உலகளாவிய சுகாதார அகராதியில் (global health dictionary) தொற்றுநோய் அவசரநிலைக்கான புதிய வரையறை சேர்க்கப்பட்டுள்ளது -சி. அரவிந்த்

 1850-களில் காலரா தனிமைப்படுத்தல்கள் (cholera quarantines) மற்றும் 1969-ம் ஆண்டின் நோய்கள் சார்ந்த விதிகள் முதல், 2005-ம் ஆண்டின் பரந்த அமைப்பான, இப்போது 2024-ம் ஆண்டின் விரிவான திருத்தங்கள்வரை, சர்வதேச சுகாதார விதிமுறைகள் (International Health Regulations (IHR)) தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. 196 உறுப்பு நாடுகள் இப்போது கட்டுப்படுத்தப்படுவதால், தொற்றுநோய் அவசரநிலைக்கான புதிய வரையறை நடைமுறைக்கு வருகிறது.


செப்டம்பர் 19, 2025 அன்று, சர்வதேச சுகாதார விதிமுறைகளில் (IHR) திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. இந்த விதிகள் 196 உறுப்பு நாடுகளை (194 உலக சுகாதார அமைப்பின் (WHO) உறுப்பு நாடுகள், இரண்டு உறுப்பினர்கள் அல்லாதவை) உள்ளடக்கும். இந்த விதிகளின் கீழ், ஒவ்வொரு நாடும் அதன் சொந்த மக்களுக்காக சட்டம் இயற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால், ஒவ்வொரு நாடும் பரந்த சர்வதேச சமூகத்தை நோய் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் வழிகளில் செயல்பட உறுதியளிக்கிறது.


சுகாதார தொடக்க நிலைகள் & விதிமுறைகள்


Aerial navigation : வான்வழி செலுத்தல் என்பது ஒரு விமானத்தின் நிலையைத் தீர்மானிப்பதற்கும், விமானத்தைத் திட்டமிடுதல், விமானத்தின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் மற்றும் அதன் இயக்கத்தைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.


Maritime health : கடல்சார் சுகாதாரம் என்பது கடலில் பணிபுரியும் பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது


சர்வதேச சுகாதார விதிகள் குறித்த யோசனையானது, 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கியது. அப்போது வர்த்தக வழிகளில், காலரா பரவல் 1851-ல் பாரிஸில் நடந்த முதல் சர்வதேச சுகாதார மாநாட்டில் (International Sanitary Conference in Paris) தலைவர்களை சந்திக்கத் தள்ளியது. இந்தக் கூட்டங்கள் தனிமைப்படுத்தல் மற்றும் தகவல் பகிர்வுக்கான விதிகளை உருவாக்கியது. அடுத்த நூற்றாண்டில், அவை உலகப் போர்களின் போது வான்வழி வழிசெலுத்தல் (aerial navigation) மற்றும் கடல்சார் சுகாதாரம் (maritime health) குறித்த குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் உட்பட தொடர்ச்சியான மாநாடுகளுக்கு வழிவகுத்தன. 1948-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (WHO) நிறுவப்பட்டபிறகு, இந்த தனித்தனி மாநாடுகள் 1951-ம் ஆண்டின் சர்வதேச சுகாதார விதிமுறைகளாக இணைக்கப்பட்டன. 1951 விதிகள் ஆறு நோய்களை உள்ளடக்கியது. அவை காலரா, பிளேக், மஞ்சள் காய்ச்சல், பெரியம்மை, தொடர் தொற்று மற்றும் டைபஸ் ஆகும். அவர்களின் முக்கிய கவனம் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் எல்லை சுகாதார சான்றிதழ்கள் ஆகும். இது அந்தக் காலத்தின் கவலைகளைப் பிரதிபலித்தது.





1969 மற்றும் 2005-ம் ஆண்டுகளின் சர்வதேச சுகாதார விதிமுறைகள் (IHR)


1969-ல் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள், சர்வதேச சுகாதார விதிமுறைகள் என மறுபெயரிடப்பட்டன. காலரா, பிளேக் மற்றும் மஞ்சள்காமாலை ஆகிய மூன்று நோய்களாக இந்த நோக்கம் குறைக்கப்பட்டது. தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகள் முக்கியமானதாகவே இருந்தன. இருப்பினும், நோய்களின் வரையறுக்கப்பட்ட பட்டியல் விரைவில் காலாவதியானது. 2003-ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான சுவாச நோய்க்குறிக்கான (Severe Acute Respiratory Syndrome (SARS)) பரவல் பழைய விதிமுறையின் தாக்கங்களை நிரூபித்தது. 2005-ம் ஆண்டில், உலக சுகாதார சபை (World Health Assembly (WHA)) முற்றிலும் திருத்தப்பட்ட IHR-ஐ ஏற்றுக்கொண்டது. இந்த பதிப்பு குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமல்ல, எந்தவொரு "சர்வதேச பாதுகாப்புக் கொண்ட பொது சுகாதார அவசரநிலைக்கும்" பொருந்தும். இது 24 மணி நேரத்திற்குள் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) அறிவிக்க வேண்டும். நோய் கண்டறிதல் மற்றும் பதிலளிப்பதில் "முக்கிய திறன்களை" உருவாக்குவதை கட்டாயமாக்க வேண்டும். மேலும், அமைப்பின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்பு கொள்ளும் அமைப்பை நிறுவ வேண்டும் என்று கோரியது.


திருத்த நடைமுறை


திருத்தத்திற்கான தொழில்நுட்ப செயல்முறை சர்வதேச சுகாதார விதிமுறைகளின் (IHR) பிரிவு 55-ல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திருத்தங்கள் எந்தவொரு உறுப்பு நாடுகளாலும் அல்லது உலக சுகாதார அமைப்பு பொது இயக்குநராலும் முன்மொழியப்படலாம். பின்னர் அவை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பரிசீலனைக்காக விநியோகிக்கப்படுகின்றன. ஏற்றுக்கொள்ளுவதற்கு உலக சுகாதார சபையின் பெரும்பான்மை முடிவு தேவைப்படுகிறது. இது அனைத்து 196 உறுப்பு நாடுகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும். ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், திருத்தங்கள் பொது இயக்குநரால் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. பிரிவு 59-ன் கீழ், திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தானாகவே நடைமுறைக்கு வரும். ஒரு நாடு அவற்றை பிரிவு 61-ன் கீழ் நிராகரிக்கலாம். மேலும், ஒரு நாடு அவற்றை பிரிவு 61-ன் கீழ் நிராகரிக்கலாம். 2024-ஆம் ஆண்டில், 77வது உலக சுகாதார சபையில் (WHA) திருத்தங்கள் ஒருமித்த கருத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முறையான வாக்கெடுப்பு மூலம் அல்ல. இதன் பொருள், வாக்களிக்கக் கோரும் அளவுக்கு எந்த உறுப்பு நாடும் அவற்றை கடுமையாக எதிர்க்கவில்லை. இதனால் உரையானது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். WHA77.17 (2024) தீர்மானத்தில் பல திருத்தங்கள் இருந்தன.


அவசரநிலை மற்றும் மறுஆய்வுக் குழுக்கள் (Review Committee)


இவர்கள் முடிவெடுப்பதை வழிநடத்த சர்வதேச சுகாதார விதிமுறைகள் (IHR) தொழில்நுட்பக் குழுக்களையும் நிறுவியது. இதில், பிரிவு 48-ன் கீழ் உருவாக்கப்பட்ட அவசரக் குழு, தற்போதுள்ள நிகழ்வுக்கு அவற்றின் பொருத்தத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச நிபுணர்களைக் கொண்டுள்ளது. ஒரு நிகழ்வு சர்வதேச பாதுகாப்புக் கொண்ட பொது சுகாதார அவசரநிலையா அல்லது தொற்றுநோய் அவசரநிலையா, அதைத் தொடர்ந்து வரவேண்டிய தற்காலிக பரிந்துரைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) பொது இயக்குநருக்கு இது அறிவுறுத்துகிறது. பிரிவு 50-ன் கீழ் உருவாக்கப்பட்ட மறுஆய்வுக் குழு (Review Committee) மற்றொரு நிபுணர் அமைப்பாகும். முன்மொழியப்பட்ட திருத்தங்கள், நிலையான பரிந்துரைகளின் உள்ளடக்கம் மற்றும் பொது இயக்குநரால் குறிப்பிடப்படும் வேறு ஏதேனும் கேள்விகள் குறித்து இது தொழில்நுட்ப ஆலோசனையை வழங்குகிறது.


தொற்றுநோய் அவசரநிலை வரையறுக்கப்பட்டுள்ளது


2024 திருத்தங்கள் ”தொற்றுநோய் அவசரநிலை” (Pandemic Emergency) என்ற புதிய சட்ட வகையை அறிமுகப்படுத்துகின்றன. இது பல நாடுகளுக்குள் பரந்த புவியியல் பரவலைக் கொண்ட அல்லது அதிக ஆபத்தில் உள்ள ஒரு தொற்று நோயால் ஏற்படும் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை என வரையறுக்கப்படுகிறது. மேலும் இது விரைவான, சமமான மற்றும் மேம்பட்ட சர்வதேச நடவடிக்கை தேவைப்படும் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவுடன் சுகாதார அமைப்புகளை சிதைக்கிறது. மேலும், முழு அரசாங்கமும் முழு சமூகமும் பதிலளிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இந்த வரையறை இப்போது தற்போதுள்ள "சர்வதேச பாதுகாப்புக்குரிய பொது சுகாதார அவசரநிலை" என்ற முந்தைய வகையுடன் பொறுத்தப்பட்டுள்ளது. தனி தொற்றுநோய் ஒப்பந்தம் (separate pandemic agreement) குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்கின்றன என்று WHO தெளிவுபடுத்தியது. இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை அமைப்பால் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், தொற்றுநோய் அவசரநிலைக்கான சட்ட வரையறை, இந்த சர்வதேச சுகாதார விதிமுறைகள் (IHR) திருத்தங்கள் மூலம் ஏற்கனவே நடைமுறைக்கு வருகிறது.


தேசிய சர்வதேச சுகாதார விதிமுறைகள் (IHR) ஆணையம்


இந்தத் திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு நாடும் ஒரு தேசிய சர்வதேச சுகாதார விதிமுறைகள் (IHR) ஆணையத்தை அமைப்பதை கட்டாயமாக்குகின்றன. இந்த ஆணையம் தற்போதுள்ள முக்கிய விதிமுறைகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். இருப்பினும், புதிய ஆணையம் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் விதிமுறைகளை செயல்படுத்துவதை ஒருங்கிணைக்கும். இது சுகாதாரம், போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உறுதி செய்யும். இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (அல்லது இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அமைச்சகமும்) இந்த அதிகாரத்தை முறையாக நியமிக்கும். இந்த நோக்கத்திற்காக நாடாளுமன்றம் பொது சுகாதாரச் சட்டங்களையும் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம். அவசரகாலங்களின்போது தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா செயல்படுத்தும் அதே வேளையில், அதன் நோய் கண்காணிப்பு வலையமைப்புகள், ஆய்வக உள்கட்டமைப்பு மற்றும் விரைவான மறுமொழி வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும்.


கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு


இணக்கத்தை உறுதி செய்வதற்காக, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உறுப்பு நாடுகள் கூட்டு வெளிப்புற மதிப்பீடுகளை (Joint External Evaluations (JEE)) பயன்படுத்துகின்றன. இந்த மதிப்பாய்வுகள் தன்னார்வமானவை ஆனால் ஒத்துழைப்புடன் செய்யப்படுகின்றன. இதில் சர்வதேச நிபுணர்கள் தேசிய அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு, ஆய்வக அமைப்புகள், இடர் தொடர்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்ற முக்கிய பகுதிகளில் தயார்நிலையை மதிப்பிடுகின்றனர். முதலீட்டிற்கான இடைவெளிகள் மற்றும் முன்னுரிமைகளை அடையாளம் காணவும், நாடுகள் தங்கள் சர்வதேச சுகாதார விதிமுறைகள் (IHR) கடமைகளை நிறைவேற்றும் திறனை வலுப்படுத்தவும் இந்த முடிவுகள் உதவுகின்றன. 1850-களில் காலரா தனிமைப்படுத்தல்கள் முதல் 1951-ம் ஆண்டின் சுகாதார விதிமுறைகள் வரை, 1969-ஆம் ஆண்டின் நோய் சார்ந்த விதிகள் முதல் 2005-ம் ஆண்டின் பரந்த அமைப்பு வரை, இப்போது 2024-ம் ஆண்டின் விரிவான திருத்தங்கள் வரை, IHR தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 196 நாடுகள் இப்போது இணைந்திருப்பதால், தொற்றுநோய் அவசரநிலைக்கான புதிய வரையறை உலக சுகாதார அகராதியில் நுழைந்துள்ளது.


டாக்டர் சி. அரவிந்தா ஒரு கல்வி மற்றும் பொது சுகாதார மருத்துவர் ஆவர்.



Original article:

Share: