையாக செலவிட்டதாக அமைச்சகம் அறிக்கை காட்டுகிறது.
• “மாசு கட்டுப்பாடு” திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ₹858 கோடி பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்டு குழு அதிர்ச்சியடைந்தது. இந்தத் தொகை அமைச்சகத்தின் திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 27.44% ஆகும். நிதியாண்டு முடிவடையும் நிலையில் கூட, 2025-26 வரை இந்தத் திட்டத்தைத் (Control of Pollution Scheme) தொடர ஒப்புதல் அளிக்காமல் இருந்ததே தாமதத்திற்குக் காரணம் என்று அறிக்கை கூறுகிறது.
• நாடாளுமன்ற மேற்பார்வையின் ஒரு பகுதியாக, துறை தொடர்பான நிலைக்குழுக்கள், வரவு செலவு அறிக்கை ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது அரசு அமைச்சகங்களின் செலவு மற்றும் செயல்திறனை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா:
• தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் (National Clean Air Programme (NCAP)) முக்கிய பகுதியாக இருக்கும் “மாசு கட்டுப்பாடு” திட்டத்திற்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதியளிக்கிறது. 2026-ஆம் ஆண்டிற்குள் 131 நகரங்களில் நுண்ணிய துகள்களால் 10 (நுண்ணிய மாசுபடுத்திகள்) மாசுபாட்டைக் குறைப்பதை NCAP நோக்கமாகக் கொண்டுள்ளது. 15-வது நிதி ஆணையம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 49 நகரங்களில் NCAP-க்கு நிதியளிக்கிறது. அதே நேரத்தில் “மாசு கட்டுப்பாடு” திட்டம் காற்று தரத் தரங்களை பூர்த்தி செய்யத் தவறும் 82 நகரங்களில் காற்றைச் சுத்தம் செய்ய உதவுகிறது.
• நாடு முழுவதும் காற்று, நீர் மற்றும் ஒலி மாசுபாடு மற்றும் அவற்றின் தர நிலைகளைக் கண்காணிக்க “மாசுக் கட்டுப்பாடு” திட்டம் 2018-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பலவீனமான மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு நிதியுதவி மற்றும் மாசு அளவைக் கண்காணிக்கும் திட்டம் ஆகியவை அடங்கும். சமீபத்தில், உலக காற்று தர அறிக்கை 2024 டெல்லியை உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக மதிப்பிட்டுள்ளது. சராசரியாக PM2.5 அளவு ஒரு கன மீட்டருக்கு 91.8 மைக்ரோகிராம் ஆகும். உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளன என்பதையும் இது கண்டறிந்துள்ளது.
• காலநிலை மாற்றப் பிரச்சினைகள் குறித்து, உலகளாவிய காலநிலை முயற்சிகள் மற்றும் காலநிலை நிதியிலிருந்து அமெரிக்க நிர்வாகம் விலகுவது குறித்து House குழு கவலை தெரிவித்தது. இந்தியா ஒரு பெரிய நாடாக இருப்பதால், பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அது கூறியது.