புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் (Geosynchronous Satellite (GSAT)) -7R என்பது இந்தியாவின் முதல் இராணுவ செயற்கைக்கோளான GSAT-7 "ருக்மிணி"யின் அடுத்த பதிப்பாகும். இது 2013-ஆம் ஆண்டில் ஏவப்பட்டது. ருக்மிணி அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் நிகழ்நேர தரவு இணைப்புகளை (real-time data links) வழங்குவதன்மூலம் கடற்படை தொடர்பை மேம்படுத்தியது. புதிய GSAT-7R செயற்கைக்கோள் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது.
நவம்பர் 2, 2025 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து LVM3-M5 ராக்கெட்டில் இந்தியாவின் CMS-03 (GSAT-7R) செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை பெரிதும் வலுப்படுத்தும் மற்றும் தொழில்நுட்பத்தில் சுயசார்பு (self-reliance) பெறும் நாட்டின் இலக்கை ஆதரிக்கும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation (ISRO)) உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கிய 4,400 கிலோ எடையுள்ள பன்முக அலைவரிசை தகவல்தொடர்பு செயற்கைக்கோள் (multi-band communication satellite,), இந்திய மண்ணிலிருந்து புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் (Geosynchronous Transfer Orbit (GTO)) ஏவப்பட்ட மிகப்பெரிய தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைகோள் ஆனது இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், கடலில் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் அதன் கண்காணிப்பை வலுப்படுத்தவும் உதவும்.
பாதுகாப்பான தகவல் தொடர்பு பரவல்
2013ஆம் ஆண்டு ஏவப்பட்ட இந்தியாவின் முதல் இராணுவ செயற்கைக்கோளான GSAT-7 "ருக்மிணி"யின் அடுத்த பதிப்பாகும். அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் முழுவதும் நிகழ்நேர தரவு இணைப்புகளை வழங்குவதன் மூலம் ருக்மினி கடற்படை தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது. அதே வேளையில், GSAT-7R, கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் கடற்படை செயல்பாட்டு மையங்கள் (Maritime Operations Centres (MOCs)) இடையே தடையற்ற குரல், தரவு மற்றும் வீடியோ தொடர்புகளை செயல்படுத்துகிறது. செயற்கைக்கோளின் மேம்பட்ட பயன்திறன் அமைப்பு உயர் திறன் கொண்ட, பாதுகாப்பான மற்றும் குறுக்கீடு இல்லாத தகவல்தொடர்புகளை (Jam-resistant communication) உறுதி செய்கிறது — பிணைய-மையப்படுத்தப்பட்ட போர் மற்றும் இராணுவம் மற்றும் விமானப்படையுடனான கூட்டு நடவடிக்கைகளுக்கு இன்றியமையாதது.
15 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட GSAT-7R, இந்தியக் கடற்கரையிலிருந்து 2,000 கி.மீ வரை பாதுகாப்பான தகவல் தொடர்பை விரிவுபடுத்துகிறது. இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பரந்த பகுதிகளை உள்ளடக்கியது. இந்த பரந்த பாதுகாப்புடன், இந்திய கடற்படை முக்கியமான கடல் வழிகள், குறுகிய பாதைகள் மற்றும் கடலில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை சிறப்பாகக் கண்காணிக்க அனுமதிக்கும். இது கடற்கொள்ளை எதிர்ப்பு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு மற்றும் மனிதாபிமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற்படை சொத்துக்களுக்கு இடையே தொடர்ச்சியான ஒருங்கிணைப்பை ஆதரிக்கும். நிகழ்நேர சூழ்நிலை புதுப்பிப்புகள் மற்றும் விரைவான எதிர்வினை திறன்களை உறுதி செய்யும்.
மேலும், GSAT-7R, கடற்கரை கண்காணிப்பு ரேடார்கள், உளவு விமானங்கள் (reconnaissance aircraft) மற்றும் ஆளில்லா அமைப்புகள் போன்ற கண்காணிப்புத் தளங்களுடன் விண்வெளி அடிப்படையிலான தகவல்தொடர்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் கடல்சார் கள விழிப்புணர்வை (maritime domain awareness (MDA)) மேம்படுத்தும். இந்த அமைப்புகள் இணைந்து செயல்படுவதால், கடற்படை பரபரப்பான கடல் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் விரைவாக பதிலளிக்கவும் உதவும். இது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும்.
GSAT-7R செயற்கைகோளை ஏவுவது, இந்தியா பாதுகாப்பு விண்வெளி தொழில்நுட்பத்தில் அதிக தன்னம்பிக்கை அடைந்து வருவதைக் காட்டுகிறது என்றும், தற்சார்பு இந்தியா (Aatmanirbhar Bharat) என்ற தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வலுவான மற்றும் உள்நாட்டு செயற்கைக்கோள் தொடர்பு உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதன் மூலம், கடற்படை வெளிநாட்டு அமைப்புகளிலிருந்து தன்னிச்சையாக செயல்பட முடியும். இது ராஜதந்திர நடவடிக்கைகளில் ரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.
அளப்பரிய முன்னேற்றம் (Quantum leap)
சுருக்கமாக, GSAT-7R இந்தியாவின் கடல்சார் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது, இது இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அதிக எச்சரிக்கையுடன் இணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட இருப்பைப் பராமரிக்க அதிகாரம் அளிக்கிறது.
கடற்படையின் செயற்கைக்கோள்கள், உணரிகள் (Sensors), ரேடார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையத்திற்கு (Information Management and Analysis Centre (IMAC) நிகழ்நேரத் தரவை அனுப்புகின்றன. இது இப்போது தேசிய கடல்சார் கள விழிப்புணர்வு (National Maritime Domain Awareness (NMDA)) தளமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதிகளுக்கான ஒருங்கிணைந்த தெளிவான ஒட்டுமொத்த பார்வையை உருவாக்க தேசிய கடல்சார் கள விழிப்புணர்வு பல ஆதாரங்களில் இருந்து தகவல்களை ஒருங்கிணைக்கும். செயற்கை நுண்ணறிவால்-இயக்கப்பட்ட பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி, இது சூழ்நிலை விழிப்புணர்வை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும், விரைவாக முடிவெடுப்பதை ஆதரிக்கும். சட்டவிரோத மீன்பிடித்தல், கடத்தல், கடற்கொள்ளை மற்றும் கடல்சார் பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதை எதிர்கொள்ளவும், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இந்தியக் கடல்சார் பகுதிகள் முழுவதும் அதன் ராஜதந்திர நலன்களைப் பாதுகாக்கவும் இந்த அமைப்பு உதவும்.