காவலர் நினைவு தினம். -ரோஷ்ணி யாதவ்

 பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (அக்டோபர் 21) புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். இந்த சூழலில், காவலர் நினைவு தினத்தின் (Police Commemoration Day) பின்னணியில் உள்ள வரலாறு மற்றும் சீர்மிகு காவல்துறையின் முயற்சிகள் (Smart Policing initiatives) பற்றி அறிந்து கொள்வோம்.


தற்போதைய நிகழ்வு : 


பிரதமர் நரேந்திர மோடி, காவலர் நினைவு தினத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முக்கிய அம்சங்கள் :


1. காவலர் நினைவு தினம் (Police Commemoration Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது 1959-ல் சீன துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த பத்து காவலர்களை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.


2. 1959-ல், சீன வீரர்கள் 20 பேர் கொண்ட இந்திய காவலர்கள் குழுவைத் தாக்கினர். மேலும், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கையெறி குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் பத்து பேர் கொல்லப்பட்டனர், இதில் ஏழு பேர் காயமடைந்தனர். பின்னர், அவர்கள் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்று வாரங்களுக்குப் பிறகு, சீனா பத்து வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியது. பின்னர் அவை வடகிழக்கு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸில் (Hot Springs in North Eastern Ladakh) முழு காவல் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன.


3. 1959 இலையுதிர் காலம் வரை, இந்தியாவிற்கும் திபெத்துக்கும் இடையிலான 2,500 மைல் நீள எல்லையைக் காக்கும் பொறுப்பு காவல்துறையினரிடம் இருந்தது.


4. தியாகிகளை கௌரவிப்பதற்காக ஹாட் ஸ்பிரிங்ஸில் ஒரு நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காவல்துறையினர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஹாட் ஸ்பிரிங்ஸுக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.


5. 2012-ம் ஆண்டு முதல், சாணக்கியபுரியில் உள்ள காவலர் நினைவிடத்தில் தேசிய அளவில் காவலர் நினைவு தின அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சீர்மிகு காவல் முன்முயற்சி (Smart Policing Initiative)


இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் ‘காவல்துறை’ மற்றும் ‘பொது ஒழுங்கு’ ஆகியவை மாநிலப் பட்டியலில் உள்ள துறையாகும். மேலும், காவல் படைகளை நவீனமயமாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


1. சீர்மிகு காவல் : வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் பதில்களை வழங்கவும், இந்தியாவில் காவல்துறை சீர்மிகு காவல் (SMART Policing) என்ற கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.


குறிப்பாக, காவல்துறையைக் குறிக்கும் சுருக்கமாக சீர்மிகு என்ற சொல் 2014-ம் ஆண்டு DGsP/IGsP போன்ற காவல்துறை மாநாட்டின்போது பிரதமரால் உருவாக்கப்பட்டது. வளர்ந்துவரும் சவால்களை எதிர்கொள்ளவும், பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் பதில்களை வழங்கவும், இந்தியாவில் காவல்துறை சீர்மிகு காவல் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.


இது இணையக் குற்றத் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, சமீபத்திய உபகரணங்களுடன் திறன் மேம்பாடு, இடதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிரான எதிர் நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் பாதுகாப்பு போன்ற முழு அளவிலான காவல் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது.


2. காவல் துறையை நவீனமயமாக்க மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு உதவி (Assistance to State & UTs for Modernization of Police (ASUMP)) திட்டம் : மாநில காவல் படைகளை நவீனமயமாக்கும் முந்தைய திட்டம் (Modernisation of State Police Forces (MPF)), காவல் நிலையங்கள் போன்ற காவல் உள்கட்டமைப்பை நிர்மாணிப்பதோடு, சமீபத்திய தொழில்நுட்பம், ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றைக் கொண்டு காவல் உள்கட்டமைப்பை அதிநவீன அளவில் வலுப்படுத்துவதே ASUMP-ன் நோக்கமாகும்.


ASUMP திட்டத்தின்கீழ், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளில் கவனம் செலுத்தலாம். இதில் சைபர் காவல் துறைக்கான உபகரணங்கள், தகவல் தொடர்பு கருவிகள், மேம்பட்ட ஆயுதங்கள் போன்றவை அடங்கும். இதனால், இந்தக் கூறுகள் முடிந்த பிறகு, மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் குறைந்தபட்சத் தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்துள்ளதா என்பதை மதிப்பிடலாம்.


3. ‘தேசிய இணையக் குற்றப் பயிற்சி மையத் (CyTrain)’ தரவுத்தளம் : இது ஒரு பெரிய திறந்த இணையவழிப் படிப்புகள் (Massive Open Online Courses (MOOC)) தளமாகும். இது இணையக் குற்ற விசாரணை, தடயவியல், வழக்குத் தொடருதல் போன்றவற்றின் முக்கியமான அம்சங்கள் குறித்த இணையவழிப் படிப்புகள் மூலம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் திறனை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது.


4. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையக் குற்றத் தடுப்பு (CCPWC) : இந்தத் திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டிற்காக மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் இணையத் தடயவியல் மற்றும் பயிற்சி ஆய்வகங்களை அமைத்தல், ஜூனியர் இணைய ஆலோசகர்களை பணியமர்த்துதல் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவை அடங்கும்.


தேசிய காவல் நினைவுச்சின்னம் (National Police Memorial)

1. 2018-ம் ஆண்டு காவலர் நினைவு தினத்தன்று, புது தில்லியின் சாணக்கியபுரியில் உள்ள தேசிய காவலர் நினைவுச்சின்னம், காவலர் பணியாளர்களின் தியாகங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணுவதில் அவர்களின் முக்கிய பங்கைக் கௌரவிக்கும் வகையில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


2. இந்த நினைவுச்சின்னம் காவல் படையினருக்கு தேசிய அடையாளம், பெருமை உணர்வு, நோக்கத்தின் ஒற்றுமை, பகிரப்பட்ட வரலாறு மற்றும் ஒரு பொதுவான விதியை வளர்க்கிறது. மேலும், இது அவர்களின் உயிரைப் பணயம் வைத்தும் தேசத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.


3. இந்த நினைவுச்சின்னம் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை, ஒரு மைய சிற்பம் (Central Sculpture), ஒரு வீரச் சுவர் (Wall of Valour) மற்றும் ஒரு அருங்காட்சியகம் (a museum) ஆகியவை ஆகும். இதில், மைய சிற்பம் 30 அடி உயர கிரானைட் ஒற்றைக்கல் கல்லறையாகும். இது காவல் பணியாளர்களின் வலிமை, மீள்தன்மை மற்றும் தன்னலமற்ற சேவையைக் குறிக்கிறது.


4. தியாகிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட வீரச் சுவர், சுதந்திரத்திற்குப் பிறகு பணியில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த காவல்துறையினரின் துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் ஒரு உறுதியான அங்கீகாரமாக நிற்கிறது.


5. இந்த அருங்காட்சியகம் இந்தியாவில் காவல்துறை குறித்த வரலாற்று மற்றும் வளர்ந்துவரும் கண்காட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இது பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.



Original article:

Share: