யானைத் திட்டம் (Project Elephant) என்பது என்ன? -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


சமீபத்திய யானைகள் எண்ணிக்கைகளின் மதிப்பீடு, 2017-ம் ஆண்டில் கடைசியாக அகில இந்தியளவில் 27,312 என்ற அளவை ஒப்பிடும்போது இந்த ஆண்டின் மதிப்பீடு 4,065, குறைவான யானைகளைக் காட்டுகிறது. இருப்பினும், வழிமுறை மாற்றத்தின் (methodology changed) காரணமாக இரண்டு புள்ளிவிவரங்களும் நேரடியாக ஒப்பிட முடியாதவை என்று மக்கள்தொகை அறிக்கை ஒரு எச்சரிக்கையைச் சேர்த்தது. மேலும், சமீபத்திய மதிப்பீட்டை "புதிய அடிப்படையாக" கருத வேண்டும் என்றும் கூறியது.


சமீபத்திய தரவுகளின்படி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் யானைகளின் எண்ணிக்கை 11,934 என்ற அளவில் அதிகமாக உள்ளது. அதைத் தொடர்ந்து வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்ரா வெள்ளப்பெருக்கு சமவெளிகள் (6,559), சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகள் (2,062) மற்றும் மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் (1,891) உள்ளன.


மாநிலங்களில், கர்நாடகாவில் 6,013 யானைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அதைத் தொடர்ந்து அசாம் (4,159), தமிழ்நாடு (3,136), கேரளா (2,785), உத்தரகண்ட் (1,792), மற்றும் ஒடிசா (912) போன்ற மாநிலங்களில் உள்ளன.


சமீபத்திய அறிக்கையானது, யானைகளின் வாழ்விடங்களில் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் தொடர்ச்சியான மக்கள்தொகைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில், விரிவடையும் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், ஆக்கிரமிப்பு தாவர இனங்கள், விவசாய நில வேலி மற்றும் விரைவான மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட மாறிவரும் நிலப் பயன்பாடு காரணமாக யானைகள் பெருகிய முறையில் துண்டிக்கப்படுகின்றன.


யானைகளின் நீண்டகால உயிர்வாழ்வை உறுதி செய்வதற்காக, குறிப்பாக வடகிழக்கில், யானைகளின் வாழ்விடங்களுக்கு இடையே சிறந்த இணைப்பு மற்றும் வலுவான சட்ட அமலாக்கத்திற்கு இது அழைப்பு விடுக்கிறது.


பெரும்பாலான யானைகள் வாழும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், சிவாலிக் மலைகள் மற்றும் பிரம்மபுத்ரா சமவெளிகளில், அறிக்கை கடுமையான அச்சுறுத்தல்களைக் குறிப்பிடுகிறது. இவற்றில் வாழ்விட இழப்பு, பிரிவினையின் காரணமாக மாறுதல் மற்றும் பாரம்பரிய வழித்தடங்களின் சீர்குலைவு ஆகியவை அடங்கும். இரயில் பாதைகள், சாலைகள், மின்சார உள்கட்டமைப்பு, ஆக்கிரமிப்புகள் மற்றும் பிற நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் ஆகியவை காரணங்களாகும்.


மத்திய இந்தியாவில், சுரங்க அழுத்தங்கள் ஒரு முக்கியக் கவலையாக உள்ளன. தாவர படையெடுப்புகள், மனிதர்களால் தூண்டப்படும் இடையூறுகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடனான மோதல்கள் ஆகியவை கூட்டுறவு முயற்சிகள் தேவைப்படும் தொடர்ச்சியான சவால்களாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


புதிய முறையைப் பின்பற்றிய சமீபத்திய ஆய்வு, புலி மதிப்பீட்டு கட்டமைப்பை (tiger estimation framework) மாதிரியாகக் கொண்டு, 20 மாநிலங்களில் உள்ள காட்டுப் பகுதிகளை சிறிய தொகுதிகளாகவோ அல்லது செல்களாகவோ பிரித்து, யானைகளின் அடையாளங்கள் மற்றும் பிற குறியீடுகளான தாவரங்கள், பிற பாலூட்டிகளின் இருப்பு, மற்றும் மனித இடையூறுகள் போன்றவற்றை பதிவு செய்யும் முறையைப் பயன்படுத்தியது.


ஒத்திசைவான அகில இந்திய யானை மதிப்பீடு (Synchronous All-India Elephant Estimation (SAIEE)) 2021–25-ஐ வேறுபடுத்துவது மரபணு குறி-மீண்டும் கைப்பற்றும் மாதிரியைப் (genetic mark–recapture model) பயன்படுத்துவதாகும். அங்கு யானை சாண மாதிரிகள் (Elephant dung samples) சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களில் தனித்துவமான நபர்களை அடையாளம் காண பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. 20,000-க்கும் மேற்பட்ட சாண மாதிரிகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் முக்கிய நிலப்பரப்புகளில் 4,065 தனித்துவமான யானைகளை அடையாளம் கண்டனர்.


யானைகளுக்கு புலிகளின் கோடுகள் போன்ற தனித்துவமான உடல் அடையாளங்கள் இல்லாததால், சாணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட டிஎன்ஏ, ஆராய்ச்சியாளர்கள் தனிபட்ட முறையில் அடையாளம் காணவும், அதன் அடர்த்தியை மதிப்பிடவும் உதவுகிறது. மரபணு தரவு, தரை ஆய்வுகளுடன் இணைந்து, மிகுதியின் இறுதி மதிப்பீட்டைப் பெற ஒரு கணித மாதிரியில் பயன்படுத்தப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா? 


முந்தைய யானை கணக்கெடுப்புகள் பல முறைகளைப் பயன்படுத்தின. இவற்றில் நேரடிப் பார்வை, நீர்நிலைகளில் எண்ணிக்கை மற்றும் சாணம்-சிதைவு முறைகள் ஆகியவை அடங்கும். சாணம்-சிதைவு முறைகளில், சாணம் எவ்வளவு விரைவாக படிந்து சிதைவடைகிறது என்பதன் அடிப்படையில் இவற்றின் அடர்த்தி மதிப்பிடப்பட்டது. சமீபத்திய ஆய்வுகளில், இந்த முறை மேம்படுத்தப்பட்டது. சாணம்-சிதைவு தரவானது 5 சதுர கி.மீ பரப்பளவில் மாதிரி தொகுதி எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்டது. பின்னர், பெரிய நிலப்பரப்புகளில் யானைகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு வெளிப்புற கணிப்பு (extrapolation) பயன்படுத்தப்பட்டது.


ஒத்திசைவான அகில இந்திய யானை மதிப்பீடு (SAIEE) 2021–25-க்கு, இந்தியாவின் காடுகள் 100 சதுர கிமீ செல்களாகப் பிரிக்கப்பட்டு, மேலும் 25 சதுர கிமீ மற்றும் 4 சதுர கிமீ கட்டங்களாக உட்பிரிவு செய்யப்பட்டன. இது 2006 முதல் பயன்படுத்தப்படும் புலி மதிப்பீட்டுத் திட்டத்திலிருந்து கடன் வாங்கப்பட்ட மாதிரியாகும். யானைகள் மற்றும் பிற இனங்களைப் பற்றிய தரவுகள் இந்த கட்டமைப்பின் கீழ் பெரும்பாலும் விநியோகத்தை வரைபடமாக்குவதற்கும் ஒப்பீட்டு மிகுதியை அறியவும் சேகரிக்கப்பட்டுள்ளன.



Original article:

Share: