விளையாட்டுகளில் திராவிட நெறிமுறையை செயல்படுத்துதல் -உதயநிதி ஸ்டாலின்

 தமிழ்நாடு அரசு விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால், விளையாட்டு வீரர்கள் (athletes) மற்றும் இணை-தடகள விளையாட்டு வீரர்களுக்கு (para-athletes) மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அதிக பதக்கங்களும் ஆதரவும் கிடைத்துள்ளன.


தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையுடனான (Tamil Nadu Champions Foundation) எனது பயணத்தில், எண்ணற்ற மற்றும் ஊக்கமளிக்கும் விளையாட்டு வீரர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரரான மனோஜின் கதை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அவர் தமிழ்நாடு சிறுதொழில் கழக லிமிடெட் (Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI)) நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவரிடம் அபரிமிதமான திறமை இருந்தது. ஆனால், சரியான தளம் இல்லாததால் அவர் கவனிக்கப்படாமல் போனார்.



அப்போதுதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அத்தகைய திறமையாளர்களை அடையாளம் காண முதல்வர் அளித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அறக்கட்டளை மூலம் மனோஜுக்கு நிதி உதவி வழங்கினோம். இன்று, அந்த இளைஞர் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். வாக்குறுதியளித்தபடி, விளையாட்டு வீரர்களின் வெற்றிகளுக்குப் பிறகும் நாங்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். இப்போது, அவருக்கு 3 சதவீத விளையாட்டுத்துறை இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு பாதுகாப்பான அரசு வேலை கிடைத்துள்ளது.


கொள்கை மற்றும் நடைமுறையில்


திராவிட ஆட்சி மாதிரியை உருவாக்கிய சித்தாந்த தலைவர்கள், பொது வளங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற ஒரு சமூகத்தை கற்பனை செய்தனர். விளையாட்டுகளில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு வசதிகள் மற்றும் ஆதரவைப் பெறுவதைத் தடுக்கும் தடைகளை நீக்குவதே இதன் பொருள். நமது ஆட்சி "எல்லாருக்கும் எல்லாம்" (Ellarukkum Ellam) என்ற பழமொழியைப் பிரதிபலிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியபோது, ​​விளையாட்டுக்கான ஒரு தெளிவான திட்டத்தை அவர் எங்களுக்கு வழங்கினார். திறமையை முன்கூட்டியே கண்டறிதல், மாநிலம் முழுவதும் விளையாட்டு வசதிகளை உருவாக்குதல், விளையாட்டு வீரர்களுக்கு அறிவியல் பூர்வமான ஆதரவை வழங்குதல் மற்றும் தாமதமின்றி அவர்களின் வெற்றிக்கு வெகுமதி அளித்தல் போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும். தமிழ்நாட்டில், இந்தத் தொலைநோக்குப் பார்வை, முன்னெப்போதும் இல்லாத வகையில் உண்மையான விளையாட்டுக் கொள்கைகளாகவும், செயல்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களும் மற்றும் அதன் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன. இந்தியாவின் 89 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 34 பேரையும், 2 உலக செஸ் சாம்பியன்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. உலகளவில், இது பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் 4 இணை ஒலிம்பிக் (பாராலிம்பிக்) பதக்கம் வென்றவர்களையும், 12 ஒலிம்பிக் வீரர்களையும் கொண்டாடியுள்ளது. இதில் 6 பேர் தடகள மற்றும் களப் போட்டிகளில் அடங்குவர். ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Hangzhou Asian Games), தமிழ்நாட்டைச் சேர்ந்த 46 விளையாட்டு வீரர்கள் இந்தியா 28 பதக்கங்களை வெல்ல உதவினார்கள். அதே நேரத்தில், ஹாங்சோ இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Hangzhou Para Asian Games), அதன் 18 விளையாட்டு வீரர்கள் 15 பதக்கங்களை வென்றனர். கேலோ இணை விளையாட்டுப் போட்டிகளில் (Khelo Para Games), தமிழ்நாட்டின் பதக்கங்களின் எண்ணிக்கை 2023-ல் 42-ல் இருந்து 2025-ல் 74 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்களின் எண்ணிக்கை 2023-ல் 77 ஆக இருந்தது 2025-ல் 92 ஆக உயர்ந்தது. இது 20% உயர்வைக் காட்டுகிறது. 2016 முதல் 2021 வரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamil Nadu) சுமார் ₹800 கோடியை முதலீடு செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தற்போதைய நிர்வாகம் இதை ₹1,945 கோடியாக முதல்லீட்டை உயர்த்தியுள்ளது. இது முதலீட்டில் 143% அதிகரிப்பைக் காட்டுகிறது.


2021 முதல், பல்வகை-விளையாட்டு மாவட்ட மையங்கள் (multi-sport district centres), ஒலிம்பிக் நிறுவனங்கள் (Olympic academies), உயரமான விளையாட்டுப் பயிற்சி மையம் (high-altitude training facilities), ஆறு நகரங்களில் செயற்கை தடங்கள் (synthetic tracks in six towns), சர்வதேச தரத்திலான ஹாக்கி புல்வெளிகள் (international-standard hockey turfs), மிதிவண்டி ஓட்டுவதற்கான அரங்கு (a velodrom) மற்றும் நவீன உட்புற அரங்கங்கள் (modern indoor arenas) உட்பட 28 புதிய விளையாட்டு வளாகங்களை நாங்கள் கட்டியுள்ளோம். சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சியில் உள்ள பழைய மைதானங்களை நாங்கள் மேம்படுத்தினோம். படிப்படியாகத் திட்டமிடப்பட்ட திட்டங்களின்கீழ், மாநிலம் முழுவதும் 75 தொகுதிகளில் சிறிய விளையாட்டு அரங்கங்கள் (mini stadia) மற்றும் உடற்தகுதி கொண்ட தமிழ்நாட்டை ஊக்குவிக்க நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் (modern gyms) இருக்கும். கிட்டத்தட்ட 60% திட்டங்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளன. கலைஞர் விளையாட்டு கருவிகள் திட்டம் (Kalaignar Sports Kit Scheme) ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அனைத்து நகர்ப்புறங்களுக்கும் கிரிக்கெட் மட்டை, கைப்பந்து வலைகள், கபடி பாய்கள் மற்றும் உடற்பயிற்சிக்கான கருவிகள் (gym gear) உள்ளிட்ட 33 வகையான விளையாட்டு கருவிகளை வழங்குகிறது. எங்கள் உள்கட்டமைப்பு திட்டத்தில் துணை-விளையாட்டுகளையும் ஆதரிக்கிறோம். 11 மாவட்டங்களில் அணுகக்கூடிய அரங்கங்களை உருவாக்கி வருகிறோம். மேலும், புதிய மைதானங்களில் தடையற்ற அம்சங்களைச் சேர்க்கிறோம்.

தரவு சார்ந்ததாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்காக தடகள ஆதரவுத் திட்டங்களை (athlete support programmes) நாங்கள் புதுப்பித்துள்ளோம். நாங்கள் பதவியேற்றபோது, ​​ELITE திட்டத்தின் மூலம் 12 விளையாட்டு வீரர்கள் மட்டுமே ஆண்டுக்கு நிதியுதவி பெற்றனர். இன்று, சதுரங்க வல்லுநர்களான ஆர். பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் உட்பட 50 சிறந்த விளையாட்டு வீரர்கள் பயிற்சி மற்றும் போட்டிக்காக ஆண்டுக்கு ₹30 லட்சம் பெறுகின்றனர். மிஷன் சர்வதேச பதக்கங்கள் திட்டத்தின் (Mission International Medal Scheme) கீழ், ஆதரிக்கப்படும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 48-லிருந்து 125-ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் சர்வதேச தகுதி பெற ஆண்டுதோறும் ₹12 லட்சம் வழங்கப்படுகிறது. சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme) 20 வயதுக்குட்பட்ட 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுக்கு ₹4 லட்சம் உதவித்தொகையுடன் ஆதரவளிக்கிறது.


பொறுப்புடைமைக்கான ஒரு அமைப்பு


ஒலிம்பிக் வீரர்கள் (Olympians) மற்றும் முன்னனி விளையாட்டு வீரர்களின் (sports scientists) உயர்மட்டக் குழுவானது, விளையாட்டு வீரர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கிறது. அவர்கள் தெளிவான செயல்திறன் தரநிலைகளை அமைத்து அவற்றை முன்கூட்டியே பகிர்ந்து கொள்கிறார்கள். இணை-தடகள வீரர்களும் அதே அளவிலான ஆதரவையும் ஊக்கத்தொகையையும் பெறுகிறார்கள். 2021 முதல், 4,617 விளையாட்டு வீரர்களுக்கு ₹152 கோடி மதிப்புள்ள ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது, முந்தைய பத்தாண்டுகாலத்தில் வழங்கப்பட்ட ₹38 கோடியைவிட நான்கு மடங்கு அதிகமாகும். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை தங்கத்திற்கு ₹3 கோடியாகவும், வெள்ளிக்கு ₹2 கோடியாகவும், வெண்கலத்திற்கு ₹1 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் விளையாட்டு நிகழ்வுக்குப் பிறகு உடனடியாக வழங்கப்படுகிறது. மின்-விளையாட்டு (e-sports) மற்றும் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் (traditional games) உட்பட அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுகளை (Chief Minister’s Trophy games) அறிமுகப்படுத்தினோம். 2023-ல் 4.57 லட்சமாக இருந்த பதிவுகள் 2025-ல் 16.28 லட்சமாக அதிகரித்துள்ளன. இது, ஒவ்வொரு விளையாட்டு வீரரின் சுயவிவரத்தையும் கண்காணிக்கும் ஒரு பிரத்யேக விளையாட்டு மேலாண்மை அமைப்பால் (Games Management System) ஆதரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், போட்டிகள் மூலம் சுமார் 4,000 இளைஞர்களை நாங்கள் அடையாளம் கண்டு, அவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamil Nadu (SDAT)) விளையாட்டு விடுதிகள், சிறப்பு மையங்கள் மற்றும் STAR நிறுவனங்களில் (STAR academies) சேர்க்கிறோம். வெளிப்படையான இணையவழிப் பதிவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான திறமையை தேடுதல் ஆகியவை பின்னணி அல்லது இருப்பிடம் காரணமாக எந்த தகுதியான விளையாட்டு வீரரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.


எங்கள் ஆட்சியின் கீழ், விளையாட்டு வீரர்களுக்கு உயிர்நாடியாக இருந்த அரசு வேலைகளுக்கான 3% விளையாட்டுத்துறை சார்பாக இடஒதுக்கீடு புத்துயிர் பெற்றுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் கீழ் மூன்று விளையாட்டு வீரர்கள் மட்டுமே வேலை வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், எங்கள் ஆட்சியின் கீழ், 109 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை செய்துள்ளோம்.


முன்னர் பிரதான விளையாட்டுகளில் இருந்து விலக்கப்பட்டிருந்த சமூகங்கள் இப்போது தமிழ்நாட்டின் வெற்றிக் கதையின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. நுங்கம்பாக்கத்தில் உள்ள உயர் செயல்திறன் டென்னிஸ் (high-performance tennis facility) வசதியில், கிராமப்புற பெண்கள் பயிற்சி மற்றும் போட்டியிட புதிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். எனவே, 2023-ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுகளில் (Khelo India Games) தமிழ்நாட்டுப் பெண்கள் டென்னிஸில் மொத்தமுள்ள நான்கு தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றினர்.


முக்கியப் போட்டிகளை நடத்துவது தமிழ்நாட்டை விளையாட்டு சுற்றுலாவின் மையமாக நிலைநிறுத்துகிறது. 2022-ம் ஆண்டில், மதிப்புமிக்க 44-வது செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad) போட்டியை நடத்திய முதல் இந்திய நகரமாக சென்னை ஆனது. இந்தப் போட்டி 186 நாடுகளைச் சேர்ந்த 188 அணிகள் ஒன்றுகூடி, சுமார் ₹110 கோடி பட்ஜெட்டில் நடத்தப்பட்டன. அதன் பிறகு, மாநிலம் ஸ்குவாஷ் உலகக் கோப்பை (Squash World Cup), ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை (Asian Hockey Champions Trophy), உலக சர்ஃப் லீக் (World Surf League), ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (Asian Junior Athletics Championships), பெண்கள் டென்னிஸ் சங்கம் (WTA) மற்றும் டென்னிஸ் நிபுணர்கள் சங்கம் (ATP) டென்னிஸ் போட்டிகள் மற்றும் இந்தியாவின் முதல் ஃபார்முலா-4 தெரு இரவுப் பந்தயம் (Formula-4 street night race) போன்ற பல நிகழ்வுகளை நடத்தியது.


எதிர்காலத்தை நோக்கி


நாங்கள் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தையும் (Tamil Nadu Centre for Sports Science) அமைத்துள்ளோம், தடகள மேலாண்மைக்கான டிஜிட்டல் தளங்களில் முதலீடு செய்துள்ளோம். மேலும், பயோமெக்கானிக்ஸ், ஊட்டச்சத்து மற்றும் உளவியல் போன்ற துறைகளில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். அடுத்த கட்டத்தில், சென்னையில் ஒரு உலகளாவிய விளையாட்டு நகரத்தை உருவாக்குவோம். நமது விளையாட்டு அறிவியல் வசதிகளை விரிவுபடுத்துவோம், நமது துணை-விளையாட்டு திட்டங்களை வலுப்படுத்துவோம்.


விளையாட்டுகள் வெறும் ஆட்டங்கள் மட்டுமல்ல; அவை சமூகப் பொறியியலின் கருவிகளும் கூட. பகுத்தறிவுவாத மற்றும் சமூக நீதி இயக்கங்களை உருவாக்கிய மாநிலத்தில், விளையாட்டுக்கான திராவிட மாதிரியை உருவாக்குவது மட்டுமே பொருத்தமானது. நமது வெற்றி பதக்கங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள குழந்தைகளின் விரிந்த புன்னகைகளிலும் அளவிடப்படுகிறது.


உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதல்வர்.



Original article:

Share: